LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 4, 2024

தாமரையிலைத்தண்ணீர்ப்பற்று ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 தாமரையிலைத்தண்ணீர்ப்பற்று

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

தாமரையிலைத் தண்ணீரை தூலமாக நேரில்
பார்த்திருக்கிறேனா, தெரியவில்லை….
அப்படிப் பார்த்தால்
தாகூரைப் பார்த்ததில்லை,
ஷேக்ஸ்பியரைப் பார்த்ததில்லை
லதா மங்கேஷ்கரைப் பார்த்ததில்லை,
மம்முட்டியைப் பார்த்ததில்லை,
இமயமலையைப் பார்த்ததில்லை.
இக்குனூண்டு முளைவிதையைப்
பார்த்ததில்லை
பார்த்தல் என்பதன் நேரில் என்பதன்
அர்த்தார்த்தங்களில்
பார்த்திராதவையே அதிகம் பார்க்கப்பட்டதாய்…..
நான் பார்த்திராத தாமரையிலைத்
தண்ணீர்த்துளிகள்
இருக்குமிடமெங்கும் உருண்டோடியவாறே…
உணர்ந்தும் உணராமலுமா யதன் ஈரம் _
காய சி்றிது நேரமாகும்.
சில நாட்கள் அலைபேசியில் 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்துவிட்டால், பின்
அந்த அலாரம் எப்படியோ ஆழ்மனதில்
அடிக்க ஆரம்பித்துவிடுவது போலவே _
பழகிவிட்ட தாமரையிலைத்தண்ணீர்
வாழ்வில்
இலை நீர்த் துளிகள் மேல்
நிலைகொள் மனது _
பற்றுடைத்து என் றொரு சொல்லின்
இருபொருளுணர்த்தி.

சிவனும் சில தாண்டவங்களும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சிவனும் சில தாண்டவங்களும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நடிப்பவர்களை நமக்கே நன்றாகத் தெரியும்போது
நடராஜ –சிவனுக்குத் தெரியாதா என்ன?
நன்றாக நடிப்பவர்கள்
சுமாராக நடிப்பவர்கள்
பணத்துக்காக நடிப்பவர்கள்
புகழுக்காக நடிப்பவர்கள்
நடராஜன் அறிவான் நானாவித மனிதர்களையும்.
நாக்கில் நரம்பற்றவர்களை
நாகவிஷங்கொண்டவர்களை _
நடராஜனுக்கு நெருக்கமானவராகத் தன்னைக்காட்டிக்கொள்ள
நடிப்பவர்களையும் அவனுக்கு மிக
நன்றாகவே தெரியும்.
நடிப்பது தானெனில் நடிப்புக்கலை
நடிப்பது எதிரணியாளனெனில் நடிப்பொரு பொய் புனைசுருட்டு.
நடிப்பது தானெனில் நல்லதுக்கு
நடிப்பது எதிரணியாளனெனில்
நாசம் விளைவிக்கவே…..
நியாயத்தராசுகளில்தான் எத்தனை அலைவுகள்,
ஏற்ற இறக்கங்கள்!
நியாயவான்களாக நடிப்பதிலோ
நாளெல்லாம் ஆர்வம் சிலருக்கு.
சிவராத்திரியில் சிவன் தூங்கினானென்று சர்வநிச்சயமாய்ச் சொல்லும் குரல்
அதே நிச்சயத்தோடு ஊழல்செய்யும்
சக மனிதர்களை சுட்டத்துணியுமோ
சந்தேகமே.
சிவனின் நாளுக்கு 24 மணிநேரம்தானா?
அர்த்தராத்திரி நமக்கானதுதானா?
சொல்லமுடிந்தால்
நான் சிவனாகிவிடமாட்டேனா?
சிவன் ஆடலில் லயித்தபடியிருப்பான் –
அதுவும் சுடுகாட்டில்
அவனுக்கு எதுவும் கேட்காது.
அப்படியே கேட்டு எதிர்ப்புக்குரல் எழுப்பினாலும்
அதை அங்கேயிருக்கும் இறந்தவர்களின் ஆவிகள் அல்லது ஆன்மாக்கள் மட்டுமே செவிமடுக்கும்
என்ற அனுமானத்தில்
சில பலவற்றைப் பேசிக்கொண்டிருக்கும் குரலைக் கேட்டு
ஒரு கணம் ஆட்டத்தை நிறுத்தி அரைக்கண் மூடி
சிரித்துக்கொள்ளும் சிவனுக்கு
உண்டொரு நெற்றிக்கண் சர்வநிச்சயமாய்.

ஊரும் பேரும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 ஊரும் பேரும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
அகன்ற வானத்தில் தன்னந்தனியாக மின்னிக்கொண்டிருந்த
விண்மீனை அண்ணாந்து பார்த்திருக்கையில் மொட்ட விழ்வதாய்
மனதில் வெகு இயல்பாய் முகிழ்த்த வாழ்வுருக்களின் எலும்புகளை நரம்புகளையெல்லாம்
வரிகளில் பதிவேற்றி கவிதையாக்கிக்கொண்டிருந்தபோதெல்லாம்
கிறுக்கனென்றும்
கேனச்சிறுக்கியென்றும்
கித்தாப்பு காட்டறான் என்றும்
கெக்கேபிக்கே என்று எழுதுகிறாள் என்றும்
உருப்படாத எழுத்து என்றும்
ஒரு எழவும் புரியவில்லை யென்றும்
விதவிதமாய் நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
வைதுதீர்த்த
’கவிதை கிலோ என்ன விலை’ என்று கேட்கும் இலக்கியப்புரவலர்கள்
அந்தக் கவியின் ஒரு கவிதை
சமூக ஊடகத்தில் பரவலானதும்
அவர் எங்கள் ஊர்க்காரரென்றும்
எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரென்றும்
எங்கள் தெருவழியாகச் சிலசமயம்
செல்வாரென்றும்
ஒருமுறை என்னைப் பார்த்துச்
சிரித்திருக்கிறாரென்றும்
அவர் உங்கள் ஊர்க்காரர் இல்லையென்றும்
உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரில்லையென்றும்
உங்கள் தெருவழியாக அவர் சென்றதேயில்லையென்றும்
உங்களைப் பார்த்துச்
சிரித்ததேயில்லையென்றும்
எதிரும் புதிருமாகப் பேசும் பேச்சில்
கதிகலங்கிநின்ற கவிதையைப்
பார்த்து
கனிவோடு சிரித்த கவி
காற்றின் கைபிடித்து அந்தரத்தில்
காலாற நடக்கத்தொடங்கினார்.

வெறுப்புப் பேச்சு சட்டப்படியான தண்டனைக்குரியது

 வெறுப்புப் பேச்சு சட்டப்படியான தண்டனைக்குரியது


//சில யூட்யூப் சேனல்கள் குறிப்பிட்ட சமூகப்பிரிவினர் மீது தொடர்ந்து வெறுப்பு உமிழ்ந்துகொண்டிருக்கின்றன.


இவர்கள் PAID CHANNELகளாக இருக்கவும் வழியுண்டு.

சமூக அவலங்களை, நடப்புச்சூழலின் அவலங்களைச் சுட்டிக் காட்டி மக்கள் சார்பாகப் பேசும் முனைப்பின்றி ஒருதலைப்பட்ச மாகவே பேசிக்கொண்டிருக்கும் இந்த சேனல்களை நடத்திக் கொண்டிருப்பவர்களும், அவர்களுக்குப் பேட்டி கொடுப்பதையே முழுநேர சமூகசேவை, சமூகப்புரட்சியாக நடத்திக்கொண்டிருக் கும் சில மேம்போக்குப் பகுத்தறிவாளப் புரட்சியாளர்களும் மத நல்லி ணக்கம், மக்கட்பிரிவினருக்கிடையேயான நல்லிணக் கம் எல்லாவற்றையும் இல்லாமலாக்கி அதில் குளிர் காய்வதையே தங்கள் hidden agenda வாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருப் பதை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.

இவர்களெல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளும் நம் அரச மைப்புச் சட்டத்தில் தரப்பட் டுள்ள சில விதிகள் பின்வருமாறு. இந்த விதிகளை மீறுபவர்கள் சட்டரீதி யான தண்டனைக்குரிய வர்கள். ஆனால், அவர்கள் சிந்தனாவாதிகளாகப் பார்க்கப்படு கிறார்கள் என்பதுதான் அவலமான நடப்புண்மை.

.............................................................................................................................
Section 505 in The Indian Penal Code
1[505. Statements conducing to public mischief.—2[(1) ]

Whoever makes, publishes or circulates any statement, rumour or report,—

(a) with intent to cause, or which is likely to cause, any offi­cer, soldier, 3[sailor or airman] in the Army, 4[Navy or Air Force] 5[of India] to mutiny or otherwise disregard or fail in his duty as such; or
(b) with intent to cause, or which is likely to cause, fear or alarm to the public, or to any section of the public whereby any person may be induced to commit an offence against the State or against the public tranquility; or

(c) with intent to incite, or which is likely to incite, any class or community of persons to commit any offence against any other class or community, shall be punished with imprisonment which may extend to 6[three years], or with fine, or with both. 7[(2) Statements creating or promoting enmity, hatred or ill-will between classes.—Whoever makes, publishes or circulates any statement or report containing rumour or alarming news with intent to create or promote, or which is likely to create or promote, on grounds of religion, race, place of birth, residence, language, caste or community or any other ground whatsoever, feelings of enmity, hatred or ill-will between different reli­gious, racial, language or regional groups or castes or communi­ties, shall be punished with imprisonment which may extend to three years, or with fine, or with both.

கசக்கும் உண்மை - லதா ராமகிருஷ்ணன்

 கசக்கும் உண்மை

- லதா ராமகிருஷ்ணன்
(*2023 பிப்ரவரியில் எழுதப்பட்டது)
..........................................................................



தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியறிவிலும் தேர்ச்சியிலும் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்று சமீபத்தில் INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25, 2023 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் கல்வி தொடர்பாக INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றின் முடிவுகள் தரப்பட்டுள்ளன. இந்தி யாவில் 10000 பள்ளிக ளில் 20 தாய்மொழிகளில் பயிலும் 86000 மூன்றாம் வகுப்பு மாணாக்கர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்மொழித்திறன் தமிழ் மாணாக்கர்களிடம் மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் பட்டம் என்ற சொல்லை படம் என்று படித்தது நினைவுக்கு வருகிறது.

ஈரோடு இடைத்தேர்தலைப் பற்றிப் பரபரப்பாகப் பேசுவ தில் 100இல் ஒரு பங்காவது இந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேச அரசியல்கட்சிகளும் ஊடகங்களும் முன் வருமா என்பது மிக மிக சந்தேகமே.

அரசுப் பள்ளிகளில் மொழியறிவு, கணித அறிவு போது மான அளவு மாணாக்கர்களுக்கு சொல்லித்தரப்படுவ தில்லை என்று ஓர் ஆய்வு வெளிப்படுத்தினால் உடனே தனியார் பள்ளிகள் மட்டும் என்ன தரமானவையா என்று எதிர்க்கேள்வி எழுப்ப நிறைய ஆட்கள் உண்டு.

ஆனால், அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்கானவை அரசுப் பள்ளிகள். அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபடுவதாய் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், மனித உரிமைப் போராளிகளும் எழுத்தாளர்களும்அரசுப்பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு இணக்கமான கற்கும் சூழல் நிலவுகிறதா, நல்லவிதமாக கல்வி சொல்லித்தரப்படுகிறதா, மாணவர்களின் தன்மதிப்பை மேம்படுத்தும் விதமாக அந்த சூழல் இருக்கிறதா, அல்லது மாணாக்கர்களை மதிப்பழிக்கும்போக்கு நிலவு கிறதா என்றெல்லாம் கண்டும் கேட்டும் அறிய , ஏன் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை?

ஆசிரியர்களுக்கு தொழிற்சங்கம் இருக்கிறது. ஆசிரியர் களால் தங்கள் குறைகளை எடுத்துரைக்க முடியும். ஆனால், சிறு குழந்தைகள் முதல் வளரிளம்பருவத்தினர் வரை உள்ள மாணாக்கர்களுக்கு?

ஆசிரியர் – பெற்றோர் சங்கங்கள் பெயரளவுக்குத்தான் பல பள்ளிகளில் இயங்குகின்றன என்கிறார்கள்.

தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளி ஆசிரியப் பெரு மக்களுக்கு ஊதியம் அதிகம். ஆனால், படிப்பறிவற்ற பெற்றோர்கள் அவர்க ளிடம் எதையும் இயல்பாகப் பேச முடிவதில்லை. ’இலவசமாகக் கல்வி தருகிறோம் – இதில் கேள்வி கேட்கிறீர்களே’ என்று இடித்துக் காட்டும் இழிவுபடுத்தும் ஆசிரியப் பெருமக்கள் என்று சொல்லிக் காட்டும் ஆசிரியப் பெருமக்கள் உண்டு என்று பல பெற் றோர்கள் வருத்தத்தோடு சொல்லக் கேட்டிருக்கிறேன்.

கல்வி தரவேண்டியது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று; கல்வி பெறவேண்டியது குழந்தைகளின் அடிப் படை உரிமைகளில் ஒன்று’ என்பதை அறியாத அப்பாவி பெற்றோர்கள் தங்கள் பள்ளிக்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியப் பெருமக்கள் கற்றுத் தருவதே தங்களுக்குத் தரப்படும் ஆகப்பெரும் சலுகையாகக் கொள்கிறார்கள். அவ்விதமாய் அவர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.

அந்தந்த அரசியல் கட்சி அவரவர் தொண்டர்களுடைய குழந்தை களின் கல்வி குறித்து அக்கறை காட்டினாலே போதும். ஆனால், செய்கிறார்களா என்பது சந்தேகமே.

பாடத்தின் ஒரு பத்தியை ஆசிரியர் உரக்க வாசிக்கிறார். குழந்தை கள் அதை திருப்பிச் சொல்லுகின்றன. முடிந்து விட்டது மொழி யறிவுக் கல்வி. ஒரு பத்தியை பத்து முறை எழுதச் சொல்கிறார் கள். மனப்பாடமாகக் கூட அந்தப் பத்தியை அந்தக் குழந்தையால் சொல்லமுடிய லாம். ஆனால், அந்தப் பத்தியில் உள்ள தனித்தனி சொற்கள், எழுத்துகள் ஆகியவற்றை அந்தக் குழந்தை யால் அடை யாளம் காண முடிவதில்லை. இது என்னவிதமான மொழியறிவு? மொழியறிவுக்கல்வி? என்று வருத்தம் மிகக் கேட்கிறார்கள் சமூகப்பிரக்ஞைவாய்ந்த கல்வியாளர்கள்.

’ஒரு வகுப்பில் எட்டு பத்துக் குழந்தைகள் இப்படியிருப் பார்கள் தான். அதற்காக கல்வித்திட்டத்தை, ஆசிரியப் பெருமக்களை ஒட்டுமொத்தமாகக் குறைகூறுவதா?’ என்று கேட்பவர்கள் உண்டு. ஆனால், ஒரு வகுப்பில் பத்து குழந்தைகள் கற்றலில் பின்தங்கி யிருந்தால் அவர்களை அப்படியே விட்டுவிடலாமா? அவர்களைக் கற்றலில் முன்னேற்றுவது தேவையில்லையா? கடமையில் லையா?

வகுப்புகளில் மாறி மாறி பாடப்புத்தகங்களைத் தன் முன் விரித்து வைத்து, அல்லது கையில் ஏந்தியபடி அதிலிருக் கும் எழுத்துகள் என்னவென்றே தெரியாமல் ஆசிரியரின் வாயையே பார்த்துக் கொண்டிருக்கும், நாள் முழுக்க வகுப்பில் அமர்ந்துகொண்டிருக் கும், அவ்வப்போது ஆசிரி ய ரால் கண்டிக்கப்படும், மட்டந்தட்டப் படும் குழந்தைக்கு ஏற்படக்கூடிய நீடித்த உளவியல் பாதிப்புகள் ஏராளம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

தரமான கல்வியை அடித்தட்டு வர்க்கத்தினரின் குழந்தைகளுக் கும் கிடைக்கச் செய்ய வேண்டும். கிடைக்கச் செய்ய முடியும். அதற்கு முனைப்பான அக்கறையும் செயல்திட்டங்களும், அரசு களிடம் இருக்கவேண்டியது அவசியம்.

அரசியல் கட்சிகளும், சமூகமும் குழந்தைகளை இரண்டாந்தரக் குடிமக்களாய் பாவிக்கும் பார்க்கும் மனப் போக்கு மாற வேண்டும்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் லஞ்சலாவண் யங்கள் மிக அதிகமாகப் பரவியிருப்பதாகக் கூறப்படுகி றது. இதனால் உச்சபட்சமாக பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களின் பிள்ளைக ளான ஏழை மாணாக்கர்கள் தான். இந்தவிதமான சீர்கேடுகளும் தொடர்ந்தரீதியில் அடிக் கோடிட்டுக் காட்டப்படவேண்டிய தேவை யிருக்கிறது.

எத்தனையோ சேவை நிறுவனங்கள் கல்விப் பணியில் அர்ப்ப ணிப்பு மனோபாவத்தோடு இயங்கிவருகின்றன. அவர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் அரசு கோரிப் பெற வேண்டும். PPP எனப்படும் PUBLIC-PRIVATE PARTNERSHIP இல் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு முன் முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

ஊடகவெளி இதில் பெரும்பங்காற்ற முடியும். (ஆனால், தமிழை சிதைப்பதில்தான் அவை முக்கிய கவனம் செலுத்திவருகின்றன என்பது வருந்தத்தக்க விஷயம்).

மனமிருந்தால் ஆக்கபூர்வமாய் எத்தனையோ செய்யலாம்.

தரமான கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமைகளில் தலையா யது. அதைத் தரவேண்டியது, குறிப்பாக அடித்தட்டு வர்க்கத்தின ருக்குக் கிடைக்கச்செய்யவேண்டியது அரசுகளின் தலையாயக் கடமைகளில் மிகவும் முக்கியமானது.

தாய்மொழி மீது பற்றும் மரியாதையும் வருங்கால சந்ததியின ரிடம் ஏற்பட வெறுப்புப் பேச்சுகளோ, வெற்று முழக்கங்களோ உதவாது. தாய்மொழியில் பயிற்சியும் தேர்ச்சியுமே இன்றியமை யாதவை.

.....................................................................................................................................
பி.கு: மேற்குறிப்பிட்ட சுற்றாய்வில் தரப்பட்டுள்ள வேறு சில புள்ளி விவரங்கள் பின்வருமாறு:

2/25/23, 11:51 PM ‘42% of students meet global minimum proficiency level’ - Times of India
NEW DELHI: Around 42% of students surveyed across India met global minimum proficiency while 37% partially met it in mathematics, reveals a study by Stanford University’s Institute for Competitiveness.
The survey, conducted on 86,000 Class III students in 20 different languages across 10,000 schools in India, specifically highlighted language as being vital in acquiring early literacy.
The report, “Second State of Foundational Literacy and Numeracy 2022”, was released on Friday by Bibek Debroy, chairman, to the Prime Minister. It said 250 million Indian students were affected adversely due to the pandemic and that recovering from the children’s learning loss during the pandemic required more effort than simply reopening classrooms.
The Global Proficiency Frameworks (GPF) developed by United States
Agency for International Development ( ) defines the minimum proficiency levels for both reading and mathematics. The global proficiency levels include “does not meet minimum proficiency”, where learners lack the most basic knowledge and skills; “partially meets minimum proficiency”, where learners have limited knowled ge and skills; “meets minimum proficiency”, where learners have developed sufficient knowledge and skills, and “exceeds minimum proficiency” means that learners have developed superior knowledge and skills and can successfully complete complex tasks.
According to UNICEF, nearly two-thirds of 10-yearolds globally are unable to read and understand a simple text. With the Covid pandemic situation, the learning loss worsened, and every child across the world has fallen behind in learning.
Commenting on the current state of foundational learning and literacy, the report stated that in the contemporary world, in many countries, most children cannot interpret basic words and perform simple operations with numbers. According to a World Bank assessment, in India, around 50% of children lack foundational learning.
The report, however, says by adopting suitable innovation and agency demonstrated by teachers, collaborating with parents and using experiments with technology, the learning loss can be mitigated. In the last 50 years, India has lost over 220 languages, which means not enough attention is paid to preserving and taking care of languages.

நிலாமயம்! - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நிலாமயம்!

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
சிலருடைய கவிதைகளில் நிலவு கறைபடிந்ததாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு களங்கமற்றதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு சந்திரனாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அம்புலிமாமாவாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு கொஞ்சிக்குலவும் காதலியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அஞ்சிப் பதுங்கும் குழந்தையாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு உலவிக்கொண்டி ருப்பதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மிதந்துகொண்டி ருப்பதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மேகத்தைத்
தழுவு வதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மேகத்தைக் கண்டு நழுவியோடுவதாய்.
சிலருடைய கவிதைகளில் நிலவு உருண்டோடும் பந்தாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு உடையும் நீர்க்குமிழியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு
இரவின் குறியீடாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு
கனவின் அறிகுறியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு நாடோடியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு காத்தாடியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு காலமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அகாலமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மரணமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மறுபிறப்பாய்
நிஜத்தில் நீ யார் எனக் கேட்டால்
புவியின் ஒரே துணைக்கோள் அறிவியலின்படி
என்று குறுநகையோடொரு விடைகிடைக்கக்கூடும்....
எனில் நிலா முயல் வேண்டுமா வேண்டாமா என்று
நாம்தானே முடிவுசெய்யவேண்டும்!

கட்டிடக்கலை வரலாறு ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கட்டிடக்கலை வரலாறு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


கைவசமிருக்கும் கற்களையும் மணலையும் சிமெண்ட்டையும் ஜல்லியையும் தண்ணீரையும் கலந்து கட்டிக்கொண்டிருக்கிறாய்…

இந்தக் கற்களும் மணலும் சிமெண்ட்டும் ஜல்லியும் தண்ணீரும் தரமானவையா போதுமானவையா
என்று சரிபார்க்க உனக்கு நேரமில்லை மனமுமில்லை.

தினசரிச் சந்தையில் சுலபமாய் மலிவு விலைக்கு வாங்கவும்
விற்கவும் முடிகிறது.

அப்படிக் கட்டப்படுவதைக் கண்காட்சியாகப் பார்த்து மகிழ
அன்றாடம் சாரிசாரியாக ஆட்கள் வருகிறார்கள் எனும்போது
அதற்கான அல்லது அதைக்கொண்டு அருங்காட்சியகமும் பல்பொருள் அங்காடியும் அமைக்கப்படுவதுதானே புத்திசாலித்தனம்.

தரமற்ற அளவில் நிர்மாணிக்கப்படுமொரு கட்டிடம் இடிந்துவிழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதனால் நேரும் இழப்புகளும் அதிகம்.

ஒப்புநோக்க வார்த்தைகளால் கட்டப்படுவனவற்றுக்கு
அத்தகைய அபாயங்கள் குறைவு.

எத்தனை பலவீனமாகக் கட்டப்பட்டிருந்தாலும்
உறுதியானது என்று மற்றவர்களை நம்பவைக்கும் உத்திகளை
நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தால் போதும்.
காலத்துக்கும் அது உறுதியாக நிற்கும்.

அவ்விதமாய் கட்டப்படுவதன் அடி முடி காணா தலைமுறையினர்
அவற்றில் வாசம் செய்தபடி
அவற்றுக்கு வாடகை செலுத்தியபடி
அவற்றினூடாய் வாழ்ந்தேகியபடி
அவர் மீது இவரும் இவர் மீது அவரும் வெறுப்புமிழ்ந்தபடி….

அவர்களைக் காட்சிப்பொருளாக்கியபடி கட்டிடவியாபாரத்தில்
கொள்ளை லாபம் ஈட்டிக்கொண்டிருப்பவர்களை
கனவான்களாக காருண்யவாதிகளாக காண்பதும்
காட்டுவதுமாய்
ஊட்டிவளர்க்கபட்டுக்கொண்டிருக்கும்
கட்டிடக்கலை வரலாறு.