போரும் பயங்கரவாதமும் நாமும்
நிறைய நேரங்களில் அறிவார்த்தமாகப் பேசுவதாக நினைத் துக்கொண்டு அபத்தமாகப் பேசுவோரில் நடிகர் கமலஹாஸ னும் ஒருவர். ஆனால், ஒரு பேட்டியில் அவர் சொன்னது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது. (எந்தத் தருணத்தில் என்று நினைவுக்கு வரவில்லை).
அவர் சொன்ன தன் சாராம்சம் இதுதான்: ”
//”நாம் நாட்டின் உட்புறத்தில் இருப்பதால் நமக்கு இந்திய ராணுவத்தின் அருமை, பயங்கரவாதிகளால் மக்கள் அனுப விக்கும் கொடுமைகள் தெரிவதில்லை. இங்கே எல்லாம் இயல்பாக, அமைதியாக, இணக்கமாக இருப்ப தாக பாவித்துக் கொள்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும், அல்லும்பகலும் நம் ராணுவத்தினர், கடற்படை யினர், வான்படையினர் வெகு கவனமாக எல்லையோரப் பகுதிகளை கண்காணித்து, பதுகாத்துக்கொண்டிருப்ப தால்தான் நாம் இங்கே நிம்மதியாக வழ்ந்துகொண்டி ருக்கிறோம் என்பதை நாம் எண்ணிப்பார்க்க மறநதுவிடுகிறோம்.
ஆனால் இந்திய எல்லையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு – அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி – பயங்கரவாதிகளின் தாக்குதல்களி லிருந்து, பயங்கரவாதிகள் என்ற போர்வையில் எதிரி நாட்டு ராணுவம் மேற்கொள்ளும் அத்துமீறல்களிலி ருந்து நம்மைக் காப்பது நம் படைவீரர்களே என்பது நன்றாகவே தெரியும்.”


No comments:
Post a Comment