LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 12, 2026

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து -3

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து -3
‘ இங்கே பாருங்க, நான் சொல்றதைக் கேளுங்க’

” நீங்க சொல்றதை நான் எதுக்குங்க கேக்கணும்?’

‘உங்களுக்கு நன்மை செய்யணும்னு அமெரிக்கா விலேர்ந்து வந்திருக்கேன்.

அதுக்கு முன்னாடி எங்கேயிருந்தீங்க?:

நியூஜிலாந்தில்.

இப்ப என்னை மாதிரி ஆளுங்கிட்ட பேசி எங்க அறிவுக்கண்ணைத் தெறந்த பிறகு எங்க போவீங்க?

ஸ்விட்ஜர்லாந்துக்கு. அக்டோபர், நவம்பர் டிசம்பர் ஸ்பெயினுக்கு…..

ஆக மொத்தம் – இந்தியாவில் இருப்பதே யில்லை. நாங்க இங்கயே தான் எப்பவும். இங்கேத்த நிலவரத்தை நீங்க எடுத்துச்சொல்லி நாங்க புரிஞ்சுக்கவேண்டிய அவசியமில்லை. போய்ட்டு வாங்க.




மாதம் 2000 ரூபாய் அல்லது 5000 ரூபாயில் ஒரு பெண் என்னவெல்லாம் வாங்கலாம் தெரியுமா! ’

‘இன்று படித்தவர்களோ, படிக்காதவர்களோ , கிராமமோ நகரமோ – பெரும்பாலான பெண்கள் வருவாய் ஈட்டக் கூடிய வேலை ஏதாவது செய்கிறார்கள். வீட்டுவேலை முதல் வயதானவர்களைப் பார்த்துக்கொள்ளும் வேலை என எத்தனையோ வேலைகள். எனக்குத் தெரிந்து எத்தனையோ ஆட்டோ ஓட்டுனர்களின் மனைவியர் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வீட்டுவேலை செய்து கணவன் மதியம் வீடு திரும்புவதற்குள் வேலை முடிந்து வீடு திரும்பி சுடச்சுட உணவு தயாரித்து வைத்திருப்பார்கள். கேட்டரிங் தொழிலில் பல பெண்கள் வீட்டிலிருந்தே உணவுப்பண்டங்கள் சமைத் துத் தந்து வருமானமீட்ட முடிகிறது. எத்தனை பணம் வந்தாலும் செலவு அதிகம்தான் என்பது உண்மை. ஆனால், 1000, 2000 கூடுதலாகக் கிடைத்தால் அதைக் கொண்டு என்ன வாங்க முடியும் என்று பெண்களுக்கு நன்றாகவே தெரியும்.’






’படித்தவர்களாகிய நாங்கள் சொல்கிறோம் – கேளுங் கள். தமிழகம் வளர்கிறது, வளர்கிறது - வளர்ந்து கொண்டே போகிறது’

நீங்கள் பாரதியார் சொன்னதை முதலில் கேளுங்கள் - ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்’
_ பாரதியார்




மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மிக மிக விழிப்பாக இருக்கவேண்டும். மூடநம்பிக்கை களுக்கு அடிமையாகிவிடக்க்கூடாது…..

அதாவது, ஆளுங்கட்சியே சர்வ வல்லமை பொருந்திய ஆண்டை என்று நம்பிவிடலா காது. 'மக்களாகிய நாங்கள் எப்போதுமே பல்லக்குத்தூக்கிகள்' என்ற மூடநம்பிக்கை யைப் புறந்தள்ளிவிடவேண்டும் - அப்படித் தானே?'

????????????????????????????????????????????



அவர் இதுவரை தேர்தல்ல நின்னு ஜெயிச்சிருக்காரா, சொல்லுங்க

’இல்லை. அதனாலே என்ன?’

’அதனாலே என்னவா? மக்களாட்சியிலே மக்களால தேர்ந்தெடுக்கப்படாமல் வரலாமா?’

’அப்படின்னா, தேர்தல்ல ஜெயிச்சு வரவங்க எல்லாம் நல்லவங்களா? மக்களுக்கு நல்லது பண்றவங்களா?”


????????????????????????????????????????????





எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து

 எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 1



‘ நம் வாக்கு நம் உரிமை ’
‘ஆமாங்க – இதே தான் எல்லா சேனல்லேயும் வருது.
'அதை நாம் வீணடிக்கக் கூடாது'.

அப்படியெல்லாம் வீணடிக்க மாட்டோமுங்க – பணம் கிடைச்சாலும், கிடைக்காட்டியும் கட்டாயம் போடு வோம்ங்க. நீங்க?
நாங்க நீலாங்கரையில வீடு கட்டி குடியேறி நாலு வருஷம் ஆகுது. இன்னும் வாக்காளர் அட்டை விலா சத்தை மாத்த நேரம் கிடைக்கலை.
அடடா – அப்ப எப்பிடி வோட்டு போடுவீங்க?
நம்ம ஒருத்தர் வோட்டில என்ன இருக்கு? WHATEVER WILL BE, WILL BE’
எதுக்குங்க திடீர்னு இங்கிலீஷுக்கு மாறிட்டீங்க?
இங்கீலீஷ்ல ஏதாவது சொன்னா நான் அறிவாளின்னு நம்பிடுவீங்க, நான் வாக்களிக்காமலிருப்பது என்னு டைய அலட்சியம் இல்லை, அறச்சீற்றம்னு நினைச்சுக்கு வீங்கன்னுதான்….
?????????????????????????????????????????????????????????




அய்யோ – இது என்ன ?….
எது என்ன?
நேத்துவரைக்கும் ஆளுங்கட்சியைத் திட்டித்தீர்த்துக் கொண்டிருந்த இந்த நாளிதழ் இன்னிக்கு ஆளுங் கட்சியின் சாதனை களை விளக்கி முழுப்பக்கம் எழுதியிருக்குதே

அது அரசு விளம்பரம்ங்க

PAID NEWS போலவா

அப்படிச் சொல்ல முடியாது. ஆனா, அப்படிச் சொல்லாம லிருக்கவும் முடியாது....



ஐயா, அம்மா – உங்கள் பொன்னான வாக்கை எனக்கே அளிக்க வேண்டுகிறேன்.

’ஆனா, யார் தன்னுடைய மொத்த சொத்தில பாதியை சமூக மேம்பாட்டுக்காக முதலிலேயே கொடுத்துவிடு கிறாரோ அவருக்குத்தான் என் ஓட்டு.

அய்யய்யோ, இது என்ன வம்பா போச்சு.....




எல்லோரும் இந்நாட்டு மன்னர்’

‘மொதல்ல, இது மக்களாட்சி’.

‘மக்களாட்சியிலும் மன்னர்கள் உண்டு; இளவரசர்கள் உண்டு.

‘அடிமைகளும் உண்டுதான். இதில் ’எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பது நல்ல நகைச்சுவை; பொழுதுபோக்கு'




’கற்றது கையளவு; கல்லாதது கடலளவு.’

இது நம்ம எல்லோருக்கும் பொருந்தும். இதிலே அவரை மட்டும் கத்துக்குட்டின்னு சொன்னா எப்பிடி?

'வாயை மூடு, அதிகப்பிரசங்கி.






‘எனக்குத் தெரியும் மேடம் – நீங்க எந்தக் கட்சிக்கு ஓட்டுப்போடு வீங்கன்னு… இருந்தாலும், மனசு கேக்கலை – அதனால சொல் றேன். அந்தக் கட்சிக்கு ஓட்டுப்போட றது உங்க மூஞ்சில நீங்களே கரி பூசிக்கிறதுக்கு சமம்.


அட! அப்படியானால், அந்தக் கட்சிக்கு நான் ஓட்டுப் போட்டா நீ என் மூஞ்சில கரி பூசுற சிரமம் உனக்குக் இருக்காது. அதுக்காக நீ எனக்கு நன்றி சொல்லணும்!


??????????????????????????????????




மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மிக மிக விழிப்பாக இருக்கவேண்டும். மூடநம்பிக்கைகளுக்கு அடிமையாகிவிடக் க்கூடாது…..

அதாவது, ஆளுங்கட்சியே சர்வ வல்லமை பொருந்திய ஆண்டை என்று நம்பிவிடலாகாது. 'மக்க ளாகிய நாங்கள் எப்போதுமே பல்லக்குத்தூக்கிகள்' என்ற மூட நம்பிக்கையைப் புறந்தள்ளிவிட வேண்டும் - அப்படித்தானே?'


?????????????????????????????????????????????????????????????????????????????



காலைல 11 மணிக்கு உங்களைப் பார்க்க வரவா?


நான் பல்கலைக் கழகம் வரை போகணும்.


ஐயையோ – என்ன இது – கட்சி மாறப்போறீங் களா?




Saturday, May 9, 2026

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 3

 எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 3

சினிமா மாயை என்று ஒரு நடிகரின் அரசியல் பிரவேசத்தை விமர்சிக்கும், அவரை அனுபவமில்லாதவர் என்றும் அவரை ஆதரிப்பவர்களை அரசியல் அறிவு இல்லாதவர்கள் என்றும் பேசும் ஊடகவியலாளர்கள் 'அரசியலுக்கு இதோ வரேன் வந்து கொண்டேயிருக்கேன், வந்துவிடுவேன்' என்று கூறிக்கொண்டே யிருந்தரையும், ஒரேயொரு மக்களவை சீட்டோடு தன் கட்சியை ஓரங்கட்டி வைத்துவிட்டவரையும், சினிமா விலேயே பணம் அள்ளிக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளையும் திரும்பத் திரும்ப ‘ஜனநாயக் கடமை ஆற்றியதாய்’ வெளிச்சம்போட்டுக் காட்டவேண்டிய தேவையென்ன?’


அதுவும், பிரபலங்கள் வாக்களிக்கும்போது அவரைப் பின் தொடர்ந்து வாக்களிக்கும் அறைக்குள், பகுதிக்குள் அத்தனை ஊடகவியலாளர்கள் செல்லவேண்டிய தேவையென்ன? அப்படி செய்வது சரியா? அதை ஏன் யாரும் தடுக்கவில்லை?



//இப்ப புதுசா வந்திருக்கானே – அவன் சரியான பொறுக்கி – அவன் ஜெயிக்கவே மாட்டான். அவன் ஆட்சிக்கு வந்தா நாம நாசமாத்தான் போவோம். வெத்துப்பய, உதவாக்கரை//

//எல்லோருமே ஒரு சமயம் புதிதாக வந்து பின்பு அரசியல்களத்தில் பரிச்சயமானவர்களாக மாறியவர்கள் தான். ஆனால், ஒருவரை அவன், இவன் மொள்ளமாறி, முடிச்சவிக்கி என்று கண்ணியமற்ற சொற்களால் வசைபாடுவது அவரை விட நம்மையே அதிகம் அடையாளங்காட்டும்//







வார்த்தைகளின் வரையறைகளும் வரம்பெல்லைகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வார்த்தைகளின் வரையறைகளும் வரம்பெல்லைகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
/ஃபாசிசம் ஒழிக பாசிஸத்தை உயர்த்திப்பிடிக்கும் கட்சி ஒழிக/
/ஃபாசிசத்தை வேரறுப்போம் வாருங்கள்/
/ஃபாசிசம் நம்மை கூறுபிரிக்க விடலாமா கூறுங்கள்/
/ஃபாசிசம் தான் மட்டுமே சரியென்று நினைக்கும்/
/ஃபாசிசம் தன்னை மட்டுமே முன்னிறுத்த முனையும்/
/ஃபாசிசம் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளும்/
/ஃபாசிசம் தானே சரி, தான் மட்டுமே சரி என்று நீட்டிமுழக்கும்/
/ஃபாசிசம் எல்லோருமே தனக்குக் கட்டுப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தும்/
/ஃபாசிசம் தன்னை எதிர்ப்போரை வெட்டி வீழ்த்தும்/
என்றெல்லாம் பகலிரவாய்
தான் நேசிக்கும் கட்சிக்காய் குரல்வளை முறிய
கூவித்திரிந்தவன்
மற்ற கட்சிகளையெல்லாம் ஃபாசிஸ்ட் கட்சிகள்
என்று ஏசியவாறிருந்தான்.
ஒருநாள்
கட்சியில் தப்பெனத் தனக்குப் பட்ட ஒன்றை மட்டும்
தட்டிக்கேட்டான்.
கட்சிநீக்கம் செய்யப்பட்டான்.
அப்பிய அப்பில் அதோ குப்புற விழுந்தவனின்
கிழிந்த வாயிலிருந்து ரத்தத்தோடு
வழிந்துகொண்டிருக்கிறது
சத்தமில்லாமல் ஃபாசிசம்..

(2021, 2 MAY - மீள்பதிவு)

எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும்! - 1

  எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும்! - 1

லதா ராமகிருஷ்ணன்



இந்தப் புகைப்படத்தைப் பாத்தாலே தெரியும் - நானும் இந்த உலகப்புகழ் ஓவியரும் ஒருவருக்கொருவர் எத்தனை நெருக்கமானவங்கன்னு.


ஆனா, இது ஏதோ கலை-இலக்கிய அமர்வுல எடுத்த குரூப் ஃப்போட்டோவை வெட்டி ஒட்டினதுதானேங்க. இதோ, அந்த குரூப் ஃபோட்டோ.

??????????????????????????????????????????????????????






என்னங்க, நீங்க இட்லி செய்யக்கூட லாயக்கில்லைன்னு இப்பிடி பட்டுன்னு சொல்லிட்டாரு?
விமர்சனம்ங்கற பேர்ல அவரோட படைப்புக்கு PRO வேலை செய்யலை. அதுனால...




மனுஷங்களோட அதிகாரவெறி விதவிதமா பல டிசைன்ல வெளிப்படுது. பாக்க ஒரே வேடிக்கையா இருக்கு!

இது என்ன தத்துவம் மாதிரி என்னவோ சொல்றே?

தாமாவே வந்து ‘ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தாரு.. நானே பாத்துப் பாத்து தான் நட்பழைப்பை ஏத்துப்பேன். இப்ப 1000 போல இருப்பாங்க. ஆனா, இந்த மனுஷன் அவர் சொல்ற அபத்தக் கருத்துகளுக்கெல்லாம் லைக் போட கூட ஒரு ஆளைத்தான் தேடிக் கிட்டிருக்காருன்னு அப்ப தெரியலை. பொதுவெளியில ஒரு கருத் தைப் பதி விட்டிருந்தவருக்கு கண்ணியமான முறையில மாற்றுக் கருத்துப் பதிவிட்டு பிறகு பாத்தா அவரு பேரையே ஃபேஸ்புக்கில காணலை. இன்னொருத்தருடைய ஃபேஸ்புக்கிலிருந்து பாத்தாக்கா அவருடைய பதிவுக்கான என் பின்னூட்டத்தையே டெலீட் பண்ணிருக்காரு!



என்னங்க இது – சாலையோர கோயில் உண்டியல்கள்ள எல்லாம் 2 ரூபா , 5 ரூபா நாணயம் இல்ல 10 ரூபா நோட்டுன்னு போடறீங்க? படிச்சவங்க நீங்க – இத்தனை மூடநம்பிக்கையோட இருக்கீங்க?

அடிக்கடி போடறதில்லைங்க .எங்கிட்ட பணம் இருக்கறப்ப - அது அபூர்வம் – எப்பவாச்சும் போடுவேன். மத்தபடி, இருபது லட்சம், முப்பது லட்சம்னு பகுத்தறி வோட சாமிக்கு காணிக்கை செலுத்த என்னால எப்படி முடியும், சொல்லுங்க?





F

எமோஜிக்களும் ஏஐயும் எப்போதுமான மொழிபெயர்ப்பாளர்களும்

எமோஜிக்களும் ஏஐயும் எப்போதுமான மொழிபெயர்ப்பாளர்களும்


AI வந்திடுச்சுங்களே – உங்க ளுக்கு முக்காவாசி வேலை மிச்சம் – மொழிபெயர்ப்புக்கு அதே ரேட் கேட்டா எப்பிடி?

மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுக்கற ரேட் எப்பவுமே கம்மிதானுங்களே. கையெழுத் திலேர்ந்து கம்ப்யூட்ட ருக்கு மாறினாப்பல ஏஐ ல உதவி கெடச்சா மொழி பெயர்ப்பாள ரும் எடுத்துக்கலாம் – தப்பில்ல. ஆனா, ஏஐ மொழிபெயர்ப்பைப் படிச்சு அதுல திருத்தம் செய்ற துங்கறது ‘டபுள்’ வேலை. ஒரு ‘எக்ஸ்பர்ட்’ வேலையும்கூட. நியாயமா பாத்தா நீங்க கட்டணத்தைக் கூட்டித்தரணும்.

?????????????????????????????????????????????????????????????



இப்பத்தான் ஏஐ எல்லாம் வந்திடுத்துங்களே உங்களுக்கு உதவ – அதனால மொழிபெயர்ப்புக்குக் கொஞ்சம் குறைச்சு சார்ஜு வாங்கிக்கங்க.
..............................................................................
என்னங்க ரொம்ப யோசிக்கிறீங்க?

இல்லீங்க – பாட்டில ஒரே வரி திரும்பத்திரும்ப வருது. அர்த்தமே யில்லாத டிங்கு டிங்கு, ஜிங்கு ஜிங்குவும் வருது – அதை யெல்லாம் தள்ளி மீதிக்கு மொழிபெயர்ப்பு சார்ஜ் சொல்லுங்கன்னு முன்ன கேட்ட திரைப்படப் பாடலாசிரியர் ஒருத்தர் ஞாபகம் வர்ரார். சினிமாவுக்கு என்ன ரேட்டுன்னு நமக்குத் தெரியாதுன்னு அவரா நெனச்சுக்கிட்டு அச்சு ஊடகத்திலே தர ரேட்டுக்குப் பேசி அதுல குறைச்சுக்க சொல்லி அறிவுறுத்தினாரு. பாவம், அவரு இறந்துட்டாரு.

???????????????????????????????????????????????????????????




“சில வாரங்களுக்கு முன்(அல்லது, மாதங்களுக்கு முன்) TIMES OF INDIA – SOUTHPOLE பகுதியில் தமிழிலக்கிய வெளியில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து சிலர் கருத்துத் தெரிவித்திருந் தார்கள். மொழிபெயர்ப் பாளர்களுக்கு கொழுத்த கட்டணம் தரவேண்டியிருக் கிறது. செயற்கை நுண்ணறிவால் அதிலிருந்து மீளமுடியும் என்று ஓரிரு பதிப்பாளர்கள் சொல்லியிருந் தனரே – அதை படித்தாயா?”

“படித்தேன். ஆர்வம் ஒன்றே காரணமாக மொழிபெயர்க்கப் பட்டுள்ள படைப்புகள், அதை இன்றளவும் செய்துவரு வோர், பேசிய கட்டணம் தரப்படாமல் தவிக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் என பல தரப்பினர் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தனர். “





சமீபத்தில் ஒரு பெப்பெரிய படைப்பாளியின் இணையதளத்தில் ஒரு ஆங்கிலக் கட்டுரை தரப்பட்டு அதன் தமிழ் வடிவமும் தரப் பட்டு அதன் கீழே ‘கூகுள் ட்ரான்ஸ்லேஷன் என்று அடிக்குறிப்பு தரப்பட்டிருந்தது. பார்த்தாயா?


அந்த ஆங்கிலக் கட்டுரையை கூகுள் ட்ரான்ஸ்லேஷனில் போட்டுப் பார்த்தபோது மேற்படி இணைய தளத்தில் கூகுள் ட்ரான்ஸ்லேஷன் திருத்தப்பட்டே தரப்பட்டிருப்பது தெரிந்தது. அச்சு அசல் கூகுள் ட்ரான்ஸ்லேஷன் என்று தரப்பட்டிருந்த அடிக் குறிப்பு மொழிபெயர்ப்பாளர் களை மட்டம்தட்ட என்பது புரிந்தது


எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 2

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 2

 ரோடு முழுக்க குண்டுங்குழியுமா இருக்குங்க. புதுசா இந்த வழியா வண்டி ஓட்டிக்கிட்டு வரவங்க நிலையை நினைச்சா பயம்மா இருக்குங்க. புதுசா வர ஆட்சியிலா வது இதெல்லாம் சரிசெய்யப்படணும்...

அப்படியிருந்துங்கூட நேரா ரோட்டைப் பாக்காம மேப் பையே பாத்து ஓட்டறாங்க, மௌபைல்ல பேசிக்கிட்டே ஓட்டறாங்க. இதெல்லாமும்கூட புதுசா வர ஆட்சியில் சரிசெய்யப்பட ணும்




சே, என்ன அநியாயம் இது தமிழ்நாட்டு மக்களெல்லாம் வெட்கப்படறாங்க. அவமானமா உணர்ராங்க... அத்தனை தமிழர்களையும் தலைகுனிய வச்சுட்டாங்க...

ஸார், இருங்க, இருங்க - எப்போ சார் உங்களை தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேரும் தங்களுடைய ஒரே பிரதிநிதியா நியமிச்சாங்க? சொல்லவேயில்லையே!





“சே, இந்த மக்களுக்கு மூளையே இல்லைங்க....

உங்களுக்கு மூளையில்லேன்னு வெளிப்படையா ஒத்துக்கற துக்கு ஒரு பெரிய மனப் பக்குவம் வேணுங்க. மூளையே இல்லைன்னாலுங்கூட நீங்க பெரிய மனுஷந் தாங்க.

?????????????????????????????????????????????????????




கடலளவு அனுபவம் உள்ளவர் அவர்..... அவரைப் போய் தோக்கடிச்சிட்டாங்களே

ஓ! அதுனாலதான் கப்பலா வாங்கிப்போட்டா கண்ணுல பட்டுடும்னு நீர்மூழ்கிக்கப்பலா வாங்கிப்போட்டாரோ!



இந்தத் தேர்தலைப் பற்றிய உங்க கருத்துக்கணிப்பு என்ன?

இந்தத் தேர்தல்னு இல்ல. எல்லாத் தேர்தல்களைப் பற்றி யும் என் கருத்துக்கணிப்பு இதுதான்: எந்தத் தேர்தல்லே யும் 100% வாக்களிப்பு இருக்காது. எல்லாத் தேர்தல்லே யும் புதிதாக ஒன்றிரண்டு கட்சிகள் வரும். எந்தத் தேர்தல்லேயும் ப்ரைம் சேனல்களெல்லாம் கருத்துக் கணிப்புங்கற பேர்ல காட்டுக் கத்தலா கத்தி விவாதிப்பாங்க. எந்தத் தேர்தல்லேயும் யாரும் வாக்காளர்களை விமானத்திலே கூட்டிக்கிட்டுப்போய் வாக்குச்சாவடில இறக்கிவிட மாட்டாங்க. எந்தத் தேர்தல்லேயும் வாக்க ளிக்க வரிசையில நிக்கறப்போ சில பேர் பிஸ்தாக்கள் மாதிரி எதையாவது பேசிக்கிட்டே இருப்பாங்க. எந்தத் தேர்தல்லேயும் சின்னப்புள்ளைங்க வோட்டு போட மாட் டாங்க. எந்தத் தேர்தல்லேயும் .....

????????????????????????????????????????????????????????????????????



கணிப்பு(க்)கருத்து
.....................................................

இதென்ன – கருத்துக்கணிப்புக்கு கணிப்புக்கருத்துன்னு தப்பா எழுதியிருக்கே?

தப்பால்லாம் எழுதலை – இங்கே பலபேரோட கருத்தே ஒருவித கணிப்புல தானே வெளிப்படுது!

?????????????????????????????????????????

Governor Rajendra Arlekar Super Exclusive With Arnab On The Tamil Nadu Political Stalemate

 Governor Rajendra Arlekar Super Exclusive With Arnab On The Tamil Nadu Political Stalemate

https://www.youtube.com/watch?v=maovnJlpD4g



இலக்கிய நிகழ்வும் INCLUSIVITYயும்

 இலக்கிய நிகழ்வும் INCLUSIVITYயும்


சமீபத்தில் தில்லியில் சாகித்ய அகாதெமி ஏற்பாடு செய்திருந்த இலக்கிய நிகழ்வொன்றில் ‘ மாற்றுத் திறனாளிப் படைப்பாளிகளுக்கென தனி அமர்வு இருந்ததாகத் தெரியவந்தது.

ஆனால், அந்த அமர்விலும் கலந்துகொண்ட படைப்பாளி கள் அவர்களுடைய படைப்புகளை வாசித்துக்காட்டத் தான் செய்தார்களாம். மாற்றுத்திறனாளிகள் படைப் பாளிகளாக இயங்குவதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்பதாக எந்தக் கலந்துரையாடலோ, கட்டுரை வாசிப்போ இல்லையாம்.
அப்படியிருக்க, படைப்பியக்க வெளியில் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அமர்வு எதற்கு?
ஒருவேளை, அவர்கள் எண்ணிக்கையில் அதிக அளவு கலந்துகொள்ள வழிவகுக்கும் நோக்கில் இப்படி செய்தி ருக்கலாம்.
ஆனால், இது தேவையற்றது.
INCLUSIVITY யே[அனைவரையும் உள்ளடக்குதல்; மைய நீரோட்டத்தில் ஒன்றிணைத்தலே] ஆரோக்கியமான அணுகுமுறை.