LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, May 16, 2025

மாய யதார்த்தம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மாய யதார்த்தம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அன்பை கவிதையில் பயன்படுத்தும்போதெல்லாம்
அவர் யாரையோ கொலைசெய்துகொண்டிருக்கிறார்.
கொலையும் செய்வாள் பத்தினி என்கிறார்.
கூடவே
பத்தினித்தன்மையை அளக்க எத்தனை பேர் இப்படி
கிளம்பியிருக்கிறீர்கள் என்றும் கோபிக்கிறார்.
கணத்துக்கு கணம் மாறுவதுதான் கவியின் குணம் என்கிறார்.
கவிஞர் ஒரு குழந்தையைப் போல் எனவும் சுட்டுகிறார்.
அன்பென்ற பெயரில் நெருப்பு கக்கத் தெரியாது குழந்தைக்கு
என்று சொன்னால்
கனல் குழந்தைகள் என் கவிதைகள்
உங்கள் நோஞ்சான் குழந்தைகள் நெருப்பிலிடத்தான் லாயக்கு
என்று சொன்ன கையோடு _
‘காக்கா காக்கா கண்ணுக்கு மைகொண்டு வா –
குருவி குருவி கொண்டைக்குப் பூ கொண்டு வா” என்று
சற்றே கரகரப்பான என்றாலும்
கொஞ்சம்போல் இனிமை ததும்பும்
குரலால்
அன்பொழுகப் பாடுகிறார்.
தாய்ப்பால் கசக்க முகஞ்சுளிக்கும் குழந்தையை
சகிக்க முடியாது
மேலும் மேலும் மார்போடு அழுத்தி
மூச்சுத்திணறவைக்கும் மூர்க்க அன்பை
முழுமுனைப்பாய் எதிர்க்கும் மழலையின்
கழுத்துக்காய் நீளும் அந்தக் கைகள்
அழுத்த அழுத்த குழந்தையின் அழுகை
மௌனிக்கிறது.
பாட்டைக் கேட்கக் குழந்தை இல்லாத குறையை
நிறைசெய்யும் பொருட்டு
தன் பாடலை யொரு செல்ஃபி எடுத்து
முகநூல் ட்விட்டர் வாட்ஸப் இன்ஸ்ட்டாக்ராம்
இன்னும் என்னென்ன உண்டோ
எல்லாவற்றிலும் பதிவேற்றிவிட
குழந்தைகளின் கையெட்டா உயரத்தில்
ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தப் பாடலுக்கு
குறைந்தது ஆறாயிரம் லைக்குகளாவது
இதுவரை வந்திருக்கும்.
கிடைத்த தெம்பில்
எளியவர் எவருடைய குழந்தையின் கைகளையும்
தன் அன்புக்கவிதையில்
ஆங்காரமாக உடைத்துவிடும் அவரை
நமக்குக் கிடைத்த அதி உண்மையான அகிம்சைவாதியாக
வரிக்கு வரி அடையாளங்காட்டி எழுதப்பட்டிருக்கும்
இரண்டு திறனாய்வுக் கட்டுரைகள்
மிக முக்கியமான இடத்தைப் பெற்று
இலக்கிய உலகையே
கலக்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FROM POET K.MOHANARANGAN - Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) WITH NO TRAILS...

 FROM POET K.MOHANARANGAN

Rendered in English by
Latha Ramakrishnan (*First Draft)
WITH NO TRAILS.....
You are invited to an unfamiliar household. As you hesitatingly step inside, amidst those new faces there, your nostrils come into contact with a hitherto unknown scent. While probing to know wherefrom it comes your eyes come into contact with an incense stick. By then you start talking with those present there about the purpose of your visit. After the completion of the long dialogue it was only when you are about to leave that you accidentally rise your eyes and glance at the corner and notice a few specs of ashes remaining there. After it is fully burnt, when did the fragrance fully ceased to be – You are not able to presume. The scent that you felt rare you try to bring it back to your memory – but nothing concrete surfaces. No more time to ponder and over you set forth for the next work. After that though on many a time you endeavoured to inhale that scent once again, all your efforts proved in vain. The memory that has come to stay as an unrealized longing deep down in your heart of hearts turn you calm and composed. With the passage of Time the course and rhythm of your longing change. Now all that you propose is just this: Between Being and becoming Non-Being, with the ‘When’ being unknown we should slip off from the memory of one and all and evaporate - just as the scent of the incense stick.
யாதும் சுவடு படாமல்
க.மோகனரங்கன்

அறிமுகமில்லாத ஒரு வீட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். தயக்கத்தோடு அடியெடுத்து வைத்து உள் நுழைகையில், அங்கே இருக்கும்
புதிய முகங்களுக்கு நடுவே அதுவரையிலும் அறிந்திராத ஒரு நறுமணத்தை உங்கள் நாசி உணர்கிறது. எங்கிருந்து அது வருகிறது எனத் துழாவுகையில் அறையின் ஒரு மூலையில் புகைந்து கொண்டிருக்கும் ஊதுபத்தி உங்கள் கண்களில் படுகிறது. அதற்குள் அங்கிருப்பவர்களோடு வந்த காரியம் குறித்து பேசத் தொடங்குகிறீர்கள். நீண்ட உரையாடல் முடிந்து, நேரம் கருதி அவசரமாகப் புறப்படத் தயாராகும் போதுதான் எதேச்சையாக எறிட்டுப் பார்க்கிறீர்கள், அம் மூலையில் உதிர்ந்த சாம்பல் துளிகள் கொஞ்சம் போல எஞ்சியிருப்பதை. எரிந்தடங்கிய பின் எப்போது அந்த மணம் தீர்ந்துபோனது என்பதை உங்களால் அனுமானிக்க முடியவில்லை. அரிதானது என்று எண்ணிய அந்த வாசனையை மீளவும் ஒரு முறை நினைவுக்குக் கொண்டுவர முயலுகிறீர்கள். திடமாக ஒன்றும் திகைந்து வரவில்லை. அதற்கு மேலும் யோசிக்க அவகாசமின்றி அடுத்த வேலைக்குக் கிளம்பிப் போகிறீர்கள்.அதன் பிறகு எத்தனையோ சந்தர்ப்பங்களில் மனதை நுணுகிப் பார்த்தும் அந்த மணத்தை மீளப் பெறுவதற்கு உங்களால் இயலவில்லை. அடி மனதில் அழியாதவொரு ஏக்கமாகத் தங்கிவிட்ட அந் நினைவு உங்களை உள்ளூர நிதானமாக்குகிறது. நாட்பட உங்கள் நாட்டத்தின் கதி மாறுகிறது. இப்போதைக்கு உங்கள் உத்தேசமெல்லாம் இதுதான். இருப்பதற்கும் இல்லாமல் போவதற்கும் இடையில் எப்போது என்று தெரியாமலே, அறிந்த யாரொருவர் நினைவிலிருந்தும் நழுவி மறைந்து விடவேண்டும், அந்தப் பத்தி வாசனையைப் போலவே.

அன்னா அக்மதோவாவின் கவிதை - 21

  அன்னா அக்மதோவாவின் கவிதை - 21

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ்ணன்



காட்டுத்தேனில் இருக்கிறது விடுதலையின் மணம்
புழுதியிலிருக்கிறது ஒரு சூரியக்கதிருடையது.
ஒரு பெண்ணின் வாய் – ஊதாப்பூவினது
பொன்னுக்கு மணமேது?
நீரனைத்தாய் Mignonette செடி
காதல் _ ஆப்பிள்போல்
ஆனால் எப்போதுமே தெரிந்துகொண்டிருக்கிறோம் நாம்
ரத்தமாகவேயிருக்கும் ரத்தத்தின் நெடி.

*Mignonette சிறு மலர்கள் கொண்ட ஒரு வகை தோட்டச் செடி.

முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை - தொகுதி - 1, தொகுதி - 2

 முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை 
தொகுதி - 1, தொகுதி - 2





CONTINUUM - AN ANTHOLOGY OF 100+ CONTEMPORARY TAMIL POETS

 

CONTINUUM - AN ANTHOLOGY OF 

100+ CONTEMPORARY TAMIL POETS RENDERED IN ENGLISH BY DR.K.S.SUBRAMANIAN.



வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 வாய்ச்சொல் வீரர்களும்

”வாழ்க வாழ்க” வாயர்களும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை.
உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்
சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும்
காலத்திற்குமாகக் காட்டிக்கொண்டேயிருக்க
அண்ணாந்து பார்க்கவைக்கும் அவர்களுடைய மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும்
அதிகரித்துக்கொண்டேபோகின்றன.
அதனாலென்ன ? ஒருதரப்பு அன்னாடங்காய்ச்சிகளை
இன்னொரு தரப்பு அன்னாடங்காய்ச்சிகளுக்கெதிராகத் திருப்பிவிட்டால் பின்
பரபரப்பாய்த் தங்களுக்குள் அடித்துக்கொள்வார்களே
யல்லாது
பதுக்கியிருக்கும் கருப்புப்பணத்தின் பக்கம் கவனம் திரும்பாது.
அடிப்பதற்கு
ஆக்ரோஷமாக முழங்குவதற்கு
அசிங்கசிங்கமாகத் திட்டுவதற்கு
அப்பிராணிகள் சிலபலரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
அவர்கள்
ஆயிரங்காலத்திற்கு முன்னான புராண நாயகநாயகியராயிருந்தால் இன்னும் நல்லது.
அவர்கள் பேசாத வார்த்தைகளையெல்லாம் பொருள்பெயர்த்துச்சொல்ல வசதியாயிருக்கும்.
அவர்களைக் கடித்துக்குதறி காலால் எட்டியுதைத்து
காறித்துப்பித்துப்பி நம்மை நலிந்தவர் நாயகர்களாகக் காட்டிக்கொள்வது சுலபம்.
வாயற்றவர்களின் வாயாக நம்மை நிலைநாட்டிக்கொண்டுவிட்டால் பின்
வக்கிரமாக விஷமத்தனமாக வண்டைவண்டையாக என்னவேண்டுமானாலும் பேசலாம்.
அலையலையாய் அழைப்பு வரும்
நிலையாய் பேர் புகழ் காசு புழங்கும்
உலைபொங்கமுடியாமல் அழுதுகொண்டிருப்போருக்கான உங்கள் முழக்கத்திற்குக் காத்திருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு அரங்குகள்.
சிரங்கும் சொறியும் சேத்துப்புண்ணும் சீதபேதியும்
நிரந்தரமாகிவிட்ட மக்கட்பிரிவினருக்காகப் பேசிப்பேசியே
விருந்துகளில் குறைந்தபட்சம்அறுபது உணவுவகைகளை
இருபது உணவுமேடைகளில் ருசித்துச் சாப்பிடலாம்.
கைகழுவப் போகும் வழுவழு வாஷ்பேஸினின் மேற்புறம்
பிரம்மாண்ட ஓவியத்தில் யாருடைய கண்களேனும் நெருப்பைக் கக்கிக்கொண்டிருக்கட்டும்.
அல்லது, குறைந்தபட்சம் கருத்தைக் கவரும் முத்திரை வாசகம் ஒன்று தீப்பொறிகள் பறக்கத் தரப்பட்டிருக்கட்டும்.
காகிதத்தீ கருக்கிவிடாது எதையும் என்ற அரிச்சுவடியை அறிந்துவைத்திருந்தால் போதும்.
ஆம், அதுவே போதும்.

FLEETING INFINITY - A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY

 இது 2019இல் வெளியான தொகுப்பு



தகவல் பரிமாற்றம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தகவல் பரிமாற்றம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வடிவங்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றன....
இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்...
தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி.....
மாறும் முகவரிகளை நான் தெரிவிக்காமலேயே தெரிந்துகொண்டு ஏதேனுமொரு வடிவத்தில்
மடல் அனுப்பிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை.
சில சமயம் வராத புறாவின் ஆயிரங் கால்களில் கட்டப்பட்டிருக்கும் காகிதத் துண்டுகள்
அதை எப்படியோ தரையிறங்க வைத்துவிடுகின்றன.
சில சமயம் தபால்காரர் வீசியெறிந்துவிட்டுச்செல்லாத
சில நூறு பக்கக் கடிதங்களைப் படிப்பதுதான்
எத்தனை சுவாரசியமாக இருக்கிறது!
காலப்போக்கில் கிழிந்ததும் கிழித்ததும்போக
எஞ்சிய கடிதங்களில் எந்தவொரு சொல்லையும் வரியையும் கண்டுபிடிக்க இயலவில்லை.
OK – Okayவுக்கு இடையே வித்தியாசம்
உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை.
யாரும் யாருக்கும் எழுதுவதான தொனியில்
ஆரம்பமாகி முற்றுப்பெறாமலேயே முடிந்துவிடுபவை
வாட்ஸ் ஆப் கடிதங்கள்.
காலை ஆறுமணிக்கு எழுந்து மறுகணம்
மணி முற்பகல் பதினொன்றாகிவிடும் ஓட்டத்தில்
நிதானமாகக் கடிதங்கள் எழுதும் நேரம் பிடிபடவில்லை.
எதை யென்பதும் யாருக்கு என்பதும்கூட.
எனக்கு நானே எழுதிக்கொள்ளலாமென்றால்
எதற்கு என்று கேட்பது மனமா மூளையா
இரண்டுமா புரியவில்லை.
இப்போதெல்லாம் தபால்காரர் வரும் நேரமென்ன
சரியாகத் தெரியவில்லை.
எங்கள் வீட்டு எண் தாங்கிய சிறு தபால்பெட்டியில்
குடியிருப்பினுடைய காவலாளியின் சார்ஜர் மட்டுமே எப்பொழுதும் குட்டிக் குருவிபோல் ஒரே இடத்தில் துவண்டுகிடக்கிறது.
ஒருவகையில் சார்ஜரும் மடல்தான் என்று தோன்றுகிறது.
அரிதாய்ப் பெய்யும் மழை
நீரில் கரைந்த வரிகள் நிறைந்த மடல்களை
ஒரே நேர்க்கோட்டில் தலைமீது பூவாய்ச் சொரிகிறது.
பெறவேண்டும் வரமாய இன்னும் ஒரே யொரு மடல் _
மறுமொழியளிக்காது விட்டுவிட…..

இந்தியாவின் எல்லைப்புறங்களில் உள்ள நாடுகளும், எல்லைப்புறங்களில் உள்ள இந்திய மாநிலங்களும்.

 இந்தியாவின் எல்லைப்புறங்களில் உள்ள நாடுகளும், எல்லைப்புறங்களில் உள்ள இந்திய மாநிலங்களும்.


......................................................................................................

இந்திய எல்லைப்புறங்களில் உள்ள நாடுகள்:
1. பாகிஸ்தான்.
2. சீனா,
3. நேபாளம்
4. பங்களாதேஷ்
5. பூடான்
6. மியன்மார்
7. இலங்கை
8. ஆஃப்கா னிஸ்தான்.
எல்லைப் பரப்பின் மொத்த நீளம் ஏறத்தாழ 15,200 கிலோ மீட்டர்கள். இதில் கடலோர எல்லைப்பரப்பு 7515 கிலோ மீட்டர்கள். நிலஞ்சார் எல்லைப் பரப்பு ஏறத்தாழ 15,200 கிலோ மீட்டர்கள்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பரப்பை விண்ணி லிருந்து பார்க்க முடியும். இது மிகவும் அபாயகரமான எல்லைப்பகுதி களில் ஒன்றாக அரசு ஒலிபரப்புச் சேவையால் (Public Broadcasting Service) கொள்ளப்படுகிறது.
இந்திய எல்லைப் பகுதிகளில் அமைந் துள்ள மாநிலங் கள் பின்வருமாறு:
ஜம்மு காஷ்மீர்,
பஞ்சாப்,
ராஜஸ்தான்,
குஜராத்,
சிக்கிம்,
அசாம்,
மேற்கு வங்கம்,
திரிபுரா,
மேகாலயா,
மிசோரம்,
அருணாசலப் பிரதேசம்,
நாகாலாந்து,
மணிப்பூர்,
மினோ.
பாகிஸ்தான்: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லை யைப் பகிர்ந்து கொள்கின்றன.
ஆப்கானிஸ்தான்: ஜம்மு காஷ்மீர் ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
சீனா: ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தர காண்ட், சிக்கிம், அருணா சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
நேபாளம்: சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நேபாளத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
பூடான்: அருணாசலப் பிரதேசம், சிக்கிம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பூட்டானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
மியான்மர்: அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப் பூர், மினோ ஆகிய மாநிலங்கள் மியான்மருடன் எல்லை யைப் பகிர்ந்து கொள்கின்றன.
பங்களாதேஷ்: அசாம், மேற்கு வங்கம், திரிபுரா, மேகா லயா, மிசோரம் ஆகிய மாநி லங்கள் பங்களாதேஷுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
*இந்த எல்லைப் பகுதிகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

போரும் பயங்கரவாதமும் நாமும்

 போரும் பயங்கரவாதமும் நாமும்


நிறைய நேரங்களில் அறிவார்த்தமாகப் பேசுவதாக நினைத் துக்கொண்டு அபத்தமாகப் பேசுவோரில் நடிகர் கமலஹாஸ னும் ஒருவர். ஆனால், ஒரு பேட்டியில் அவர் சொன்னது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது. (எந்தத் தருணத்தில் என்று நினைவுக்கு வரவில்லை).
அவர் சொன்ன தன் சாராம்சம் இதுதான்: ”


//”நாம் நாட்டின் உட்புறத்தில் இருப்பதால் நமக்கு இந்திய ராணுவத்தின் அருமை, பயங்கரவாதிகளால் மக்கள் அனுப விக்கும் கொடுமைகள் தெரிவதில்லை. இங்கே எல்லாம் இயல்பாக, அமைதியாக, இணக்கமாக இருப்ப தாக பாவித்துக் கொள்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும், அல்லும்பகலும் நம் ராணுவத்தினர், கடற்படை யினர், வான்படையினர் வெகு கவனமாக எல்லையோரப் பகுதிகளை கண்காணித்து, பதுகாத்துக்கொண்டிருப்ப தால்தான் நாம் இங்கே நிம்மதியாக வழ்ந்துகொண்டி ருக்கிறோம் என்பதை நாம் எண்ணிப்பார்க்க மறநதுவிடுகிறோம்.

ஆனால் இந்திய எல்லையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு – அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி – பயங்கரவாதிகளின் தாக்குதல்களி லிருந்து, பயங்கரவாதிகள் என்ற போர்வையில் எதிரி நாட்டு ராணுவம் மேற்கொள்ளும் அத்துமீறல்களிலி ருந்து நம்மைக் காப்பது நம் படைவீரர்களே என்பது நன்றாகவே தெரியும்.”

Saturday, May 10, 2025

என் அம்மா - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ன் அம்மா

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒருபோதும்
சுனாமியாகப் பொங்காத சாகரம்;
சூறாவளியாகாத காற்று;
சுட்டுப்பொசுக்காத நெருப்பு;
சுக்குநூறாகாத திடம்;
சடசடவென்று முறிந்துவிடாத மரம்;
கையில் தம்பிடிக் காசில்லாத நேரம்
என் அருகில்
கதவை விரியத்திறந்திருக்கும் சிறுசேமிப்பு வங்கி;
எரியுங் குளிரில் போர்த்தக் கிடைத்த
அரிய மேலங்கி;
இரவில் காலந்தாழ்த்தி படுக்கையில் தலைசாய்த்து
’பச்சை புட்டி அமிர்தாஞ்சனை நான்
நெற்றியில் தேய்த்துக் கொள்வதை
எனக்குத் தெரியாமல் கண் திறந்து
கவலையோடு பார்க்கும்
எதிர்பார்ப்பற்ற பரிவு;
என்னவென்று சொல்லவியலா அன்பு;
சுருங்கிவரும் உடலுக்குள் சதாசர்வகாலமும்
சுழன்றுபெருகியோடிக்கொண்டிருக்கும்
ஜீவநதி;
கருகாத பூ;
ஒண்டுக்குடித்தன வீடோ
இன்றுள்ள இரண்டறைகள் கொண்ட
வாடகைக் குடியிருப்போ _
அரண்மனை, அரியணை, அரசவை,
மணிமகுடப் பிரக்ஞையற்று
பிரபஞ்சவெளியில் மிதக்கும் ஒரு
பறவைச் சிறகிழை ;
தனதேயான வானவில் நிறங்களையெல்லாம்
வாரி வழங்கும் பட்டாம்பூச்சி்;
தொட்டுவிடலாகும் தொடுவானம்;
என்றும் என் கவிதையில்
எட்டாச் சொல்……