LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 18, 2025

சொல்லத்தோன்றும் சில…. லதா ராமகிருஷ்ணன்

சொல்லத்தோன்றும் சில….

லதா ராமகிருஷ்ணன்

நவீன இலக்கியத்தில் வெகுஜனப் பத்திரிகைகள் இலக்கி யம் என்ற பெயரில் தந்துகொண்டிருந்த ‘மசாலா’ இலக்கி யத்திற்கு மாற்றாய் சில இலக்கிய முயற்சிகளை பெரும் பாலும் அவரவர் கைக்காசைப் போட்டு பத்திரிகைகள் நடத்தி முயன்றுபார்த்துக் கொண்டிருந்தவர்களை மதிப்ப ழிக்கும்படியாக யார் எழுதினாலும் அது உள்நோக்கம் கொண்டது; உண்மையல்லாதது.

கவிதை குறித்த தங்கள் பார்வைகளை, தாம் நம்பும் கண் ணோட்டங்களை அந்த சிறுபத்திரிகையாளர்கள் வெளியிட் டார்கள். உலகெங்கும் avant-garde என்று அறியப்படும் மாற்று கலை, இலக்கிய முயற்சிகள் எல்லாக் காலத்திலும் நடந்த வண்ணமே.

சொல்லப்போனால், இந்த ‘avant-garde' வகை படைப் பாளிகள் தான் அதிக எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் அடைவார்கள். அவர்களை அடையாளமழிக்கும் போக்கு, அவர்கள் குரலை ஒடுக்கும் போக்கு எப்போதும் நடந்த வண்ணமே.

சமூகப் பிரக்ஞை வாய்ந்த கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிச்சொல்லி அந்தக் கட்டமைப்பில் எழுதப்படாத கவிதைகளை சமூகத்திற் குப் பயன்படாத கவிதைகளாகக் காட்டி, அதன் மூலம் அவற்றை மறுதலிக்கும் உத்தி இங்கே எபோதுமே நுட்பமாக செயல்பட்டுவந்திருக்கிறது.

(அதையும் மீறி தேர்ந்த கவிதை வாசகர்கள் சிறு பத்திரிகைக் கவிதைகளை தேடிப் படிப்பதும் நடந்தது).

சமூகப்பிரக்ஞை வாய்ந்த கவிதைகளைப் படைப்பதாக அடையாளப்படுத்தப்படும் கவிஞர்களுக்கு அங்கீகாரம் அது சார்ந்த பிராபல்யமும், சௌகரியங்களும் சுலபமாகக் கிடைத்து விடும் அளவுக்கு உள்வயக் கவிதைகளை எழுதுவோருக்கு, மெய்யான சிறுபத்தி ரிகைக் கவிஞர்களுக்கு (சின்னதாக இருந்தாலே அது சிறுபத்திரிகை என்று எண்ணிக்கொண்டு சிலர் சிறுபத்திரி கையாளர்களாக இருப்பதும் நடப்புண்மை.) அங்கீகா ரமோ, வாழ்வு வசதிகளோ கிடைப்பதில்லை.

எல்லாக் காலத்திலும் இலக்கியத் தேடல் இருப்பவர்கள் சிறுபத்திரிகைகளையும் வாசிக்கிறார்கள். சிறுபத்திரிகை களில் எழுதினால் காசு வராது, பெயர் புகழ் பெரிதாக வராது என்று நினைப்பவர்கள் அவற்றைக் கடந்து போகிறார்கள்.

இந்த இந்த சாதியினர் தான் சிறுபத்திரிகைகளில் எழுதலாம் என்று எந்தக் காலத்திலும் எந்தவிதமான கட்டுதிட்டங்களும் இருந்ததில்லை.

அதேபோல், மாற்றுக்கருத்துகளுக்கு, எதிர்மறை விமர் சனங்களுக்கு, காரசாரமான விவாதங்களுக்கு சிறுபத்தி ரிகைகள் இடமளித்ததுபோல் கட்சிசார்ந்த, சித்தாந்த ரீதியான இதழ்களோ, ‘மசாலா’ இதழ்களோ அளித்த தில்லை.

ஆத்மாநாமின் பெரும்பாலான கவிதைகள் அன்றை சமூக நடப்பு குறித்து விமர்சனம் செய்பவை. எமெர் ஜென்ஸி குறித்த் எழுதப்பட்டது உட்பட. அவர் சிறுபத்திரி கைகளில்தான் எழுதினார். அவருடைய கவிதைகளில் இருந்த சமூகப் பிரக்ஞை அவர் காலத்தில் இருந்த அரசியல்கட்சிகள், உரத்து முழங்கும் சமூகப்பிரக்ஞை யாளர்களால் அடையாளங்காணப் பட்டதா? அடையாளங் காட்டப் பட்டதா? அங்கீகரிக்கப்பட்டதா? இல்லையே. ஆனாலும் அவர் எழுதினார். தொடர்ந்து சிறுபத்திரிகை களில்தான் எழுதினார். அதேசமயம் அவர் அகவயக் கவிதைகளையும் எழுதினார். அவற்றை எழுதுவதே சமூகப் பிரக்ஞைக்கு, மனிதநேயத்திற்கு எதிரான விஷயம் என்று ‘பாவ்லா’ செய்யவில்லை.

எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் சிறுகதைகளில் இல்லாத சமூகப் பிரக்ஞையா? கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப் பட்டவை என்ற ஒரு கதை போதும். அவரு டைய பெரும்பாலான கதைகள் சிற்றிதழ்களில்தான் பிரசுரமாயின. கவிதை என்று எடுத்துக்கொண்டாலும் அப்படி எத்தனையோ கவிஞர்களைக் குறிப்பிட முடியும். அவர்களெல்லாம் ‘வெகுஜனப்’ பத்திரிகை களால் எள்ளி நகையாடப்படுவதன் மூலமே அவர்களுடைய கவிதை களின் வீர்யம் வெளிப்படாமல் மூடிமறைக்கப்பட்டது.

இடைநிலை இதழ்கள் வந்த பிறகு இந்த நிலை மாறி நல்ல கவிஞர்கள் பரவலாக அடையாளங்காட்டப் படுவது நிகழலா யிற்று என்றாலும், QUALITY POETSஐ RUN-ON-THE-MILL POETS உடன் கலந்துகட்டி தனித்துவம் வாய்ந்த கவிஞர்களை அடையா ளமழிக்கும் HIDDEN AGENDA செயல்படவும் வழியமைந்தது. இதில் நேரடி அரசியலும் மறைமுக அரசியலும் பங்காற்றுகிறது என்பதையும் காண முடிகிறது.

எழுத்து சிற்றிதழின் ஆரம்ப இதழிலிருந்து அதில் எழுதி வந்தவர் க.நா.சு என்று தெரிகிறது. அவர் பிரதானமாக கவிஞர் அல்ல. ஆனாலும் அவருடைய பல கவிதைகள் கவித்துவமானவை. உயில், சந்திரன், அனுபவம், அகராதி என்று பல எடுத்துக் காட்டுகளைக் காட்ட முடியும். அவரு டைய கவிதைகளில் இருக்கும் சமூகப் பிரக்ஞையை பார்ப்பதும் பார்க்க மறுப்பதும் வாசகரின் அரசியல் சார்பு என்று சொல்ல முடியும். அப்படி வாசகரின் இலக்கிய ரசனையை condition செய்யும் போக்கு மற்ற பத்திரிகை களை விட சிற்றிதழ்களில் குறைவான அளவே காணப் பட்டது எனலாம்.

க.நா.சுவை பார்ப்பனர் என்பதால் ‘எழுத்து வகையறா’ வாகப் பகுப்பவர்கள் அவருடைய வள்ளுவரும் தாமசும் (அல்லது, தாமஸ் வந்தார்) புதினத்தைப் படிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

சிற்றிதழ் இயக்கம் தமிழில் செறிவார்ந்தது. தமிழின் மாற்றிலக்கிய முன்னோடிகளை சனாதனிகள் என்று கட்டம் கட்டி ஓரங்கட்டிவிடுவது, தமிழிலக்கிய வரலாற் றிலிருந்து அகற்றிவிடுவது சுலபமாக இருக்கக்கூடும். இங்கே சனாதனம் என்ற சொல்லை உதிர்த்தாலே சுலபமாக சமூக சீர்திருத்த வாதிகளாகிவிட முடியும், சீரிய இலக்கிய கர்த்தாக்களாகிவிட முடியும், சர்வதேச அரங்குகளில் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாய் இடம்பிடித்துவிட முடியும்.

சர்வம் சநாதன எதிர்ப்பு மயம்’ என்ற நிலை இங்கே பரவலாகிக் கொண்டே வருவது, அதாவது பரவலாக்கப்பட்டுக் கொண்டே வருவது இலக்கிய மேம் பாட் டுக்கோ, சமூக மேம்பாட்டுக்கோ எந்த வகையிலும் உதவாது. இதுவும் ஒருவகைப் பொறுப்புத் துறப்புதான் (எல்லா சமூகசீர்கேடுகளையும் சனாதனத்தின் தலை யில் சுமத்திவிடுவது) இதுவும் ஒருவிதமான Hate Speech; Marginalizationதான்.

சநாதனம் என்ற சொல் இங்கே பொதுவாக, பொத்தாம் பொதுவாக அறியப்படும், பகிரப்படும் அர்த்தத்தில் பார்த்தால் கூட, அவரவருக்குள் ஆயிரம் சநாதனிகள் என்பதே உண்மை.

Friday, May 16, 2025

அன்னா அக்மதோவா கவிதை - 24 - எனது மண்

 அன்னா அக்மதோவாவின் கவிதை - 24

எனது மண் (அ) அன்னைபூமி (அ) பிறந்த நிலம்

ஆங்கிலத்திலிருந்து தமிழில்
லதா ராமகிருஷ்ணன்

நாம் அதை அலங்காரப் பேழைகளில் நம்
இதயத்தின் மீது சுமந்துகொண்டிருப்பதில்லை
அது குறித்து கவிதைகளில் கரைவதில்லை,
அது நம்மைக் கசப்பான ஓய்விலிருந்து எழுப்புவ தில்லை
உறுதியளிக்கப்பட்ட ஈடன் தோட்டம்போல்
இல்லை அது.
நம்முடைய மனங்களில் பேரத்திற்கான பொருளாய்
அதை பாவிக்க ஒருபோதும் முயற்சிப்பதில்லை நாம்.
நோயுற்றிருக்கும்போது, மகிழ்ச்சியற்றிருக்கும்போது,
அதன்மீது அலுப்புற்றிருக்கும்போது
அதைப் பார்க்கவோ அறியவோ கூட அறியத் தவறிவிடுகிறோம்.
ஆம், பாதத்திலான இந்தப் புழுதி
நமக்கு ஏற்றதாயிருக்கிறது,
ஆம், பற்களின் இந்த விசைகூடிய அரைவு
மிக வாகாயிருக்கிறது நமக்கு,
எனவே இரவும் பகலும் மிதித்தேகிக்கொண்டிருக்கிறோம் _
அந்தக் கலவையாகா, கட்டுமான நேர்த்தியற்ற, புழுதியை.
ஆனால் நாம் அதனுள் படர்ந்துகிடக்கிறோம்,
அதுவேயாகிறோம்
ஆகவே அழைக்கிறோம் வெகு இயல்பாய் –
எனது மண் என்று.
......................................................................................................................................
*மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இந்தக் கவிதையின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது ஒரு வாசகராக எனக்குத் தோன்றும் எண்ணங்கள் சில: Translation is bi-lingual; bi-cultural என்பார்கள். ருஷ்யர்கள் தந்தையர் நாடு என்றுதான் சொல்வது வழக்கம் என்று எங்கோ படித்த நினைவு.’ எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே’ என்று பாரதியும் எழுதியிருக்கிறார். இந்த ருஷ்ய மொழிக் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பிலான தலைப்பு THE NATIVE EARTH. ருஷ்ய மொழியில் அப்படித்தான் இருந்ததா? அது ஏன் என் மொழிபெயர்ப்பில் தாய் மண் என்று ஆகியது? ஒரு மொழிபெயர்ப்பாளராக இந்த மாற்றம் செய்ய எனக்கு உரிமையுண்டா? மொழிபெயர்க்கும்போதே இந்த எண்ணங்கள் எழுந்ததென்றாலும் தாய்மண் என்ற தலைப்பை விட்டு வேறு எதையும் தெரிவு செய்ய மனம் வரவில்லை. ஒரு பார்வைக்கு எளிதில் புரிந்துவிடுவதாய்த் தோன்றும் இத்தகைய சொற் பிரயோகங்கள் உண்மையில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பெரும் சவாலாய், சறுக்கலாய் அமையும்.



அன்னா அக்மதோவாவின் கவிதை -23

 அன்னா அக்மதோவாவின் கவிதை -23

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:லதா ராமகிருஷ்ணன்

தமிழ் மொழிபெயர்ப்பு - 1
.......................................
இந்த மாலைவேளையின் ஒளி பொன்னிறத் தகதகப்பாய்....
இந்த மாலைவேளையின் ஒளி
பொன்னிறத் தகதகப்பாய்
ஏப்ரல் மாதக் குளிர் மிக இதமாய்
நீ பல வருடங்கள் காலதாமதமாய்
என்றாலும் உள்ளே வரும்படி உன்னை
வரவேற்கிறேன்.
எனக்கு அருகில் அமர்ந்துகொண்டு
மகிழ்ச்சி ததும்பும் கண்களால் சுற்றுமுற்றும் பாரேன்.
இந்தச் சிறிய நோட்டுப்புத்தகத்தில் இன்னுமிருக்கிறது
சிறுபிள்ளையாயிருந்தபோது எழுதிய கவிதைகள்
என்னை மன்னித்துவிடு
இத்தனைநாள் வருந்தியபடியே வாழ்ந்திருந்ததற்கு
சூரியக்கதிர்களுக்காக நன்றி பாராட்டாததற்கு
தயவு செய்து என்னை மன்னித்துவிடு
யார் யாரையோ நீயெனப் பிழையாக
என்ணியிருந்ததற்கு.
***
தமிழ் மொழிபெயர்ப்பு -2
...............................................................................

பொன்மாலைப்பொழுது
பொன்னென மின்னும்
இன்மாலைப்பொழுது
மிக இதமான ஏப்ரல் மாதக் குளிர்
மிகப் பல வருடங்கள் காலதாமதமாய் வந்திருக்கிறாய்
இருந்தும் உன்னை மனதார வரவேற்கிறேன்.
என்னருகில் அமர்ந்துகொண்டு ஆனந்தமாய்
அங்குமிங்கும் பார்க்கமாட்டாயா?
என் பிள்ளைப்பிராயக் கவிதைகள்
இன்னுமிருக்கிறது
இந்தச் சின்ன நோட்டுப்புத்தகத்தில்.
இதுகாறும் வருந்தியவாறே வாழ்ந்தமைக்கும்
சூரியக்கதிர்களுக்கு நன்றி பாராட்டாததற்கும்
மன்னித்துவிடு என்னை.
எவரெவரையோ நீயென்று கொண்டதற்கு
தயவுசெய்து மன்னித்துவிடு என்னை.

*மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ஆங்கிலத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும், அந்த வார்த்தை அதன் இடவமைவில் உணர்த்தும் பொதுவான, தனியான அர்த்தங்களுக்கு நியாயம் செய்யும் அளவில் இணை வார்த்தைகள் தமிழாக்கத்தில் இடம்பெற்றிருக்கின் றனவா? MOURNED என்ற வார்த்தை உணர்த்துவது வெறும் வருத்தத்தைத் தாண்டிய ஒரு இழப்புணர்வு என்று என் மனம் என் மொழிபெயர்ப்பைக் குறைகூறுகிறது. ஒருமுறை மொழிபெயர்த்து முடித்த கையோடு இதே கவிதையை இன்னொருமுறை மொழிபெயர்த்தபோது மொழிபெயர்ப்பு ஒரே மாதிரியாக இல்லை. இவ்வாறு ஒரே கவிதையை ஒரே மொழிபெயர்ப்பாளர் இரண்டு மூன்று முறை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பு ஒரேபோல் அமையாமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.
...............................................................................

அன்னா அக்மதோவாவின் கவிதை 22

 அன்னா அக்மதோவாவின் கவிதை

- 22

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ்ணன்



உணர்வெழுச்சிகளின் அணிவகுப்போ
அல்லது புலம்பல் நாடகத்தின் அழகோ
எனக்குத் தேவையில்லை.
எனக்கு, எல்லாக் கவிதைகளும்
செய்நேர்த்தியிலிருந்து விலகிச்செல்லவேண்டும்
வழக்கமான வழியில் போகக்கூடாது.
ஒரு வேலிப்புறத்தேயான
ஒளிரும் DANDELION மஞ்சள்பூக்கள் போல்
BURDOCK போல், COCKLEBUR போல்
என்ன மாதிரிக் குப்பைக்கூளம்
கூச்சநாச்சமேயில்லாமல்
ஒரு கவிதை
உருவாகக் காரணமாகிறது தெரியுமா!
ஒரு கோபக் கூச்சல், ’தார்’இன் துளைக்கும் வீச்சம்
சுவரிலுள்ள மர்மமான பூஞ்சக்காளான்…..
வந்துவிடுகிறது ஒரு கவிதை,
இறுக்கமற்று, இதமாக,
உங்களுக்கும் எனக்கும்
உவப்பூட்டுவதாய்.

*மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: DANDELION. BURDOCK, COCKLEBUR - இவையெல்லாம் நம் ஊரிலும் உண்டா? அல்லது, ருஷ்யாவுக்கே உரித்தானவையா? இந்தக் கவிதையை கவிஞர் ருஷ்ய மண்ணில்தான் எழுதினாரா என்ன? இந்த விவரம் எதுவும் தெரியாமல் இவற்றுக்கு இணையான தமிழ்ச் செடிகள், பூக்கள், முட்களின் பெயர்களைப் பயன்படுத்துதல் சரியா? மொழிபெயர்ப்புப் பிரதி என்பதற்கும் ஒரு மூலமொழிப் பிரதி என்பதற்கும் அடிப்படையாக உள்ள சில வேறுபாடுகளை, தனி அடையாளங்களை இல்லாமலாக்கிவிடுவது சரியா? பெயர்கள் தமிழ் மொழிபெயர்ப்பிலும் ஆங்கிலத்தில் தரப்பட்டிருப்பதுமேற்குறிப்பிட்ட அர்த்தம் சார் நெருக்கடியை, போதாமையை உணர்வதன் காரணமாகவே. கவிதையின் மையக்கருத்து உண்டாக்கும் ஈர்ப்பு காரணமாக இக் கவிதையை மொழிபெயர்க்கத் தோன்றுகிறது. மேற்கண்ட பூ, செடி, தாவரத்தின் பெயர்களைத் தமிழில்(இருக்குமானால்) அறிந்துகொள்ள வழியின்றி அதற்காக பரந்துபட்ட தேடலை மேற்கொள்ளப் பொறுமையின்றி, அவற்றின் தனி அடையாளங்களை அழிக்க மனமின்றி அதற்கான உரிமை ஒரு மொழிபெயர்ப்பாளராக எனக்கு இல்லை என்ற புரிதலோடு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு இது.

மாய யதார்த்தம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மாய யதார்த்தம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அன்பை கவிதையில் பயன்படுத்தும்போதெல்லாம்
அவர் யாரையோ கொலைசெய்துகொண்டிருக்கிறார்.
கொலையும் செய்வாள் பத்தினி என்கிறார்.
கூடவே
பத்தினித்தன்மையை அளக்க எத்தனை பேர் இப்படி
கிளம்பியிருக்கிறீர்கள் என்றும் கோபிக்கிறார்.
கணத்துக்கு கணம் மாறுவதுதான் கவியின் குணம் என்கிறார்.
கவிஞர் ஒரு குழந்தையைப் போல் எனவும் சுட்டுகிறார்.
அன்பென்ற பெயரில் நெருப்பு கக்கத் தெரியாது குழந்தைக்கு
என்று சொன்னால்
கனல் குழந்தைகள் என் கவிதைகள்
உங்கள் நோஞ்சான் குழந்தைகள் நெருப்பிலிடத்தான் லாயக்கு
என்று சொன்ன கையோடு _
‘காக்கா காக்கா கண்ணுக்கு மைகொண்டு வா –
குருவி குருவி கொண்டைக்குப் பூ கொண்டு வா” என்று
சற்றே கரகரப்பான என்றாலும்
கொஞ்சம்போல் இனிமை ததும்பும்
குரலால்
அன்பொழுகப் பாடுகிறார்.
தாய்ப்பால் கசக்க முகஞ்சுளிக்கும் குழந்தையை
சகிக்க முடியாது
மேலும் மேலும் மார்போடு அழுத்தி
மூச்சுத்திணறவைக்கும் மூர்க்க அன்பை
முழுமுனைப்பாய் எதிர்க்கும் மழலையின்
கழுத்துக்காய் நீளும் அந்தக் கைகள்
அழுத்த அழுத்த குழந்தையின் அழுகை
மௌனிக்கிறது.
பாட்டைக் கேட்கக் குழந்தை இல்லாத குறையை
நிறைசெய்யும் பொருட்டு
தன் பாடலை யொரு செல்ஃபி எடுத்து
முகநூல் ட்விட்டர் வாட்ஸப் இன்ஸ்ட்டாக்ராம்
இன்னும் என்னென்ன உண்டோ
எல்லாவற்றிலும் பதிவேற்றிவிட
குழந்தைகளின் கையெட்டா உயரத்தில்
ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தப் பாடலுக்கு
குறைந்தது ஆறாயிரம் லைக்குகளாவது
இதுவரை வந்திருக்கும்.
கிடைத்த தெம்பில்
எளியவர் எவருடைய குழந்தையின் கைகளையும்
தன் அன்புக்கவிதையில்
ஆங்காரமாக உடைத்துவிடும் அவரை
நமக்குக் கிடைத்த அதி உண்மையான அகிம்சைவாதியாக
வரிக்கு வரி அடையாளங்காட்டி எழுதப்பட்டிருக்கும்
இரண்டு திறனாய்வுக் கட்டுரைகள்
மிக முக்கியமான இடத்தைப் பெற்று
இலக்கிய உலகையே
கலக்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FROM POET K.MOHANARANGAN - Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) WITH NO TRAILS...

 FROM POET K.MOHANARANGAN

Rendered in English by
Latha Ramakrishnan (*First Draft)
WITH NO TRAILS.....
You are invited to an unfamiliar household. As you hesitatingly step inside, amidst those new faces there, your nostrils come into contact with a hitherto unknown scent. While probing to know wherefrom it comes your eyes come into contact with an incense stick. By then you start talking with those present there about the purpose of your visit. After the completion of the long dialogue it was only when you are about to leave that you accidentally rise your eyes and glance at the corner and notice a few specs of ashes remaining there. After it is fully burnt, when did the fragrance fully ceased to be – You are not able to presume. The scent that you felt rare you try to bring it back to your memory – but nothing concrete surfaces. No more time to ponder and over you set forth for the next work. After that though on many a time you endeavoured to inhale that scent once again, all your efforts proved in vain. The memory that has come to stay as an unrealized longing deep down in your heart of hearts turn you calm and composed. With the passage of Time the course and rhythm of your longing change. Now all that you propose is just this: Between Being and becoming Non-Being, with the ‘When’ being unknown we should slip off from the memory of one and all and evaporate - just as the scent of the incense stick.
யாதும் சுவடு படாமல்
க.மோகனரங்கன்

அறிமுகமில்லாத ஒரு வீட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். தயக்கத்தோடு அடியெடுத்து வைத்து உள் நுழைகையில், அங்கே இருக்கும்
புதிய முகங்களுக்கு நடுவே அதுவரையிலும் அறிந்திராத ஒரு நறுமணத்தை உங்கள் நாசி உணர்கிறது. எங்கிருந்து அது வருகிறது எனத் துழாவுகையில் அறையின் ஒரு மூலையில் புகைந்து கொண்டிருக்கும் ஊதுபத்தி உங்கள் கண்களில் படுகிறது. அதற்குள் அங்கிருப்பவர்களோடு வந்த காரியம் குறித்து பேசத் தொடங்குகிறீர்கள். நீண்ட உரையாடல் முடிந்து, நேரம் கருதி அவசரமாகப் புறப்படத் தயாராகும் போதுதான் எதேச்சையாக எறிட்டுப் பார்க்கிறீர்கள், அம் மூலையில் உதிர்ந்த சாம்பல் துளிகள் கொஞ்சம் போல எஞ்சியிருப்பதை. எரிந்தடங்கிய பின் எப்போது அந்த மணம் தீர்ந்துபோனது என்பதை உங்களால் அனுமானிக்க முடியவில்லை. அரிதானது என்று எண்ணிய அந்த வாசனையை மீளவும் ஒரு முறை நினைவுக்குக் கொண்டுவர முயலுகிறீர்கள். திடமாக ஒன்றும் திகைந்து வரவில்லை. அதற்கு மேலும் யோசிக்க அவகாசமின்றி அடுத்த வேலைக்குக் கிளம்பிப் போகிறீர்கள்.அதன் பிறகு எத்தனையோ சந்தர்ப்பங்களில் மனதை நுணுகிப் பார்த்தும் அந்த மணத்தை மீளப் பெறுவதற்கு உங்களால் இயலவில்லை. அடி மனதில் அழியாதவொரு ஏக்கமாகத் தங்கிவிட்ட அந் நினைவு உங்களை உள்ளூர நிதானமாக்குகிறது. நாட்பட உங்கள் நாட்டத்தின் கதி மாறுகிறது. இப்போதைக்கு உங்கள் உத்தேசமெல்லாம் இதுதான். இருப்பதற்கும் இல்லாமல் போவதற்கும் இடையில் எப்போது என்று தெரியாமலே, அறிந்த யாரொருவர் நினைவிலிருந்தும் நழுவி மறைந்து விடவேண்டும், அந்தப் பத்தி வாசனையைப் போலவே.

அன்னா அக்மதோவாவின் கவிதை - 21

  அன்னா அக்மதோவாவின் கவிதை - 21

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ்ணன்



காட்டுத்தேனில் இருக்கிறது விடுதலையின் மணம்
புழுதியிலிருக்கிறது ஒரு சூரியக்கதிருடையது.
ஒரு பெண்ணின் வாய் – ஊதாப்பூவினது
பொன்னுக்கு மணமேது?
நீரனைத்தாய் Mignonette செடி
காதல் _ ஆப்பிள்போல்
ஆனால் எப்போதுமே தெரிந்துகொண்டிருக்கிறோம் நாம்
ரத்தமாகவேயிருக்கும் ரத்தத்தின் நெடி.

*Mignonette சிறு மலர்கள் கொண்ட ஒரு வகை தோட்டச் செடி.

முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை - தொகுதி - 1, தொகுதி - 2

 முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை 
தொகுதி - 1, தொகுதி - 2





CONTINUUM - AN ANTHOLOGY OF 100+ CONTEMPORARY TAMIL POETS

 

CONTINUUM - AN ANTHOLOGY OF 

100+ CONTEMPORARY TAMIL POETS RENDERED IN ENGLISH BY DR.K.S.SUBRAMANIAN.