LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, December 10, 2022

இன்று புதிதாய்ப் பிறந்தோம்! - லதா ராமகிருஷ்ணன்

 இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

_ லதா ராமகிருஷ்ணன்
வயதானவர்களையெல்லாம் ஒரு மொந்தையாக பாவிக் கும் வழக்கம் நம்மி டையே பரவலாக இருந்துவருகிறது.
மருத்துவ வசதிகள், வயதானவர்களுக்கு நிதியாதாரம், ஓய்வூதியம், தங்குமிடவசதி, தலைச்சாயம் முதலிய வசதிகள் அதிகரித்துள்ள இந்நாளில் (இந்த வசதிகள் வயதா னவர்கள் அனைவருக்கும் ஒரேபோல் கிடைக்கிற தென்று சொல்லமுடியாது என்பதும் உண்மையே) முன்பு அறுபது வயதே முதுமையாகக் கருதப்பட்ட நிலை மாறி இன்றைய 60 வயது 40 வயதின் அளவே யாகியிருப்பதாகச் சொல்ல வழியுண்டு. ஆனாலும் 60 - 90 வரையான அனைத்து வயதினரையும் முதியவர்கள் (மூத்த குடிமக் கள் அழகான விவரிப்பு!) என்ற ஒரே அடைமொழியில் அடை யாளப்படுத்தும் போக்கே இன்றளவும் பரவலாக இருக்கிறது
வயதானவர்கள் என்றால் ஏக்கத்தோடு தன் இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்த்துக்கொண்டேயிருப்பார்கள். தன்னால் இப்போது இதைச் செய்ய முடிய வில்லையே, அதைச் செய்ய முடியவில் லையே, தன்னை யாரும் கவனிக்கவில்லையே, தன்னோடு யாரும் பேசுவதில் லையே, தன்னை யாரும் பொருட்படுத்தவில்லையே, தன்னிடம் யாரும் அறிவுரை கேட்கவில்லையே – இப்படி ஏங்கு பவர்களாகவே, அங்கலாய்ப்பவர்களாகவே வயதா னவர்களைச் சித்தரிப்பதில் நிறைய பேருக்கு ஒரு சந்தோஷம்.
இப்படியிருக்கும் வயதானவர்களும் உண்டு என்பது உண்மைதான்.
ஆனால் இந்த அங்கலாய்ப்புகளும், ஆற்றாமைகளும் இளைய வயதினருக்கு இல்லையா என்ன?
சில நாட்களுக்கு முன்பு ஒருவர் முதுமை என்றால் பொய்ப்பல், ஹியரிங் எய்ட், மருந்து மாத்திரை, கைத்தடி என்று நிறைய வெளியாதரவுகளின் துணையோடு வாழும்படியாகிறது என்று வருத்தப்பட்டிருந்தார். ஒருவகையில் அது உண்மைதான் என்றா லும் அப்படிப் பார்த்தால் இளம் வயதில் பவுடர், குறிப்பிட்ட உடை கள், சிகையலங்காரம், பர்ஃப்யூம், என்று பல தேவைப் படுகின்ற னவே? பிடிக்காத படிப்பு, அந்நியவுணர்வூட்டும் இடத்தில் வாழ்வா தாரத்திற்காக வாசம், என்று நிறைய சொல்லலாம்.
இந்த கையறு நிலையுணர்வுகளையெல்லாம் கடந்து தானே மாற்றுத்திறனாளிகள் தினசரி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்?
பத்மினி மேடமுக்கு இப்போது 90 வயதுக்கு மேலேயிருக்கும். (எனக்கே 65 வயதாகிவிட்டது). ஆனால் வாழ்வை ஏக்கத்தோடு பின்னோக்கிப் பார்ப்பதோ, அங்கலாய்ப் பதோ அவரிடம் கிடை யவே கிடையாது. அவருக்குக் காலாறக் கடற்கரையில் நடப்பதும், கடலைப் பார்த்துக் கொண்டிருப்பதும் மிகவும் பிடிக்கும். பத்து வருடங்கள் முன்புவரை கூட தினசரி தன் நட்பினர் சிலரோடு போய்க் கொண்டிருந்தார். இப்போது முடியவில்லை. அது குறித்து மனதில் அவ்வப்போது தோன்றக்கூடிய ஒரு சிறு இழப்புணர்வு அங்கலாய்ப்பாக உருவெடுக்க அவர் அனுமதித் ததேயில்லை!
ஒவ்வொரு வயதுக்கும், பருவத்துக்கும் அதற்கான அனுகூலங்கள் உண்டு என்று பத்மினி கோபாலன் கூறியது எவ்வளவு உண்மை என்பதை 40 வயதுகளில் தனியாக இயல்பாக ஹோட்டலுக்குச் சென்று, யாரும் பார்ப்பார் களோ என்று self-conscious ஆக படபடப் பாக உணராமல் ஆற அமர ருசித்துச் சாப்பிடும் போது உணர்ந்தி ருக்கிறேன்!
70 வயதுகளில் இளையதலைமுறையினர் பயிலும் கணினிப் பயிற்சி மையத்திற்குச் சென்று கணிப்பொறியைக் கையாளும் பயிற்சி பெற்றார்.
சில வருடங்களுக்கு முன்பு வீதியோரம் வசிக்கும் ஏழைப் பெண் மணி யொருவரின் மகள் விபத்தாக கருவுற்றபோது அவளுக்கு உதவ எங்கோ தொலைதூரத்திலிருந்த அமைப்பு ஒன்றுக்கு தோழர் மோகன் தாஸின் உதவி யோடு அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு போய் அங்கே மணிக்கணக்காகக் காத்தி ருந்து அந்தப் பெண் ணுக்கு உதவமுடிந்த வழிவகைகளை அணுகி வேண்டி னார் பத்மினி மேடம்.
இப்போது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தும் தமிழ் படிக் கவே வராமலிருக்கும் (தமிழ் வழியில் கல்வி பயின்ற) ஒரு இளம் பெண்ணுக்கு தமிழ் கற்றுத்தரும் வேலையில் இறங்கியிருக்கிறார்! எளிய தமிழிலான கதைப்புத்தகங்கள் இருக்கின்றனவா என்று என்னிடம் கேட்டிருக்கிறார்!
சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்காக இயங்கும் அரசுப் பள்ளிகளின் தர மேம்பாடு பற்றிப் பேசினால் ’உடனே தனி யார் பள்ளிகள் மட்டும் ஒழுங்கா என்று கேட்க நிறைய பேர் கிளம்பு கிறார்கள். இது ஏன் என்றே தெரியவில்லை’ என்று ஆதங்கப் படுவார்.
(அவருடைய ஆதங்கமெல்லாம் சமூகம் சார்ந்ததாகத் தான் இருக் குமே தவிர அவருடைய வயது காரணமாக எழுவதாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது).
இன்றைய இளந்தலைமுறையினர் பலருக்கு (தனியார் பள்ளி களில் பயிலும் பிள்ளைகளுக்குக்கூட) தாய்மொழியில் தங்கு தடையின்றி வாசிக்கவும் எழுத வும் தெரியாத நிலை பரவலாக இருக்கிறது. இந்நிலை மாறவேண்டியது மிக அவசியம்.
மாண்டிசோரி கல்விமுறையில் ஒன்றரை அல்லது இரண்டு மாதங் களில் தமிழ் எழுதவும் வாசிக்கவும் பள்ளிமாணாக்கர்களுக்குக் கற்றுத்தர முடியும் என்று பத்மினி கோபாலனின் முன்முயற்சியில் உருவான அமைப்பின் வழி மாண்டிசோரி ஆசிரியைகளாக உரு வாகியுள்ளவர்கள் சமூகத்தின் அடித்தட்டிலிருந்து வரும் பள்ளிப் பிள்ளைகளிடையே நிரூபித்திருக்கிறார்கள். இந்த வழி முறையி லான மொழிப்பயிற்சி பரவலாக்கப்பட்டால் நிறைய மாணாக்கர் கள் பயனடைவார்கள்.
பத்மினி மேடமைப் பார்க்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிவது –
• நம்மைப் பற்றி மட்டுமே எண்ணாமல் நமக்கு வெளியே பார்க்கும் போது நம்மை அங்கலாய்ப்புகளும் தன்னிரக்கமும் அதிகம் பாதிக்காது.
• எந்த வயதிலும் மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முடியும்.
• இன்னொருவரோடு போட்டிபோடுவதாய், மூன்றாமவரை பிர மிக்கவைப்ப தற்காக வாழ்வது என்ற மன நிலையை வளர்த்துக் கொள்ளக்கூடாது.
• நம் வீட்டுக் குழந்தைகளையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளி லான குழந்தைகளுக்கும் ஒரு நல்ல வீட்டுச் சூழல், பள்ளிச் சூழலை உருவாக்கித்தர நம்மால் இயன்ற முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.
• எதற்காகவும் மனதில் வெறுப்பும், ஆணவமும், கழி விரக்கமும் மண்ட அனுமதிக்கலாகாது.
• தன்மதிப்பை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
இன்னும் நிறைய எழுதலாம்……..

No comments:

Post a Comment