LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label புதுப்புனல் வற்றிவிடாது காப்போம். Show all posts
Showing posts with label புதுப்புனல் வற்றிவிடாது காப்போம். Show all posts

Sunday, October 6, 2019

புதுப்புனல் வற்றிவிடாது காப்போம்




புதுப்புனல் வற்றிவிடாது காப்போம்

புதுப்புனல் பதிப்பக ரவிச்சந்திரன் – சாந்தி தம்பதியர் தங்கள் பதிப்பகத்தையும் புதுப்புனல் மாத இதழை யும் எத்தனையோ இன்னல்களுக்கிடையில் தொடர்ந்து நடத்திக்கொண்டுவருகிறார்கள்.

இதற்கு முன்பு தன் நண்பர் எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷு டன் பன்முகம் என்ற நவீன தமிழ் இலக்கிய இதழை நடத்தி பல நல்ல படைப்புகள், திறனாய்வுகள் வெளியாக வழிசெய்தார் ரவிச்சந்திரன்.

அவரைத் திருமணம் செய்த போது தோழி சாந்திக்கு( திருமதி சாந்தி ரவிச்சந்திரன்) பதிப்பகம், நூல் வெளி யீடு என்பதெல்லாம் புதிது. ஆனால், அவற்றில் ஆர்வம் காட்டி தன் கணவரோடு புதுப்புனல் பதிப்பக வெளி யீட்டு முயற்சிகளிலும், புதுப்புனல் இதழ் வெளியீட்டி லும் முனைப்பாக அயராது உழைத்துவருகிறார் அவர்.

எந்தவொரு அரசியல்கட்சியின் ஆதரவும் இன்றி, ஏதொரு புரவலரும் இன்றி, பதிப்பகத்தை இயக்குவதற்கான வைப்புநிதி, சேமிப்பு என்று எதுவுமின்றி இலக்கிய இதழை, பதிப்பகத்தை நடத்துவது என்பது பெரிய போராட்டம் இன்று. பெரிய பொருளாதார நெருக்கடியிலுள்ள புதுப்புனல் பதிப்பகம் இந்த இக்கட்டான சூழலிலிருந்து மீள தமது வெளியீடுகளை 50% அல்லது அதற்கும் மேலான தள்ளுபடி விலையில் விற்க முன்வந்திருக்கிறது.

நல்ல பல புத்தகங்களை – புனைவு, புனைவல்லாதது – கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக வெளியிட்டி ருக்கிறது. தள்ளுபடி விலையில் அவர்களுடைய வெளியீடுகளை வாங்கி நூலகங்களுக்கு நன்கொடை யாகத் தரலாம். நண்பர்களுக்கு அன்பளிப்பாகத் தர லாம். நாமே வாங்கிப் படிக்கலாம்.

நிதியுதவி செய்ய முடிந்தவர்கள் அதைச் செய்யலாம்.

மனமிருந்தால் வழியுண்டு.