LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, August 21, 2018

ஆமையின் பெயர்மாற்றம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


 · ஆமையின் பெயர்மாற்றம்
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)


ஆமை என்ற ஒன்று
இல்லவேயில்லை யெனச்
சொல்லியவாறே
ஆமை என்றாவது பேசுமா என்றும்
சீமைப்புறங்களிலிருந்தும் சுற்றுவட்டாரங்களிருந்தும்
கேட்டுக்கொண்டிருப்பவர்களை
ஊமைவலியோடு பார்த்துக்கொண்டிருந்த
ஆமை மிகவும் மனம் சோர்ந்துபோனது.
முன்பெல்லாம்
ஆமைமுயல் கதையை
அடிக்கடி கேட்க முடிந்தது…..
முயலை ஆமை ஜெயித்ததைச்
சொன்ன விதம்
முயலின் கர்வத்தையன்றி
முயலை வெறுக்கச் செய்யவில்லை
யொருபோதும்.
[முசுமுசு முயலை 
யாரால் வெறுக்க இயலும்!]
ஆமை தன்னம்பிக்கைக்கு
முன்மாதிரியாயிற்று.
ஆனால் தீமையல்ல முயல்
தோற்ற ஆங்காரத்தில் தன்
வாலில் மறைத்துவைத்திருந்த
வாளால்
ஆமையை வெட்டிவிடவில்லை.
தன் தவறை உணரும் ஆற்றலிருந்தது
அதற்கு.
ஆமையோட்டைத்
தங்கள் கனவுகளின் கருவூலமாகக்
கொண்டாடிய சிறுவர்சிறுமியரும்
தற்காப்புப் பதுங்குகுழியாக விவரித்த
பெரியவர்களுமாய்
ஆமையைத் தங்களில் ஒருவராக
அங்கீகரித்திருந்தனர்.
ஆமையும் அழகுதான் என்று புரிந்தது.
இன்று நிலைமை வேறு
ஆமையைச் சீந்துவார் யாருமில்லை
அதன் குந்துமணிக்கண்களை
உற்று நோக்கிப்
புன்னகைக்க
முற்றிலும் மறந்துவிட்டனர் மிகப் பலர்..
அநாதரவாய்க் கிடந்த ஆமையைப்
பார்க்கவந்தது புறா.
அதன் காலில் கட்டியிருந்த
முயலின் மடலில்
பரிவுமிக்க பரிந்துரையொன்று
இடம்பெற்றிருந்தது:
பெயரிலுள்ளவைதூவாக
மாற்றிக்கொள்வது
மிகவும் நல்லது.”

No comments:

Post a Comment