LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 4, 2024

கேட்கத்தோன்றும் சில கேள்விகள்……

 கேட்கத்தோன்றும் சில கேள்விகள்……



1. சமகால இலக்கியப் பிரதிகளில், குறிப்பாக அயல்நாட்டு இலக்கியங்களின் மொழிபெயர்ப்புப் பிரதிகளில் குறியீடு களை அடையாளங்காண முடிந்தவர்கள் தொன்ம இலக்கி யங்களை, குறிப்பாக இதிகாச புராணங்களை ‘கட்டுக்கதைகள்’ என்று பீச்சாங்கைவீச்சாகப் பகுத்துவிடு வது சரியா? இது என்னவித மான அறிவுசாலித்தனம்?
2. ஒருவர் தனது சுயசரிதையில் உண்மை பேசவேண்டி யது மிகவும் முக்கியம்; அவசியம். ஆனால், அவ்வாறே இன்னொரு வரின் வாழ்க்கையைப் பற்றிய உண்மை விவரங்களை, இன்னொருவர் தன்னிடம் நேர்பேச்சாக, நட்புரீதியாக பல வருடங்களுக்கு முன்பு சொன்னதை உண்மையான உண்மை யாக வெளியிடு வது, சரியா? தேவையா?
3. தனது புத்தகங்களைத் தானே வெளியிடுவதையும், தன் புத்தகங்களைப் பிறருக்கு அறிமுகம் செய்யும் பதிவுகளை வெளியிடுவதையும் இலக்கியப்பணியாகக் கொள்பவர் அதைச் செய்யும் சக-படைப்பாளியை விளம்பர-மோகியாக பாவிப்பதும் பகுப்பதும் ஏன்?

No comments:

Post a Comment