LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, May 11, 2019

காணெல்லைக்கப்பால்..... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*தனிமொழியின் உரையாடல் தொகுப்பிலிருந்து)

காணெல்லைக்கப்பால்.....
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

(*தனிமொழியின் உரையாடல் தொகுப்பிலிருந்து)

                  
தன் உருப்பெருக்கிக் கண்களை யுருட்டியுருட்டி
யென்னைத் தீவிரமாய்க் கண்காணித்துக்
கொண்டிருந்தாள்
மொத்தமா யென்னை ஒரு பொட்டலத்தில் மடித்துக் கட்டும் விருப்பத்தில்.
என் ஒவ்வொரு அசைவையும் ஆனமட்டும் அலசியலசி
அவளுடைய தொலைக்காட்சிப்பெட்டி தந்துகொண்டிருந்த
இலவச சோப்புகளெல்லாம் கரைந்துபோய்க்கொண்டிருந்தன.
அத்தனை அகலமாய் விழிகளை விரித்தால் எதுவும் தப்பாது என்று
என்னவொரு அபத்தமான நம்பிக்கை.
ஊடுகதிர்களுக்குத் தப்பியதொரு ரத்தக்கட்டி
யுள்ளே எங்கேனும் ஒட்டிக்கொண்டிருக்கலாம்....
அங்கங்கே சில நரம்புகள் வெட்டுப்பட்டுக் கிடக்கலாம்...
என் கடந்தகாலத்தின் துண்டுதுணுக்குகள்
மூளையின் எப்பக்கக் கிடங்கில் குவிந்திருக்கின்றன தெரியுமா?
என் உடலெங்கும் பாய்ந்துகொண்டிருக்கும் குருதியின்
எத்தனை விகிதம் என் வருங்காலம் என்று
பிரித்துக்காட்ட இயலுமா?
என் மூச்சுக்காற்றில் மண்டிக்கிடக்கும்
மொழியா வார்த்தைகளைக் கணக்கிட்டுக் கூற முடியுமா...?
மனிதர்களைப் பண்டங்களாய் நிறுத்துப்பார்ப்பதை நிறுத்தினால்
எத்தனை நன்றாயிருக்கும்
என்றால், இவர்களுக்கு என்றாவது புரியுமா....?

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள் (kindle books) தனிமொழியின் உரையாடல் - ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள்   
(kindle books) 

தனிமொழியின் உரையாடல் 
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 
சமீபத்திய கவிதைத்தொகுப்பு



ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள் (kindle books) - போகிற போக்கில்....(கவிதைகள்)

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள்   
(kindle books) 
- போகிற போக்கில்....(கவிதைகள்)


ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள் (kindle books) - RAIN BEYOND & OTHER POEMS

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள் 
(kindle books)
(www.amazon.com)/books/latha Ramakrishnan (or) Anaamikaa Alphabets

RAIN BEYOND & OTHER POEMS


ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள் 1. FLEETING INFINITY (A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள் 
(kindle books)
(www.amazon.com)/books/latha Ramakrishnan (or) Anaamikaa Alphabets


1. FLEETING INFINITY
(A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY 

Thursday, May 2, 2019

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள்


ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள்
(www.amazon.com)
லதா ராமகிருஷ்ணன்
 வணக்கம்.


நண்பர்கள் நிறைய பேர் FLEETING INFINITY இரு மொழிக் கவிதைத் தொகுப்பை மின் – நூலாக வெளியி டுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.

ஒருமுறை ‘வாட்ஸ் அப்’ என்று ஒருவர் கூறியபோது  “ஒன்றுமில்லையே” என்று நான் பதிலளித்ததுண்டு. (ஆங்கிலத்தில் ‘What's up?'’ என்றால் என்ன விஷ யம்என்ன நடக்கிறது என்பதாகப் பொருள்).

ஒவ்வொரு எழுத்தாகத் தான் கணினியில் தட்டச்சு செய்யக் கற்றுக் கொண்டேன்எப்போதோ படித்த லோயர் டைப்ரைட்டிங்’ ஓரளவே உதவியதுதேவை சார்ந்தும்நிஜமான ஆர்வத்தோடும் கற்றுக் கொண்டதில் இன்று கணினியைக் கையாள்வதில் கொஞ்சம் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.

 ஒரு சில நண்பர்களிடம் கிண்டில் நூல் செய்துதரும்படி கேட்டுக் கொண்ட போதிலும்நாமே கற்றுக்கொள்வதே நீண்ட காலப் போக்கில் உதவிகரமாக அமையும் என்ற எண்ணமும் வலுவடைந்தவாறே இருந்தது.


\இறுதியில் ஒருவழியாக நானே சுயமுயற்சியில் FLEETING INFINITY யையும் என்னுடைய வேறு சில நூல்களையும் ‘கிண்டில்’ புத்தகங் களாக பதிவேற்றி விட்டேன்சரியாக வந்திருக்கிறதாதெரியவில்லைகிண்டில் என்னிடம் இல்லையாராவது பார்த்துச் சொன்னால் உதவியாயிருக் கும்தமிழ் நூல்களை Paper back நூல்களாக வெளி யிட இயலாதென்று தெரிவிக்கிறார்கள்.


 அமேஸான் – கிண்டில்ஒரு புத்தத்தைப் பதிவேற்ற நிறைய நேரம் ஆகிறதுபோகப்போக இன்னும் சுலபமாகிவிடலாம்.


நான் கிண்டில் புத்தகத்தை ஒரேயொரு தரம் தான் பார்த்திருக்கிறேன்மற்றபடி அதன் நெளிவு சுளிவுகள் எதுவும் தெரியாது.



 புதுப்புனலுக்காக ருக்லதா என்ற பெயரில் மைலி என்ற கடற் குதிரையை மையமாக வைத்து சிறுவர் கதைகள் எழுதிவந்தேன்அவற்றில் மூன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கிண்டில் புத்தகமாகவும்அமேஸான் அச்சுப் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறேன்.




அச்சுப் புத்தகத்திற்கு அவர்கள் வைக்கும் விலை சில நூல்களுக்கு மிக அதிகமாக இருக்கிறதுஎன்ன காரணம் தெரியவில்லைஇந்த நூல்களினால் என்ன வருவாய் கிடைக்கும் என்று தெரியவில்லை.

உரிமம் என்றெல்லாம் நிறைய உறுதி செய்யப்பட்டிருப்பினும் நம்முடைய கிண்டில் நூல்கள் நம்முடையதாகவே இருக்க வழியுண்டா என்ற கேள்வியும் தொடர்கிறது.













படைப்பாளிகள் பரபரப்புச் செய்தியாளர்கள் அல்லர்


படைப்பாளிகள் பரபரப்புச் செய்தியாளர்கள் அல்லர்
லதா ராமகிருஷ்ணன்


யார் சார்பாக இந்த வேண்டுகோளை வைக்கிறேன், வைக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும். இந்த வேண்டுகோளை முன்வக்கத் தோன்றுகிறது.

மனிதரை மனிதர் கேவலம் செய்வது மதிப்பழிப்பது, மனிதத்திற்கு எதிரான செயல். இதில் மாற்றுக்             கருத்தில்லை. இப்படி எங்கு நடந்தாலும் அதை எதிர்க்கவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிசெய்யவேண்டும். இதில் மாற்றுக்கருத் தில்லை.
ஆனால், எழுத்தாளர்கள் பலரும் வெளிப்படை யாகவே குறிப்பிட்ட கட்சிகளுக்கு, குறிப்பிட்ட அரசியல்வாதி களுக்கு issue-based ஆதரவு என்றில் லாமல் lock, stock and barrel என்ற ரீதியில் தங்கள் ஒட்டுமொத்தமான ஆதரவை பலவகையிலும் வெளிப்படுத்தி வரும் நிலையில், எழுத்தாளர்கள் குறிப்பிட்ட அரசியல்கட்சியின் கொள்கைப்பரப்பாளர் களாகப் பணியிலமர்த்தப்பட்டிருக்கும் நிலையில் . எந்த வொரு விஷயத்திற்கும் ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிப்பதாய் படைப் பாளிகள் அணிசேரும் போது அதற்கு உடனடியாகநிபந்தனையற்றஆதரவு தர இயலாமல் போகிறது.

(இப்படி கட்சி சார்ந்து இயங்கும் படைப்பாளிகள் கட்சிப் பின்புலம் இருக்கும் துணிச்சலில் எதிர் தரப்பினரை, அவர்கள் நம்பிக்கைகளை எத்தனை கேவலமாகப் பழித்துவருகிறார்கள், எத்தகைய அராஜக வார்த்தை களால் வன்மமும் வெறுப்பும் உமிழும் கருத்துகளைஅறிவார்த்தப் பேச்சுகளாய் பதிவேற்றிவருகிறார்கள் என்பதை தனியாக தகுந்த ஆதாரங்களோடு எழுத முடியும்)

தவிர, குறிப்பிட்ட ஒரு அநியாயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவென நடத்தப்படும் கூட்டங்களில் பெரும் பாலும் வேறு பல விஷயங்களையும் கோர்த்து ஒரு package deal ஆக எதிர்ப்பு காட்டுவதும்(அப்படி எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு கூட்டத்தில் கலந்துகொள்வோர் ஆளாக்கப்படுவதும்) வழக்கமாக இருக்கிறது.

எழுத்தாளர்கள் உணர்ச்சிபூர்வமானவர்கள் என்றாலும் அதுமட்டும்தானா? அவர்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள். நிதானமாக நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை உணர முடிந்தவர்கள். சமூகத்தில் அமைதி நிலவத் தங்களாலானதைச் செய்யவேண்டி யவர்கள்.

ஒரு கட்சியில் படைப்பாளிகள் சேர்ந்தால் அதைக் கண்டனம் செய்வது, கேலி பேசுவது, அதுவே இன்னொரு கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டால் அந்தப் படைப்பாளிகளை பாராட்டுவது, அல்லது கண்டுகொள்ளா மல் விடுவது எப்படி சரியாகும், தெரியவில்லை. அந்த அளவுக்கு இலட்சியார்த்த அரசியல் கட்சி நம்மிடையே இருக்கிறதா என்பது கேள்விக்குறி.

இது போதாதென்று பொன்பரப்பி சம்பவத்தில் நடுநிலை யாக நடந்துகொள்வதான தோரணையில் சில எழுத்தாளர் கள் வெளியிடும் வன்மம், வெறுப்பு நிறைந்த காணொளிப் பதிவுகள் தமிழகத்தில் பெரிய கலவரத்தைத் தூண்டுமோ என்று அச்சமாக இருக்கிறது.

இந்தக் காணொளிகள் எல்லாவற்றிலும் எதிர் தரப்பைச் சேர்ந்த பெண்கள் அத்தனை கொச்சையாக சாடப்படு கிறார்கள். இதற்காகவே இத்தகையோரை கைதுசெய்ய வேண்டும். காது கொடுத்துக் கேட்க முடியாத வசைகள். அத்தனை கொச்சையானவை.

குற்றத்திற்குத் துணைபோவதும் குற்றமே என்பார் கள். அதன்படி பார்த்தால் பெண்களை அவமதிக்கும் இத்தகைய வசைகள் அடங்கிய காணொளிகளைப் பதிவேற்றுபவர் களோடு அவர்களைப் பற்றிப் புகார் செய்யாமல் அந்தக் காணொளிகளை நியாயவான் களாகத் தங்கள் டைம்-லைனில் பகிர்பவர்களும் கண்டிக்கத்தக்கவர்களே.

பெண்ணை இழிவுபடுத்தும் அசிங்க அசிங்கமான பேச்சுகள் கொண்டதாய் இருதரப்பிலிருந்துமான காணொ ளிகளைப் பகிரும் படைப்பாளிகள்எத்தனை அசிங்க மான பேச்சு; மிகவும் கண்டிக்கத்தக்கதுஎன்று அந்தப் பதிவுக்குக் கீழே ஒரு கருத்து ரைக்கக்கூட தயாராக இல்லை. ’உள்ளதை உள்ளபடியேநமக்குக் காட்டுவ தான தோரணையில் அந்த அராஜக, சமூகத்தில் சாதிக்கலவரத்தை தீவிரமாக்கக்கூடிய காணொளிகளைப் பதிவேற்றிவிடுவது அறிவார்த்தமான செயலா? இவர்களே நாளை சமூகத்தில் பெண்ணின் இழிநிலையைக் குறித்தும் விசனமாகவும் ஆத்திரத்தோடும் பேசுவார்கள்.

யாரோ சிலர் வெளியிடும் அந்தக் காணொளிகளை எழுத்தாளர்கள் எதற்கு வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்? இவர்களுடைய இந்தச் செயல்களால் பாதிக்கப்படப்போவது சாமான்ய மக்கள் தான். எந்த சாதியானாலும் பதவி, பணம் இருந்தால் அவர்களை யாரும் தாக்கப்போக மாட்டார்கள். அவர்க ளுக்கு வேண்டிய பாதுகாப்பு அரண்கள் அமைக்கப் பட்டிருக்கும், அமைக்கப்படும்.

படைப்பாளிகளுக்கு உண்மையிலேயே சமூக அக்கறை யிருந்தால் இந்தக் காணொளிகள் குறித்து புகார் தரவேண்டும். இந்த வன்மமும், வெறுப்பும் நிறைந்த காணொளிகள் யூ-டியூப், ஃபேஸ்புக் ஆகிய தளங்களி லிருந்து அகற்றப்பட ஆவன செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு தாங்களும் அவற்றையே தங்கள் டைம்-லைனில் பதிவேற்றிக் கொண்டிருந்தால் எப்படி?

சிலருடைய டைம்லைன்களில் பார்த்து அதிர்ந்து போய் அவற்றை அகற்ற முயன்று, அவை குறித்து புகாரளிக்க முயன்று முடியாததால் இதை இங்கே தெரிவிக்கிறேன்.