LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, May 9, 2025

A POEM BY YUMA VASUKI - Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

 //2021, MAY 5 - மீள்பதிவு//

A POEM BY YUMA VASUKI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

MARBLES ROLLING IN THE LIQUOR SHOP

கவிஞர் யூமா வாசுகியின் கவிதைத்தொகுப்பான சாத்தானும் சிறுமியும் 2013இல் வெளிவந்தது. 20, 25 கவிதைகள் இருக்கும். அனைத்துமே குழந்தைகளைப் பற்றிய கவிதைகள். அவற்றில் பல கவிதைகளைப் படிக்கும்போது நம்மால் அழாமல் இருக்க இயலாது. அந்த நூல் மொத்தத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். இதுவரை நூலாக வரவில்லை. அந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைத்தால் மூல தொகுப்பு கிடைக்காது. மூல தொகுப்பு கிடைத்தால் என் ஆங்கில மொழிபெயர்ப்புகள் கணினியிலுள்ள கோப்புகளுக்கிடையில் காணாமல் போய்விடும். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இன்று இரண்டும் கிடைத்தபோது மனம் உணர்ந்த மகிழ்ச்சி லட்சங்களாலும் கோடிகளாலும் வாங்க முடியாத ஒன்று!
என் மொழிபெயர்ப்புகளுள் ஒன்றை (அப்போது செய்த மொழிபெயர்ப்பு இப்போது கிடைத்தவற்றில் இல்லாத நிலையில் இப்போது புதிதாய் மொழிபெயர்த்து இங்கே தந்திருக்கிறேன்.
..........................................................................................

மதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்

யூமா வாசுகி
குடிப்பவர்களுக்குக் குற்றேவல் புரிந்து
அலைக்கழிந்த சிறுவன்
நிறைந்த போதையில் வெளியேறும் ஒருவனிடம்
இறைஞ்சிய சில்லறை
கைந்ழ்வு விழுகிறது தரையில்.
எடுக்கக் குனிகையிலோ
நிகழ்கிறதொரு அற்புதம்….
அவன் சட்டைப்பையிலிருந்து தவறி
கலீரிட்டுச் சிதறின கோலிக்குண்டுகள்.
அத்தனை பேரையும் சட்டென இணைத்துக்கொண்டு
நெடுக ஓடுகின்றன அவை.
கடந்த காலங்களில் மிதந்து
பார்த்திருந்தவர்களின் பால்யத்தில்
தட்டி நின்றன.
தயங்கித் திகைத்த சிறுவனிடம்
கருணை கூர்ந்து ஒருவன்
தன்னருகே கிடந்ததை எடுத்துக் கொடுத்தான்.
போதை மிகைத்த அன்புடன்
மற்றொருவனும் அவ்வாறே செய்தான்.
தாளாக் குற்றவுணர்வில்
நெகிழ்ந்த கரங்கள் பல
ஆசிகளெனக் கோலிக்குண்டுகளைப்
பொறுக்கிச் சேர்த்தன அவனிடம்.
A POEM BY YUMA VASUKI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

MARBLES ROLLING IN THE LIQUOR SHOP
The coins that a boy doing errands
for those tipplers
pleaded with one fully drunk and
on his way out
slipped from hand and fell on the floor.
As he bent to collect them
a miracle takes place….
Some marbles slipping from his shirt-pocket
scattered on the floor tinkling.
Bonding all there at once
they keep running on and on.
Stalled they were
at the childhood of all those
looking at them and floating
in times bygone.
As the boy stood there hesitant, shocked
One being merciful picked up that which lay by his side
and gave it to the boy.
With love swelling inebriated
another followed suit.
Hands too many
softening in a sense of unbearable guilt
gathered the marbles and gave them to the boy
as blessings.


வரம்போலும் சாபம்போலும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வரம்போலும் சாபம்போலும்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஏழைக் கவிஞர்,
எதிரே இறைவனே வந்துநின்றாலும்
கூழைக்கும்பிடு போட மாட்டார்.
காலத்தின் முன் கோழையாய்
மண்டியிட்டிருக்க மாட்டார்.
வாழையடி வாழையாய்
வறுமையில் உழன்றாலும்
வகைவகையாய் நல்கவியெழுதும்
வரம் கேட்கத் தெரியுமல்லாது
விரிந்தகன்ற வீடுகள் நான்கைந்து கேட்க மறந்துவிடுவதே வழக்கமெப்போதும்.
கண்டால் கடவுளர்க்கும்
கும்பிடத் தோன்றும்.
அன்றென்னவோ அப்படி விசனத்தோடு அமர்ந்திருந்தார்.
அருகமர்ந்த கடவுள் காரணம் கேட்க
ஆற்றாமையோடு
”அன்பினால் செய்கிறார்களென்றாலும்
அடுத்த மொழிக்கு எடுத்துச்செல்வதாய்
விளம்பி சிலர்
என்னை வளர்ந்தோங்கச் செய்வதாய்
விளம்பரம் செய்தவாறே
மனதின் கால்கடுக்க நான் எழுதிய
வரிகளின் உட்பொருளை
வெட்டிக் கிழித்து
அவற்றின் தனிஅடையாளங்களை
யெல்லாம்
அறவே சுவடின்றி யழித்து
ஒரு மொந்தையாக்கி மண்ணில்
உருட்டிவிடுவது
அந்த இன்னொரு மொழி
தெரியாதென்றாலும்
என் உள்ளுணர்வுக்குப் புரிபட்டுவிட
என்ன செய்வதென்றே தெரியவில்லை
யெனக்கு”
என்று தளும்பும் கண்களோடு
அழுகுரலில் கவி கூற
அதைக் கேட்டு கரிசனத்தோடு சிரித்த கடவுள்
"கவலைப்படாதே,
இனி கச்சிதமாய் செய்யப்படாத கவிதைமொழிபெயர்ப்புகள்
கண்ணில் பட்டவுடன் காணாமலாகிவிடும் பார்!" என்று சொல்லி விண்ணேகினார்
யார் கண்ணில் என்று கேட்டுத் தெளிவதற்கு
முன்பே.

அன்னா அக்மதோவாவின் கவிதை - 20 - வில்லோ மரம்

 அன்னா அக்மதோவாவின் கவிதை

- 20

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ் ணன்
(*முதல் வரைவு)

வில்லோ மரம்
நான் வளர்ந்தேன் _ நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்ட நிறைவமைதியில்
இளம் நூற்றாண்டின் நாற்றங்கால் மையத்தில்
ஓர் ஆண்குரல் எனக்கு அந்நியோன்யமாய் இல்லை
ஆனால் காற்றின் குரலை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
எனில், எல்லாவற்றையும் விட சிறந்தது
அந்த வெள்ளி ‘வில்லோ’ மரமே.
தன் முழு வாழ்வையும் என்னோடு வாழ்ந்து கழித்தது,
அதற்காகவே பிறந்ததுபோல்;
அதன் விசும்பும் கிளைகள்
கனவுகளால் என் உறக்கமின்மையை விசிறிவிட்டன.
என்ன விசித்திரம்! அது என்னை முந்திக்கொண்டுவிட்டது.
அதோ அதன் அடித்தண்டு நிற்கிறது;
விந்தையான குரல்களால் ஏனைய வில்லோக்கள்
நமது, அந்த, ஆகாயங்களின் கீழ்
அளவளாவிக்கொண்டிருக்கின்றன
அமைதியாயிருக்கிறேன் நான்……
என் சகோதரன் இறந்துவிட்டதைப்போல…….

Willow

And I grew up in patterned tranquility,
In the cool nursery of the young century.
And the voice of man was not dear to me,
But the voice of the wind I could understand.
But best of all the silver willow.
And obligingly, it lived
With me all my life; it's weeping branches
Fanned my insomnia with dreams.
And strange!--I outlived it.
There the stump stands; with strange voices
Other willows are conversing
Under our, under those skies.
And I am silent...As if a brother had died.

ANNA AKHMATOVA

அன்னா அக்மதோவாவின் கவிதை - 19 - நான் கவிதை எழுதும்போது

 அன்னா அக்மதோவாவின் கவிதை

- 19

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ்ணன்.
(*முதல் வரைவு)
நான் கவிதை எழுதும்போது

அரூப மனவெழுச்சியால் ஆரத்தழுவப்படும்போது
நான் விண்ணுக்கும் மண்ணுக்குமான இணைப்புப்பாலம்,
படைப்பாக்கத்தின் உயர்-விழுமியங்களாக இதயம் கொள்ளும் அனைத்திலும்
ஆட்சிபீடத்தில் நான், ஒரு கவிதையோடு சுவாசித்திருக்கும்போது!
என்னுடைய ஆன்மா அதை விரும்பினால்,
அன்பின் தேவதையே,
மென்ரீங்காரத்துடன், இளரோஜாநிறக் கடல்
கனவுமயமான அலை கனவுமயமான தரையை அடைய
அதைத் தூக்கிசென்றுகொண்டிருக்கும்
அமைதியான கடலோர இசைக்குழுவைக்
கேட்கத் தருவேன் உனக்கு.
என்னால் எல்லாமே செய்யமுடியும், என்னை நம்பு அதுபோதும்:
நான் அதிவலிமையானவள்;
கருணைக்கும் காதலுக்குமான வேர்கள் என்னிடமுள்ளன;
நான் விரும்பினால், மேகங்களிலிருந்தும் மின்னலிலிருந்தும்
விண்ணிலிருக்கும் உன் இன்படுக்கைக்கு போர்வை தயாரிப்பேன்.
மேலும், அன்பே, வெகு சிறப்பான மிகப் பிரத்யேகமான
ஒரு சொல்லை உருவாக்குவேன் _
உலகனைத்தின் விதிகளை மாற்றிவிடுவதாய்,
தனதேயான கொண்டாட்டத்தை மீண்டும் வரவழைப்பதாய்
இரவின் குளிர்வில் சூரியன் விழுவதைத் தடுத்துநிறுத்துவதாய்.
நான் முழுக்க முழுக்க வேறொருவர், என் கவித்துவ மனவெழுச்சியில்.
நான் விண்ணுக்கும் மண்ணுக்குமான இணைப்புப்பாலம்,
படைப்பாக்கத்தின் உயர்-விழுமியங்களாக இதயம் கொள்ளும் அனைத்திலும்
ஆட்சிபீடத்தில் நான், ஒரு கவிதையோடு சுவாசித்திருக்கும்போது!

When I Write Poems
When I'm embraced by airy inspiration,
I am a bridge between the sky and earth.
Of all what heart high-values in creation
I am a king, when breathing with a verse!
Just if my soul wishes it, my fairy,
I shall give you the peaceful coast band,
Where, with a hum, the pinky sea is carrying
The dreaming tide to reach the dreaming land.
I can do all, just trust in me: I'm mighty;
I have the roots for kindness and for love;
And if I want, from clouds and from the lightning
I'll make a cover your sweet bed above.
And I can, dear, create a word such special,
That it would change laws of the whole world,
To call again its own celebration
And stop the sun from fall in the night cold.
I'm all another in my inspiration,
I am a bridge between the sky and earth.
Of all what heart high-values in creation
I am a king, when breathing with a verse!
Anna Akhmatova

அன்னா அக்மதோவாவின் கவிதை - 18 - இடி

 அன்னா அக்மதோவாவின் கவிதை - 18

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன்

இடி

அப்பொழுது அங்கே இடியிடிக்கும். என்னை நினைத்துக்கொள்.
‘அவள் சூறாவளிகளைக் கேட்டாள்’ என்று சொல்.
உலகம் முழுவதும் மாணிக்கக்கல்லின் நிறத்திற்கு மாறிவிடும்
உன்னுடைய மனம், முன்பைப்போலவே, நெருப்பாகும்.
இறுதியாக விடைபெற்றுக்கொண்டு
என் நிழலை இங்கே ஆகாயத்தில் விட்டுவிட்டு
நான் காண ஏங்கிக்கொண்டிருந்த
விண்ணுலகம் ஏகும் கணம்
அன்று, மாஸ்கோவில், ஒரு மெய்யான முன்னுரைத்தலின் தீர்க்கதரிசனம்.

THUNDER
There will be thunder then. Remember me.
Say ‘ She asked for storms.’ The entire
world will turn the colour of crimson stone,
and your heart, as then, will turn to fire.
That day, in Moscow, a true prophecy,
when for the last time I say goodbye,
soaring to the heavens that I longed to see,
leaving my shadow here in the sky.

Anna Akhmatova

அன்னா அக்மதோவாவின் கவிதை - 17 - மரணம்

 அன்னா அக்மதோவாவின் கவிதை

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ்ணன்
*முதல் வரைவு)

மரணம்
(1)

திருத்தமான பெயர் எதுவுவில்லாத
ஏதோவொன்றின் விளிம்பிலிருந்தேன் நான்
தவிர்க்கமுடியாததொரு அரைமயக்கநிலை,
தன்னைத்தான் தவிர்த்தலாய்…..

(2)

ஏதோவொன்றின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருக்கிறேன்
எல்லோருக்கும் நேர்வதுதான் – ஆனால் இதன் விளைவு வேறு
இந்தக்கப்பலில் எனக்கென்று தனியறை இருக்கிறது
என் பாய்மரத்தில் காற்றிருக்கிறது
மற்றும் என் தாய்நாட்டிடம் விடைபெற்றுக்கொள்ளும்
அந்தக் கொடூரமான கணமும் இருக்கிறது.

உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை

 உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)
கவிதையா ?கட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே.
கதையா? அதே யதே – சபாபதே.
கட்டுரையா? என்னை விட்டால் யாருண்டிங்கே
மதிப்புரை யெழுத ?
பதவுரை பத்திகளிலில்லாமல் குறைந்தபட்சம் ஏ4 அளவிலான
மொத்தம் 500 போல் வெள்ளைத்தாள்களில்
விரைவோவிரைவில் வெளியாகிவிடும்
கெட்டி அட்டையிட்ட
புத்தம்புதிய புத்தகமாய்.
விமர்சனம் செய்வதென்றால் எனக்கு ஏற்படும் பரவசம்
சொல்லிமாளாது.
நாட்கணக்காய் எழுதுவேன், யாரும் கேட்கா விட்டாலும்.
யார் சொல்லி வீசுகிறது காற்று?
நேற்றும் இன்றும் நாளையும்
ஊற்றெனப் பொழிந்துகொண்டேயிருப்பேன்
ஊத்தை கர்வத்தில் ஊதிப்புடைத்த என்
நாத்தம்பிடித்த அரைவேக்காட்டுக் கருத்துரைகளை.
நாடகமா
ஆடிப்பாடுவேன் அத்தனை பாத்திரமாகவும்.
சூத்திரம் இதுவே நான் சகலகலாவல்லவனாக
நான் எழுதுவதில் எதுவும் தேறாதா?
வாராயென் தோழி வாராயோ எனவழைத்தால்
பேர் பேராகப் போற்றப் பலர் உண்டு
போரூரிலிருந்து ரோமாபுரி வரை
ஊரூராகப் போய்ப் புதுப்புதுப் பட்டியல்களை வினியோகித்து
காரசாரமாய்ப் பேசுவேன் உங்கள் எழுத்து
உரமற்றது; கண்றாவி யென்று
கன்றுகுட்டியாகவே இருக்கவேண்டும் நீங்கள் காலமெல்லாம் நானே தாய்ப்பசுவாம்
பேர் சொல்ல ஒரேயொரு பிள்ளை நான்
_ இலக்கியத்திற்கு. அப்போதும் எப்போதும்
புரிந்துகொண்டால் நல்லது. அல்லது
புல்லுருவிப் படைப்பாளி என்ற பட்டத்தைச் சுமக்கத் தயாராக இருங்கள். சொல்லிவிட்டேன்.
கலங்கி நிற்கக் கற்றுக்கொள்ளாமலிருந்தால் எப்படி?
கருங்கல் இதயமா உங்களுக்கு?
வித்தகன் நானென்று இன்னும் எத்தனை முறை
சத்தமாய்ச் சொன்னால் ஒப்புக்கொள்வீர்கள்?
சத்தியமாய் தலையசைக்கமாட்டீர்களா ஆமென்று?
சிரிப்பை வேறு அடக்கிக்கொள்கிறீர்களா?
பொறுங்கள் -
உங்களைப் பழித்துக் கிழிகிழித்து
இதோ ஒரு தரவிமர்சனம் தயாராகிக்கொண்டிருக் கிறது.


n

நோய்த்தொற்று - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நோய்த்தொற்று

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கொரோனா காலத்திலும்
தன் கோணல்பார்வையையும்
கேடுகெட்ட ஆணவத்தையும்
குறுக்குபுத்தியையும்
கிண்டல் சிரிப்பையும்
குத்தல்பேச்சையும்
குசும்புத்தனத்தையும்
கொஞ்சமும் விடாதவர்
’கொரோனாவை விடக் கடுமையான வைரஸ்
நானே’ என்று
கண்ணில் பட்டவரிடமெல்லாம் கர்வப்பட்டுக்கொண்டிருக்கிறார்.