LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, January 25, 2016

இந்தியா, என் அருமைத் தாய்த் திருநாடே!

இந்தியா
என் அருமைத் தாய்த் திருநாடே!
(ஜனவரி 26, இந்தியக் குடியரசு தினமான இன்று….)
 31, ஜனவரி திண்ணை இணைய தளத்தில் வெளியாகியுள்ளது)

_ ‘ரிஷி’


















ன்னருமைத் தாய்த்திருநாடே
உன் மடியில் குதித்து, மார்பில் தவழ்ந்து
தோளில் தொங்கி
முதுகில் உப்புமூட்டையாகி
முழங்கால்களில் ஆடுகுதிரையாட்டம் ஆடியவாறே
உன் பிள்ளைகள் என்ற சொந்தத்தோடு
சுவாதீனத்தோடு, சுதந்திரத்தோடு
சாகும்வரையான உரிமையோடு
உன் மீது சேற்றை வாரியிறைத்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.


ன்னை அறம்பாடுவதே தங்களுக்குப் பெருமை சேர்ப்பதாய்
அங்கிங்கெங்கிலும் உன் புகழை மங்கவைக்கக்
கங்கணம் கட்டித் திரிகிறார்கள்
காறித்துப்பித்துப்பியே கர்ம வீரர்களாகிவிட்டவர்கள்.
உன்னை மதிப்பழிப்பதே மாபெரும் புரட்சியாய்
மேடைதோறும் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.


 னிதநேயம் பேசிக்கொண்டே
உன் மலைகளும் காடுகளும் மரம் செடி கொடிகளெல்லாம்
அழிந்துபோகட்டும் என்று ஆங்காரக்குரலில்
மண்ணைவாரித் தூற்றியவர்கள் உண்டு.


 ன் உன்னதங்களெல்லாம் அவர்களைப் பொறுத்தவரை
கண்டனத்துக்குரியவை.
உன் பெருமைகளெல்லாம் அவர்க்குச் சிறுமைகள்.
பல்மொழிப் பேசும் உன் பிள்ளைகளிடையேயான பிணைப்பு
அவர்களுக்கு உவப்பான விஷயமல்ல.
உன் பிள்ளைகளிடையே இல்லாத சண்டையை உண்டுபண்ணி
உன் வளர்ப்பு சரியில்லை, பாரபட்சமானது என்று
ஆசைதீர வசைபாடிக்கொண்டிருக்கிறார்கள்.

 தச் சார்பின்மை என்றால் அவர்களைப் பொறுத்தவரை
இந்துமதத்தை நிந்தித்துக்கொண்டேயிருத்தல்;
கடவுள் இல்லையென்று சொல்லியபடியே
தன்னை யாராவது கற்பூரம் காட்டி வழிபட மாட்டார்களா என்று
எந்நேரமும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்;
உன் அர்த்தங்களையெல்லாம் அனர்த்தமாக்கிக்காட்டுவதே
வாழ்வின் பொருளாக
கரித்துக்கொட்டுகிறார்கள் உன்னை-
கடல் கடந்த அரங்குகளிலும்.
அரிப்பெடுத்துக்கொண்டேயிருக்கும் தங்கள் ஆணவச்
சொறி சிரங்குகளுக்கு
உன்னை மட்டந் தட்டித் தட்டி
மருந்திட்டுக்கொள்கிறார்கள்.


சாதிகள் உள்ள ஒரே நாடு சபிக்கப்பட்ட இந்தியா என்பார்;
வேதங்களால் விளைந்ததே பெண்ணடிமைத்தனம் என்பார்
மீதமுள்ள நிலங்களிலெல்லாம்நிலவுகிறதோ
சுபிட்சமும் சமத்துவமும் பூரணமாய்
எனக் கேட்கத் துணிவோர்
போலி பிற்போக்கு, சனாதனி, மட சாம்பிராணி.


அன்னபிற வார்த்தைகளை ஆங்காரமாய் வீசியெறிந்துவிட்டு
கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துகொள்வார்
மின்னும் கோணவாய்ச் சிரிப்புடன்
க்ளிக்செய்யக் காத்திருக்கும் புகைப்படக்காரர்கள் இல்லையென்றால்
இருக்கவே இருக்கிறது ஸெல்ஃபி.


 பாப் மாகஸீன்தரும் பிசாத்து விருதுகளையெல்லாம்
இரு கரம் நீட்டி வாங்கிப் பூரித்துப்போகிறவர்கள்
யாருக்கேனும் இந்திய அரசின் விருதளிக்கப்பட்டால்
உடனே இகழத்தொடங்கிவிடுவார்கள்.


 லகிற் சிறந்த படைப்பாளிகளெல்லாம் இவர்களுக்கு வெறும்
முத்திரை வாசகசப்ளையர்கள்’;
உயிரை உருக்கி அவர்கள் எழுதிய வரிகளிலிருந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டியெடுத்து
மேற்கோள்களாகக் காட்டிக்காட்டியே
அறுபத்துநான்கு கலைகளையும் அதற்கு மேலும்
கக்கத்தில் இடுக்கிக்கொண்டிருக்கும் மேல்தாவிபாவம்
தொக்கிநிற்க
மெத்தப்படித்தவராகத் தம்மை நிலைநாட்டிக்கொண்டுவிடுவார்
முகநூலில்.


பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்றெல்லாம்
நீட்டி முழக்குபவர்கள்
ஒரு மாற்றுக்கருத்தைக் கேட்டாலோ
என்னமாய் காச்சுமூச்சென்று கத்துகிறார்கள்!
பிறர் குரல்வளையை நெரித்தபடியே
குரலற்றோரின் குரல் என்று தனக்குத்தானே
கிரீடம் சூட்டிக்கொள்வார்கள்.
இந்தியச் சுதந்திரம் என்றாலோ உடனே
நிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள்.
குடியரசு தினம் என்றால் கேட்கவே வேண்டாம்
தடியெடுக்காத குறைதான்.


 ன்னருமைத் தாய்த்திருநாடே
இன்றளவும் உன் வளங்களையெல்லாம் நன்றாய்
அனுபவித்தவண்ணம்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு உன்னை
எள்ளிநகையாடிக்கொண்டிருப்போரின் கயமையை
என்னென்பது?


 சுதந்திரப் போராளிகள்
எல்லைகாக்கும் படைவீரர்கள்
உணவளிக்கும் விவசாயிகள்
என உன் அருமை பெருமை அறிந்து
கடமையாற்றும் பெருமக்கள் ஏராளம் உண்டிங்கே!
உனக்கென்ன குறைச்சல்!
இல்லையென்பது இல்லையாக
நீயும் உன் மக்கள் நாங்களும் ஊரும் பாரும்
சீறும் சிறப்புமாய்
வாழ்வாங்கு வாழியவே!








Ø     

Saturday, January 16, 2016

எழுத்ததிகாரம் - ரிஷி


எழுத்ததிகாரம்

ரிஷி

காற்றும் கடலும் வானும் மண்ணும் நீரும் நெருப்பும்
நாய் நரி பூனை எலி மான் ஆண் பெண் பிள்ளை
மூத்தவர் இளையவர் மரம் செடி புல் பூண்டு –
எல்லாவற்றுடனும் கைகோர்த்து
எல்லாமாக உருமாறி
உயிர்த்தெழுவன என் கவிதைகள்.
கருப்பும் வெண்மையும் நீலமும் மஞ்சளுமாய்
கணமொரு கோலம் தீட்டும் என் கவிதைகள்.

கவிதையின் அரிச்சுவடிகளை எனக்குக் கற்றுக்கொடுப்பதற்கு
வாழ்க்கை இருக்கிறது. நீ யார்?
உன்னுடைய கவிதைகளின் பொய்மை, போதாமைகளை
உய்த்துணர முடியுமா பார்.

கற்காலச் சாம்பலைக் காட்டி தற்கால நெருப்பைத்
தரைவிரிப்பின் கீழ் ஒளிக்கப் பார்க்கும் உன் துக்கிரித்தனம்
வக்கிரம் என்பதோடு அண்டை அயலில் தீவிபத்தை ஏற்படுத்தக்கூடும்
விபரீதம். அறிவாய் நீ. தெரியும்.
அடுத்தவரை அடுப்பாக்கிக் குளிர்காய்வதே உன் மனிதநேயம்;
உனக்குப் பிடித்திருக்கும் மதம்…..

அதிகாரமும் சுரண்டலும்
இறந்தகாலத்திற்கு மட்டுமானவையா என்ன?

படைப்புவெளியின் போக்குவரத்துக் காவலராக
உன்னை நீயே நியமித்துக்கொண்டு
அபராதச்சீட்டுகணக்காய் எதையோ கிறுக்கித்தள்ளிக்கொண்டிருக்கிறாய்
பொறுக்கித்தனங்களில் இதுவும் ஒருவகை – புரிந்துகொள்.
தரம் அறம் பற்றியெல்லாம் மற்றவர்க்கு வகுப்பெடுக்குமுன்
அவரவர் தராதரம் பற்றித் தெரிந்துகொள்ளல் உத்தமமல்லவா.

சூரியனைப் பார்த்து நாய் குரைத்து நான் கண்டதேயில்லை.
[அப்படியே செய்தாலும் அது சூரியனோடு சங்கேத மொழியில்
பேசிக்கொண்டிருக்கக் கூடும்; நம்மால் பொருள்பெயர்க்க இயலுமா என்ன?]
ஆனால் அதையே நாமும் செய்தால் அனுதாபத்திற்குரியதாயிற்றே!



[*17 ஜனவரி 2016 திண்ணை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது]

பொருளதிகாரம் - _ 1 _ ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

பொருளதிகாரம் - 1

ரிஷி



கத்திக் கத்திக் களைத்த தொண்டைக்குள்

ஒரு கோலி சோடா புட்டியை ஊற்றிக்கொண்டவர்

திரும்பவும் பெருங்குரலெடுத்துப் பட்டியலிடத்

 தொடங்கினார்-


கோலி சோடாவின் கேடுகள் பற்றி;

தன் பேச்சைக் கேட்காமல் கோலி சோடாவைக் 

குடித்துக்கொண்டிருக்கும்

படித்த முட்டாள்களைப் பற்றி.


புட்டிக்குள்ளிருக்கும் கோலிகுண்டை 

சிறைப்பிடித்திருப்பது

சித்திரவதை, அநியாயம் என்று 

சுட்டிக்காட்டியபடியே

ஒரு ‘லிம்க்கா’வை வாயில் விட்டுக்கொண்டு

அடுத்த ஒலிவாங்கியிடம் சென்றார்

அந்தப் பெட்டிக்கடைக்காரருக்குப் பணம் 

தராமலே.


மினரல் வாட்டர் புட்டி தயாராய் மேஜைமீது 

வைக்கப்பட்டிருக்க

ஜனரஞ்ஜகத் திரைப்படக் கலைஞர்கள்

மேடையில் வரிசையாய் வீற்றிருக்க

மாற்று இலக்கியத்தின் தேவை குறித்து மிக நீண்ட

உரையாற்றி

மற்ற பேச்சாளர்களின் நேரத்தை அபகரித்துக் கொண்டவர்

காலம் பொன்னானது என்று கைக்கடிகாரத்தைப்
 பார்த்தபடி கூறினார்;


முத்தாய்ப்பாய் எத்தாலும் பேணுவோம்

சமத்துவம் எனச் சொல்லி

அரங்கிலிருந்து வெளியே சென்றார்

அவருடைய கைப்பெட்டியைத் தூக்கமாட்டாமல் 

தூக்கியபடி

ஒரு குழந்தைத் தொழிலாளி பின்தொடர


அடுத்து,

இன்னொரு கோட்-சூட் போட்டுக்கொண்டு

இந்தியக் கலாச்சாரம் பற்றி உரையாற்றத் 

தொடங்கினார்.

தமிழை வாழவைக்கவேண்டும் என்றார்

அந்த மொழிக்கே உரிய தனிச்சிறப்பான
ழகரத்தைப்

பிழையாக உச்சரித்து.

எளிமையாக வாழவேண்டும் என்றார்;

பழம்பெருமை போற்ற வேண்டும் என்றார்.

இடையிடையே ’கார்ப்பரேட்’ஐ வசைபாடி முடித்த

பின்
இரவு காக்டேய்ல் பார்ட்டிக்குக் கிளம்பிச் சென்றார்

புதிதாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி

செய்யப்பட்டிருந்த சொகுசுக் காரில்


[*17 ஜனவரி 2016 திண்ணை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது]

1. சொல்லதிகாரம் - ரிஷி


சொல்லதிகாரம்

ரிஷி




























’ஐந்து’ என்ற ஒரு வார்த்தை மட்டும் சொல்லித்தரப்பட்டது
அந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு.
அது ஒரு இலக்கத்தைக் குறிப்பது என்ற விவரம் கூடத் தெரியாத
பச்சைப்பிள்ளையது.
பின், பலர் முன்னிலையில் அந்தக் குழந்தையிடம்
எண்ணிறந்த கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல் கணக்குகளுக்கான
விடை கேட்கப்பட
எல்லாவற்றுக்கும் மிகச் சரியான பதிலளித்தது குழந்தை:

“ஐந்து”

பிள்ளையின் அறிவைப் பார்த்து வாய் பிளந்து
மூக்கின் மேல் விரலை வைத்தார்கள்
ஐந்தே பதிலாகக் கட்டமைக்கப்பட்ட கணக்குகளின்
சூட்சுமம் அறியா அப்பாவிகள்.

அந்த ஒற்றையிலக்க விடை யொரு
தடையில்லா அனுமதிச் சீட்டாக
அந்த அப்பாவிகளின் முதுகிலேறி சிலர்
அன்றாடம் அயல்நாடுகளுக்குக்  
கட்டணமில்லாப் பயணம் போய்வந்தவாறு.


[*17 ஜனவரி 2016 திண்ணை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது]


Friday, January 15, 2016

சூழல் மாசு - 'ரிஷி’


சூழல் மாசு


'ரிஷி’



காறித் துப்பத் தயாராய் வன்மம் நிறை வார்த்தைகளை
யெப்போதும் குதப்பியவாறிருக்கிறாய்.

தப்பாமல் கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பித் துப்புகிறாய்;

கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பித் துப்புகிறாய்;

காழ்ப்பேறிய உன் நுரையீரல், உணவுக்குழாய்
குரல்வளை யெங்கிலும்
பரவிக்கொண்டிருக்கும் குரோத நஞ்சு.

நீ அப்பிக்கொள்ளும் பவுடர்,
வெட்டிக்கொள்ளும் புருவங்கள்,
கன்னத்து ரூஜ்,
உதட்டுச்சாயம்,
இன்னும் பலவற்றை மீறி
அகத்தின் அழுகல் முகத்தில் தெரிகிறது பார்.

உடல் பொருள் ஆவியாகும்
அகங்காரம், ஆங்காரம் கொப்பளிக்க
ஆங்காலம் போங்காலம் உன்னிலிருந்து கிளம்பும்
காறித்துப்பல்களில்
கணிசமாய் உன் மீதே பட்டுப் படர்ந்திருப்பதை
என்றேனும் உன்னால் உணரமுடியுமோ
சந்தேகம்தான்.

உன்னிடம் ஒரேயொரு வேண்டுகோள்:
நீ எதிரே வந்தாலே நாசியைப் பொத்திக்கொண்டு
நீங்கிச் செல்பவர்களை
நாசமாய்ப் போக என்று ஏசுவதற்கு பதில்
உன் ஊத்தை உள்ளிருப்பில் எங்குபார்த்தாலும் 
சிதறிக்கிடக்கும்
மாசுகளை  சுத்தம் செய்யச்
சிறிதேனும் முனைப்பு காட்டு.

(* ஜனவரி 2016 பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)

திடக்கழிவுகள் - ரிஷி

திடக்கழிவுகள்


ரிஷி


குட்டி வாயும் குண்டுமணிக் கண்களுமாய்

படுசுட்டியாய்ப் பாய்ந்தோடும் சுண்டெலி தனி அழகுதான்.

ஐந்தறிவுள்ள அந்தச் சுண்டெலிக்குத் தெரியும்
அதன் வாழ்வெல்லைப்பரப்பின் நீள அகலங்கள்;

தனக்குப் பாதுகாப்பான பொந்து;

உணவு கிடைக்கக்கூடிய மூலைகள்….


ஆனால், ஆறறிவுள்ள சில அற்பச் சுண்டெலிகள்
ஆங்காலம் போங்காலம்
கிலி பிடித்தாட்ட,

தங்களைச் சிறுத்தைப்புலிகளாக ‘பாவ்லா’ காட்டி

இக்குணூண்டு கூட இல்லாத வாலை சுழற்றி

பொக்கைவாயின் சொத்தைப்பற்களே வளைநகங்களாய்

கெக்கேபிக்கேவென்று

கம்மிய குரலில்

சதா கீச்சுக்கீச்சென்று உறுமிக்கொண் டிருப்பதைக் கேட்க

உண்மையிலேயே கண்றாவியாக இருக்கிறது.


(* ஜனவரி 2016 பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)