சமத்துவம் :
ஒரு சினிமாவின் தலைப்பு
கோவிலுக்குச் சென்றாலும்கூட
கடவுளையா தம்மையா _ யாரை அதிகம்
சாமான்யர்கள் என்று
மூக்கின் அருகில் கூப்பிய கரங்களின்
அரைக்கண்ணால் அவ்வப்போது பார்க்கும்
பிரபலங்கள்
பிரபலங்களான பின்பு ஒருநாளும்
தர்மதரிசனத்திற்கான வரிசையில்
அதி ஏழைகளோடும் மித ஏழைகளோடும் சேர்ந்து
சில பல மணிநேரங்கள் காத்திருந்து கடவுளைக்
மனமொப்பாப் பெருந்தகைகள்
அரண்மனைபோலொரு வீட்டைக்
கட்டிமுடித்த கையோடு
சித்தாள்கள் கொத்தனார்களை முன்னறையைத்
வர அனுமதிக்காத பிரமுகர்கள்
தப்பாமல் ஒப்பனையுடனேயே தெரியும்
பெரியமனிதர்கள்
என்றெல்லோரும் முழங்குகிறார்கள்
எங்கெல்லாமோ சமத்துவமில்லையென….
பட்டு சுற்றப்பட்ட தன் முதுகில் அழுக்கு தட்டுப்பட
வாய்ப்பேயில்லை என்று
திட்டவட்டமாய்ப் பறையறிவித்துக்
தன் முதுகைக் காணமுடியாது தன்னால்
என்று தத்துவம் பேசுவார்க்கும்
எதிரில் உண்டு எப்போதும்
விதவிதமான நீள அகலங்களில்











