LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, July 5, 2024

பாமரனின் பகவத்கீதை - சேவாலயா முரளிதரன்

பாமரனின் பகவத்கீதை

சேவாலயா முரளிதரன் எழுதியது. வானதி பதிப்பக வெளியீடு(ஏப்ரல் 2024)

- லதா ராமகிருஷ்ணன்

மூல மொழியிலும் சரி, மொழிபெயர்ப்பிலும் சரி - பகவத்கீதையை முழுமையாகப் படித்ததில்லை என்பதே நடப்புண்மை.

திருவள்ளுவர், பாரதியார் என்று யாரை எடுத்துக் கொண்டா லும் அவர்களுடைய சில பாக்களே, பாடல் களே மேற்கோள்களாக முன்வைக்கப்படுவதைப் பார்க் கிறோம். OUT OF CONTEXT ஆக அல்லது ALL TOO LITERAL ஆக பொருள் பெயர்த்து(அல்லது திரித்து)ப் பேசுவோரும் பலருண்டு.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பல்லாயிரம் ஆண்டுக ளுக்கு முன்பு படைக்கப்பட்ட ஒன்றில் நடப்புவாழ்வை ஒட்டியும் வெட்டியும் சில இருப்பது இயல்பு.

எதுவாக இருந்தாலும் எந்தவொரு படைப்பையும் முன்முடிவுக ளோடு அணுகி மதிப்பழித்து போட்டு உடைப்பதை விட சாரத்தை எடுத்து சக்கையை விடுத்து அவரவர் வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்வது சாலச் சிறந்தது.


சமீபத்தில் சேவாலயா என்ற கல்வியமைப்பு - சமூகநல நிறுவனத்தின் தலைவர் திரு.முரளிதரன் பகவத்கீதை யின் சாரம் குறித்து காணொளிகளாக வெளியிட்டவை பாமரனின் பகவத்கீதை என்ற தலைப்பில் நூல் வடிவில் வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 600 பக்கங்கள். விலை ரூ 600. கெட்டி அட்டை. வாசிப்பைக் கடினமாக்காத, கண்ணுக்கு வலியேற்படுத் தாத நேர்த்தியான அச்சாக்கம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, எளிய தமிழில் எழுதியிருக் கும் திரு.முரளிதரன் பகவத் கீதையைக் கரைத்துக் குடித்ததான பாவனையை மேற்கொள்ளவேயில்லை.

39 வயதில் இறந்துபோய்விட்ட பாரதியாரைப் பற்றி சிலர் எழுதும்போது அவருடைய வாழ்க்கையை அருகிருந்து பார்த்ததுபோல், அவர் தனது கவிதைகள் குறித்து, அவற் றின் பொருள் குறித்தெல்லாம் மரண வாக்குமூலம் தந்து விட்டுச் சென்றதைப்போல் அத்தனை authoritative ஆக எழுதுவார்கள். படிக்கப்படிக்க நமக்கு திகிலாகி விடும் - நாம் இத்தனை ஞானசூன்யமாக இருக்கிறோமே என்று!

ஆனால், திரு.முரளிதரனின் எழுத்து அப்படி அமைய வில்லை என்பதே நூலின் மகத்துவம்.

எளிமையாக, அதே சமயம் நூலின் சாரம் நீர்த்துப் போகாதபடி அவர் எழுதியிருப்பதே அவர் பகவத் கீதையை முழுமையாகப் படித்திருக்கிறார், ஆழ்ந்து உள்வாங்கி படித்திருக்கிறார், படித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு சான்று பகர்கிறது.
நூலில் இடம்பெறும் பதிப்புரை - முனைவர் வானதி TR. ராம நாதன் எழுதியது, ஆசியுரை - சுவாமி கௌதனானந் தர், தலைவர், ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் எழுதி யது, வாழ்த்துரை - S.பாண்டியன், தலைவர், தக்கர் பாபா வித்யாலயா, எழுதியது, வாழ்த்துரை - பாரதியின் கொள்ளுப்பேரன், இசைக் கலைஞர் வி.ராஜ்குமார் பாரதி எழுதியது, எழுத்தாளர் - பத்திரிகையாளர் திரு மாலன் எழுதியுள்ள வாழ்த்துரை, இசைக்கவி ரமணன் (பாரதி யார் என்ற நாடகத்தை உருவாக்கி நடித்தவர்) எழுதி யுள்ள வாழ்த்துரை, நூலாசிரியர் சேவாலயா முரளிதரன் எழுதியுள்ள என்னுரை என இந்நூலில் இடம்பெறும் எல்லா எழுத்தாக்கங்களிலுமே அவற்றை எழுதியவர்கள் தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் நூலின் சிறப்பம் சங்களைக் குறித்துக் கருத்துரைத்திருக்கும் பாங்கும் குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment