LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, January 3, 2014

சிதைவொழுங்கு ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

சிதைவொழுங்கு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்

[முதல் கவிதைத் தொகுப்பு அலைமுகம்-இலிருந்து]


வானவில் ஏழு நிறம்
வான் கோழி கான மயில்
வாயு தென்றல் புயல்
வேகம்
ஆற்று நீரோடுமோடும்
ஆயிரங் கனாக்குமிழ்கள்
‘அப்பா பணத்தை எண்ணக் காணாது
அம்மா புடவையை மடிக்க லாகாது’.
வான் மண் ஏன் என்
னென்னெல்லா மெதிர்
கொண்டோர்
நேற்று இன்று
நாளை மற்றுமொரு நாளே
பெயர் மறந்த முகங்கள்
பெயரே யான முகங்கள்
பிரதிமை சாயை ரூப
அரூப
பின் பின் பின்
புண்ணாக்கு வைக்கோல் காளை மாடு
பசு கன்று தின்று
யாரை யார் என்று
ஏறாதோ வேப்பமரம் வேதாளம்
பாருக்குள்ளே நல்ல நாடு
Nutshellக்குள்
ஷெல்லிசொகம் வசந்தம்
வசம் தம் உம்….
கொள் மனம் கண்டதிஅயும்
கட்டுடைத்து
இல்லையிப்போதாக.



No comments:

Post a Comment