LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, March 12, 2020

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்....?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்....?

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும் விதமாக படங்களையும் தகவல்களை யும் ஒரு சார்பாகவே தந்துகொண்டிருப்பதுதான்_

’இவர் செய்தால் சரி, அவர் செய்தால் தவறு’ என்ற ஒரே தவறான நேர்ப்பார்வையுடன் எந்தவொரு விஷயத்தையும் அணுகிப் பேசுவதுதான்_


குறைந்தபட்ச கண்ணியம் கூட இல்லாமல் கொச்சையாகப் பேசுவதும் பழிப்பதுதான்_

ஒரு எழுத்தாளருக்கு அழகு,
அதுவே அவருடைய மனிதாபிமானம், முற்போக்குத்தனம் 
என  என முடிவுகட்டிக் கொண்டவர்களாய் 
மற்றவர்களையும் மூளைச் சலவை செய்யக் கங்கணம் கட்டிக்கொண்டு 
தங்கள் முகநூல் டைம்-லைனில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கும் 
சக படைப்பாளிகள் சிலரின் நியாயவாதி பாவமும் பாசாங்கும்தான் 
நம்மைப் பீடித்துள்ள 
மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment