LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 18, 2025

க.நா.சுவின் கவிதை - 2 TRANSLATED INTO ENGLISH BY LATHA RAMAKRISHNAN(*FIRST DRAFT) அனுபவம்

 க.நா.சுவின் கவிதை - 2

TRANSLATED INTO ENGLISH BY LATHA RAMAKRISHNAN(*FIRST DRAFT)

அனுபவம்
க.நா.சு

மழை பெய்யும்போது அதில் நனைந்தால்
சளி பிடிக்கும் என்று நனைய மறுத்துவிட்டேன்.

காற்று அடிக்கும்போது தொண்டையில்
புழுதி படியும் இருமல் வந்து தூங்க
விடாது துன்புறுத்தும் என்று
ஜன்னல்களைச் சாத்திவிட்டேன்.


யாரோ எழுதிய நூல்கள் கிடைக்கும்போது
படித்துப் படித்துப் பார்வை
குறுகிப்போகிறதே தவிர ஞானம்
பிறக்கவில்லை என்று படிப்பதை
நிறுத்திவிட்டேன். புஸ்தகங்களைத்
தலைமாட்டில் வைத்துக்கொண்டு
படிக்காமல் இருக்கப் பழகிவிட்டேன்.

காதலிகள் தேடிவந்தபோது ஆசை
அடித்துக்கொண்டாலும்
ஊரார் ஏதாவது சொல்வார்கள்
ராஜி ஆக்ஷேபிப்பாள் என்று பயந்து ஒதுங்கிப்
போய்விட்டேன். காதலி
வேறு யாரையோ நாடிப்
போய்விட்டாள். அவள்
போவதை சாத்திய கதவு
வழியாகப் பார்த்துப் பெரு
மூச்சு விட்டு நின்றேன்.

சாவு என்கிற அனுபவம் ஏற்படும்போது
மறுபடி அதை விவரிக்க ஒரு
சந்தர்ப்பம் ஏற்படும் என்று
இரண்டாவது சாவுக்கும்
காத்து நிற்கிறேன்.


EXPERIENCE
While it rained
apprehensive about being afflicted with cold
I refused to get drenched.

While the wind blew
apprehensive about dust getting accumulated in the throat
and cough preventing me from sleep and so harassing
I closed the windows.

While getting books written by some
that reading non-stop results in your vision shrinking
with no access to wisdom at all
_ I stopped reading.

Have learnt to place the books
beside my head without reading.

When darlings came seeking me
though filled with desire
apprehensive about people saying something,
and Raji objecting
I moved away in fear.
The darling went after someone else.
Eyeing her through the closed door
I stood there sighing.

That, when faced with the experience
called Death
I would have another opportunity to describe it
I keep waiting for the second Death too.

க.நா.சுவின் கவிதை - 1 உயில் (with its English Translation by Latha Ramakrishnan)

 க.நா.சுவின் கவிதை - 1

உயில்


A POEM BY KA.NAA.SU
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)]
...............................................................................................................
என் உயிலை எழுதிவைக்கவேண்டிய நாள்
வந்துவிட்டது. சொத்து ஒன்றும் இல்லாவிட்டாலும்
உயில் எழுதவேண்டும் _ அது புருஷ லக்ஷ்ணம்
என் பெட்டிகளில் நிரம்பியுள்ள கிழிசல்
காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா
சாலைகளுக்குத் தந்துவிடுகிறேன் – அதைவிடச்
சிறப்பாக அவர்களால் கிழிக்கமுடியாது. நான்
உபயோகிக்காத எண்ணற்ற வார்த்தைகளை
அகர முதலியில் உள்ளதையும் இல்லாததையும்
எனக்குப் பின் வருகிற கவிகளுக்கு அளித்து
விடுகிறேன். நான் சம்பாதித்த சொல்ப
ஊதியத்தை என்னை எழுத்தாளனாக்கி
பெருமை கொள்ள எண்ணி நம்பிக்கையுடன்
உயிர் நீத்த என் தகப்பனாருக்குத் தந்து
விடுகிறேன். எத்தனையோ ஆசைகள்
ஏக்கங்கள் ஏமாற்றங்கள் என் ஆயுளில்
என்னைப் பின் தொடர்ந்து வந்துள்ளன.
அவற்றை உலகுக்குத் தந்துவிடுகிறேன்.
என் நல்ல பெயரை ஊரிலுள்ள கேடிகள்
பகிர்ந்துகொள்ளட்டும். காணாத என் கண்களை
பார்வையுள்ளவர்கள் பகிர்ந்துகொள்ளட்டும்.
என் எதிர்காலத்தை என் மனைவி ராஜிக்கு
அன்பளிக்கிறேன்.
யேட்ஸ் என்ற ஆங்கிலக் கவி தன் வாரிசாக ‘நிமிர்ந்து நடப்பவர்களை’ நியமித்தான். என்
சுற்றுவட்டத்தில், இந்தியவில் நிமிர்ந்து
நடப்பவர்களையே காண முடியவில்லை. எல்லோரும்
கூனிக்குறுகி குனிந்து தரையில் பூமிக்கடியில்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தேடுமிடம் அவர்களுக்குக் கிடைக்கட்டும்.
பட்டுவிட்ட கடன்களையெல்லாம் யார்யாரிடம்
சொல்லி வாங்கினேனோ அதையே திரும்பவும்
சொல்லி அவர்களிடமே கடனாகத் திருப்பி
விடுகிறேன்
தங்களுக்குத் தாங்களே வரவு
வைத்துக்கொள்ள அவர்களுக்குச் சக்தி
பிறக்கட்டும். சேமித்துவைத்த உபயோகப்
படாத என் அறிவை யெல்லாம் அதை
உபயோகிக்கத் தெரியதவர்களுக்குத் திரும்பவும்
தந்துவிடுகிறேன். அறிவுக்களஞ்சியங்களை
நிரப்பட்டும் _ வெளியில் வந்து செயல் படாதிருப்பது
நல்லது. எனக்குக் கல்லறையே வேண்டாம்.
அப்படிக் கல்லறை தவிர்க்க முடியாததானால்
அதில் ஒரு பெயரும் பொறிக்கப்படவேண்டாம்.
எனக்கு அறிமுகமான பல தெய்வங்களை யெல்லாம்
இருளடர்ந்த பல கோயில்களில் யார் கண்ணிலும்
படாத சிற்பங்களாக நிறுத்திவைத்துவிடுகிறேன்.
நான் இன்னும் எழுதாத நூல்களை என் பிரசுர
கர்த்தர்கள் தாராளமாகப் பிரசுரித்து லாபம்
அடைந்து கணக்கெழுத இன்னொரு
கம்ப்யூட்டர் வாங்கிக்கொள்ளட்டும்.
நான் தந்த வாக்குறுதிகளை யெல்லாம்
காற்றுக்கும், நான் செய்த நற்பணித்
தீர்மானங்களை யெல்லாம் இனி எதிர்
பார்க்க முடியாத எதிர்காலத்துக்கும்
வாரி அளித்துவிடுகிறேன். எனக்கும்
அரசியல் ஆசைகள் இருப்பதுண்டு.
அவற்றை நேருவின் சந்ததியாருக்கு
அளித்துவிடுகிறேன்.
இந்திரன்
சந்திரன், காற்று, வெளில் நீர்
உள்ளளவும் கொள்ளுப் பேத்தி
எள்ளுப் பேரன் என்று அரசாண்டு
வரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
எனது எழுதப்பட்ட கவிதைகள் மக்கள்
கண்ணில் படாமல் புஸ்தகங்களின்
பக்கங்களில் மறைந்து கிடைக்கட்டும்
ஆனால் எழுதப்படாத கவிதைகளை
விமர்சகர் போற்றி அலசி ஆனந்தித்துப்
பேராசிரியர்கள் ஆக ஒரு ஊன்றுகோலாக
உபயோகித்துக்கொள்ளட்டும்.
என் வீணாகிப்போன நொடிகள் நாழிகைகள்
நாட்கள், வாரங்கள், மாதங்கள்,
ஆண்டுகள் எல்லாம் தேசப் பொதுச்
சொத்தாகி எல்லோருக்கும் உதவட்டும்
உதவட்டும். நான் கட்டாத மாளிகைகளில்
உயிரோடு பிறக்காதவர்கள், நடைப்பிண
மாக நடப்பவர்கள் குடியேறட்டும்.
மற்ற என் ஜங்கம சொத்துக்களை
தட்டுமுட்டு சாமான்களை,கந்தல்
துணிகளை, கந்தாடையான் பெயரை
என் பிறக்காத பிள்ளைகளுக்கு
விற்கக்கூட பாத்தியமில்லாமல்
தந்துவிடுகிறேன். என் அபிமான
சிஷ்யர்களுக்கென்று நான்
சிந்திக்காத சிந்தனைகள் எல்லாம்
கிடைக்கின்றன.
வேறு ஒன்றும்
எனது என்று சொல்ல சாகும் சமயத்தில்
என்னிடம் இருக்கக்கூடாது. காதற்ற
ஊசியும் உடன் வராது காண் என்று
சொன்னவன் வாக்கு என் விஷயத்தில்
பலிக்கட்டும். என் பெயரையும் நான்
துறந்துவிடுகிறேன் _ என் பெயரை
யாருக்கு இஷ்டமோ அவர்கள்
எடுத்துக்கொள்ளட்டும்.

THE WILL
(A Poem by Ka.Naa.Su)
The D-Day has come for writing my Will.
Though there are no assets, should write a Will.
That is manliness indeed.
I hereby bequeath all the bits and pieces of paper
brimming in my boxes
to the universities all over the world.
They can’t tear them in a better manner.
Words innumerable that I have not used,
those in the dictionaries and those not
I give away to the poets who succeed me.
The meager income that I have so far earned
I give to my father who wished to
turn me into a writer and take pride in it
and breathed his last with his hope in tact.
Wishes countless, cravings and disappointments galore
have pursued me in my lifetime.
I give them all to this world.
Let the thugs and traitors around
share my good reputation.
Let those having eyes that see
share my eyes that see not.
I gift my future to my dear wife Raji.
An English poet by name Yeats named as his heir
those who walk straight holding their head high.
It is a sheer impossibility to see anyone around me, in India,
walking thus, holding their head high.
One and all bowing and bending
cringing and crawling
are searching for ever something on the floor
and under the earth.
Let that spot they have always sought be theirs.
All those loans borrowed by me ,
from whosoever I have got them
giving my word,
I hereby give them back to all those
as loans the same.
Let them get the strength to have them
as their revenues.
Let me give back the whole lot of my intelligence
so diligently saved and so utterly useless
to those who know not how to use it.
Let it fill the repositories of knowledge.
Better not to come out and operate.
No tomb for me please.
If it is a must let no name be inscribed on it.
I will make all those gods too many
I am acquainted with,
inside many a shrine all too gloomy
as idols unseen by the eyes of any.
The books that I am yet to write
my publishers are free to publish
and earn profits
and buy one more computer
for writing the accounts.
All the promises I have made
I hereby give away to the wind
and all the welfare activities I have vowed
to carry out
I hereby entrust in the hands of my future
which I can no more look forward to.
I too have political ambitions.
I hereby bequeath them all
to all the heir-apparent of Nehru Dynasty.
As long as there are Lord Indran, the moon, Chandran,
air, space water
Let them all – the grandsons and great grand daughters
keep ruling _ I bless.
Let my written poems remain unseen
by the eyes of people and
lie hidden in the pages of books.
But let my unwritten poems be
hailed and analyzed in high spirits by the critics
and used by them as crutches
for becoming professors.
All my wasted moments hours days
weeks months and years become public properties
of the land
and help one and all; help one and all.
Let the palaces that I have not built
be occupied by those not born alive
and those moving around as walking corpses.
The rest of my movable belongings,
household objects, rags,
the name Kandhaadaiyaan
I hereby give to my sons not born
with no right to sell.
The thoughts I have not had
are there for my chosen disciples.
Nothing else should be there with me
at the time of my death.
Let the words of He observing
‘Not even the needle with broken hole would accompany ’
prove true in my case.
Let me give up my name also _
whoever want, can have it.

சொல்லத்தோன்றும் சில…. லதா ராமகிருஷ்ணன்

சொல்லத்தோன்றும் சில….

லதா ராமகிருஷ்ணன்

நவீன இலக்கியத்தில் வெகுஜனப் பத்திரிகைகள் இலக்கி யம் என்ற பெயரில் தந்துகொண்டிருந்த ‘மசாலா’ இலக்கி யத்திற்கு மாற்றாய் சில இலக்கிய முயற்சிகளை பெரும் பாலும் அவரவர் கைக்காசைப் போட்டு பத்திரிகைகள் நடத்தி முயன்றுபார்த்துக் கொண்டிருந்தவர்களை மதிப்ப ழிக்கும்படியாக யார் எழுதினாலும் அது உள்நோக்கம் கொண்டது; உண்மையல்லாதது.

கவிதை குறித்த தங்கள் பார்வைகளை, தாம் நம்பும் கண் ணோட்டங்களை அந்த சிறுபத்திரிகையாளர்கள் வெளியிட் டார்கள். உலகெங்கும் avant-garde என்று அறியப்படும் மாற்று கலை, இலக்கிய முயற்சிகள் எல்லாக் காலத்திலும் நடந்த வண்ணமே.

சொல்லப்போனால், இந்த ‘avant-garde' வகை படைப் பாளிகள் தான் அதிக எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் அடைவார்கள். அவர்களை அடையாளமழிக்கும் போக்கு, அவர்கள் குரலை ஒடுக்கும் போக்கு எப்போதும் நடந்த வண்ணமே.

சமூகப் பிரக்ஞை வாய்ந்த கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிச்சொல்லி அந்தக் கட்டமைப்பில் எழுதப்படாத கவிதைகளை சமூகத்திற் குப் பயன்படாத கவிதைகளாகக் காட்டி, அதன் மூலம் அவற்றை மறுதலிக்கும் உத்தி இங்கே எபோதுமே நுட்பமாக செயல்பட்டுவந்திருக்கிறது.

(அதையும் மீறி தேர்ந்த கவிதை வாசகர்கள் சிறு பத்திரிகைக் கவிதைகளை தேடிப் படிப்பதும் நடந்தது).

சமூகப்பிரக்ஞை வாய்ந்த கவிதைகளைப் படைப்பதாக அடையாளப்படுத்தப்படும் கவிஞர்களுக்கு அங்கீகாரம் அது சார்ந்த பிராபல்யமும், சௌகரியங்களும் சுலபமாகக் கிடைத்து விடும் அளவுக்கு உள்வயக் கவிதைகளை எழுதுவோருக்கு, மெய்யான சிறுபத்தி ரிகைக் கவிஞர்களுக்கு (சின்னதாக இருந்தாலே அது சிறுபத்திரிகை என்று எண்ணிக்கொண்டு சிலர் சிறுபத்திரி கையாளர்களாக இருப்பதும் நடப்புண்மை.) அங்கீகா ரமோ, வாழ்வு வசதிகளோ கிடைப்பதில்லை.

எல்லாக் காலத்திலும் இலக்கியத் தேடல் இருப்பவர்கள் சிறுபத்திரிகைகளையும் வாசிக்கிறார்கள். சிறுபத்திரிகை களில் எழுதினால் காசு வராது, பெயர் புகழ் பெரிதாக வராது என்று நினைப்பவர்கள் அவற்றைக் கடந்து போகிறார்கள்.

இந்த இந்த சாதியினர் தான் சிறுபத்திரிகைகளில் எழுதலாம் என்று எந்தக் காலத்திலும் எந்தவிதமான கட்டுதிட்டங்களும் இருந்ததில்லை.

அதேபோல், மாற்றுக்கருத்துகளுக்கு, எதிர்மறை விமர் சனங்களுக்கு, காரசாரமான விவாதங்களுக்கு சிறுபத்தி ரிகைகள் இடமளித்ததுபோல் கட்சிசார்ந்த, சித்தாந்த ரீதியான இதழ்களோ, ‘மசாலா’ இதழ்களோ அளித்த தில்லை.

ஆத்மாநாமின் பெரும்பாலான கவிதைகள் அன்றை சமூக நடப்பு குறித்து விமர்சனம் செய்பவை. எமெர் ஜென்ஸி குறித்த் எழுதப்பட்டது உட்பட. அவர் சிறுபத்திரி கைகளில்தான் எழுதினார். அவருடைய கவிதைகளில் இருந்த சமூகப் பிரக்ஞை அவர் காலத்தில் இருந்த அரசியல்கட்சிகள், உரத்து முழங்கும் சமூகப்பிரக்ஞை யாளர்களால் அடையாளங்காணப் பட்டதா? அடையாளங் காட்டப் பட்டதா? அங்கீகரிக்கப்பட்டதா? இல்லையே. ஆனாலும் அவர் எழுதினார். தொடர்ந்து சிறுபத்திரிகை களில்தான் எழுதினார். அதேசமயம் அவர் அகவயக் கவிதைகளையும் எழுதினார். அவற்றை எழுதுவதே சமூகப் பிரக்ஞைக்கு, மனிதநேயத்திற்கு எதிரான விஷயம் என்று ‘பாவ்லா’ செய்யவில்லை.

எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் சிறுகதைகளில் இல்லாத சமூகப் பிரக்ஞையா? கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப் பட்டவை என்ற ஒரு கதை போதும். அவரு டைய பெரும்பாலான கதைகள் சிற்றிதழ்களில்தான் பிரசுரமாயின. கவிதை என்று எடுத்துக்கொண்டாலும் அப்படி எத்தனையோ கவிஞர்களைக் குறிப்பிட முடியும். அவர்களெல்லாம் ‘வெகுஜனப்’ பத்திரிகை களால் எள்ளி நகையாடப்படுவதன் மூலமே அவர்களுடைய கவிதை களின் வீர்யம் வெளிப்படாமல் மூடிமறைக்கப்பட்டது.

இடைநிலை இதழ்கள் வந்த பிறகு இந்த நிலை மாறி நல்ல கவிஞர்கள் பரவலாக அடையாளங்காட்டப் படுவது நிகழலா யிற்று என்றாலும், QUALITY POETSஐ RUN-ON-THE-MILL POETS உடன் கலந்துகட்டி தனித்துவம் வாய்ந்த கவிஞர்களை அடையா ளமழிக்கும் HIDDEN AGENDA செயல்படவும் வழியமைந்தது. இதில் நேரடி அரசியலும் மறைமுக அரசியலும் பங்காற்றுகிறது என்பதையும் காண முடிகிறது.

எழுத்து சிற்றிதழின் ஆரம்ப இதழிலிருந்து அதில் எழுதி வந்தவர் க.நா.சு என்று தெரிகிறது. அவர் பிரதானமாக கவிஞர் அல்ல. ஆனாலும் அவருடைய பல கவிதைகள் கவித்துவமானவை. உயில், சந்திரன், அனுபவம், அகராதி என்று பல எடுத்துக் காட்டுகளைக் காட்ட முடியும். அவரு டைய கவிதைகளில் இருக்கும் சமூகப் பிரக்ஞையை பார்ப்பதும் பார்க்க மறுப்பதும் வாசகரின் அரசியல் சார்பு என்று சொல்ல முடியும். அப்படி வாசகரின் இலக்கிய ரசனையை condition செய்யும் போக்கு மற்ற பத்திரிகை களை விட சிற்றிதழ்களில் குறைவான அளவே காணப் பட்டது எனலாம்.

க.நா.சுவை பார்ப்பனர் என்பதால் ‘எழுத்து வகையறா’ வாகப் பகுப்பவர்கள் அவருடைய வள்ளுவரும் தாமசும் (அல்லது, தாமஸ் வந்தார்) புதினத்தைப் படிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

சிற்றிதழ் இயக்கம் தமிழில் செறிவார்ந்தது. தமிழின் மாற்றிலக்கிய முன்னோடிகளை சனாதனிகள் என்று கட்டம் கட்டி ஓரங்கட்டிவிடுவது, தமிழிலக்கிய வரலாற் றிலிருந்து அகற்றிவிடுவது சுலபமாக இருக்கக்கூடும். இங்கே சனாதனம் என்ற சொல்லை உதிர்த்தாலே சுலபமாக சமூக சீர்திருத்த வாதிகளாகிவிட முடியும், சீரிய இலக்கிய கர்த்தாக்களாகிவிட முடியும், சர்வதேச அரங்குகளில் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாய் இடம்பிடித்துவிட முடியும்.

சர்வம் சநாதன எதிர்ப்பு மயம்’ என்ற நிலை இங்கே பரவலாகிக் கொண்டே வருவது, அதாவது பரவலாக்கப்பட்டுக் கொண்டே வருவது இலக்கிய மேம் பாட் டுக்கோ, சமூக மேம்பாட்டுக்கோ எந்த வகையிலும் உதவாது. இதுவும் ஒருவகைப் பொறுப்புத் துறப்புதான் (எல்லா சமூகசீர்கேடுகளையும் சனாதனத்தின் தலை யில் சுமத்திவிடுவது) இதுவும் ஒருவிதமான Hate Speech; Marginalizationதான்.

சநாதனம் என்ற சொல் இங்கே பொதுவாக, பொத்தாம் பொதுவாக அறியப்படும், பகிரப்படும் அர்த்தத்தில் பார்த்தால் கூட, அவரவருக்குள் ஆயிரம் சநாதனிகள் என்பதே உண்மை.

Friday, May 16, 2025

அன்னா அக்மதோவா கவிதை - 24 - எனது மண்

 அன்னா அக்மதோவாவின் கவிதை - 24

எனது மண் (அ) அன்னைபூமி (அ) பிறந்த நிலம்

ஆங்கிலத்திலிருந்து தமிழில்
லதா ராமகிருஷ்ணன்

நாம் அதை அலங்காரப் பேழைகளில் நம்
இதயத்தின் மீது சுமந்துகொண்டிருப்பதில்லை
அது குறித்து கவிதைகளில் கரைவதில்லை,
அது நம்மைக் கசப்பான ஓய்விலிருந்து எழுப்புவ தில்லை
உறுதியளிக்கப்பட்ட ஈடன் தோட்டம்போல்
இல்லை அது.
நம்முடைய மனங்களில் பேரத்திற்கான பொருளாய்
அதை பாவிக்க ஒருபோதும் முயற்சிப்பதில்லை நாம்.
நோயுற்றிருக்கும்போது, மகிழ்ச்சியற்றிருக்கும்போது,
அதன்மீது அலுப்புற்றிருக்கும்போது
அதைப் பார்க்கவோ அறியவோ கூட அறியத் தவறிவிடுகிறோம்.
ஆம், பாதத்திலான இந்தப் புழுதி
நமக்கு ஏற்றதாயிருக்கிறது,
ஆம், பற்களின் இந்த விசைகூடிய அரைவு
மிக வாகாயிருக்கிறது நமக்கு,
எனவே இரவும் பகலும் மிதித்தேகிக்கொண்டிருக்கிறோம் _
அந்தக் கலவையாகா, கட்டுமான நேர்த்தியற்ற, புழுதியை.
ஆனால் நாம் அதனுள் படர்ந்துகிடக்கிறோம்,
அதுவேயாகிறோம்
ஆகவே அழைக்கிறோம் வெகு இயல்பாய் –
எனது மண் என்று.
......................................................................................................................................
*மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இந்தக் கவிதையின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது ஒரு வாசகராக எனக்குத் தோன்றும் எண்ணங்கள் சில: Translation is bi-lingual; bi-cultural என்பார்கள். ருஷ்யர்கள் தந்தையர் நாடு என்றுதான் சொல்வது வழக்கம் என்று எங்கோ படித்த நினைவு.’ எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே’ என்று பாரதியும் எழுதியிருக்கிறார். இந்த ருஷ்ய மொழிக் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பிலான தலைப்பு THE NATIVE EARTH. ருஷ்ய மொழியில் அப்படித்தான் இருந்ததா? அது ஏன் என் மொழிபெயர்ப்பில் தாய் மண் என்று ஆகியது? ஒரு மொழிபெயர்ப்பாளராக இந்த மாற்றம் செய்ய எனக்கு உரிமையுண்டா? மொழிபெயர்க்கும்போதே இந்த எண்ணங்கள் எழுந்ததென்றாலும் தாய்மண் என்ற தலைப்பை விட்டு வேறு எதையும் தெரிவு செய்ய மனம் வரவில்லை. ஒரு பார்வைக்கு எளிதில் புரிந்துவிடுவதாய்த் தோன்றும் இத்தகைய சொற் பிரயோகங்கள் உண்மையில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பெரும் சவாலாய், சறுக்கலாய் அமையும்.



அன்னா அக்மதோவாவின் கவிதை -23

 அன்னா அக்மதோவாவின் கவிதை -23

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:லதா ராமகிருஷ்ணன்

தமிழ் மொழிபெயர்ப்பு - 1
.......................................
இந்த மாலைவேளையின் ஒளி பொன்னிறத் தகதகப்பாய்....
இந்த மாலைவேளையின் ஒளி
பொன்னிறத் தகதகப்பாய்
ஏப்ரல் மாதக் குளிர் மிக இதமாய்
நீ பல வருடங்கள் காலதாமதமாய்
என்றாலும் உள்ளே வரும்படி உன்னை
வரவேற்கிறேன்.
எனக்கு அருகில் அமர்ந்துகொண்டு
மகிழ்ச்சி ததும்பும் கண்களால் சுற்றுமுற்றும் பாரேன்.
இந்தச் சிறிய நோட்டுப்புத்தகத்தில் இன்னுமிருக்கிறது
சிறுபிள்ளையாயிருந்தபோது எழுதிய கவிதைகள்
என்னை மன்னித்துவிடு
இத்தனைநாள் வருந்தியபடியே வாழ்ந்திருந்ததற்கு
சூரியக்கதிர்களுக்காக நன்றி பாராட்டாததற்கு
தயவு செய்து என்னை மன்னித்துவிடு
யார் யாரையோ நீயெனப் பிழையாக
என்ணியிருந்ததற்கு.
***
தமிழ் மொழிபெயர்ப்பு -2
...............................................................................

பொன்மாலைப்பொழுது
பொன்னென மின்னும்
இன்மாலைப்பொழுது
மிக இதமான ஏப்ரல் மாதக் குளிர்
மிகப் பல வருடங்கள் காலதாமதமாய் வந்திருக்கிறாய்
இருந்தும் உன்னை மனதார வரவேற்கிறேன்.
என்னருகில் அமர்ந்துகொண்டு ஆனந்தமாய்
அங்குமிங்கும் பார்க்கமாட்டாயா?
என் பிள்ளைப்பிராயக் கவிதைகள்
இன்னுமிருக்கிறது
இந்தச் சின்ன நோட்டுப்புத்தகத்தில்.
இதுகாறும் வருந்தியவாறே வாழ்ந்தமைக்கும்
சூரியக்கதிர்களுக்கு நன்றி பாராட்டாததற்கும்
மன்னித்துவிடு என்னை.
எவரெவரையோ நீயென்று கொண்டதற்கு
தயவுசெய்து மன்னித்துவிடு என்னை.

*மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ஆங்கிலத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும், அந்த வார்த்தை அதன் இடவமைவில் உணர்த்தும் பொதுவான, தனியான அர்த்தங்களுக்கு நியாயம் செய்யும் அளவில் இணை வார்த்தைகள் தமிழாக்கத்தில் இடம்பெற்றிருக்கின் றனவா? MOURNED என்ற வார்த்தை உணர்த்துவது வெறும் வருத்தத்தைத் தாண்டிய ஒரு இழப்புணர்வு என்று என் மனம் என் மொழிபெயர்ப்பைக் குறைகூறுகிறது. ஒருமுறை மொழிபெயர்த்து முடித்த கையோடு இதே கவிதையை இன்னொருமுறை மொழிபெயர்த்தபோது மொழிபெயர்ப்பு ஒரே மாதிரியாக இல்லை. இவ்வாறு ஒரே கவிதையை ஒரே மொழிபெயர்ப்பாளர் இரண்டு மூன்று முறை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பு ஒரேபோல் அமையாமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.
...............................................................................