நீதிக்கதை - 1
வருகை
_ லதா ராமகிருஷ்ணன்
சிறிதுநேரம் அந்த மூத்த கவிஞரின் ஒன்றிரண்டு கவிதை களைப் பற்றிப் பேசிய பின் வந்திருந்தவர் “ நீங்கள் அந்த நாட்டில் உங்கள் பிள்ளைகளுடன் தான் இருக்கப்போகி றீர்கள் என்று கேள்விப் பட்டேன். அங்கே உங்களுக்காக தமிழ் இலக்கி யக் கவிதா நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியிருக்கி றதாமே - எனக்கும் உங்களைப் பாராட்டிப் பேச மிகவும் விருப்பம்’ என்று சொன்னபோது அவர் இன்னும் போகாத நாட்டுக்கான கடவுச்சீட்டாகத் தான் தன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்பது புரிந்தது பெரியவருக்கு.

No comments:
Post a Comment