LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label இலக்கியப் பங்களிப்பும் INSENSITIVITYயும் லதா ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label இலக்கியப் பங்களிப்பும் INSENSITIVITYயும் லதா ராமகிருஷ்ணன். Show all posts

Saturday, July 7, 2018

இலக்கியப் பங்களிப்பும் INSENSITIVITYயும் லதா ராமகிருஷ்ணன்



இலக்கியப் பங்களிப்பும் INSENSITIVITYயும்



லதா ராமகிருஷ்ணன்


  எதிர்வினை என்பது அதற்குக் காரண மான வினையின் அளவு அல்லது அதற்கும் அதிகமாக மோசமாகிவிடும் போது அந்த எதிர்வினை அதற்குக் காரணமான வினை குறித்து குறை சொல்லும், தீர்ப்பளிக்கும் தகுதியை இழந்துவிடுகிறது என்றே தோன்றுகிறது.



ஒரு பிரதி புரியவில்லை என்று படைப்பாளியிடம் சொல்லும்போது அது தனக்கும் தன்னொத்தவர்களுக்கும் புரியும்படியாக எழுதப்படவில்லை, எழுதப்படவேண்டும், அப்பொழுதுதான் அது இலக்கியமாகக் கொள்ளப்படும் என்ற அதிகார தொனி அதில் ஊடுபாவாக இடம்பெறுவதை உணரமுடியும்.

(உண்மையாகப் புரிந்துகொள்ளும் ஆர்வத்தில்புரியவில்லைஎன்று சொல்லிக் கேட்பவர்களின் தொனியும் அணுகுமுறையும் தெளிவான அளவில் வேறாக இருக்கும். இந்தபுரியவில்லையைப் பொருட்படுத்தி விரிவாகப் பேசுவது எந்தவொரு படைப்பாளிக்கும் மனநிறைவைத் தரும்; தரவேண்டும்.)

அதேசமயம், இந்த அதிகாரத்தொனிக்கு எதிர்வினையாற்றுவதாய் கருத்துரைப்பவர்கள் தரமாக எழுதும் சக படைப்பாளியைநீ யார்னே தெரியாது என்று கூறுவதில், “உன் இலக்கியப் பங்களிப்பு என்ன?” என்று கேட்பதில் உள்ள அதிகார தொனியையும் அதிலுள்ள INSENSITIVITYஐயும் எண்ணிப்பார்த்து வருத்தப்படாமலிருக்க முடியவில்லை.

களிப்பும் பரிதவிப்புமே எழுதத்தூண்டும் படைப்பாளிக்கு தன் இலக்கியப் பங்களிப்பை அளக்க சிலர் கைகளில் ஆழாக்குகளோடும், அவரவர் அதிகாரத்திற்கேற்ற துலாக்கோல்களோடும் அலைபாய்ந்துகொண்டிருப் பது குறித்து பிரக்ஞையிருக்க வழியில்லை.

அதுசரி, இங்கே இலக்கியப் பங்களிப்பு என்பது இலக்கியம் சார்ந்ததாக மட்டுமா இருக்கிறது? இறுதிசெய்யப்படுகிறது?