LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, March 7, 2016

அடியாழ உள்வெளி - ’ரிஷி’

  அடியாழ உள்வெளி
(13.03.2016 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ள கவிதை
’ரிஷி’


கிரீடம் என்றாலே அரசன் நினைவுக்கு வருவதை
ஏசுவின் சிரசிலிருந்து பெருகிய ரத்தம் இல்லாமலாக்கியதில்
வரவான கையறுநிலை
அருகதையில்லா அன்பில் ஆட்கொல்லியாக…..

      
 லையைச் சுற்றித் தூக்கியெறுந்துவிடத்தான் வேண்டும்
இந்தத் திறவுகோலை.
வீடே யில்லையென்றான பின்பும்
இதையேன் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது என் கை?
அறிவுக்கும் மனதுக்கும் இடையறாது நடந்துகொண்டிருக்கும்
இந்தப் போட்டியில்
வெற்றிக்கம்பத்தின் எதிர்முனை நோக்கி நான் ஓடியவாறு…..

      
பெருவலியினூடாய் புன்னகைத்துக்கொண்டிருந்தேன்.
கல்தடுக்கிக் கால்கட்டைவிரலில் மின்னிய ரத்தச்சொட்டு
என்னவொரு நிவாரணம் என
எண்ணாதிருக்க முடியவில்லை.



ரு நெகிழ்வில் நக்கிக்கொடுத்ததால்
என்னை நாயென்று பொருள்பெயர்த்துக் கொள்பவர்க்கு
குனிந்து கல்பொறுக்கும் சிரமத்தைத் தரலாகாதென்று
சிறகுவிரித்துயரே பறந்துசென்றுவிட்டேன்.

    
ன் பாட்டில் மொட்டைமாடியில் நின்று அண்ணாந்து பார்த்தவண்ணம்….
அந்தப் பறவை அத்தனை அற்புத வண்ணத்தில்
ஒரு சிறகிழையை உதிர்த்துவிட்டுத் தன் வழி சென்றது.
காற்றில் சுழன்றிறங்கும் அது என் கால்களின் பரப்பெல்லைக்குள்ளாய்
விரிந்த என் கைகளுக்குள் வசப்படுமோ?
விக்கித்து நிற்கிறேன்.

   
நேற்றும் இன்றும் நியமப்படி நீர் வார்த்தாலும்
நான்கைந்து நாட்கள் விட்டுப்போனதில் பட்டுப்போன செடிகள்
துளிர்விட மறுக்கின்றன.
இல்லை, இது இளைப்பாறும் பருவமோ?
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் பேதைமனம்.

    

லமுறை வாசித்தும் தீராத புத்தகத்தின் பக்கமொன்றில்
பொடிந்த சின்னஞ்சிறு இலையொன்று கிடந்தது.
ஒருவேளை என் மூச்சால் அதை மீண்டும்
பசுமையாகத் துளிர்க்கச் செய்ய முடியுமோ என்னவோ….
முயன்று பார்க்க பயமாயிருக்கிறது.



ந்தப் பூனைக்கு என்ன வயதிருக்கும் தெரியவில்லை.
குடியிருப்பு வளாகமெங்கும் நீர் சூழ்ந்த நேரம்
தன்னந்தனியாய்த் தன்னைக் காத்துக்கொள்ளப் போராடியது.
ஜன்னலிலிருந்து முருங்கை மரத்திற்கும், மரத்திலிருந்து மொட்டைமாடிக்கும்
அது தாவிய தாவல்……… அம்மாவோ!
அதன் மூக்கில் பல நாட்களுக்கு ரத்தக்கறை இருந்தது.
தற்காத்துக்கொள்ளும் போராட்டத்தில் தனதொரு கண் பார்வையைப்
பறிகொடுத்துவிட்டதுபோலும்.
பலவீனமாய் ”மியாவ்” வெளிப்படுகிறது.
தினமொரு முறை, பக்கத்துவீடு பூட்டியிருக்கும் சமயமாய்ப் பார்த்து
அத்தனை நம்பிக்கையோடு எனக்காய் குரலெழுப்புகிறது.
தரும் பாலை யருந்திவிட்டுத் தன் வழியே போய்விடுகிறது.
தலையை வருடித்தா என்று ஏங்கிப் பார்க்காத
அதன் சுயமும் தன்மானமுமாய்  _                                       
பூனையை எனக்குப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது
தூலமாகவும், குறியீடாகவும்.



      





     









Friday, March 4, 2016

HEROISM - rishi

HEROISM
                                rishi
“Call me anti-national”
_ cries hoarse a pseudo – intellectual
thirsting to be in the limelight;
to become a revolutionary overnight!

The world moves on unperturbed.
Its daily routine which they call mundane
is utmost essential for safeguarding
humanity’s safe zone.

Poor lass
(fool of an ass)
Having a wide, flat rubber-band
around her forehead,
with the word ‘firebrand’
She keeps hopping from land to land
daydreaming that she could,
just by uttering the two words
‘Magic’ , ‘Wand’
Create one out of sand!

Alas,  all she could manage to do was
leading a no-man procession always!

Frustration accumulated thus
turning her violent,
the female sets afire her children
in her poem stillborn.


WORD BUILDING - rishi

         WORD BUILDING 
rishi                                                                         

F E V E R _

Real fever alone can be
real fever
For ever….

Therefore
Rever the real…..

On the eve of fever
Or right in its eye…?

Remember
Eve too has a before and after.
No matter She or Day.

Fee for falling in love
Is the fitness to face indifference;
Swallow it all in silence.

The ‘We’ sounding ‘Ve’
Though not a word
Highlights the façade of ‘Oneness’.

Ere can or cannot replace
Before; afore….

Alone on the seashore
With the help of words
I keep building legs

To walk on water….

வாசகப் பிரதி - ரிஷி


வாசகப் பிரதி


ரிஷி




ஊரில் புதிதாய்த் திறந்திருக்கும் பிரம்மாண்ட 

நகைக்கடைக்குத்

தன் தாயை அழைத்துச் சென்ற மகள்

அவளுக்குத் தங்க வைர அணிகலன்களை 

வாங்கி அணிவித்து

அப்படி அழகு பார்த்தாளாம்!

குரல் தழுதழுக்கப் பீற்றிக்கொண்டாள் பெண் -

அந்த விளம்பரத்தில்.


அந்தத் தாயின் கண்களில் ததும்பும் 

கண்ணீரும் புன்னகையும்

பொன்னகையால் அல்லபோனால் வராத 

இளமையின்பால்கொண்ட

தீராக் காதலால் என்று

பாவம், அவளுக்கும் தெரியவில்லை,

அந்த விளம்பரதாரருக்கும் தெரியவில்லை.



புரியும்போல் கவிதை…..ரிஷி

புரியும்போல் கவிதை…..


ரிஷி


அனா,  ஆவன்னா,  இனா  ஈயன்னா  உனா

ஊவன்னா  

ஏனா  ஏயன்னா ஐயன்னா  ஃன்னா….

ஆனா,, ஏனாம் அட, ஆவலா, இக ஈயமா

உர,  ஊதா,  எர,  ஏற,  ஐய,  ஃப்பா  இல்லை

யென்ற கேள்வியின்

எல்லைக்கப்பால் என்னைத் தள்ளிக்கொண்டு

செல்கையில்

எதிரே வந்த சிறுமி

உய்னனக்கு இய்னிந்த பேய்னச்சுப் 

 பிய்னடிக்குமா?”

என வினவிச்

சென்றாளே, சென்றாளே….

Saturday, February 20, 2016

புரியும்போல் கவிதைகள் சில….. ‘ரிஷி’

புரியும்போல் கவிதைகள் சில…..


‘ரிஷி’


1.
குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம்
இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள்
எல்லாமும் மழையுமாய்
எங்கெங்கும் நீராகி நிற்கும் நிலத்தில்தான்
தண்ணீர்ப் பற்றாக்குறையும் குடிநீர் கிட்டாநிலையும்
எனத் தெள்ளத்தெளிவாய்த் தத்துவம் பேசுவோர்க்குத்
தெரியுமோ
ஒரு துளி நீரில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையும்
அவற்றின் அலை-துகள் நிலையும்
களி நடனமும் பிறவும்….?

 2.
ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்தாறு எட்டுபத்து….
ஏழும் ஒன்பதும் விட்டுப்போனதேன்
என்று வாய்ப்பாடு ஒப்பித்தலாய்க் கேட்பதற்கு முன்
இரண்டான ஒன்றின் நான்கான மூன்றின்
ஆறான ஐந்தின் பத்தான எட்டின்
நேர்க்கோடுகள், நெளிவு சுளிவுகள்
வாத்தின் எலும்பு மார்பக வளைவு
வாலுடன் காத்தாடி சிரசாசன நிலை
உள்வாங்கிய சறுக்குமரம்
இருவட்டச்சிறைகளுக்குள்ளிருந்து
வெளியேறும் வழி –
என எண்ணிப்பார்த்துக்கொள்ள
எத்தனையோ இருக்கு பார்.

3.
சிட்டுக்குருவி காக்கை புறா கோழி குயில் கழுகு மயில்
வான்கோழி இன்னுமுள ஈராயிரத்திற்கு மேலான
பறவையினங்களில்
விரும்பித் தேன்குடிப்பது எது
தேன்குழலைக் கடிப்பது எதுவெனத்
தெரியுமோ எவருக்கேனும்…?
அட, தெரியாவிட்டால்தான் என்ன?
ருசியறியாதவரை தேன் வெறும்
 பிசுபிசுப்பானஅடர்பழுப்புநிற திரவம்தான்.
அருந்திய பறவை ஆனந்தமாய்ச் சிறகடிப்பதைப் பார்த்து
அடித்துப்பிடித்து உண்டிவில்லைத் தேடிக்கொண்டிருப்போர்
கண்டிலரே வெளியெங்கும் பறத்தலின் காற்றுத்தடங்களை.
உண்டல்லோ அவ்வண்ணமாய் புரியாக் கவிதையும்!

4
ஸ்கூட்டி, பைக், கார், லாரி, குப்பை லாரி
மினி பஸ், மாம்பலம் – டு – லஸ் மாக்ஸி பஸ்
ரயில் கப்பல் ஆகாயவிமானம்……
எல்லாம் இருந்தும் கடற்கரையில்
கையைத் தலைக்கு அண்டக்கொடுத்தொருவன்
அண்டவெளிக்குள் பல உன்னதங்களைக் கண்டவண்ணம்
படுத்திருக்கிறானே….
அந்த வேளையில் பயணம் என்ற சொல்லின் அர்த்தம்
அவனுக்குப் பிரத்யேகமானது.
அவன் நகர்வதாகவே தெரியவில்லையே என்று
அங்கலாய்த்து
அத்தனை முனைப்போடு
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கற்களைத் திரட்டி
அவன் மீது குறிபார்த்து எறிவதில் காட்டும் அக்கறையில்
ஒரு துளி கவிதை மீது காட்டினாலும் போதும் –
நிறையவே புரிந்துவிடும்.

 5.
திருக்குறள் நாலடியார் குறுந்தொகை
நற்றிணை தேவாரம் திருவாசகம்
சித்தர் பாடல்கள் சிலப்பதிகாரம்
எல்லாம் புரிந்துவிட்டதுபோலும்
புரியாக் கவிதை எழுதுகிறான் என
புகார் மேல் புகார் அளித்தவண்ணம்
அண்டவெளியைக் கூண்டிலேற்றி
குறுக்குவிசாரணை செய்ய
முடிந்தால் நிலவறைக்குள் அடைத்துவிடவும்
அன்றும் இன்றுமாய் அவர்கள்
ஆயுதபாணிகளாய் வந்தபடி வந்தபடி…..
காக்கும் கவிதை காக்க
அகாலத்தின் விரிபரப்பில்
காற்றுச்சித்திரங்களைத் தீட்டிக்
களித்திருப்பானே கவிஞன்!

6
இந்த வாசகருக்குப் புரியுமென்று
வெந்த சாதம் பற்றி எழுதினார்’
வந்ததே கோபம் வேறொருவர்க்கு.
பச்சைக் காய்கறிகளே சத்துள்ள உணவு
என்று கடித்துக்குதறிவிட்டார்.
வம்பெதற்கு என்று
நெல்லிக்கனியின் மகத்துவம் குறித்தொரு
கவிதை எழுதினார்.
பாகற்காயைப் பற்றிப் புனையத் தோன்றவில்லையே என்று
கண்டனத்தைப் பதிவு செய்தார் இன்னொரு வாசகர்.
ஆகா மறந்துவிட்டேனே என்று அளப்பரிய வருத்தத்துடன்
மருந்துக் கசப்புக்கோர் எடுத்துக்காட்டு பாகற்காய்
எனக் கவிதையெழுத
சுண்டைக்காயின் கசப்பைச் சொல்லாமல் விட்ட பாவி
என மண்ணை வாரித் தூற்றிச் சென்றார்
மா வாசகரொருவர்.
என்ன செய்வதென்றே தெரியாமல்
எழுதியவற்றையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு
உறங்கச் சென்றார் கவிஞர்.
கனவிலும் அந்த வாசகர்கள் வந்து
அவர் உருகியுருகி யெழுதியதையெல்லாம்
உள்வாங்க மனமின்றி
கருகக் கருகக் கண்களால் எரித்து
சாம்பலை காலால் கெந்திவிட்டு
கெக்கலித்துக்கொண்டிருந்தார்கள்.

7
இரவு இரண்டுமணியைத் தாண்டிவிட்டது.
உறக்கம் வந்தும் உறங்க முடியாமல்
வரிகள் சில மனதிற்குள் குறுகுறுக்கின்றன.
கொஞ்சுகின்றன.
ஏந்திக்கொள்கின்றன.
வெளியே கூட்டிக்கொண்டுபோயேன் என்று கையைப்
பிடித்திழுக்கின்றன.

எழுதத் தொடங்கும் நேரம்
எழுதும் நேரம்
எழுதி முடிக்கும் நேரம்
நானே கவிதையின் பாடுபொருளாய்
இலக்கு வாசகராய் –
விலகிய பார்வையில்.
அதிவிழிப்பு நிலையில்…..

சாதியின் பெயரால் சக கவிஞர்களைச் சிரச்சேதம் செய்பவர்கள்
தமிழ்க்கவிதைத் தாளாளர்களாய்
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிச் சென்றவண்ணம்.
இன்னும் ராமேசுவரத்தைக்கூடக் கண்டிலேன் நான்.
என்றாலும், ”குறையொன்றுமில்லை” எனச் சொல்வேன் –
மறைமூர்த்திக் கண்ணனிடம் இல்லை -
மனம் நிறைக்கும் கவிதையிடம்.
பின் ஏன் திண்ணைக்கு அனுப்புகிறாய் என்பார்க்கு:
”கல்லுக்குள் தேரைக்கு உணவிருக்கையில்
என் கவிதைக்குள் கரைபவரும் எங்கோ இருக்கக்கூடும்தானே!”



* * *

(14.2.2016 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)