சொல்லத்தோன்றும் சில…..
latha ramakrishnan
Poetry is the spontaneous overflow of powerful feelings:
it takes its origin from emotion recollected in tranquility.
வில்லியம் வர்ட்ஸ்வர்த் என்ற உலகம் புகழும் கவிஞர் இப்படிச் சொல்லி யிருக்கிறார் என்பதாலேயே நாம் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், சற்று யோசித்துப் பார்த்தால் இது உண்மை யென்று புரியும்.
நான் கோபமாக இருக்கிறேன் என்ற நினைப்பு வந்தாலே நான் கோபத்தி லிருந்து அகன்றுவிட்டேன் என்று அர்த்தம் என்று சொல்வதுண்டு. அதுபோலத் தான் எத்தனை கொந்தளிப்பான விஷயத்தையும் அது நடக்கும்போதே எழுதுவதென்பது நடவாத காரியம்.
(ஒரு முறை 102 அல்லது 103 டிகிரி ஜுரம் அடித்துக் கொண்டிருந்த சமயத்தில் நான் ’புயல்கரையொதுங் கியபோது’ என்ற கவிதையெழுதினேன். ஆனாலும், அதை எழுதக் கூடிய அளவு எனக்கு பிரக்ஞையும் தெம்பும் இருந்தது என்பது தான் உண்மை.
( பின்னர் அத்தகைய விஷப்பரிட்சைகளில் இறங்க லாகாது என்று முடிவுசெய்து கொண்டேன்.)
கவிதையெழுதுதலே இப்படியென்றால் மொழிபெயர்ப்பு என்பது இன்னும் பிரக்ஞாபூர்வமாகச் செய்யவேண்டியது.
நாம் மொழிபெயர்க்கும் பிரதி நமக்கு எத்தனை பிடித்தி ருந்தாலும் அதிலேயே மூழ்கிப்போய்விட்டால் ஒழுங் காக மொழிபெயர்க்கவே இயலாது.
ஒருவகை Detached attachment அல்லது பிரதியிலிருந்து முழுவதும் விலகிய நிலையில்தான் ஒவ்வொரு இணை வார்த்தையையும் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க வேண்டும்.
நாம் தேர்ந்தெடுக்கும் சொற்கள் மூல கவிதையில் இடம் பெறும் வார்த்தை களுக்கு இணைச்சொற்களாக இருக்க வேண்டும் – கவிதையின் சாராம்சத்தைக் குறிப்புணர்த்து வதாகவும் இருக்கவேண்டும்.
மூல கவிதையில் ஒரு சொல் திரும்பத்திரும்ப வந்தால் அதேயளவாய் மொழிபெயர்ப்பில் வரச்செய்யலாம். இலையென்றால் முடிந்தவரை ஒரே சொல் திரும்பத் திரும்ப வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சரியான இணைச்சொற்களுக்காக கூகுள் முதல் கைவச மிருக்கும் எல்லா அகராதிகளிலும் முழுவிழிப்போடு தேடியாகவேண்டும்.
நாம் தேர்ந்தெடுக்கும் சொல் ஒரேயடியாக எப்போதும் பயன்படுத்தும் சொல்லாகவும் இருக்கக்கூடாது; அதற் காக ஒரேயடியாக புதிதாக, புரியாததாகவும் இருக்கக் கூடாது.
இப்படி நிறைய DOS AND DON’TS மொழிபெயர்ப்பில் உண்டு. இவை மொழிபெயர்ப்பாளருக்கு மொழிபெயர்ப் பாளர் மாறுபடவும் வழியுண்டு.
மொழிபெயர்க்கப்படவேண்டிய பிரதியின் பால் மொழி பெயர்ப்பாளருக்கு மரியாதை இருக்கலாம். அபிமானம் இருக்கலாம்.
இல்லாவிடினும் இருமொழித்திறனும் வாசிப்பு அனுபவ மும் இருப்பின் வாழ்க்கைத்தொழிலாக ஒரு பிரதியை நல்ல முறையில் மொழிபெயர்க்கவும் இயலும்.
முழுக்க முழுக்க முழுவிழிப்போடு செய்யவேண்டிய காரியம் மொழிபெயர்ப்பு.
ஆனால் சிலருக்கு எல்லாவற்றையும் romanticize செய்யப் பிடிக்கும். POP MAGAZINE எனப்படும் மசாலா பத்திரிகை களில் சாண்டில்யன் கதைக ளைப்போல் அங்கங்கே தேவையில்லாமல் பாலியல் வர் ணணை, காதல் வர்ணணை இடம்பெறும் என்று குறை சொல்பவர்கள் கூட (தேவை என்பதும் ஒருவகையில் highly relative term தானே) making love போல், orgasm போல் என்று எழுத்தாக் கப் பணிகளைப் பற்றி (ஒருவித புரட்சிகரச் செயல்பாடு போன்ற பாவனையில்)க் கருத்துரைப்பது இங்கே அவ்வப்போது நடந்தேறுகிறது.
அப்படி சமீபத்தில் மொழிபெயர்ப்பு குறித்து முன்வைக்கப் பட்டிருந்த ஒரு கருத்தை வாசிக்கநேர்ந்தது. வேடிக்கை யாக இருந்தது.







