அன்னா அக்மதோவாவின்
கவிதைகள் 3
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன்
1
போகும்வழியில் எண்ணிக்கொண்டேன் _
வந்துபோகும் வருடங்களில்
தானாக நடந்துவிடும் என்று
நல்லவிதமாக இருந்தால்போதும்
வாழ்க்கை எளிதாகிவிடும் என்று.
யாருமே சொல்லவில்லை
முழுமனிதராக வளர்ச்சியடைதல்
மிக மிகக் கடினமாயிருக்கும் என்று.
SOMEWHERE ALONG THE WAY
I GOT THE NOTION
THAT ADULTHOOD COMES AUTOMATICALLY
WITH THE PASSING OF THE YEARS
AND THAT I F I WOULD JUST BE GOOD ENOUGH
LIFE WOULD BE EASY.
NOBODY TOLD ME
GROWING UP
WOULD BE SO HARD.
(2)
அன்னா அக்மதோவா
(ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன்)
இருண்டடர்ந்த மிக நீண்ட பிரிவை
உன்னோடு சரிசமமாய்ப் பகிர்ந்துகொள்கிறேன்
ஏன் தேம்புகிறாய்? உன் கையைக் கொடு.
திரும்பிவருவாய் என்று உறுதிகூறு.
நீயும் நானும் நெடிதுயர்ந்த மலைகளைப் போன்றவர்கள்;
இன்னும் அருகிலேக நம்மால் இயலாது.
எப்போதாவது நள்ளிரவில் என்னிடம் பேசு
நட்சத்திரங்கள் வழியாக.
அன்னா அக்மதோவாவின் கவிதை
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன்
ஒன்று நேர்வழிகளில் செல்கிறது,
ஒன்று வட்டமாய் அலைகிறது:
அவனுடைய கடந்தகாலப் பெண்ணொருத்திக்காய்க் காத்திருக்கிறது,
அல்லது வீடு திரும்புவதற்காக.
ஆனாலும், நான் போகிறேன் _ அங்கே காத்திருக்கிறது அவலம் _
நேராகவோ, அகன்றுவிரிந்தோ அல்லாத வழியொன்றில்
என்றுமான இன்மைக்குள்
ரயில்பாதைகளிலிருந்து நீங்கிய ரயில்கள் போல்.
No comments:
Post a Comment