LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, July 5, 2024

ஒண்ணுமே புரியலை உலகத்திலே…! - லதா ராமகிருஷ்ணன்\

 ஒண்ணுமே புரியலை உலகத்திலே…!

- லதா ராமகிருஷ்ணன்\

............................................................................................................................

இரண்டு வருடங்களுக்கு முன்பு மின்னஞ்சலில் என்னை ஒரு பெண்மணி தொடர்புகொண்டு தனது சில எழுத்தாக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டும், என்ன கட்டணம் என்று கேட்டிருந்தார்.

பிடித்த பிரதிகள் நிறையவற்றை நான் கட்டணமின்றியே என் மனநிறைவுக்காக மொழிபெயர்த்திருக்கிறேன்; செய்துகொண் டிருக்கிறேன். என்றாலும் நான் தொழில்முறை மொழிபெயர்ப் பாளராக கட்டணம் பெற்று மொழிபெயர்க்கவும் செய்கிறேன். ’ஆனால், நான் தொழில் முறை மொழிபெயர்ப் பாளராக இருந் தாலும் எல்லாப் பிரதிகளையும் மொழிபெயர்க்க ஒப்புக் கொள்வதில்லையென்பதைத் தெரிவித்து அவர் யார் , எதை மொழி பெயர்க்க வேண்டும், மாதிரி பிரதி ஒன்றை அனுப்பி வைத்தால் நலம் என்று பதிலளித்திருந்தேன்.

ஒரு மொழிபெயர்ப்பை செய்து அனுப்புங்கள் – நான் பார்க்க வேண்டும், ஏன் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க கட்டணம் அதிகம், ஏன் தட்டச்சு செய்ய இன்னொருவரிடம் தருகிறீர்கள், நேரடியாக கணினியில் மொழிபெயர்த்தால்தானே தவறுகளைத் திருத்தமுடியும் , நான் அனுப்பும் பிரதிகள் எந்த வயதினருக்கு ஏற்றவை என்று ஆலோசனை தாருங்கள், ஏற்கெனவே ஒருவர் மொழிபெயர்த்த சில பிரதிகளை எடிட் செய்யவேண்டும் என்றெல்லாம் நிறைய கேள்விகள், சந்தேகங் கள் அவரிடமிருந்து.

முன்பு ஒரு முறை பதிப்பகத் தோழி ஒருவர் கூறியது நினைவுக்கு வந்தது. வருகை தரும் சில பதிப்பாளத் தோழர்கள் எந்தப் புத்தகம் போடுகிறீர்கள் என்று நட்புரீதி யாகக் கேட்டு தகவல்களைப் பெற்று பிறகு சம்பந்தப்பட்ட படைப்பாளிகளைத் தொடர்புகொண்டு அந்தப் புத்தகங்களைத் தாங்கள் பதிப்பிக்கக் கேட்டு காரியத்தை முடித்துக் கொண்டுவிடுவது உண்டாம்.

அதுபோல் இந்தப் பெண்மணி என்னிடமிருந்து சில தகவல் களைத் திரட்ட முயல்கிறார் என்பதும் புரிந்தது. ’படைப்பாளிக் கும் மொழிபெயர்ப்பாளருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை யும் மரியாதையும் இருக்கவேண்டி யது இன்றியமையாதது. எனவே இந்த மொழிபெயர்ப்புப் பணியை ஏற்கவியலாது என்று தெரிவித்தேன்.

பதிலில் ’பத்துவருடங்களுக்கு முன் நீங்கள் என்னுடைய உறவி னரின் படைப்பை ஒரு பத்திரிகைக்காக மொழி பெயர்த்திருந் தீர்கள். அதில் எங்களுக்கு பல போதாமை கள் இருந்தன. இருந்தும் உங்கள் பெயர் மொழிபெயர்ப்பு வெளியில் அடிபடுவ தால் உங்களைத் தொடர்புகொண்டேன்’, என்று முடித்திருந் தார்.

அப்போது நான் செய்தது ஆங்கிலத்திலிருந்து தமிழிலா, தமிழி லிருந்து ஆங்கிலத்திலா, கட்டணம் பெற்றுக் கொண்டு மொழி பெயர்த்தேனா, அல்லது பெறாமல் மொழிபெயர்த்தேனா - என்ப தொன்றும் நினைவில் இல்லை. திருப்தியில்லாத மொழி பெயர்ப்பு செய்தவரை ஏன் மீண்டும் நாடவேண்டும் என்று தெரியவில்லை.

பிறகு, அவர் யார் என்று கூகுளில் தேடினால் ‘பெரிய மொழி பெயர்ப்பாளர், பொருள்பெயர்ப்பாளர் – இது – அது என்று பெரிது பெரிதாய் தகவல்கள் மின்னின. இத்தனை தேர்ந்த மொழி பெயர்ப்பாளர் ஏன் என்னை நாடி வர வேண்டும்?

மொழிபெயர்க்க ஆரம்பித்த சமயத்தில் அப்படித்தான் ஒரு பெண்மணி என்னைத் தேடி வந்து தன்னுடைய கட்டுரை யொன்றை மொழிபெயர்க்கத் தந்து வாங்கிக் கொண்டு போனார். பின்னர் அவருடைய ஆங்கிலக் கட்டுரைகள் முன்ன ணிப் பத்திரிகைகளில் வந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். குழப்பமாக இருந்தது.

ஒருவேளை அவர்களெல்லாம் அத்தனை பிஸியானவர்கள் போலும், அதனால்தான் தங்கள் கட்டுரைகளை மற்றவர்களை மொழிபெயர்க்கச் செய்து தங்கள் பெயரில் வெளியிட்டுக்கொள் கிறார்களாயிருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். மொழி பெயர்ப்பாளர் என்ற வெளிச்சம் வேண்டாத அவர்களுடைய நட்பினர், வேறு சிலர் அப்படிச் செய்துதருவார்களாயிருக்கும். அது அவர்களுக்கிடையேயான பரிமாற்றம்.

ஆனால், நான்பாட்டுக்கு மூலையில் அமர்ந்து ஏதோ மொழி பெயர்த்துக்கொண்டிருந்தால் இப்படித் தேடி வந்து தொல்லை தரவேண்டிய, முடியுமானால் மொழி பெயர்ப்புச்சுரண்டல் செய்ய, அல்லது ஒரு மொழிபெயர்ப்பாளராய் என்னை மதிப் பழிக்க முனையவேண்டிய தேவையென்ன?

No comments:

Post a Comment