பழுதடையும் எழுதுகோல்கள்
-பாரதியார்]
மக்களாட்சியும் மதச்சார்பின்மையும் மாட்சிமை பொருந்தியவை என்று
24X7 முழங்கிக்கொண்டிருப்போர் சிலரின் மனங் களில்
மலிந்திருக்கும் மூர்க்கமான அதிகாரவெறி
ஆயிரம் வாள்களைக் காட்டிலும் அதிகூர்மையாய்
அங்கங்கே தலைகளைக் கொய்தபடியே……
அவரவருக்குத் தேவைப்படும்போது மட்டும்
அகிம்சை underline செய்யப்படும்.
‘பிரபலங்கள் சுதந்திரமாக நடமாட வழிவகுக்கும் கருவி புர்கா’ என்று
தர்க்கரீதியாய் (பேசுவதான நினைப்பில்)
பதவுரை வழங்கியும்,
’ஜெய் ஸ்ரீராம்’ இந்த நூற்றாண்டின் குரூர வாசகம்’
என்று
நிதமொருவிதமாய் வெறுப்பை வளர்த்து
மதிப்புரை யெழுதியும்
எழுத்தில் மனிதநேயத்தை முன்னிறுத்திக்கொண்டிருக்கிறார்கள்
பெண்ணியவாதப் படைப்பாளிகள் சிலர்……
அன்பையே வளர்ப்பதாகச் சொன்னவண்ணமிருக்கும்
என்புதோல் போர்த்திய உடலங்களாய்
முழுப்பிரக்ஞையிலான Selective amnesia வில்
மும்முரமாய் சில காட்சிகளை மட்டுமே
மீண்டும் மீண்டும் அதிகவனமாகப் பதிவேற்றுவதில்
முந்துவது யார்?
மூத்த படைப்பாளியா?
முளைவிட்டுக்கொண்டிருக்கும் படைப்பாளியா?
No comments:
Post a Comment