LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, August 1, 2025

புரியும்போல் கவிதைகள் சில….. ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புரியும்போல் கவிதைகள் சில…..

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


1.
குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம்
இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள்
எல்லாமும் மழையுமாய்
எங்கெங்கும் நீராகி நிற்கும் நிலத்தில்தான்
தண்ணீர்ப் பற்றாக்குறையும் குடிநீர் கிட்டாநிலையும்
எனத் தெள்ளத்தெளிவாய்த் தத்துவம் பேசுவோர்க்குத்
தெரியுமோ
ஒரு துளி நீரில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையும்
அவற்றின் அலை-துகள் நிலையும்
களி நடனமும் பிறவும்….?
2.
ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்தாறு எட்டுபத்து….
ஏழும் ஒன்பதும் விட்டுப்போனதேன்
என்று வாய்ப்பாடு ஒப்பித்தலாய்க் கேட்பதற்கு முன்
இரண்டான ஒன்றின் நான்கான மூன்றின்
ஆறான ஐந்தின் பத்தான எட்டின்
நேர்க்கோடுகள், நெளிவு சுளிவுகள்
வாத்தின் எலும்பு மார்பக வளைவு
வாலுடன் காத்தாடி சிரசாசன நிலை
உள்வாங்கிய சறுக்குமரம்
இருவட்டச்சிறைகளுக்குள்ளிருந்து
வெளியேறும் வழி –
என எண்ணிப்பார்த்துக்கொள்ள
எத்தனையோ இருக்கு பார்.
3.
சிட்டுக்குருவி காக்கை புறா கோழி குயில் கழுகு மயில்
வான்கோழி இன்னுமுள ஈராயிரத்திற்கு மேலான
பறவையினங்களில்
விரும்பித் தேன்குடிப்பது எது
தேன்குழலைக் கடிப்பது எதுவெனத்
தெரியுமோ எவருக்கேனும்…?
அட, தெரியாவிட்டால்தான் என்ன?
ருசியறியாதவரை தேன் வெறும்
பிசுபிசுப்பானஅடர்பழுப்புநிற திரவம்தான்.
அருந்திய பறவை ஆனந்தமாய்ச் சிறகடிப்பதைப் பார்த்து
அடித்துப்பிடித்து உண்டிவில்லைத் தேடிக்கொண்டிருப்போர்
கண்டிலரே வெளியெங்கும் பறத்தலின் காற்றுத்தடங்களை.
உண்டல்லோ அவ்வண்ணமாய் புரியாக் கவிதையும்!
4
ஸ்கூட்டி, பைக், கார், லாரி, குப்பை லாரி
மினி பஸ், மாம்பலம் – டு – லஸ் மாக்ஸி பஸ்
ரயில் கப்பல் ஆகாயவிமானம்……
எல்லாம் இருந்தும் கடற்கரையில்
கையைத் தலைக்கு அண்டக்கொடுத்தொருவன்
அண்டவெளிக்குள் பல உன்னதங்களைக் கண்டவண்ணம்
படுத்திருக்கிறானே….
அந்த வேளையில் பயணம் என்ற சொல்லின் அர்த்தம்
அவனுக்குப் பிரத்யேகமானது.
அவன் நகர்வதாகவே தெரியவில்லையே என்று
அங்கலாய்த்து
அத்தனை முனைப்போடு
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கற்களைத் திரட்டி
அவன் மீது குறிபார்த்து எறிவதில் காட்டும் அக்கறையில்
ஒரு துளி கவிதை மீது காட்டினாலும் போதும் –
நிறையவே புரிந்துவிடும்.
5.
திருக்குறள் நாலடியார் குறுந்தொகை
நற்றிணை தேவாரம் திருவாசகம்
சித்தர் பாடல்கள் சிலப்பதிகாரம்
எல்லாம் புரிந்துவிட்டதுபோலும்
புரியாக் கவிதை எழுதுகிறான் என
புகார் மேல் புகார் அளித்தவண்ணம்
அண்டவெளியைக் கூண்டிலேற்றி
குறுக்குவிசாரணை செய்ய
முடிந்தால் நிலவறைக்குள் அடைத்துவிடவும்
அன்றும் இன்றுமாய் அவர்கள்
ஆயுதபாணிகளாய் வந்தபடி வந்தபடி…..
காக்கும் கவிதை காக்க
அகாலத்தின் விரிபரப்பில்
காற்றுச்சித்திரங்களைத் தீட்டிக்
களித்திருப்பானே கவிஞன்!
6
இந்த வாசகருக்குப் புரியுமென்று
வெந்த சாதம் பற்றி எழுதினார்’
வந்ததே கோபம் வேறொருவர்க்கு.
பச்சைக் காய்கறிகளே சத்துள்ள உணவு
என்று கடித்துக்குதறிவிட்டார்.
வம்பெதற்கு என்று
நெல்லிக்கனியின் மகத்துவம் குறித்தொரு
கவிதை எழுதினார்.
பாகற்காயைப் பற்றிப் புனையத் தோன்றவில்லையே என்று
கண்டனத்தைப் பதிவு செய்தார் இன்னொரு வாசகர்.
ஆகா மறந்துவிட்டேனே என்று அளப்பரிய வருத்தத்துடன்
மருந்துக் கசப்புக்கோர் எடுத்துக்காட்டு பாகற்காய்
எனக் கவிதையெழுத
சுண்டைக்காயின் கசப்பைச் சொல்லாமல் விட்ட பாவி
என மண்ணை வாரித் தூற்றிச் சென்றார்
மா வாசகரொருவர்.
என்ன செய்வதென்றே தெரியாமல்
எழுதியவற்றையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு
உறங்கச் சென்றார் கவிஞர்.
கனவிலும் அந்த வாசகர்கள் வந்து
அவர் உருகியுருகி யெழுதியதையெல்லாம்
உள்வாங்க மனமின்றி
கருகக் கருகக் கண்களால் எரித்து
சாம்பலை காலால் கெந்திவிட்டு
கெக்கலித்துக்கொண்டிருந்தார்கள்.
7
இரவு இரண்டுமணியைத் தாண்டிவிட்டது.
உறக்கம் வந்தும் உறங்க முடியாமல்
வரிகள் சில மனதிற்குள் குறுகுறுக்கின்றன.
கொஞ்சுகின்றன.
ஏந்திக்கொள்கின்றன.
வெளியே கூட்டிக்கொண்டுபோயேன் என்று கையைப்
பிடித்திழுக்கின்றன.
எழுதத் தொடங்கும் நேரம்
எழுதும் நேரம்
எழுதி முடிக்கும் நேரம்
நானே கவிதையின் பாடுபொருளாய்
இலக்கு வாசகராய் –
விலகிய பார்வையில்.
அதிவிழிப்பு நிலையில்…..
சாதியின் பெயரால் சக கவிஞர்களைச் சிரச்சேதம் செய்பவர்கள்
தமிழ்க்கவிதைத் தாளாளர்களாய்
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிச் சென்றவண்ணம்.
இன்னும் ராமேசுவரத்தைக்கூடக் கண்டிலேன் நான்.
என்றாலும், ”குறையொன்றுமில்லை” எனச் சொல்வேன் –
மறைமூர்த்திக் கண்ணனிடம் இல்லை -
மனம் நிறைக்கும் கவிதையிடம்.
பின் ஏன் திண்ணைக்கு அனுப்புகிறாய் என்பார்க்கு:
”கல்லுக்குள் தேரைக்கு உணவிருக்கையில்
என் கவிதைக்குள் கரைபவரும் எங்கோ இருக்கக்கூடும்தானே!”
8
அனா, ஆவன்னா, இனா ஈயன்னா உனா
ஊவன்னா
ஏனா ஏயன்னா ஐயன்னா ஃன்னா….
ஆனா,, ஏனாம் அட, ஆவலா, இக ஈயமா
உர, ஊதா, எர, ஏற, ஐய, ஃப்பா இல்லை
யென்ற கேள்வியின்
எல்லைக்கப்பால் என்னைத் தள்ளிக்கொண்டு
செல்கையில்
எதிரே வந்த சிறுமி
“உய்னனக்கு இய்னிந்த பேய்னச்சுப்
பிய்னடிக்குமா?”
என வினவிச்
சென்றாளே, சென்றாளே….

STAGE by 'rishi" (Latha Ramakrishnan)

 STAGE

by 'rishi"
(Latha Ramakrishnan)
On the dais
and in the rows of seats _
everywhere men and women,
including those invisible in the empty ones,
each a separate horizon
simultaneously, in unison
each intent on playing the assigned role
to perfection….
Friend
Foe
Freak
Fool…
Hole after hole we dig
deep and deeper
but to unearth never
the whole….
Curtain raises;
Words flow -
Torrential;
Terribly superficial;
Heartfelt;
Hyperboles;
Sensible;
Sweet nonsense;
Slightly sarcastic;
Sugar-coated;
Bitter-tinged;
Hope-filled;
Heartrending;
Faces with hearts reflected
Wholly or partly
Fill the auditorium....
As everything else
this show too comes to a close.
Accompanied by melting moments
I step into the lane;
with night glistening
start walking in the rain.

அரங்கம்
மேடையில் _
கீழே வரிசையாக இருந்த இருக்கைகளில் _
எங்கு பார்த்தாலும் ஆண்களும் பெண்களும்,
அங்கிருந்த காலி நாற்காலிகளில்
அருவமாயிருந்தவர்கள் உட்பட…..
ஒவ்வொருவரும் ஒரு தனி தொடுவானம்
அதே சமயம், ஒருங்கிணைந்தும்.
அவரவருக்கென்று தரப்பட்டிருக்கும் பாத்திரத்தை
அப்பழுக்கற்று நடிக்கும் அதிமுனைப்போடு…..
நண்பன்
எதிரி
வினோதன்
முட்டாள்
குழி குழியாய்த் தோண்டிக்கொண்டிருக்கிறோம் நாம்
ஆழமாய் இன்னும் ஆழமாய்
ஒருபோதும் முழுமையை அகழ்ந்தெடுக்கலாகாமல்
திரை மேலேறுகிறது;
சொற்கள் பொங்கிப்பாய்கின்றன;
வெள்ளமாய்
கள்ளமாய்
அதி மேலோட்டமாய்
ஆத்மார்த்தமாய்
உயர்வுநவிற்சிகள்;
பக்குவமானவை;
இனிய உளறல்கள்;
சிறிதே எள்ளலுடன்;
மேலே இனிப்பு தடவப்பட்டவை;
கசப்புத் தோய்ந்தவை;
நம்பிக்கை தளும்புவன;
இதயத்தை பிளப்பன.
தத்தம் இதயம் முழுமையாகவோ பகுதியளவோ
பிரதிபலிக்கின்ற முகங்கள்
அரங்கை நிறைக்கின்றன.
எல்லாவற்றையும் போலவே
இந்த நிகழ்வும் முடிவுக்கு வருகிறது.
உருகும் தருணங்களோடு
குறுகலான சந்தொன்றில் நுழைகிறேன்.
இருள் மின்ன
நடக்கலானேன் மழையில்.
(Originally written in English by me an d translated into Tamil by myself _ latha ramakrishnan)

CRUELLY ENTHRALLING

 CRUELLY ENTHRALLING

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

Getting inside the room hastily
Taking the seat
He glanced at the doorway accidentally.
An all too tiny worm stood there
Rising in a delicate swirl.
For a moment he took it to be
Its dance of ecstasy….
Then it dawned….
It was on the throes of death
crushed under hurrying feet…
Worlds apart, wondering what to do
He turned away – appalled
Bemoaning
O, what a cruelly enthralling Vanity Fair
Life is…..

குரூர வசீகரம்
அவசர அவசரமாய் அறைக்குள் நுழைந்து
இருக்கையில் அமர்ந்தவர் யதேச்சையாய்
வாயில்பக்கம் பார்க்க
அங்கே ஒரு நுண்ணிய புழு
அதிநளினமாய்ச் சுழன்றபடி....
ஒரு கணம் அதையோர் அதிபரவச நடனமாகக் கண்டார்.
மறுகணம் புரிந்தது….
விரையுங்கால்களில் மிதிபட்டுஅது இறந்துகொண்டிருப்பது.
இணை[ப்பற்ற
இருவேறு உலகங்களாய்
செய்வதறியாமல் அப்பால் திரும்பிக்கொண்டார்
கதிகலங்கி யனத்தியபடி:
”ஐயோ, என்னவொரு
குரூர வசீகரக் கண்காட்சி
இந்த வாழ்க்கை”
(My Tamil Translation of the poem originally written in English by me - Latha)

கேள்விகளுக்கு அப்பால்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கேள்விகளுக்கு அப்பால்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குயவர் தன் பாட்டுக்குப் பானை வனைந்து கொண்டிருந்தார்.
பக்கத்தில் போய் அமர்ந்த சகலகலா வித்தக(ராய்த் தம்மை பாவித்துக்கொண்டிருக்கும்) உத்தமர்
படம்பிடிப்பதற்காக பானை வனைபவரின் விரல்களை ஒரு கணம் அப்படியே உறைநிலையில் இருக்கச் செய்யச் சொன்னார்.
பானை வடிவிழந்துவிடும் என்றபடி
தன் வேலையைத் தொடர்ந்தார்
அந்தக் கைவினைஞர்.
'பானையை உருவாக்கும்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்' என்று முகம் சுருங்க
புருவங்கள் உயர வினவினார் பேட்டியாளர்.
பானையைத்தான் நினைப்பேன் என்று
வேலையைத் தொடர்ந்தபடியே பதிலளித்தார் குயவர்.
'இந்த வேலையையே செய்கிறோமே என்று எந்த நாளேனும் வருந்தியதுண்டா?'
'எதற்கு வருந்தவேண்டும்? எனக்குப் பிடித்த வேலை யிது?'
'எதனால் பிடிக்கிறது?'
இது என்ன கேள்வி என்பதுபோல் ஒரு கணம் பேட்டியாளரை உற்றுநோக்கிய அந்த மனிதர்
'கண்ணில் கண்டவர்கள், கையில் கிடைத்தவர்களை யெல்லாம்,
கண்ட கண்ட விஷயங்களுக்கெல்லாம்
உங்களுக்கு ஏன் கேள்விகேட்கத் தோன்றுகிறது?'
என்று கேட்க _
திடுக்கிட்டுப்போன பேட்டியாளர்
வாயடைத்துநின்ற கணத்தில்
’என் கைகளுக்கும் களிமண்ணின் குழைவுக்கும் இடையேயான சுழல்பிணைப்பு
உமது கண்கணக்கிலடங்காதது;
பானைக்குள் நான் சமைக்கும் பிரபஞ்சப்
பெருவெளி
எனக்கு மட்டுமானது’
என்று சிறிய புன்சிரிப்போடு சொன்னவரை
அத்தனை அன்போடு
வியந்து பார்த்துக்கொண்டிருந்தது
பெரிய வாயும் சிறிய கழுத்துமாக உருவாகிக்கொண்டிருந்த
மண்பானை.

சொல்லத்தோன்றும் சில…..

 சொல்லத்தோன்றும் சில…..



இன்றளவும் மனித இனத்தின் பல்வேறு வயதுநிலை களில் உள்ளவர்களில் அரசாலும், சமூகத்தாலும் போதிய கவனம் தரப்படாமல் இருப்பவர்கள் இரு பிரிவினர். குழந்தைகள் – முதியவர்கள்.

முதியவர்களை இரண்டாம் குழந்தைப்பருவத்திலிருப்ப தாகச் சொன்னாலும் அவர்களுடைய விழிப்புநிலை குழந்தையின் விழிப்புநிலையிலிருந்து மிகவும் வேறுபட்டது.
குழந்தைக்குப் புரியாத அதன் வயதின் இயலாமை முதியவர்களுக்கு முழுக்க முழுக்கப் புரிந்து முள்ளாய்க் குத்தும்.
ஒரு காலத்தில் 60 வயதே முதுமையாகப் பாவிக்கப் பட்டது. இன்று மருந்து மாத்திரைகள், சுயமான நிதியாதாரம் என பல காரணங்களால் 90, 100 வயது வரை வாழும் பெரியவர்கள் உண்டு.
ஆனால், பெரியவர்களை ‘பெரிசு’ என்று கிண்டலடிக்கும் போக்கை அரசுப் பேருந்தில்கூட பார்த்திருக்கிறேன். காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய முதியவரைக் கூட தேவை யில்லாமல், கிண்டல் செய்யும் சக பயணிகளும் உண்டு.
எழுந்து நின்று இருக்கையைப் பெரியவர்களுக்குத் தருபவர்கள் உண்டு. பெரியவர்களுக்கான இருக்கையில் அடமாக அமர்ந்தபடி எங்கோ பார்த்துக்கொண்டு யோச னையில் ஆழ்ந்திருப்பதாய் பாசாங்கு செய்பவர்கள் அதைவிட அதிகமாய் உண்டு.
முதியவர்கள் என்றாலே அவர்களை மொந்தைகளாக்கி, அவர்களுடைய ரசனைகள், ருசிகள், விருப்புவெறுப்புகள் எல்லாவற்றையும் ஒற்றைத்தன்மைத்தாய் பாவித்து, பேசி, எழுதி வருவோர் நிறைய. முதியவர்களுக்கான காப்பகங் களில் இவ்வகை அணுகுமுறையைக் காண முடியும்.
இன்று பொருளாதார வசதி படைத்த முதியவர்களுக் கென்று ’மூத்த குடிமக்கள் இல்லங்கள்’ இயங்கிவருகின் றன. அங்கு வசதிகள் உண்டே தவிர அணுகுமுறையில் பெரிய அளவு மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை.
தன்னுடைய வயதான தாய் தந்தையருக்கும், தன் மனைவிக்கும் ஒத்துவராததால் தாய் தந்தையரை வேற்றூருக்குப் புனிதத்தலங்களைப் பார்ப்பதாக அழைத்துச் சென்று அங்கேயே கைவிட்டு திரும்பிவரும் பிள்ளைகளைப் பற்றிய செய்தி படித்ததுண்டு.
வயதான தாய் தந்தையர் வாழுங்காலத்திலேயே அவர்களுடைய சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு அவர்களைக் கைவிட்டு விடும் பிள்ளைகளைப் பற்றியும் கேள்விப்பட்டதுண்டு.
மூத்த குடிமக்களுக்காக அயராது பாடுபட்ட, விஸ்ராந்தி என்ற மூத்த குடிமக்களுக்கான இல்லத்தை நிறுவிய அமரர் சாவித்திரி வைத்தி ‘வாழும்நாள் வரை உங்கள் சொத்துக்களை யாருக்கும் எழுதிக்கொடுத்து விடாதீர் கள் என்பார். ஆனால், அப்படி கறாராக எல்லாப் பெரியவர் களாலும் இருந்துவிட இயலாத நிலை.
அதேபோல், குடும்பத்தின் மீது அதீதப் பற்றுடையவராய் அதையே உலகமாகக்கொண்டு உழலும் பெரியவர்களும், காலத்திற்குமான குடும்பத்தலைவராய் தன்னை பாவித்துக் கொள்ளும் பெரியவர்களும் அந்த நிலை மாறுவதைத் தாங்கிக்கொள்ள இயலாதவர்களாய் மனமுடைந்துபோகிறார்கள்.
DETACHED ATTACHMENT மனநிலையை நாமெல்லோருமே வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். நமக்கென்று சில பொழுதுபோக்குகளும் இருக்கவேண்டும்.
இப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியும் அலை பேசியும் முதியவர்களுக்கு உற்ற தோழமையாய் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், தனித்தனியாக அறைகளோ, அலைபேசிகளோ, தொலைக்காட்சிப் பெட்டிகளோ இல்லாத வறிய, நடுத்தரக் குடும்பங்களில் அவை முதியவர்களின் தேவைக்குக் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.
வசதி படைத்த குடும்பங்களில்கூட வயது முதிர்ந்த தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா போன்றவர்களுக்குத் தனி அறை வசதியோ, தனி தொலைக்காட்சிப்பெட்டி வசதியோ தரப்படுவதில்லை. அதற்கான தேவை உள்வாங்கப்படுவதில்லை.
அல்லது, அவற்றை வாங்கித்தந்து அவர்களை தனியறை யில் இருக்கச்செய்துவிடுகிறார்கள் வீட்டிலுள்ள இளையவர்கள்.
தங்கள் வாழ்வின் தினசரி அவசரத்தில் வீட்டுப் பெரியவர் களிடம் தினமும் சற்று நேரம் உட்கார்ந்து பேசவும் அவர்கள் நேரம் செலவிட நினைப்பதில்லை.
Nuclear குடும்பம் என்ற நிலை பரவலாகிவிட்ட பிறகு பேரக்குழந்தைகளும் தாய், தந்தையிடம் கலந்துரை யாடுவ தோடு, கலந்துறவாடுவதோடு நிறுத்திக்கொண்டு விடுகிறார்கள்.
அவர்கள் விஷயத்தில் தாத்தா- பாட்டி ஏதேனும் கருத்து ரைப்பதை பெரும்பாலும் அவர்களும் விரும்புவதில்லை; அவர்களுடைய தாய்-தந்தையரும் விரும்புவதில்லை.
மூத்த குடிமக்கள் உடற்குறையுடையவர்களாக இருந் தால், அல்லது வயது காரணமாக உடற்குறையேற்பட் டவர்களாய் இருந்தால், அவர்களுடைய நிலைமை இன்னும் அவலமாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைகள் நலனும் மூத்த குடிமக்கள் நலனும் குடும் பங்களாலும், சமூக அமைப்பாலும், அரசுகளாலும் இன்னும் அதிகமான அளவு கவனத்தில் எடுத்துக்கொள் ளப்பட வேண்டியது இன்றைய இன்றியமையாத் தேவை.
.........................................................................................................................................


தெரிந்துகொள்வோம்

 தெரிந்துகொள்வோம்

Section 295A in The Indian Penal Code

...............................................................................................
[295A. Deliberate and malicious acts, intended to outrage reli­gious feelings of any class by insulting its religion or reli­gious beliefs.—Whoever, with deliberate and malicious intention of outraging the religious feelings of any class of 273 [citizens of India], 274 [by words, either spoken or written, or by signs or by visible representations or otherwise], insults or attempts to insult the religion or the religious beliefs of that class, shall be punished with imprisonment of either description for a term which may extend to 4[three years], or with fine, or with both.]

Wednesday, July 23, 2025

FAIR AND LOVELYயும் GLOW AND LOVELYயும் வெகுஜன ஊடகங்களும் வேறு சிலவும்…

FAIR AND LOVELYயும்
GLOW AND LOVELYயும்

வெகுஜன ஊடகங்களும்

வேறு சிலவும்…

 லதா ராமகிருஷ்ணன்

(*திண்ணை இணைய இதழ் - இவ்வாரம்)


http://puthu.thinnai.com/2025/07/21/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2/

சொல்ல வேண்டிய சில
By latharamakrishnan
July 21, 2025

"அரை நிர்வாண பெண்களின் படங்களை வெளியிட்டு விற்ப னையை அதிகரிக்க விழைந்தால் அதை நேரடியாகச் செய்ய வேண்டியதுதானே? அரசியல்வாதிகளின் அசிங்கங்களை, அபத்தங்களை விமர்சிக்க விழைந்தால் அதை நேரடியாகச் செய்ய வேண்டியதுதானே? அரசியல்வாதிகள் என்றால் அவர்களை எப்படி வேண்டுமானாலும் அவமதிக்கலாமா? சொரணை உள்ள அரசியல்வாதிகள் இந்த அணுகுமுறையை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.

அரசியல்வாதிகளுக்காவது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை யாவது மக்கள் நீதிமன்றத்தில் கூண்டிலேறி நிற்கவேண்டியிருக் கிறது. ஆனால், ஒரு பக்கத்தில் பெண் சார் பாலியல் வன்புணர்வு செய்திகளைப் பரபரப்பாக கண், காது மூக்கு வைத்து வெளியிட்டுக் கொண்டே இன்னொரு புறம் பெண்ணை போகப் பொருளாகக் காண்பிக்கும் போக்கை ஊடக அறமாகக் கொண்டுள்ள பல பெரிய பத்திரிகைகளுக்கு யாருக்கும் பதிலளிக்கவேண்டிய பொறுப்பேற்பு இல்லை போலும்......"