LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 2, 2015

கவிதை 1. வெந்து தணியும் காடு…’2. கனலும் சாம்பல் _. ‘ரிஷி

கவிதை
1.  வெந்து தணியும் காடு….
ரிஷி



துண்டுப்பெண்ணொருத்தியிடம் இவளது அந்தரங்கத்தை
 யவர்கள் விண்டுவைத்துக்கொண்டிருக்கும் நேரம்
ஒருவேளை கள்ளச்சிரிப்புடன் கண்ணடித்துக்கொண்டிருக்கக்கூடும்;
வியூகம் அமைத்து வென்று சூடிய வாகைகளைக்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கக்கூடும்….

ன்றேனும் அறிவார்களோ _
கூண்டுக்குள் வசிக்கப் பழகிவிடும் கிளி யல்ல இவள்;
அரசனருகில் அப்பாவியாய் ஆரோகணித்திருக்கும் அன்னமும் அல்ல.
கழுகின் கூர்விரிவைக் கைக்குள் பிரபஞ்சமாக்கி
விட்டு விடுதலையாகிநிற்கும் சிட்டுக்குருவி!

ருந்தும் சக்ரவர்த்தியின் திருத்தோள்களைக் கூடாகத் தரித்திருந்ததெல்லாம்
அவர் அருமை பெருமை அறிந்ததாலேயே.

ரசவையோ, பரிவாரமோ பரிசில்களோ ஒரு பொருட்டில்லை யென்றுமே.
ஆன்மாவின் அடியாழத்தைத் தீண்டுமவர் ஆலோலங் கேட்கவே
தத்தித்தத்தி நடைபழகிவந்த திக் குருவி யவர் காலடியில்.

தானியம் கேட்டதில்லை, மானியம் கேட்டதில்லை
ஆனமட்டும் அன்பையே இறகுசிலிர்த்துத் தூவிக்கொண்டிருந்தது
வானமுதாய்!

மேவுங்காலத்தே தன் குட்டிமூக்கா லவர் நிழலை நீவித்தருவதையே
தன் நல்வினைப்பயனாய் எண்ணியிருந்தது….

ன்குரலால் என்னவெல்லாம் பாட்டிசைத்தது இப்பூங்குருவி!
கேட்டிருப்பார்தானே மாமன்னரும்……..

தோ
பொசுங்கிக்கொண்டிருக்கின்றன இதன் இறக்கைகள்.
பொந்தில் யார் வைத்தாலும்
நெருப்பு நெருப்பு தான்……

ணவலியினூடாய் விர்ரென்று உயரப் பறக்கும் எத்தனத்தில்
சிட்டுக்குருவியின் விசுவரூபம் வெளிப்படும்!

றக்கத் தெரியும் இதற்கு; பறக்க முடியும் எப்போதும்.
அதுபோதும்.
குருவியின் விரிசிறகுத் தடங்கள் பரவும் ’வெளி’யெங்கும் இனி _

மேலும்.

ழிந்துவரும் இனம் எனவும் அவர்கள் பழிக்கக்கூடும்….

ரிணாம வளர்ச்சியில் அது ஃபீனிக்ஸ் பறவையுமாகிவிட்டதை
யின்னும் அறிந்திலர் போலும்……



2. கனலும் சாம்பல்

தொழில்முறைக் கொலைஞர்கள் எல்லாம் உங்கள் செயல்நேர்த்தியின் முன்
வெறும் கத்துக்குட்டிகள் என்றாகுமாறு எப்படி
இத்தனை துல்லியமாய் ஒற்றைச் சொடுக்கில்
உயிர்நாடியை எளிதாய்
இற்று நைந்த கயிறாய்ப் பிய்த்தெறிந்துவிட முடிகிறது உங்களால்…..?

சித்திரம் மட்டுமா கைப்பழக்கம்…..

ன்னமும் துடித்துக்கொண்டிருக்கும் குற்றுயிரை
அடுத்தவீட்டுச் சிறுமியின் கையில் கொடுத்து
அரைரூபாய்க்கு விற்று ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிடச்சொல்லி
அனுப்பிவைக்கிறீர்கள் அத்தனை இயல்பாய்.

ருமானமல்ல, வீறிட்டுக் கேட்கும் வலியோலம் அளிக்கின்ற
பரவசமே சிலருக்குப் பிரதானமாய்.

மோதிப்பதாய் விரியும் சின்ன முறுவலோடு
அப்பால் செல்கிறீர்கள்.

ண்டிப்பாக பத்தோடு பதினொன்றல்ல
உங்கள் வித்தகம்.
தன்னிகரில்லா நிபுணத்துவம்.

ன்னவொன்று,
அதற்கான முன் தயாரிப்புகள்
அரதப்பழசாகிவருகிறது.

ங்கள் பட்டறை முகப்பில் மாட்டிவைக்கப்
பரிசளிக்கிறேன் இந்தப் பெயர்ப்பலகையை:

”மறுபிறவியாகுமாம் மரணம்.








Ø       

Wednesday, July 1, 2015

குகை என்பது ஓர் உணர்வுநிலை - கவிதை

 குகை என்பது ஓர் உணர்வுநிலை
அன்பின் பெயரால்...
ரிஷியின் ஆறாவது கவிதைத் தொகுப்பு


 புதுப்புனல் வெளியீடு







1)


காற்றாடிகளாக முடியாத காகிதத் துண்டு
துணுக்குகள் என்றாலும்
சொடுக்கியிழுக்கும் கைகளின் பிடியில்
சிக்காத பூரணத்துவம் கொண்டவை.
தலைக்கு மேலே சுற்றிச் சுழன்று
தரையிறங்கிக் கொண்டிருந்தன.
விழுந்த இடம் பொசுங்க
எழுந்த பிணவாடை
உனக்கு துர்நாற்றமென்றால்
எனக்கு சுகந்தம்.
அகராதியிலடங்காது இந்த மாற்றம்;
இரண்டறக் கலந்திருக்கும் இருட்குகையில்.


2)


குகைவாயிலில் தினமும் மாலை
பீறிட்டுயரும் ஊற்றைப் பார்ப்பதில்
வரவாகும்
நீர்த்துப் போகாத பரவசம்.
அன்றும் பார்த்துக் கொண்டிருந்தபோது
செங்குத்தாய் உயர்ந்து விரிந்து
பரவியது
செந்நிறத் தண்ணீர்.
வண்ண விளக்கைத் தேடிய கண்களுக்குத்
தட்டுப்பட்டது
வெட்டுண்ட மனமொன்று.
கிளம்பியது குருதியென்று விளங்கியதில்
கலங்கி
வாலைச் சுருட்டிக் கொண்டு குகைக்குள்
ஒடுங்கிக் கொண்டது காட்டுவிலங்கு
.

3)

தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது
தன்னைத் தானே.
கண்ணில் ததும்பிக் கண்ட வலியைக் கண்டு
வேடிக்கையாக இருந்தது.
காக்கைக் கொண்டாட்டமல்ல.
'உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை'.
வலியும், இழப்பும், அவமானமும்
கையறுநிலையும் கூட
கடவுள் தான்.
குகையிருளில் பலவீனமாய் படுத்துக் கிடக்கும்
பெண்புலியின்
புண்பட்ட மென்மார்பை ரணப்படுத்துவதாய்
வீசியெறியப்படும்
எலும்புத் துண்டத்தால் எப்படி வயிறு நிறையும்?
தன்னையுந்திக் கொண்டு எழுந்து புறப்பட்டால்
தானே கிடைக்கும் பொழுதும் இரையும்.

4)


கண்களை இடுக்கிக் கொண்டு காத்து நின்றாள்
பார்த்த விழி பூத்து.
பூப்பெய்திய நாள் நினைவுக்கு வரவில்லை.
பசிக்கிறது என்றால் அதைக் கொச்சையாகப்
பொருள்பெயர்த்து
பெருங்குரலெடுத்துச் சிரிக்கத் தயாராய்
நாலாயிரம் பேர்.
ஊர் மறந்துவிட்டது.
நசநசவென்று பெய்யத் தொடங்கிவிட்டது
மழைமனம்.
வசவுச் சொற்களின் நிண ருசியை
வாய்க்குள் உணர்ந்தவளாய் மீண்டும் குகைக்குள் நுழைந்தவாறே
முனகிக் கொண்டாள் மூதாட்டி:
காசு தராமலே கிடைப்பாள் என்றாலும்
கிழப்பரத்தையைப் புறக்கணித்தல் தானே
குடும்பத்தலைவர்களுக்கு அழகு...



5)


வெளியுலகின் இடையூறின்றி வேண்டுமட்டும் கூடிக்களிக்க
இந்தக் குகையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பெண்புலி.
பூனையாகி புதைந்து கொண்டது
அடுத்துப் படுத்துக் கிடந்த இணையின் அடிவயிற்றில். கண்துஞ்சிய நேரம் போக மீதி காலமெல்லாம்
நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது நேசமிகுதியில்.
ஆடாமல் அசையாமல் படுத்தவாறே
பங்கெடுத்துக் கொண்டிருந்த இணையின் மனதில்
நிலைகொண்டிருக்கக் கூடும்
அடுத்த வேளைக்கான இரையின் நினைவு.
சிந்தாநதியொன்று குகையின் அடியில் சீராக
ஓடிக் கொண்டிருந்தது.
பார்த்ததில்லை என்றாலும் அதன் ஒலிகேட்டுத்
தண்ணெனக் கனியும் பெண்மனம்.
குகைப்பாறையின் திண்மையைக் கொண்டாடுவதாய்
மறுபடி மறுபடி முகர்ந்து பார்க்கும்.
வினைமுடித்ததாய் வெளியேறி மறையும் இணையின்
தளதளவென்று பொலியும் வாலைப் பார்த்து
களிப்பு பெருகும்.
'பாவம், எவ்வளவு தொலைவு செல்ல வேண்டுமோ' என்று
தனக்குள் கேட்டுக் கொள்ளும்,
விசனமும், கரிசனமுமாய்.
திரும்பி வரும்போதெல்லாம் விருந்துண்ட கிறக்கமாய்
நாவைச் சுழற்றி மிச்ச ருசியை அசைபோட்டவாறிருக்கும்
இணையின் தரிசனத்தில்,
ஒரு துண்டு இறைச்சியும் தனக்குத் தரப்படவில்லை என்ற
நிதர்சனம் ஓரங்கட்டப்படும்.
திரும்பாமலே போகும் நாட்களில்
திரும்பாமலே போயிற்று ஒருநாள்.
இரண்டு மூன்று நான்காய் உருண்டோடிய பொழுதுகளில்
சுருண்டு கிடந்தது பெண்புலி, குகையின் ஒரு மூலையில்.
இதுநாள்வரை இருளிலேயே ஆனந்தமாய்க் கண்மூடி
மல்லாந்து கிடந்ததில்
கடந்துபோய்விட்ட காலத்தின் நீள்பரப்பு
சுருக்கென்று தைக்கிறது பிரக்ஞையில்.
சற்றே திரும்பிப் படுத்தபோது
பக்கவாட்டில் புதரொன்று முட்களோடு வளர்ந்திருப்பது
புரிந்தது.
அதிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் சீறலொலி
பிரமையாக இருக்கலாம், அல்லது,
பாம்பினுடையதாக இருக்கலாம்.
பலவீனம் மனம் உடலாக
மெதுவே எழுந்து நின்றது.
தலை படீரென்று இடித்தபோது தான்
குகையின் மேற்புறம் சரிந்திருப்பது தெரிந்தது.
மூச்சடைத்தது.
முன்னோக்கி எடுத்து வைத்த கால் பதிந்த இடம்
ஒரு பெரும்பள்ளத்தில் புதைய
பின்னுக்கிழுத்த வேகத்தில்
முதுகு சாய்ந்த இடத்திலிருந்த பாறை பெயர்ந்து
மோதித் தள்ளியது.
முன்மண்டையும், மூக்கும் நசுங்கி
குருதி பெருகத் தொடங்க
எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்ற
விருப்பு ஒரு வன்மமாக
மீண்டும் புலியாகி
ஒரே பாய்ச்சலில் வெளியேறிக் கொண்டிருக்கும்
பெண்புலியின் உடலெங்கும் படரும்
தண்காற்று
இன்னொரு வாழ்வாய்.

‘பாரதி’யைப் பார்க்கவேண்டும்போல்…….சிறுகதை ------

சிறுகதை

‘பாரதி’யைப் பார்க்கவேண்டும்போல்…….
‘அநாமிகா’
{* ஜூன் 22, 2015 பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது.}



”டியர் மிஸ். சுதா – பாரதி பாடல்கள் சிலவற்றைக் குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதவேண்டியிருக்கிறது. அருங்காட்சியக இயக்குநருக்கு இத்துடன் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அவர்களிடத்தில் பாரதி பாடல்களின் மூலப்பிரதிகள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். அவருடைய தனிப்பாடல்கள் சிலவற்றை அவர் கையெழுத்தில் உள்ளது உள்ளபடி ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்தனுப்பி உதவ முடியுமா? சிரமத்திற்கு மன்னிக்கவும்.”

_நேர்மையான எழுத்தாளர் என்று, எழுத்தின் மூலம் அறிந்து, முதியவரா கவும்,  விழித்திறன் குறைந்துகொண்டே வரும் நிலையில் இருப்பவராகவும் உள்ளதை அறிந்து, என்னாலான எழுத்துதவி செய்வதாய் அறிமுகமாகி, பரிச்சய நிலையைக் கடந்த பிறகும் உதவியை அதிகாரமாகக் கேட்கும் உரிமையெடுத்துக் கொள்ளாத உயரிய பண்பு; எத்தனை நெருங்கியவராயிருந்தாலும்  ‘take it for granted’ ‘ஆக நடத்தாமலிருக்கும் பெருந்தன்மை எத்தனை பேரிடம் இருக்கிறது? விரல் விட்டு எண்ணிவிடலாம்… அந்தப் பெரிய மனிதரிடம் இருந்தது. உண்மையிலேயே பெரிய மனிதர்தான் நான்கு மாடிகள் மரப்படிகளில் கால்கடுக்க ஏறி, கடிதத்தைக் காட்டி, அனுமதி பெற்று, பாரதியின் கவிதைகளடங்கிய நோட்டுப்புத்தகத்தை வாங்கிப் பார்த்து, தேவைப்பட்ட கவிதைகளைச் சுட்டிக்காட்டி, ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்துத் தரச் சொல்லி, அவற்றை வாங்கிக்கொண்டுவந்த கையோடு தபாலில் பத்திரமாக அனுப்பிவைத்து…. 

தவறாமல் நன்றிக்கடிதம் வந்தது. குட்டிக் குட்டி எறும்புகள் வரிசை தவறாமல் சீராகச் செல்வதைப் போன்று அடித்தல் திருத்தல் அற்ற கையெழுத்து! ஆனால், சென்னை வந்த சமயம் அந்த மூலப்பிரதிகளைத் தானும் பார்க்கவேண்டு மென முதுமை மூச்சுவாங்கச் செய்ய, ஆமைவேகத்தில் நகரும் உடம்போடு அந்த மனிதர் என்னுடன் கைத்தடியோடு கிளம்பியபோது எரிச்சலும் கோபமும் ஏற்பட்டது.

 ‘எத்தனை நம்பிக்கையின்மை…. நான் சரியாகப் பிரதியெடுத்திருப்பேனா, தேர்ந்தெடுத் திருப்பேனா என்ற சந்தேகம்… செ, எத்தனை உண்மையாய் அலுவலகத்திற்கு ‘லீவு’ போட்டு வேகாத வெய்யிலில் போய் பிரதி கிடைப்பதற்கான முயற்சிகளை மேற் கொண்டேன். எனக்கு இந்த அவமானம் தேவைதானா…?’

ஆட்டோவில் அவருக்கே இயல்பாக உள்ள பண்போடு, உரிய இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டவராய், வழக்கம்போல் நலம் விசாரித்துக்கொண்டே வந்தார். குரலே பரிவாய், பரிவே குரலாய் பொருந்திய தொனி மனதை எப்பொழுதும்போலவே நெகிழச் செய்தது. ‘தலைமுறை இடைவெளி’ என்பது ஒரு myth என்று அவரோடு பேசும் போதெல்லாம் தோன்றும். ஆறே வயது பெரியவளான சக ஊழியைக்கு தயிர் வடையை எப்படி விதம்விதமாகச் செய்வது (முக்கோண வடிவில், செவ்வக வடிவில், ஏன், அணுகுண்டு வடிவில் கூட!) என்று விலாவாரியாக நீட்டி முழக்கி போதிப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது. உறவுக்கார மேன்மக்கள் ஏராளமானோர்க்கு அத்தா னுடைய மச்சானுடைய சகலையின் சித்தி பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்ததுதான் அகில உலக சதாசர்வகாலத் தலைப்புச் செய்தி….. தலைமுறை இடைவெளி என்ற பொதுத்தலைப்பின் கீழ் எல்லாவற் றையும் பகுத்துவிட முடியுமா என்ன…?’  - எப்போதும்போல் மனதில் பலவாறாய்க் கிளர்ந் தெழுந்த சிந்தனையோட் டத்தையும் மீறி உள்ளுக்குள் கனன்ற கோபத்தையும்,கசப்பையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், கொஞ்சமும் மரியாதை குறையாமல் பதிலளித்துக் கொண்டிருந்தேன்.

மாடிப்படியில் ஏற முடியாமல் மூச்சு வாங்க ஏறியவரைப் பார்த்து மனதிற்குள் கோபம் மறைந்து வருத்தமே எஞ்சியது.

‘என்னை ஏன் நம்பவில்லை….? இவருடைய எழுத்தின் மீது, மனிதம் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறேன் நான்…. சொன்னபடிக்கு சரியாய் பிரதியெடுத்திருக்க மாட்டேன் என்று இந்த மனிதருக்கு எதனால் சந்தேகம் வரப்போயிற்று…? மனதின் புலம்பல் கண்ணுக்குள் வலித்தது…..

“இதுதான் சார் இயக்குனர் அறை.”

அனுமதி பெற்று உள்ளே நுழைந்ததும், “வாங்க சார்!” என்று எழுந்துநின்று வரவேற்றார் இயக்குநர். “மெட்டீரியல்ஸ் கேட்டிருந்தீங்களே, கிடைச்சுதா?”

”ஓ! இவங்க எல்லாத்தையும் பிரதியெடுத்து அனுப்பிச்சிருந்தாங்க. ரொம்ப நன்றி. அந்த மூலப் பிரதிகளை நான் கொஞ்சம் பார்க்க வேண்டும். தயவு செய்து தர முடியுமா?”

“தாராளமா! நோட்டுப்புத்தகத்தில்தான் எழுதியிருக்கிறார் பாரதியார். இதோ கொண்டுவரேன். தேவையான பிரதிகளை எடுக்கவில்லையா?”

_ கேட்டுக்கொண்டே பதிலை எதிர்பார்க்காமல் உள்ளறைக்குச் சென்றார் இயக்குனர். எனக்குள் அவமானமும்,துக்கமும் கவிந்தது.

“இதோ, இந்தாங்க சார்.”

வயோதிகத்தில் தளர்ந்து மெலிந்திருந்த கைகள் மௌனமாய் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டின.

“சரியாய்த்தானே சார் எடுத்தனுப்பியிருக்கிறேன்?” உள்ளடக்கிய அளவிலான ஒருவித கோபமும் கெஞ்சலும் கலந்த தொனியில் எழுந்த என் கேள்விக்கு மௌனமே பதில்.

அந்த மதிய நேரத்தில் சுற்றிலும் பளிங்கு நிசப்தம். நோட்டுப்புத்தகத் தாள்கள் புரட்டப்படும் ஓசை அறையெங்கும் ஓங்கரித்தது.

_”முத்து முத்தாய் எத்தனை அழகான கையெழுத்து! பார்த்தாயா சுதா!”

அந்தக் குரலில் ஒரு தழுதழுப்பு தளும்பி வழிந்தோடியது. பளிச்சென்று புதிர்முடிச்ச விழ்ந்ததாய் ‘அட! பாரதியின் கையெழுத்தை நேரில் தரிசிக்கத் தான் இந்த மனிதர் இத்தனைப் பிரயத்தனப்பட்டு இங்கே வந்திருக்கிறார்!’ என்பது புரிந்தது! அங்கே, அந்த வேளையில் கூடு விட்டு கூடு பாய்தல்போல் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது!

வெளியாளாய் நின்று வேடிக்கைப் பார்க்கத்தான் முடிந்தது அன்று….

ஆனால், அதன்பிறகு வந்த நாட்களில், உள்ளாளாகிவிட்ட நிலைபோல் ஒன்றில் மூச்சுத் திணறும் நேரமெல்லாம், மீண்டும் ‘மியூஸிய’த்திற்குச் செல்லவேண்டும்போல் தோன்றுகிறது….! பார்க்கவேண்டும் பாரதியின் முத்துமுத்தான கையெழுத்தை…..! அந்தக் கையெழுத்தைக் கொண்டு ‘கண்ணன் மனநிலையைக் கண்டுவரச் சொன்ன வனை…..! ‘ஆசை முகம் மறந்து போச்சே…..’ என்று ஆற்றாமையோடு அங்கலாய்த்த வனை…! ‘யாதுமாகி நின்றாய் காளீ! என்று கொண்டாடியவனை…! ‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால், என் மூச்சை நிறுத்திவிடு!” என்று நெக்குருகிக் கேட்டவனை….!




Thursday, June 25, 2015

மதிப்புரையின் மறுபக்கம்! - சிறுகதை - அநாமிகா

மதிப்புரையின் மறுபக்கம்!

அநாமிகா

{*பன்முகம் ஜூலை-செப்டம்பர், 2006 இதழில் வெளியானது}





ந்தப் பாடலை நீங்கள் அடிக்கடியோ, அபூர்வமாகவோ கேட்டிருக்கக் கூடும். குறிப்பாக, பின்வரும் பத்தியை அல்லது பகுதியை:

பருவம் வந்த அனைவருமே காதல் 

கொள்வ தில்லை;

காதல் கொண்ட அனைவருமே 

மணமுடிப்ப தில்லை;

மணமுடித்த அனைவருமே சேர்ந்து

வாழ்வ தில்லை;

சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து 

போவ தில்லை.

இதையே சற்று நவீனமாக மாற்றிப் பாருங்கள். சந்தம் இல்லாவிட்டால் பரவாயில்லை.

பிரசுரமாகும் புத்தகங்கள் எல்லாமே 

மதிப்புரை பெறுவ தில்லை;

மதிப்புரை பெறும் எல்லாமே 

நியாயமான 

மதிப்புரை பெறுவதில்லை;

மதிப்புரையாளர்கள் எல்லாமே 

நடுநிலையாளர்க ளில்லை;

நடுநிலையானவர்களுக்கோ 

மதிப்புரைக்க வாய்ப்ப தில்லை.

‘அனைவருமே’ என்ற வார்த்தையில் உள்ள அர்த்தக் குழப்பமும் அப்ப டியே ‘எல்லா மே’யிலும் தொடர்வதையும் அடிக்கோடிட்டுக் காட்டியாக வேண்டும்.


திப்புரைக்கு உரியதாகும் வாய்ப்புப் பெற்ற நூல்களில் ஒன்று அந்த வட்டமேஜையின் மத்தியில் கிடக்க, அதைச் சுற்று அந்த நாலு பேரும் அவரவருக்கேயுரிய கோணங்களிலும் கோலங்களிலும் அமர்ந்திருந் தனர். தவிர்க்கமுடியாத தேனீர்க்கோப்பைகளும் அவர்களுக்காய் அந்த மேஜையில் ஆஜராகியிருந்தன.

சம்பந்தப்பட்ட புத்தகத்தை எழுதிய படைப்பாளி மேற்படிக் குழுவினரின் அருள்வட்டத்திற்குள் இடம்பெறாதவர் என்பதோடு மட்டுமல்லாமல் எதிர்க்குழுவினரின் அன்புக் கும் ஆளாகியிருப்பவர். எனவேதான், அவர் படைப்பை மதிப்புரைப்பதா, வேண்டாமா என்ற வாதப் பிரதிவாதம் அத்தனை முனைப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

“நம்முடைய இதழில் அந்தப் புத்தகத்தை மதிப்புரைக்கு எடுத்துக் கொள் வதே அதற்கு ஒரு இலக்கிய அந்தஸ்தை நாம் தருவதாகிவிடுகிறது.” என்பது ‘கலியுகவாதி’யின் வாதம்.

“ஆனால், தீவிர வாசக வட்டத்தின் பரவலான கவனத்தைப் பெற்றிருக் கும் இந்தப் புத்தகத்தை நாம் கண்டுகொள்ளாமல் விட்டால் நம் குழு மனப்பான்மை அம்பலமாகி விடும்.” என்றாள் ‘திரிலோகசுந்தரி’.

“அதோடு, நம்மிடம் புத்தகம் குறித்து எதிர்க்கருத்து ஒன்றும் இல்லை என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அவ்விதமாய் புத்தகத்திற்குக் கூடுதல் மதிப்பு ஏற்பட்டுவிடவும் வாய்ப்பிருக்கிறது.” _ இது ‘அண்டசராசரன்’.

எதிர்ப்பதற்காகவே உருவாவதே எதிர்க்கருத்து என்பது இங்கே எழுதப் படாத விதி.

ஆனாலும், எல்லோரும் மக்களாட்சியில் மலர்ந்தவர்கள் என்பதால் ‘பெரும்பான்மைக் கருத்தை புறக்கணிக்கத் தலைப்படவில்லை.

நால்வரில் ’இரண்டேகால்’ பேர் அந்தப் புத்தகத்திற்கு ‘இதழில் மதிப்புரை வழங்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததால், அப்படியே செய்வது என்று முடிவாயிற்று.

மூன்றாவது நபரின் மனசாட்சி கால்பங்கு இன்னும் உயிர்ப்போடிருந் ததால் அவர் ‘கால்’ நபராகக் கொள்ளப்பட்டார். மற்ற இருவரில் ஒருவர், சம்பந்தப்பட்ட படைப்பாளியை பழிக்குப் பழி வாங்க அந்த மதிப்பு ரையைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று முன்கூட்டியே திட்ட மிட்டிருந்தார். அடுத்தவர் ‘ஜால்ரா’ தட்டித் தட்டிக் கைசோர்ந்து போன வராய் ‘போனால் போகட்டும் போடா’ என்று வேலையை விடத் தயாரா யிருந்தார். நியாயம், அதிநியாயம் என்று மலையுச்சியில் நின்று முழங்கும் அந்த இதழில் பணிபுரிவோருக்கு நாலு மாதங்களாக சம்பளம் தந்தபாடில்லை. மதிப்புரை வழங்கக் கூடாது என்று வெகு திட்ட வட்டமாகச் சொன்ன நபர் இதழின் நிறுவனர். நிறுவனர் குடும்பத்திற்கு நண்பராக இருக்கும் காரணத்தால் மட்டுமே இதழின் முக்கியக் கருத்துரை யாளர்களில் ஒருவராகப் பீடமேறியிருப்பவர். இப்போது மதிப்புரைக்கப்படவேண்டிய படைப்பாளி அந்தப் பீடத்தையே ஒருமுறை செம்புள்ளி, கரும்புள்ளி குத்தி கழுதைமேல் ஏற்றி அனுப்பியவர். குற்றத் திற்கு ஏற்ற தண்டனையாகவே அது பரவலாகக் கருதப்பட்டாலும்கூட அவ்விதத்தில் தான் தாழ்த்தப்பட்டுவிட்டவனாக்கப்பட்டுவிட்டதாகக் கொதித்துப்போனார், சமூகத்தில் உண்மையாகவே தாழ்த்தப்பட்டுவிட்ட வர்களாக்கப்பட்டு பலவிதங்களிலும் கேவலப்படுத்தப்பட்டுவரும் மக்க ளைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத மேற்படி பீடாதிபதி முக்காலும் காலுமாய் பிளவுண்டுநின்ற மற்றொருவரின் ‘விழித்துக் கிடந்த’ கால் வாசி மனசாட்சி சம்பந்தப்பட்ட படைப்பாளியின் இலக்கிய வீர்யத்தை’த் துல்லியமாக உணர்ந்திருந்ததால் அது பேசப்பட்டவேண்டியதுதான் என்ற கருத்தைப் பிடிவாதமாக முன்வைத்தது.


ம்பந்தப்பட்ட படைப்பை மதிப்புரைக்கு எடுத்துக்கொள்வது என்று முடி வாகிய பின், மதிப்புரையாளராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

“நாசநாக்கரசந்தான் சரியான நபர்.”

“அவர் அனாவசியத்திற்கு விஷம் கக்குவாரே…”

“அதுதான் நமக்கு வேண்டியது.”

”இல்லை. அவர் விஷம் கக்குவது அப்பட்டமாகத் தெரியும். அப்படித் தெரிந்தால் காரியம் கெட்டுவிடும்.”

“அப்படியானால், வஞ்சப்புகழ்ச்சியாக எழுதுவதில் சக்கரவர்த்தியான ‘உட்புறத்தான்’ஐ எழுதச் சொல்லலாம். மனுஷன் சந்தர்ப்பம் தரச் சொல்லி காலில் விழாத குறையாகக் கெஞ்சுகிறார்.”

“உட்புறத்தான் ஒத்துவராது. புகழ்ச்சியோ, வஞ்சப்புகழ்ச்சியோ – இரண் டுமே வெளிப்படையாகத் தெரியக்கூடாது.”

“ஆமாம், ஆழ்ந்த இலக்கிய வாசிப்புக் கூடிய பார்வையுடனான பார பட்சமற்ற அவதானிப்பு மிக்க மதிப்புரையாகக் காணவேண்டியது அவசியம்.”

“ஆமாமாம், அப்படி இருக்கவேண்டியது அவசியமில்லை. காணவேண்டி யதுதான் மிக அவசியம்!”

“ஹ!ஹ!ஹ!ஹ! – உண்மை கசக்கும் என்று சொல்வது தவறு. உண்மை எத்தனை வேடிக்கையானது!”

“பரவாயில்லை. வாழ்வின் இத்தனை நெரிசலிலும் நம்மிடம் இன்னமும் நகைச்சுவையுணர்வு எஞ்சியிருப்பது எத்தனை அற்புதமான விஷயம்!”

இங்கு ஒரு விஷயம் சொல்லித்தான் ஆகவேண்டும். இப்பொழுதெல்லாம் நகைச்சுவை உணர்வு என்பதே “பன்னி மூஞ்சி,” “பரங்கித் தலையா” என்பதையெல்லாம் தாண்டி, மூக்கு – காதுகளிலிருந்தெல்லாம் ரத்தம் கொப்புளித்துப் பெருகியோடும்வரை ஆயுதமற்ற அல்லது ஆயுதமுற்ற கைகளால் அடித்து நொறுக்குவதும், ஒருவன் தவறுதலாக இஸ்திரிப் பெட்டி யின் மீது உட்கார்ந்து பெருஞ்சூடு போட்டுக்கொள்வதும், அல்லது, ‘குண்டு’ வெடித்து புதைக்குவியலாக எழுந்துநடப்பதும் என்று ஆகிவிட் டதே. அப்படிப்பட்ட நகைச்சுவையுணர்வின் பிரதிபலிப்புத்தான் நம்மிடம் உள்ளதுவுமா? என்ற கேள்வி நம்முள் தவிர்க்கமுடியாமல் எழத்தான் செய்யும். இலக்கிய விமர்சனங்களில்கூட இத்தகைய நகைச்சுவையுணர் வின் வெளிப்பாடுகளை நம்மால் இனங்காண முடியும்…..


லக்கிய இதழ்களில் உமி மெல்லும் வாயால் அக்கப்போர் எழுதியே விமர்சன வித்தகராகத் திகழும் நபரைக்கொண்டு சம்பந்தப்பட்ட புத்தகத் தைப் பற்றி மதிப்புரை எழுதச் செய்வது என்பதாய் முன்வைக்கப்பட்ட கருத்திற்குப் பரவலான வரவேற்பிருந்தது.

வட்டமேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களில் ஒருவருடைய  ‘முன் சொன்ன’ கால்வாசி மனசாட்சி ஆட்சேபம் தெரிவித்தது. “அந்த மனிதருக் கும் நவீன இலக்கியத் திற்கும் என்ன சம்பந்தம்? அவரால் எப்படி இந்தப் படைப்பிற்கு விமர்சனம் எழுதமுடியும்?”

“அவரால் எந்தப் படைப்பிற்கும் விமர்சனம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுத முடியும் என்பதுதான் விஷயமே!”

மறுபடியும் ‘கால்வாசி’ மனசாட்சி அந்தத் தேர்வை மறுதலித்தது.

“இல்லை, அவரைக்கொண்டு எழுதச்சொல்வது சரியல்ல. ’பின் – நவீனத்துவம் என்ன ’பிசாத்து’ என்று பிதற்றிக்கொண்டிருப்பவர் அவர்.”

“அதுதானே நமக்கு வேண்டியது!”

“எது?”

“பின் – நவீனத்துவம் பற்றித் தெரியாமல் பிதற்றுபவர் ஒருவரைக் கொண்டு இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசவைப்பது. தவிர, இவருக்கு ‘பின் – நவீனத்துவம்’ தெரியாது என்பதை இப்போது மதிப்புரைக்கப்பட உள்ள படைப்பாளி முன்பு ஒருமுறை ’புட்டுப்புட்டு’ வைத்துவிட்டார். அதைப் படித்ததுமுதல் அந்த விமர்சகர் படைப்பாளிமீது சாபமிட்டே தீருவது என்று சபதமெடுத்துக்கொண்டிருப்பதாகக் கேள்வி.”

“ஓர் இதழின் சுவாரசியத்திற்கு இத்தகைய ’ஆல் - இன் – ஆல் விமர் சகர்கள் இன்றியமை யாதவர்கள்!”

”அந்த இதழ் ‘ஊத்தி மூடுவதற்’கும் இவர்களே காரணமாகிறார்கள் என் பதை நாம் மறந்து விடக் கூடாது,” என்று மீண்டும் கண்டிப்புடன் சுட்டிக் காட்டியது ‘கால்வாசி’ மனசாட்சி!

ஆனால், மீண்டும் பெரும்பான்மைக்கருத்திற்குத் தலைவணங்க வேண்டி வந்தது. பெரும்பான்மைக் கருத்து அந்த ‘திறனாய்வுத் திருவாளருக்கே ஆதரவாக அமைந்தது.

அந்த அவர்களுடைய ஒருமித்த தேர்வு குறித்த் ஒவ்வொருவரிடமும் அவரவருக்கான தனித்தனிக் காரணங்கள் இருந்தன:

  • “பின் – நவீனத்துவம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரால் சம்பந்தப்பட்ட படைப்பின் வெளிப்படையான உயர்வுகளைக் கூட உணர முடியாது; உரைக்கவும் இயலாது.”

  • “இலக்கியத்தில் உத்வேகமாக இயங்கிவரும் ஒருவரைக்கொண்டு மதிப்புரை எழுதவைப்பதைவிட, இத்தகைய ‘வெத்து’களைக் கொண்டு எழுதவைப்பது நம்பிக்கைக்குரிய விஷயம். ஏனெனில், படைப்பாளிகளைக் கண்டால் என்றுமே இத்தகைய ‘வெத்துவேட்டுக ளு’க்கு எக்கச்சக்கத் தாழ்வு மனப்பான்மை. எனவே, படைப்பாளியை விட தன்னை ஒரு படி மேலாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பில் மதிப்புரை, படைப்பாளியை படைப்புக்குப் புறத்தளவாய் மட்டம் தட்டு வதாகவே முதலும் முடிவுமாய் அமையும். எனவே, படைப்பைப் பற்றி ஒரு நல்ல வார்த்தையும் மதிப்புரையில் இடம்பெறாது!”

தற்குமேலும் காலதாமதமின்றி, தொலைபேசியில் அவர் தொடர்பு கொள்ளப்பட்டார். மதிப்புரைக்கப்பட வேண்டிய படைப்பாளியின் பெயர் இரண்டுமுறை அடிக்கோடிட்டுக் காண்பிக்கப்படுவதாய் அழுத்தமாய் எடுத்துரைக்கப்பட்டது. மதிப்புரையாளரை முன்பொரு சமயம் அந்தப் படைப்பாளி (நியாயமாய்) மூக்குடைத்தது நைச்சியமாய் நினைவுகூரப் பட்டது. கூடவே, விமர்சகப் பெருமகனாரை விரைவிலேயே தங்கள் இதழில் ஆஸ்தான விமர்சகராக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் தகவல் தரப்பட்டது. பின்குறிப்பாய், விரைவிலேயே அண்டார்ட்டிக்காவில் பனிக்கரடி பக்கத்தி லிருக்க இலக்கியப்பயணம் மேற்கொள்ளவும் விமர்சகருக்கு ஆவன செய்யப் படும் என்றும் கோடிகாட்டப்பட்டது!

சிக்கெனப் புரிந்துகொண்டு பரபரவென்று எழுதிக்கொடுத்துவிட்டார் விமர்சன வேந்தர். இணைய வெளியில் எல்லையற்று எழுதிப் பழகி யதில் இங்கே சிக்கனமாக எழுபது பக்கங்கள் மட்டுமே மதிப்புரை எழுதவேண்டியிருந்ததுதான் சற்று சிரமமாக இருந்தது. ‘எடிட்டிங்’ என்ற பெயரில் அறுபது பக்கக் கட்டுரை அரைப் பக்கமாவதும், அதுவே ‘’நேரிடை’யாகவும், ’‘எதிரிடை’யாகவும்,  நடைபெறுவதும், அதாவது, வேண்டியவர்களாயிருப்போர் விஷயத்தில் அரைப் பக்கம் அறுபது பக்கமாவதும் இலக்கிய நடப்புதானே! ‘தனி மனிதத் தாக்குதலைத் தவிர்க் கவும்’ என்று அந்த ‘நால்வர் குழாம் – இன்னும் சரியாகச் சொல்வ தென்றால்,  ’இரண்டேகால்வர் குழாம்’ வேண்டுகோள் விடுத்திருந்தது விமர்சனக் கோமகனை அதிர்ச்சி யடையச் செய்தது என்றாலும் அதை யடுத்து அடைப்புகுறிகளுக்குள் தரப்பட்டிருந்த {தனிமனிதத் தாக்குதலாக வெளிப்படையாகத் தெரியாத அளவில் தனிமனிதத் தாக்குதலைக் கட்டமைக்கவும்} என்பதான விளக்கம் ‘தன்னிலை விளக்கமாகவே’ தோற்றம் கொண்டு அவரை ஆசுவாசமாக உணரச் செய்தது.


மதிப்புரையிலிருந்து (ஒரு) ‘மாதிரி’ வரிகள் சில:

  • முன் – நவீனத்துவம் என்று ஒருமுறைகூட சொல்ல முனைவ தில்லை. படைப்பாளி. பின் – நவீனத்துவம் என்று பிடிவாதமாய்ச் சொல்லிக்கொண்டே போவது அவருடைய படைப்பாற்றலின் பின்தங்கிய நிலையைப் படம்பிடித்துக்காட்டுகிறது;

  • கதையின் நான்காவது அத்தியாயத்தின் ஆரம்பப் பத்தி ‘எல்லோரும் நல்லவர்களே’’ என்று தொடங்குகிறது. ‘எல்லாமும் நல்லவையே’ என்றோ, ‘எல்லாம் நன்மைக்கே’ என்றோ ஆரம்பிக்காதது ஏன்?

  • படைப்பாளி சின்னப் பையனாக இருந்தபோது அவருக்கு ‘பம்பரம்’ விடக் கற்றுக்கொடுத்தது நான். ஆனால் அவரோ ‘சின்னப் பையன்’ என்று எழுதாமல் ‘சிறுவன்’ என்றே எழுதுகிறார். இதை அவர் திருத்திக்கொண்டால் அவருடைய படைப்புத்திறனும் இலக்கிய வெளியாகிய பேரண்டத்தில் சுழன்றுகொண்டேயிருக்கும் மாய பம்பரமாய் முத்திரை பதிக்கும்! இந்த படைப்பில் அந்த முயற்சிக் கான ஒளிக்கீற்றைக் காணமுடிகிறது. அல்லது, முடியவில்லை (’என, அவர் என்னிடம் நடந்துகொள்ளும் முறையை வைத்துத்தான் தீர்ப்பளிக்க முடியும்’ என்பன வரியிடை வரிகள்!)

  • ‘தக்க திமி தா’ என்று எழுதாமல் ‘தக்க மிதி தா என்று சொற்குற்றம், பொருட்குற்றத் தோடு ஒரு படைப்பை உருவாக்கலாமா? தொல்காப் பியருக்கு துரோகம் செய்யலாமா? மேற்குறிப்பிட்ட இமாலய மொழிப் பிழையை அச்சுப்பிழையாக வாசகர்கள் இனங்காணலாம்.. அதுதான் ‘பாமர’ வாசகருக்கும், விவேகம்நிறை விமர்சகருக்கும் உள்ள வேறு பாடு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை!

  • என் இளமைக் காலத்திலிருந்தே இங்கிதமும் இலக்கியமும் என்னு டைய இரண்டு கண்களாக விளங்கிவருகின்றன. இருந்தாலும், மூன்றாவது கண்ணைத் திறந்து எரிக்கவேண்டிய விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, இந்தப் படைப்பு. அதனால்தான், இந்தப் படைப்பைப் படித்துப்பார்த்து என் மனதை விகாரமாக்கிக்கொள்ளாமல் விமர்சனம் எழுதுகிறேன் நான்!

  • நானே படித்துப் பார்த்து இந்தப் படைப்பு குறித்த சுயமான முடிவுக்கு வருவேன் என்று நீங்கள் சொல்ல முற்பட்டால் நாசமாய்த்தான் போகும் இலக்கியம். நீங்களும்கூட.


Ø   








Saturday, June 6, 2015

இன்மையின் இருப்பு {சமர்ப்பணம் : தாத்தாவுக்கு}காலத்தின் சில தோற்ற நிலைகள் - 10

கவிதை                
இன்மையின் இருப்பு
{சமர்ப்பணம் : தாத்தாவுக்கு}

காலத்தின் சில தோற்ற நிலைகள்
ரிஷியின் 4ம் கவிதைத் தொகுப்பு


 வெளியீடு: காவ்யா பதிப்பகம். 2005



ஆறடி ஆகிருதியின் திடகாத்திரம்
1500 டிகிரி செண்டிகிரேட் நெருப்புப் பிழம்புக்குள் செலுத்தப்பட்டு
சிறிதுநேரம் வரை சலனமற்றிருந்தது ஆகாயம்.
பின், போக்கியின் வழியாய் சன்னமாகக் கிளம்பத் தொடங்கியது புகை.
உள்ளே உடல் இறுதியாக ஒருமுறை துடித்தெழுந்து
அடங்கிக்கொண்டிருக்கும்.
வெப்பத்தில் விரியும் எலும்புகள் வெளியே துருத்திக்கொண்டு வருவதுபோல்….
எங்கு இடம்பிடிக்கும் ஒரு நூறாண்டும், கூட மூன்றாண்டுகளுமான
அந்த வாழ்வின் நிலவறைகளிலிருந்த எல்லாமும்….?
திருத்தமாய் நினைவடுக்குகளில் வரிசைப்படுத்தி
வைத்திருந்த அந்தப் பள்ளிப்பாடல்கள்;
ஷேக்ஸ்பியர் வாசகங்கள்;
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் புள்ளிவிவரங்கள்,
சில வார்த்தைகளால் வரவான தழும்புகள்,
சார்புநிலை கொண்டுவந்து சேர்த்த சலிப்பும் இழப்புகளும்,
உறவுகளின் மீது தேக்கிவைத்திருந்த பிரியம்,
ஒருபோது தாக்கியிருந்திருக்கலாகும் காமத் தினவு,
ஆட்கொண்ட வேட்கைகள், தேட்டங்கள்,
பல தலைமுறைகளின் ஞாபகப் பெருந்திரள்,
நனவோடை வண்டல், அக்கக்கோ பறவையின் தனிமை,
பொக்கைவாய்க்குள் புதைத்துவிட்ட சொல்லும் பொருளும்
பிறவும்….

ருள் மனம் மீட்சியற்று சிதறும்
இருளின் ஆழத்திலிருந்து எதிரொலிக்கிறது
“அக்கா” என்று அன்போடு என்னை அழைக்கும் குரல்….


0