LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, March 16, 2026

POET BRAMMARAJAN - BEING FAR FROM THE MADDING CROWD

 POET BRAMMARAJAN - 

BEING FAR FROM THE MADDING CROWD

https://brammarajan.wordpress.com

ஒவ்வொரு நாளும் அல்லது சில நாட்களுக்கு ஒரு முறை கவிஞர் பிரம்மராஜன் தன்னுடைய வலைப் பூவில் https://brammarajan.wordpress.com/ பதிவேற்றிக் கொண்டிருக்கும் உலகத்தரமான மொழிப்பெயர்ப்பு களைப் படிக்கும்போது எனக்கு FAR FROM THE MADDING CROWD என்ற வரி தான் நினைவுக்கு வரும்.

இன்று அவருடைய வலைப்பூவில் பதிவேற்றப்பட்டுள்ள திலிருந்து சில வரிகளை இங்கே பகிரத் தோன்றியது:

கவி பிரம்மராஜனின் WORDPRESS வலைத்தளத்திலிருந்து
....................................................................................................................................
Invisible Cities-Dialogue between Kublai Khan and Marco polo/இட்டாலோ கால்வினோ-கண்காணா நகரங்கள்-7
......................................................................................................................................
குப்ளை: ஒருவேளை நம்மிடையிலான இந்த உரையா டல் குப்ளைகான் மற்றும் மார்க்கோ போலோ என்ற பட்டப்பெயர்கள் சூட்டப்பட்ட இரண்டு பிச்சைக்காரர் களுக்கு இடையில் நடப்பதாய் இருக்கலாம். அவர்கள் அந்தக் குப்பைக் குவியல் களைச் சலித்து எடுக்கும்போது, உடைந்த கப்பல் பகுதிகளை, கிழிந்த காகிதத் துண்டுக ளைக் குவியலாய் அடுக்கியபடி, மோசமான மதுவின் சில மிடறுகளைக் குடித்ததால் போதை உண்டாகி, அவற்றைச் சுற்றி கிழக்கின் சகல செல்வங்களும் மின்னுவதாகக் காண்கிறார்கள் மற்றவர்கள்.

போலோ: ஒரு வேளை இந்த உலகில் மிஞ்சியிருப்ப தெல்லாம் குப்பைக் குவியல்களால் மூடப்பட்ட தரிசு பூமியும் மற்றும் மாமன்னர் கானின் தொங்கும் தோட்ட மும் மட்டுமே. நம் விழி மூடிகள்தான் அவற்றைப் பிரிக்கின்றன ஆனால் எது உள்ளிருக்கிறது என்றும் எது வெளியில் இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது.

No comments:

Post a Comment