LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, May 10, 2025

விண்டவர் கண்டிலர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விண்டவர் கண்டிலர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தேடித்தேடி இளைக்கச்செய்து
அவளை ஹரி மோசம் செய்துவிட்டதாக
கரும்புள்ளி செம்புள்ளி குத்த
காலந்தோறும் பரபரத்துக்கொண்டிருப்போருக்கு
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யொரு பேதை;
காதலனால் வஞ்சிக்கப்பட்டவள்;
கண்ணீர்பெருக அவனை நினைத்துப்
பாடல்கள் எழுதியெழுதி இளைத்தவள்;
இன்(ல்)வாழ்க்கையைத் தொலைத்தவள்…..
நாச்சியார் திருமொழி பாய்ச்சும் அன்பெல்லாம்
விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதாய்
இறுதித்தீர்ப்பு எழுதி
கழுமேடைக்கு ஹரியெனும் காற்றை
கரகரவென்று இழுத்துச்செல்லப் பார்ப்பவர்களின்
விசாரணை வளையத்திற்கு அப்பாலானது
காற்றைக் காதலனாக அடைந்தே தீருவது என்ற
அவளின்
அசாதாரண ஊற்றனைய போதமும்
பிறவிப்பெரும் பேறாய்
காற்றோடு அவள் ஆனந்தமாய் அலைந்துதிரிந்த
அரிதரிதாம் காதமும்
உருவறு விசுவரூபக் காற்று
அவளைச் சரண் புகுந்ததும்
அதுகாலை கேட்ட சுநாதமும்
மீதமும்.

Friday, May 9, 2025

போர் வேண்டாம் – போர்ச்சூழலைப் பயன்படுத்தி இந்திய நாட்டை, அரசைப் பழிக்கவும் வேண்டாம்

 போர் வேண்டாம் – போர்ச்சூழலைப் பயன்படுத்தி இந்திய நாட்டை, அரசைப் பழிக்கவும் வேண்டாம்

........................................................................... ................................................................
யாரும் போரை விரும்புவது இல்லை. ஆனால் போர் இங்கே நடப்புண்மையாக இருப்பதையும் மறுக்கவிய லாது. ஒவ்வொரு நாடும் போர்த்தளவாடங்களுக்காகச் செலவிடும் பெருந் தொகையே இதற்கு சாட்சி.
நம்முடைய நாடான இந்தியா இன்னொரு நாட்டை ஆக்கி ரமிப்பதற்காக போர் தொடுத்ததில்லை. இப்போதும் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப்பயணிகள் படுகொலை செய்யப்பட் டதும் அதற்கு முன் பல வருடங்களாகத் தொடர்ந்து நடை பெற்றுவரும் தீவிரவாத/ பயங்கரவாத அத்துமீறல்களுமே இன்று இந்தியாவை போர்தொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளி யிருக்கிறது. இதை மறந்து இந்தியாவுக்கு புத்தி சொல்லவும், இந்தியா வைக் கண்டிக்கவும், பஹல்காம் படுகொலை குறித்து அதில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களும். அந்த அவல நிகழ்வுக் கான நேரடி சாட்சியங்களும் சொல்வ தெல்லாம் பொய் என்ற விதமான ஒரு narrativeஐக் கட்டமைக்க வும் இங்கே சில இலக்கியவாதிகள் முற்படுவது வருத்தத்திற் குரிய விஷயம். தமிழ் இலக்கியவாதிகள் எல்லோருமே இந்தக் கருத்தைக் கொண்டவர்கள் என்பதுபோன்ற ஒரு தோற் றத்தை இது ஏற்படுத்திவிடலாகாது.

தீவிரவாதத்தை மதரீதியான விஷயமாகப் பார்க்க வேண்டாம். ஆனால், தீவிரவாதத்தை தீவிரவாதமாகப் பார்க்க வேண்டியது அவசியம்.
இந்தக் குறிப்பிட்ட அவல நிகழ்வில், பஹல்காம் படு கொலை யில் குறிப்பிட்ட மதத்தினர் அல்லாதவர்களாகப் பார்த்து கொலை செய்யப்பட்டிருப்பதை நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளார்கள். அந்த பயங்க ரத்தைக் கண்டிப்பவர்கள் எல்லாம் மதவெறியர்கள் அல்ல.; இந்துக்கள் மட்டுமல்ல. மத நல்லிணக்கம் வேண்டுவோர் எல்லோருமே உலகெங்கிலும் இதை எதிர்க்கிறார்கள். ஆனால், சிலர் அப்படியொன்று நடக்க வேயில்லை என்று இங்கிருந்தபடியே கூறுவதன் நோக்கம் என்ன? இவர்கள்தான் இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு மத நல்லிணக்கத்திற்கு ஊறு செய்பவர் கள்.

பொதுமக்கள் மதநம்பிக்கைக்கும், மதச்சார்பின்மைக்கும், மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறை வெறியாட் டங்களுக்குமான வித்தியாசத்தைப் பற்றிய தெளிவான அறிவோடு இருப்பதால்தான் இந்தியாவில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் இயல்பாக வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள். அவர்களிடம் எழுத்து ரீதியாய் கருத்தி யல் வன்முறையைப் பிரயோகிப்பதும், அவர்களை மூளைச் சலவை செய்யப் பார்ப்பதும், அவர்களைப் பிளவுபடுத்த முனைவதும் அராஜகமான போக்கு. இந்திய அரசு இதைச் செய்கிறது என்று சொல்லிச்சொல்லி உண்மையில் இவர்கள் தான் இதை அதிக மாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய ராணுவத்தில் இன்று நம்மைக் காக்க இரவுபகல் பாராமல் பாடுபட்டுக்கொண்டிருக் கும் படைவீரர்கள் சாதி மதம் கடந்து இணைந்து நமக்காகப் போரிட்டுக்கொண்டிருக்கிறார் கள். செத்துமடிகிறார்கள். அவர்களில் இந்தியாவின் சிறு சிறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உண்டு. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உண்டு. தமிழகத் திலிருந்தும் ஏராளமானோர் நம் இந்திய ராணுவத்தில் உண்டு.

இப்போதைய போர்ச்சூழலில் இந்தியாவைச் சாடுவதும் இந்தியாவுக்கு போதிப்பதும் நம் படைவீரர்களைப் பழிக்கும், மதிப்பழிக்கும் செயல்.
இங்கே வசதியாக வீட்டின் பாதுகாப்பில் இருந்தவாறு வாய்க்கு வந்தபடி இந்தியாவை நிந்திப்பவர்கள், இந்தியா வுக்கு போர் நிறுத்த உபதேசம் செய்பவர்களின் உள்நோக்கங்கள் வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றன.

இவர்களுக்குப் பிடித்த சில நாடுகளில் நடக்கும் போர்களெல் லாம் இவர்களைப் பொறுத்தவரை உரிமைப்போர் கள். இவர்க ளுக்குப் பிடித்த நாடுகளின் மக்களுக்கு நாட்டுப்பற்று இருப்பதா கச் சிலாகிப்பார்கள்; மெய் சிலிர்ப்பார்கள். ஆனால், இந்தியா காலங்காலமாக சகித்துக் கொண்டு வேறுவழியின்றி இப்போது எதிர்த்தாக்குதல் நடத்தினால் இந்தியாவைப் பழிப்பார்கள்; வன்முறை பயில்வதாக ஆதங்கப்படுவார்கள்.

இந்தியர்களுக்கு நாட்டுப்பற்று இருக்கலாகாது. இருந்தால் அது பிற்போக்குத்தனம். மக்களாட்சித் தத்துவத்தின்படி தேர்தலில் வென்று பிரதம மந்திரியாக இருப்பவரை, அவருடைய தலைமை யின் கீழ் இயங்கும் அரசை கேலி செய்து கொண்டிருப்பதே, கீழிறக் கிப் பேசிக்கொண்டிருப்பதே, செயல்பட விடாமல் தடுப்பதே இங்கே மனித நேயம்; முற்போக்குத்தனம். இது என்ன நியாயம்?

போர் வேண்டாம் என்று சொல்வது நியாயம். ஆனால், இந்தப் போர்ச்சூழலை சாக்காக வைத்துக்கொண்டு இந்தியாவை, இந்திய அரசைப் பழிப்பதும், நிந்திப்பதும், அப்படிச் செய்வதை ஏற்காத இலக்கியவாதிகளைப் பிற்போக்குவாதிகள், சங்கிகள் என்று பரிகசிப்பதும், பழிப்பதும், நம் தாய்நாடான இந்தியாவின் இப்போதைய நடுவண் அரசை பற்றிய எதிர்மறையான ஓர் கருத் தியலைப் பரப்ப இந்தப் போர்ச்சூழலைப் பயன்படுத்திக் கொள்வ தும் படைப்பாளிகளின் அணுகுமுறையாக இருக்கலாகாது.

உலகமே என் வீடு என்று கவித்துவமாகச் சொல்லிக்கொள்ள லாம். ஆனால், ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் வேறு எந்த நாட்டிலும் பெரும்பாலும் சுற்றுலாப்பயணியர், குடியேறிகள் அல்லது அகதிகள்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

SAY ‘NO’ TO WAR – SAY ‘NO’ TO EXPLOITING THE WARLIKE SITUATION TO SPREAD HATRED AGAINST INDIAN GOVERNMENT AND HINDUISM

 SAY ‘NO’ TO WAR – AND, SAY ‘NO’ TO EXPLOITING THE WARLIKE SITUATION TO SPREAD HATRED AGAINST INDIAN GOVERNMENT AND HINDUISM



...................................................................................................................

Nobody wants War. At the same time nobody can deny the fact that war is an existential reality in the present day international scenario(saying ‘From time Immemorial’ would be more apt). the enormous funds spend by the world nations for defense bears testimony to this.

Our country INDIA has never initiated war against any country for expanding its territory or enslaving the people . Now also, only after the massacre of innocent tourists and the continuous ceasefire and border violations by Pakistan and their nurturing the terrorists to disrupt the peace and harmony in India that the Indian government has rightly retaliated. But, conveniently forgetting all these preaching India about Peace and Harmony and spreading a false narrative that the tourists in Pahalgam were not shot dead on religious grounds (so, shooting them should be condoned?) and accusing the Indian government of lying about the incident, making all those affected ones and eye-witnesses of the horrid incident abject liars, is highly objectionable and condemnable.

True, we shouldn’t view Terrorism on religious ground. But, we should regard Terrorism as Terrorism and speak against it. The ordinary people in India and the world over have a clear perception on the issue of Terrorism (inland as well as cross-border Terrorism) and that is why they live in peace and harmony, by and large. They don’t hesitate to condemn whoever unleashes Terrorism.

At this critical period even the Opposition Parties and the Indian People of various religions and also of the entire world stand with India a group of people supposed to be endowed with the milk of human kindness and social concern keep tarnishing India’s and Indian Government’s image, setting up a false narrative against Indian government and holding them responsible for all cross-border terrorism. This is shameful, to say the least.

[Even if it is all due to security lapse, that doesn't condone the terrorists' atrocities in any way. Also, even if it is a security lapse, should the Indian government keep regretting it and do nothing more? }

These lot would hail some wars waged by their idols where millions were killed but condemn the Indian Government for its counter-attack. Maybe, heart of hearts they dream and aspire for a dictato rial government and not a democratically elected one. These lot would hail patriotism in their revolutionary lands but call it ‘backward thinking’ and even ‘fundamentalism’ and fanaticism when their Indian brethren have it.

Our soldiers fighting for us belong to various religions and castes. Many hail from the lower strata of society with the vision and mission of safeguarding our land and their fellowmen. In this warlike scenario decrying India and Indian government is insulting our soldiers and demeaning their valour and commitment towards safeguarding the interests of our country.

SAY ‘NO’ TO WAR. OFCOURSE, WE SHOULD. BUT, NONE SHOULD USE THIS SLOGAN TO TARNISH THE IMAGE OF OUR MOTHER LAND. WE CAN POETICALLY SAY THAT THE WORLD IS OUR HOME. BUT, EXCEPT INDIA, IN ALL OTHER LANDS WE WOULD BE MOSTLY EITHER VISITORS, IMMIGRANTS OR REFUGEES. LET US NOT FOREGET THIS.



திக்குத்தெரியாத காட்டில்……. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 திக்குத்தெரியாத காட்டில்…….

ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
திசை - 1

ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்.
விமானங்கள் பறக்கத்தொடங்கும்.
கொரோனாக் காலம் என்பது கடந்தகாலமாகும்.
கதைகளில், கவிதைகளில் திரைப்படங்களில் பட்டிமன்றங்களில் பேசுபொருளாகும்.
கேட்பவர்கள் பார்ப்பவர்களில் சிலர் சிரிப்பார்கள்;
சிலரின் முதுகுத்தண்டுகள் சில்லிடும்.
இனி வரலாகாத அந்த முப்பது நாட்கள் அல்லது மூன்று மாதங்களின் நினைவு தரும் இழப்புணர்வு
சிலருக்குப் பொருட்படுத்தத்தக்கதாய்
சிலருக்குப் பொருளற்றதாய்
அருகருகிருக்கும் இரு மனங்களின் இடைவெளி
அதலபாதாளமாயிருக்க வழியுண்டு என நினைக்கையிலேயே
அதன் மறுபக்கமும் எதிரொலிக்கும் மனதில்.
மீண்டும் மனிதர்கள் கூடிப்பழகுவார்கள்.
கூட்டங்கூட்டமாக திருவிழாக்களைக் கண்டுமகிழ்வார்கள்
குழந்தைகளை அழைத்துக்கொண்டு
கடற்கரைக்குச் செல்வார்கள்.
கொரோனாவை மீறியும் நீளும் காலம்
நெருக்கும் கூட்டமாய் உந்தித்தள்ள
இருபக்கமாய் பிரிந்துவிட்டவர்கள் இன்னமும் தேடித்திரிந்துகொண்டிருக்கலாம்.
*
திசை - 2
அந்த அநாமதேய பிராந்தியத்தில் தான்
சென்றிருக்கும் வீடு இருக்கிறது;
செல்லவேண்டிய வீடும் இருக்கிறது.
நிகழ்காலமும் எதிர்காலமும் இருமுனைகளாக
இடையே இருப்பவை ஒரு சில வீடுகளாக இருக்கலாம்
சில பல தெருக்களாக இருக்கலாம்
வீதிகளாக இருக்கலாம்
மீதமிருக்கும் கோபதாபங்களாக இருக்கலாம்
அநாமதேய பிராந்தியமென்றானபின்
அடுத்திருந்தாலும்
அந்த இரு வீடுகளுக்கிடையே
ஆயிரமாயிரம் மைல்களாக
அந்திசாயும் நேரத்தில்
எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியாமல்
நின்றது நின்றபடி
தேடித்தேடி இளைத்திருக்கும்
ஏழை மனம்.
*
திசை - 3
பாதங்களுக்குப் போதிய பலம்வேண்டும்
திசையறியாத்த தொலைவின் காததூரங்களைக் கடக்க;
பழகவேண்டும் வழிகளில் தட்டுப்படும் இடர்ப்பாடுகள்….
காலணிகளை ஊடுருவி சுருக்கென்று குத்தும் கூர்கற்கள்;
தைக்கும் நச்சுமுட்கள்;
கண்ணீர் வந்தால் சற்றே இளைப்பாறுவதற்கு
நிழல் தரும் மரம் எங்காவது இருக்கும்
என்பதொரு நம்பிக்கை.
என்றாவதுதான் தட்டுப்படுமா நன்னம்பிக்கைமுனைகள்?
இப்போதெல்லாம் இரவில் வனவிலங்குகள் நடமாட்டம்
வாகனவீதிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இத்தனையையும் கடந்து சென்றடையும் வீடு
பூட்டியிருக்க நேரலாம்
அல்லது தாளிடப்படலாம் வாசல்
ஈசலாய் எழுந்து மடியும் எண்ணங்கள் கட்டுச்சோறாய்
மனதிலொரு நெடும்பயணம் பொடிநடையாய்
நடந்தவண்ணம்
*
திசை – 4
இங்கிருந்து பார்க்க முட்டுச்சந்துபோல்தான் தெரிகிறது.
ஒருவேளை மறுமுனையில் திறப்பிருக்கலாம்.
இருபக்கமும் பாதை பிரியலாம்.
இதுபோல் நடந்ததில்லையா என்ன?
ஆனால்
இரு நான்கு வருடங்களுக்கு முன்பு நடக்கமுடிந்ததைப் போல்
இன்று முடிவதில்லை.
நினைத்தபோது கால்கள் தூண்களாகி
நிலமூன்றி நின்றுவிடுகின்றன
நகர்த்தவே சக்தியில்லாத நிலையில்
நெடுமரமாய் வேர்பிடித்திருக்கும் கால்கள் தன்னிலைக்குத் திரும்பக் காத்திருக்க நேர்கிறது.
இல்லை, சாம்சன் தலைமுடியாய் மீண்டும்
சக்தி திரண்டு
நிலத்தைப் பிளந்து தூண்களை வெளியே இழுத்து கால்களாக்கிக்கொள்ளும்படியாகிறது.
இதற்காகும் நேரம் பொதுவான காலக்கணக்கில் சேருவதில்லை.
அதிபிரம்மாண்டப் பெருங்காலம் அதன்போக்கில்
வருங்காலத்தை நோக்கிப் பாய்ந்தவண்ணமே.
அதன் சுழல்வேகத்தில் கழன்று மேலெழும்பும் கால்கள்
நடக்க முற்படுவதற்குள் இழுத்துச்செல்லப்படுகின்றன.
புயலடித்துத் தரைதட்டும் கப்பலாய்
அயல்வெளியில் கரைசேர்ந்து அரைமயக்கத்தில் துவண்டுகிடக்கின்றன.
கையறுநிலையில்……..
என்றும் சென்று சேருமிடம் சேர கால்களுக்குக்
கருணை காட்டவேண்டும் காலம்.

A POEM BY YUMA VASUKI - Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

 //2021, MAY 5 - மீள்பதிவு//

A POEM BY YUMA VASUKI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

MARBLES ROLLING IN THE LIQUOR SHOP

கவிஞர் யூமா வாசுகியின் கவிதைத்தொகுப்பான சாத்தானும் சிறுமியும் 2013இல் வெளிவந்தது. 20, 25 கவிதைகள் இருக்கும். அனைத்துமே குழந்தைகளைப் பற்றிய கவிதைகள். அவற்றில் பல கவிதைகளைப் படிக்கும்போது நம்மால் அழாமல் இருக்க இயலாது. அந்த நூல் மொத்தத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். இதுவரை நூலாக வரவில்லை. அந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைத்தால் மூல தொகுப்பு கிடைக்காது. மூல தொகுப்பு கிடைத்தால் என் ஆங்கில மொழிபெயர்ப்புகள் கணினியிலுள்ள கோப்புகளுக்கிடையில் காணாமல் போய்விடும். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இன்று இரண்டும் கிடைத்தபோது மனம் உணர்ந்த மகிழ்ச்சி லட்சங்களாலும் கோடிகளாலும் வாங்க முடியாத ஒன்று!
என் மொழிபெயர்ப்புகளுள் ஒன்றை (அப்போது செய்த மொழிபெயர்ப்பு இப்போது கிடைத்தவற்றில் இல்லாத நிலையில் இப்போது புதிதாய் மொழிபெயர்த்து இங்கே தந்திருக்கிறேன்.
..........................................................................................

மதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்

யூமா வாசுகி
குடிப்பவர்களுக்குக் குற்றேவல் புரிந்து
அலைக்கழிந்த சிறுவன்
நிறைந்த போதையில் வெளியேறும் ஒருவனிடம்
இறைஞ்சிய சில்லறை
கைந்ழ்வு விழுகிறது தரையில்.
எடுக்கக் குனிகையிலோ
நிகழ்கிறதொரு அற்புதம்….
அவன் சட்டைப்பையிலிருந்து தவறி
கலீரிட்டுச் சிதறின கோலிக்குண்டுகள்.
அத்தனை பேரையும் சட்டென இணைத்துக்கொண்டு
நெடுக ஓடுகின்றன அவை.
கடந்த காலங்களில் மிதந்து
பார்த்திருந்தவர்களின் பால்யத்தில்
தட்டி நின்றன.
தயங்கித் திகைத்த சிறுவனிடம்
கருணை கூர்ந்து ஒருவன்
தன்னருகே கிடந்ததை எடுத்துக் கொடுத்தான்.
போதை மிகைத்த அன்புடன்
மற்றொருவனும் அவ்வாறே செய்தான்.
தாளாக் குற்றவுணர்வில்
நெகிழ்ந்த கரங்கள் பல
ஆசிகளெனக் கோலிக்குண்டுகளைப்
பொறுக்கிச் சேர்த்தன அவனிடம்.
A POEM BY YUMA VASUKI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

MARBLES ROLLING IN THE LIQUOR SHOP
The coins that a boy doing errands
for those tipplers
pleaded with one fully drunk and
on his way out
slipped from hand and fell on the floor.
As he bent to collect them
a miracle takes place….
Some marbles slipping from his shirt-pocket
scattered on the floor tinkling.
Bonding all there at once
they keep running on and on.
Stalled they were
at the childhood of all those
looking at them and floating
in times bygone.
As the boy stood there hesitant, shocked
One being merciful picked up that which lay by his side
and gave it to the boy.
With love swelling inebriated
another followed suit.
Hands too many
softening in a sense of unbearable guilt
gathered the marbles and gave them to the boy
as blessings.


வரம்போலும் சாபம்போலும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வரம்போலும் சாபம்போலும்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஏழைக் கவிஞர்,
எதிரே இறைவனே வந்துநின்றாலும்
கூழைக்கும்பிடு போட மாட்டார்.
காலத்தின் முன் கோழையாய்
மண்டியிட்டிருக்க மாட்டார்.
வாழையடி வாழையாய்
வறுமையில் உழன்றாலும்
வகைவகையாய் நல்கவியெழுதும்
வரம் கேட்கத் தெரியுமல்லாது
விரிந்தகன்ற வீடுகள் நான்கைந்து கேட்க மறந்துவிடுவதே வழக்கமெப்போதும்.
கண்டால் கடவுளர்க்கும்
கும்பிடத் தோன்றும்.
அன்றென்னவோ அப்படி விசனத்தோடு அமர்ந்திருந்தார்.
அருகமர்ந்த கடவுள் காரணம் கேட்க
ஆற்றாமையோடு
”அன்பினால் செய்கிறார்களென்றாலும்
அடுத்த மொழிக்கு எடுத்துச்செல்வதாய்
விளம்பி சிலர்
என்னை வளர்ந்தோங்கச் செய்வதாய்
விளம்பரம் செய்தவாறே
மனதின் கால்கடுக்க நான் எழுதிய
வரிகளின் உட்பொருளை
வெட்டிக் கிழித்து
அவற்றின் தனிஅடையாளங்களை
யெல்லாம்
அறவே சுவடின்றி யழித்து
ஒரு மொந்தையாக்கி மண்ணில்
உருட்டிவிடுவது
அந்த இன்னொரு மொழி
தெரியாதென்றாலும்
என் உள்ளுணர்வுக்குப் புரிபட்டுவிட
என்ன செய்வதென்றே தெரியவில்லை
யெனக்கு”
என்று தளும்பும் கண்களோடு
அழுகுரலில் கவி கூற
அதைக் கேட்டு கரிசனத்தோடு சிரித்த கடவுள்
"கவலைப்படாதே,
இனி கச்சிதமாய் செய்யப்படாத கவிதைமொழிபெயர்ப்புகள்
கண்ணில் பட்டவுடன் காணாமலாகிவிடும் பார்!" என்று சொல்லி விண்ணேகினார்
யார் கண்ணில் என்று கேட்டுத் தெளிவதற்கு
முன்பே.

அன்னா அக்மதோவாவின் கவிதை - 20 - வில்லோ மரம்

 அன்னா அக்மதோவாவின் கவிதை

- 20

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ் ணன்
(*முதல் வரைவு)

வில்லோ மரம்
நான் வளர்ந்தேன் _ நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்ட நிறைவமைதியில்
இளம் நூற்றாண்டின் நாற்றங்கால் மையத்தில்
ஓர் ஆண்குரல் எனக்கு அந்நியோன்யமாய் இல்லை
ஆனால் காற்றின் குரலை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
எனில், எல்லாவற்றையும் விட சிறந்தது
அந்த வெள்ளி ‘வில்லோ’ மரமே.
தன் முழு வாழ்வையும் என்னோடு வாழ்ந்து கழித்தது,
அதற்காகவே பிறந்ததுபோல்;
அதன் விசும்பும் கிளைகள்
கனவுகளால் என் உறக்கமின்மையை விசிறிவிட்டன.
என்ன விசித்திரம்! அது என்னை முந்திக்கொண்டுவிட்டது.
அதோ அதன் அடித்தண்டு நிற்கிறது;
விந்தையான குரல்களால் ஏனைய வில்லோக்கள்
நமது, அந்த, ஆகாயங்களின் கீழ்
அளவளாவிக்கொண்டிருக்கின்றன
அமைதியாயிருக்கிறேன் நான்……
என் சகோதரன் இறந்துவிட்டதைப்போல…….

Willow

And I grew up in patterned tranquility,
In the cool nursery of the young century.
And the voice of man was not dear to me,
But the voice of the wind I could understand.
But best of all the silver willow.
And obligingly, it lived
With me all my life; it's weeping branches
Fanned my insomnia with dreams.
And strange!--I outlived it.
There the stump stands; with strange voices
Other willows are conversing
Under our, under those skies.
And I am silent...As if a brother had died.

ANNA AKHMATOVA