அன்னா அக்மதோவாவின் கவிதை
மரணம்
(1)
திருத்தமான பெயர் எதுவுவில்லாத
ஏதோவொன்றின் விளிம்பிலிருந்தேன் நான்
தவிர்க்கமுடியாததொரு அரைமயக்கநிலை,
தன்னைத்தான் தவிர்த்தலாய்…..
(2)
ஏதோவொன்றின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருக்கிறேன்
எல்லோருக்கும் நேர்வதுதான் – ஆனால் இதன் விளைவு வேறு
இந்தக்கப்பலில் எனக்கென்று தனியறை இருக்கிறது
என் பாய்மரத்தில் காற்றிருக்கிறது
மற்றும் என் தாய்நாட்டிடம் விடைபெற்றுக்கொள்ளும்
அந்தக் கொடூரமான கணமும் இருக்கிறது.


No comments:
Post a Comment