LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, November 30, 2025

ரஸ்ஸல் - மகிழ்ச்சிடைக் கையகப்படுத்துதல் - தமிழில் லதா ராமகிருஷ்ணன் - அத்தியாயம் 3

  பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் - மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் - தமிழில் லதா ராமகிருஷ்ணன் - 

அத்தியாயம் 3

அமெரிக்காவில் உள்ள எந்த மனிதரையும் அல்லது இங்கிலாந்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் எந்த மனிதரையும், வாழ்வின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் அவர்களைத் தடுக்கும் மிக முக்கிய விஷயம் எது என்று கேட்டால் அவர் வாழ்தலுக்கான போராட்டம் என்றே பதில் அளிப்பார். அதை மிகவும் உண்மையாகவே அவர் கூறுவார். அதை அவர் தீர்மானமாக நம்புவார். ஒரு குறிப்பிட்ட வகையில் அது உண்மையே. ஆனால், இன்னொரு வகையில் – இது மிகவும் முக்கியமானது  - அது அப்பட்டமான பொய்; பாசாங்கு. வாழ்க்கைப்போராட்டம் அல்லது வாழ்தலுக்கான போராட்டம் ஏற்படுகிறது என்பது உண்மைதான். அது நம்மில் யாரொருவருக்கும் நமது துரதிஷ்டமான நேரத்தில் ஏற்படலாம். உதாரணத்திற்கு,  அது CONRADன் கதாநாயகன் FALKற்கு அவன் ஒரு கப்பலில் இருக்க நேரும்பொழுது அங்கே இரண்டு பேர் துப்பாக்கியோடு இருக்க, சக மனிதர்களை தவிர வேறு எதுவுமே சாப்பிடக் கிடைக்காத நிலையில் ஏற்படுகிறது. அந்த இரண்டு மனிதர்களும் தங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிற உணவை உண்டு முடித்த பின் வாழ்தலுக்கான, உயிரோடு இருத்தலுக்கான உண்மை யான போராட்டம் தொடங்கியது. அதில் வெற்றி பெற்றான் ஆனால் அதற்குப் பிறகு அவன் என்றுமே சைவ உணவுக்காரனாகிவிட்டான். ஆனால் ஒரு வர்த்தகர், தொழிலதிபர் வாழ்தலுக்கான போராட்டம் என்று சொல்லும்போது  அவர் அர்த்தப்படுத்துவது மேற்குறிப்பிட்ட வகை போராட்டத்தை அல்ல. அடிப்படையில் அற்பமான விஷயம் ஒன்றுக்கு கௌரவத்தை உண்டாக்கும் பொருட்டு அவர் கையிலெடுத்துக்கொண்ட பொருத்த மற்ற சொற்றொடர் அது.  தனது வர்க்கத்தை சேர்ந்தவர்களில் பசியால் இறந்து போன எத்தனை பேரை அவருக்குத் தெரியும் என்று அவரிடம் கேட்டுப்பாருங்கள். அவருடைய நண்பர்கள் வியாபாரத்தில் நொடித்துப்போன பிறகு அவர்களுக்கு என்னவாயிற்று என்று அவரிடம் கேட்டுப்பாருங்கள். எல்லோருக் குமே தெரியும், வியாபாரத்தில் நொடித்துப்போன ஒருவர் அப்படி நொடித்துப்போக வழியே அற்ற ஒருவரை விட வாழ்வு வசதிகளில் மேலானவராகவே இருப்பார். எனவே, வாழ்க்கைப் போராட்டம், வாழ்தலுக்கான போராட்டம் என்று மனிதர்கள் சொல்லும்போது வெற்றி பெறுவதற்கான போராட்டத்தையே அவர்கள் குறிப்பிடு கிறார்கள் என்பதே உண்மை. அந்தப் போராட்டத்தில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக மக்கள் கூறும் போது  அடுத்த நாள் காலை சிற்றுண்டிக்கே வழியில்லை என்ற அர்த்தத்தில் அவர்கள் அப்படிக் கூறவில்லை. தங்கள் அண்டைவீட்டாரை விட அதிக பொலிவுடன், பெருமளவு ஒருபோதும் வசதி படைத்தவராக இல்லாத ஒரு மனிதரை விட என்றுமே மேலான இடத்தில் தான் இருப்பார் என்பதை எல்லோருமே அறிவர். எனவே, வாழ்க்கைப்போராட்டம், வாழ்வதற்கான போராட்டம் என்று மக்கள் கூறுவது வெற்றிக்கான போராட்டம் என்ற அர்த்தத்தில்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் போது மக்கள் அச்சப்படுவது அடுத்த நாள் காலை தங்களுக்கு காலை உணவு கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்காக அல்ல தங்கள் அண்டை வீட்டுக்காரர்களை விட அதிகமாக வாழ்வில் மேன்மை வராமல் போய்விடுவோமோ என்பதை அவர்களுடைய அச்சமாக இருக்கிறது

 

 தான் தப்பிக்க வழியே இல்லாத ஓர் இயந்திரநுட்பத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்க வில்லை. மாறாக, தம்மை முன்னேற்றம் அடையச் செய்ய வழியற்ற ஒரு உடற்பயிற்சி இயந்திரத்தின் மீது தாமே விரும்பித் தங்கியிருக்கிறார்கள்  என்பதை அவர்கள் உணர்வதேயில்லை. காரணம் அது தம்மை மேம்பட்ட நிலைக்கு உயர்த்துவதில்லை என்பதை அவர்கள் கவனிப்பதில்லை. இங்கே நான் தொழில்துறையில் ஏற்கனவே மேற்படிகளில் இருப்பவர்களை பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே நல்ல வருமானம் ஈட்டிக்கொண்டிருப்பவர்கள், அவர்கள் மனம் வைத்தால் தங்களிடம் இருப்பதைக்கொண்டு வாழ முடிந்தவரைப் பற்றியே இங்கே நான் பேசுகிறேன். ஆனால், அப்படி வாழ்வது அவர்களுக்கு அவமானகரமான விஷயமாகத் தோன்றும். எதிரிப் படையின் முன்னிலையில் தங்களுடைய ராணுவத்தைக் கைவிட்டு ஓடிவிடுவதைப் போல் தோன்றும். ஆனால் அவர்கள் தங்களுடைய வேலைகளால் என்ன பொதுநல காரியத்தைச் செய்கிறார்கள் என்று அவர்களைக் கேட்டால் விளம்பரங்களில் கடுமையான வாழ்க்கை குறித்துக் காணப்படும் வழக்கமான வாசகங்களைப் பேசிமுடித்த பின் எந்தவொரு பதிலும் அவர்களுக்கு இருக்காது.

 

அத்தகையதொரு மனிதனின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அவருக்கு ஒரு அழகான வீடு இருக்கும் என்று நாம் அனுமானித்துக்கொள்ளலாம். மனைவியும் குழந்தைகளும் இருப்பார்கள். அவருடைய குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருக்கும் காலைவேளையில் அந்த மனிதர் சீக்கிரமாக எழுந்துகொண்டு தனது அலுவலகத்திற்கு விரைகிறார். அங்கே அவருடைய கடமை ஒரு மகத்தான நிர்வாக அதிகாரியாக தனது தகுதித் திறனாற்றல்களை வெளிப்படுத்துவது. அவர் ஒரு இறுகிய முகவாயைத் தரித்துக்கொண்டு திட்டவட்டமான தொனியும் தோரணையுமாய் உறுதியாகப் பேசி எல்லோரையும் கவரும்படியான - அலுவலக கடைநிலைப் பணியாள் தவிர்த்து - அதற்கென கணக்காக திட்டமிடப்பட்ட ஒருவகை விவேகமான தோற்றத்துடன் இருப்பதை வழக்கமாக்கிக்கொள்வார். அவர் கடிதங்களைச் சொல்லச்சொல்ல உதவியாளர் எழுதுகிறார்; அவர் வர்த்தகச்சந்தையை கவனமாகப் பார்க்கிறார். ஏதாவது ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ளப்போகும் அல்லது செய்துகொள்ள விரும்பும் நபருடன் மதிய உணவு உட்கொள்கிறார். பல முக்கியமான நபர்களுடன் தொலைபேசியில் உரையாடுகிறார். இதேவிதமான நியமங்களுடன் அவருடைய மதியம் கழிகிறது. இரவு சாப்பாட்டுக்கு உடைதரிக்கும் நேரத்தில் சோர்வாக வீடு திரும்புகிறார். உணவு மேஜையில் அவரைப் போன்று களைத்து வீடு திரும்பும் வேறு சிலரும் தங்களோடு உணவருந்தும் பெண்களின் – அவர்கள் களைத்திருக்க எந்தக் காரணமும் இல்லை -  வருகையும் அருமையும் தங்களை மகிழ்விப்பதாக பாசாங்கு செய்யவேண்டும். இந்தச் சடங்கு எத்தனை நேரம் நீடிக்குமோ – சொல்லமுடியாது. எப்போது தப்பிக்க முடியுமோ தெரியாது. அதை முன்னூகிக்க முடியாது. இறுதியில் ஒரு வழியாக அவர் தூங்குகிறார். சில மணி நேரங்கள்  இறுக்கம் தளர அவர் இளைப்பாறுகிறார்.

 



No comments:

Post a Comment