LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, November 23, 2021

நாவினால் சுட்ட வடு

நாவினால் சுட்ட வடு


சொற்களை விட

அதிகக் காயமுண்டாக்கும்,

சேதமுண்டாக்கும்,

புண்படுத்தும்,

பிரிவினையேற்படுத்தும்,

ஆகப்பெரிய பாதிப்புண்டாக்கும்

மோசமான

கொடூர ஆயுதம்

வேறு உண்டா என்ன?


சொற்களால்
ஒரே மனதை
எத்தனை முறை
படுகொலை செய்ய முடிகிறது?

உலகின் பிரச்னைகளுக்கெல்லாம்
காரணம்
மண், பொன், பெண்
என்பார்கள்.

இல்லை,
வன்சொற்களே.
......................................................................................................
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
_ திருவள்ளுவர்

No comments:

Post a Comment