LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, August 1, 2025

CRUELLY ENTHRALLING

 CRUELLY ENTHRALLING

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

Getting inside the room hastily
Taking the seat
He glanced at the doorway accidentally.
An all too tiny worm stood there
Rising in a delicate swirl.
For a moment he took it to be
Its dance of ecstasy….
Then it dawned….
It was on the throes of death
crushed under hurrying feet…
Worlds apart, wondering what to do
He turned away – appalled
Bemoaning
O, what a cruelly enthralling Vanity Fair
Life is…..

குரூர வசீகரம்
அவசர அவசரமாய் அறைக்குள் நுழைந்து
இருக்கையில் அமர்ந்தவர் யதேச்சையாய்
வாயில்பக்கம் பார்க்க
அங்கே ஒரு நுண்ணிய புழு
அதிநளினமாய்ச் சுழன்றபடி....
ஒரு கணம் அதையோர் அதிபரவச நடனமாகக் கண்டார்.
மறுகணம் புரிந்தது….
விரையுங்கால்களில் மிதிபட்டுஅது இறந்துகொண்டிருப்பது.
இணை[ப்பற்ற
இருவேறு உலகங்களாய்
செய்வதறியாமல் அப்பால் திரும்பிக்கொண்டார்
கதிகலங்கி யனத்தியபடி:
”ஐயோ, என்னவொரு
குரூர வசீகரக் கண்காட்சி
இந்த வாழ்க்கை”
(My Tamil Translation of the poem originally written in English by me - Latha)

கேள்விகளுக்கு அப்பால்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கேள்விகளுக்கு அப்பால்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குயவர் தன் பாட்டுக்குப் பானை வனைந்து கொண்டிருந்தார்.
பக்கத்தில் போய் அமர்ந்த சகலகலா வித்தக(ராய்த் தம்மை பாவித்துக்கொண்டிருக்கும்) உத்தமர்
படம்பிடிப்பதற்காக பானை வனைபவரின் விரல்களை ஒரு கணம் அப்படியே உறைநிலையில் இருக்கச் செய்யச் சொன்னார்.
பானை வடிவிழந்துவிடும் என்றபடி
தன் வேலையைத் தொடர்ந்தார்
அந்தக் கைவினைஞர்.
'பானையை உருவாக்கும்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்' என்று முகம் சுருங்க
புருவங்கள் உயர வினவினார் பேட்டியாளர்.
பானையைத்தான் நினைப்பேன் என்று
வேலையைத் தொடர்ந்தபடியே பதிலளித்தார் குயவர்.
'இந்த வேலையையே செய்கிறோமே என்று எந்த நாளேனும் வருந்தியதுண்டா?'
'எதற்கு வருந்தவேண்டும்? எனக்குப் பிடித்த வேலை யிது?'
'எதனால் பிடிக்கிறது?'
இது என்ன கேள்வி என்பதுபோல் ஒரு கணம் பேட்டியாளரை உற்றுநோக்கிய அந்த மனிதர்
'கண்ணில் கண்டவர்கள், கையில் கிடைத்தவர்களை யெல்லாம்,
கண்ட கண்ட விஷயங்களுக்கெல்லாம்
உங்களுக்கு ஏன் கேள்விகேட்கத் தோன்றுகிறது?'
என்று கேட்க _
திடுக்கிட்டுப்போன பேட்டியாளர்
வாயடைத்துநின்ற கணத்தில்
’என் கைகளுக்கும் களிமண்ணின் குழைவுக்கும் இடையேயான சுழல்பிணைப்பு
உமது கண்கணக்கிலடங்காதது;
பானைக்குள் நான் சமைக்கும் பிரபஞ்சப்
பெருவெளி
எனக்கு மட்டுமானது’
என்று சிறிய புன்சிரிப்போடு சொன்னவரை
அத்தனை அன்போடு
வியந்து பார்த்துக்கொண்டிருந்தது
பெரிய வாயும் சிறிய கழுத்துமாக உருவாகிக்கொண்டிருந்த
மண்பானை.

சொல்லத்தோன்றும் சில…..

 சொல்லத்தோன்றும் சில…..



இன்றளவும் மனித இனத்தின் பல்வேறு வயதுநிலை களில் உள்ளவர்களில் அரசாலும், சமூகத்தாலும் போதிய கவனம் தரப்படாமல் இருப்பவர்கள் இரு பிரிவினர். குழந்தைகள் – முதியவர்கள்.

முதியவர்களை இரண்டாம் குழந்தைப்பருவத்திலிருப்ப தாகச் சொன்னாலும் அவர்களுடைய விழிப்புநிலை குழந்தையின் விழிப்புநிலையிலிருந்து மிகவும் வேறுபட்டது.
குழந்தைக்குப் புரியாத அதன் வயதின் இயலாமை முதியவர்களுக்கு முழுக்க முழுக்கப் புரிந்து முள்ளாய்க் குத்தும்.
ஒரு காலத்தில் 60 வயதே முதுமையாகப் பாவிக்கப் பட்டது. இன்று மருந்து மாத்திரைகள், சுயமான நிதியாதாரம் என பல காரணங்களால் 90, 100 வயது வரை வாழும் பெரியவர்கள் உண்டு.
ஆனால், பெரியவர்களை ‘பெரிசு’ என்று கிண்டலடிக்கும் போக்கை அரசுப் பேருந்தில்கூட பார்த்திருக்கிறேன். காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய முதியவரைக் கூட தேவை யில்லாமல், கிண்டல் செய்யும் சக பயணிகளும் உண்டு.
எழுந்து நின்று இருக்கையைப் பெரியவர்களுக்குத் தருபவர்கள் உண்டு. பெரியவர்களுக்கான இருக்கையில் அடமாக அமர்ந்தபடி எங்கோ பார்த்துக்கொண்டு யோச னையில் ஆழ்ந்திருப்பதாய் பாசாங்கு செய்பவர்கள் அதைவிட அதிகமாய் உண்டு.
முதியவர்கள் என்றாலே அவர்களை மொந்தைகளாக்கி, அவர்களுடைய ரசனைகள், ருசிகள், விருப்புவெறுப்புகள் எல்லாவற்றையும் ஒற்றைத்தன்மைத்தாய் பாவித்து, பேசி, எழுதி வருவோர் நிறைய. முதியவர்களுக்கான காப்பகங் களில் இவ்வகை அணுகுமுறையைக் காண முடியும்.
இன்று பொருளாதார வசதி படைத்த முதியவர்களுக் கென்று ’மூத்த குடிமக்கள் இல்லங்கள்’ இயங்கிவருகின் றன. அங்கு வசதிகள் உண்டே தவிர அணுகுமுறையில் பெரிய அளவு மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை.
தன்னுடைய வயதான தாய் தந்தையருக்கும், தன் மனைவிக்கும் ஒத்துவராததால் தாய் தந்தையரை வேற்றூருக்குப் புனிதத்தலங்களைப் பார்ப்பதாக அழைத்துச் சென்று அங்கேயே கைவிட்டு திரும்பிவரும் பிள்ளைகளைப் பற்றிய செய்தி படித்ததுண்டு.
வயதான தாய் தந்தையர் வாழுங்காலத்திலேயே அவர்களுடைய சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு அவர்களைக் கைவிட்டு விடும் பிள்ளைகளைப் பற்றியும் கேள்விப்பட்டதுண்டு.
மூத்த குடிமக்களுக்காக அயராது பாடுபட்ட, விஸ்ராந்தி என்ற மூத்த குடிமக்களுக்கான இல்லத்தை நிறுவிய அமரர் சாவித்திரி வைத்தி ‘வாழும்நாள் வரை உங்கள் சொத்துக்களை யாருக்கும் எழுதிக்கொடுத்து விடாதீர் கள் என்பார். ஆனால், அப்படி கறாராக எல்லாப் பெரியவர் களாலும் இருந்துவிட இயலாத நிலை.
அதேபோல், குடும்பத்தின் மீது அதீதப் பற்றுடையவராய் அதையே உலகமாகக்கொண்டு உழலும் பெரியவர்களும், காலத்திற்குமான குடும்பத்தலைவராய் தன்னை பாவித்துக் கொள்ளும் பெரியவர்களும் அந்த நிலை மாறுவதைத் தாங்கிக்கொள்ள இயலாதவர்களாய் மனமுடைந்துபோகிறார்கள்.
DETACHED ATTACHMENT மனநிலையை நாமெல்லோருமே வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். நமக்கென்று சில பொழுதுபோக்குகளும் இருக்கவேண்டும்.
இப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியும் அலை பேசியும் முதியவர்களுக்கு உற்ற தோழமையாய் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், தனித்தனியாக அறைகளோ, அலைபேசிகளோ, தொலைக்காட்சிப் பெட்டிகளோ இல்லாத வறிய, நடுத்தரக் குடும்பங்களில் அவை முதியவர்களின் தேவைக்குக் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.
வசதி படைத்த குடும்பங்களில்கூட வயது முதிர்ந்த தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா போன்றவர்களுக்குத் தனி அறை வசதியோ, தனி தொலைக்காட்சிப்பெட்டி வசதியோ தரப்படுவதில்லை. அதற்கான தேவை உள்வாங்கப்படுவதில்லை.
அல்லது, அவற்றை வாங்கித்தந்து அவர்களை தனியறை யில் இருக்கச்செய்துவிடுகிறார்கள் வீட்டிலுள்ள இளையவர்கள்.
தங்கள் வாழ்வின் தினசரி அவசரத்தில் வீட்டுப் பெரியவர் களிடம் தினமும் சற்று நேரம் உட்கார்ந்து பேசவும் அவர்கள் நேரம் செலவிட நினைப்பதில்லை.
Nuclear குடும்பம் என்ற நிலை பரவலாகிவிட்ட பிறகு பேரக்குழந்தைகளும் தாய், தந்தையிடம் கலந்துரை யாடுவ தோடு, கலந்துறவாடுவதோடு நிறுத்திக்கொண்டு விடுகிறார்கள்.
அவர்கள் விஷயத்தில் தாத்தா- பாட்டி ஏதேனும் கருத்து ரைப்பதை பெரும்பாலும் அவர்களும் விரும்புவதில்லை; அவர்களுடைய தாய்-தந்தையரும் விரும்புவதில்லை.
மூத்த குடிமக்கள் உடற்குறையுடையவர்களாக இருந் தால், அல்லது வயது காரணமாக உடற்குறையேற்பட் டவர்களாய் இருந்தால், அவர்களுடைய நிலைமை இன்னும் அவலமாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைகள் நலனும் மூத்த குடிமக்கள் நலனும் குடும் பங்களாலும், சமூக அமைப்பாலும், அரசுகளாலும் இன்னும் அதிகமான அளவு கவனத்தில் எடுத்துக்கொள் ளப்பட வேண்டியது இன்றைய இன்றியமையாத் தேவை.
.........................................................................................................................................


தெரிந்துகொள்வோம்

 தெரிந்துகொள்வோம்

Section 295A in The Indian Penal Code

...............................................................................................
[295A. Deliberate and malicious acts, intended to outrage reli­gious feelings of any class by insulting its religion or reli­gious beliefs.—Whoever, with deliberate and malicious intention of outraging the religious feelings of any class of 273 [citizens of India], 274 [by words, either spoken or written, or by signs or by visible representations or otherwise], insults or attempts to insult the religion or the religious beliefs of that class, shall be punished with imprisonment of either description for a term which may extend to 4[three years], or with fine, or with both.]

Wednesday, July 23, 2025

FAIR AND LOVELYயும் GLOW AND LOVELYயும் வெகுஜன ஊடகங்களும் வேறு சிலவும்…

FAIR AND LOVELYயும்
GLOW AND LOVELYயும்

வெகுஜன ஊடகங்களும்

வேறு சிலவும்…

 லதா ராமகிருஷ்ணன்

(*திண்ணை இணைய இதழ் - இவ்வாரம்)


http://puthu.thinnai.com/2025/07/21/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2/

சொல்ல வேண்டிய சில
By latharamakrishnan
July 21, 2025

"அரை நிர்வாண பெண்களின் படங்களை வெளியிட்டு விற்ப னையை அதிகரிக்க விழைந்தால் அதை நேரடியாகச் செய்ய வேண்டியதுதானே? அரசியல்வாதிகளின் அசிங்கங்களை, அபத்தங்களை விமர்சிக்க விழைந்தால் அதை நேரடியாகச் செய்ய வேண்டியதுதானே? அரசியல்வாதிகள் என்றால் அவர்களை எப்படி வேண்டுமானாலும் அவமதிக்கலாமா? சொரணை உள்ள அரசியல்வாதிகள் இந்த அணுகுமுறையை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.

அரசியல்வாதிகளுக்காவது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை யாவது மக்கள் நீதிமன்றத்தில் கூண்டிலேறி நிற்கவேண்டியிருக் கிறது. ஆனால், ஒரு பக்கத்தில் பெண் சார் பாலியல் வன்புணர்வு செய்திகளைப் பரபரப்பாக கண், காது மூக்கு வைத்து வெளியிட்டுக் கொண்டே இன்னொரு புறம் பெண்ணை போகப் பொருளாகக் காண்பிக்கும் போக்கை ஊடக அறமாகக் கொண்டுள்ள பல பெரிய பத்திரிகைகளுக்கு யாருக்கும் பதிலளிக்கவேண்டிய பொறுப்பேற்பு இல்லை போலும்......"

மௌனவோலம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மௌனவோலம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)





..............................................................................................
//*2000த்தில் வெளியான அலைமுகம் என்று தலைப்பிடப் பட்ட என் முதல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது//
.................................................................................

வழியெங்கும் சிதறியிருக்கின்றன வாளறுத்த யோனிகள்.
அப்பொழுதே அறுபட்டுக் குருதி பெருக்கி யிருப்பவை.
அனாதி காலந் தொட்டு ஆறாக் காய முற்றவை.
விழிநீரும் உதிரமுமாய் நிலைகுலைக்கும் பாதைகளில்
அடிக்கொன்றாய் மிதிபடும் முறிக்கப்பட்ட முலைகள்.
தெறித்துதிரும் கண்மணிகள் அலைகடலாழம் மூழ்க
துடிக்கத் துடிக்கப் பிடுங்கி யெறியப்பட்ட பூந்தொடைகள்
ஐந்து வயதிற்கும் அறுபதெழுபதுக்கும் இடைப்பட்டவை.
நைந்தழியும் கனவுகளை யெல்லாம் கழுகுகள்
கொத்திக் கொழிக்கும்.
கழுத்தில் முடிச்சிட்டு மூச்சிறுக்கி
மேளதாளத்துடன் கிழிபடுவன
வலிபொறுத்து விருப்பறுத்து வம்சவிருத்திக் கடன்
கழிக்கும்.
வறுமை யொரு வாளாய் விபச்சாரக் குழி வழிய
தழும்பணிந்த யோனிகள்.
யோனி பிளத்தல் இங்கே வீர விளையாட்டாக
காட்டு மேட்டிலும் கோட்டைக் கொத்தளங்களிலும்
மூலை முடுக்குகளிலும் முச்சந்திகளிலும்
காலை மாலை யெவ்வேளையும்
நாளை நிலாவிலும் நடக்கும்
மூர்க்கத் தாக்குதல்கள் - மீட்பறு வியூகங்கள்.
நாய்க் குதறலில் வேய்ங்குழல்கள் நொறுங்கிப் போக
ஆய கீதமெலாம் ஓயாக் கதற லொன்றே யாக
உள்ளொளி யடங்கிப் போக,
ஊர் வாய் அமிலமாக
கொள் ளெண்ணம் செயல் எல்லாம் பெண்ணை
அந்நியமாக்கும் தன்னிடமிருந்தும்.
காணி நிலம் வேண்டவில்லை. அவள்
யோனியும் அவளுக்கில்லை.
அங்கிங் கெனாதபடி ஆணியறைந் தறைந்து
இந்திரக் கண்களாய் அவள் மேனி நிறையும்
யோனித் துளைகள் - ஈ ஊற, எறும்பூற.
திரைதோறும் தீராப் பகடை யுருளும்.
பிரபுதேவா அடவுகளில் பனிக்குடம் தடம் புரள
கருவறுக்கும் தில்லானா தில்லானாக்கள்.
மாக்களாய் பெண்டாளும் சண்டாளர்க்கு
எந்நாளும் புரியாது யோனிப் பரிபாஷைகள்.
வானவில்லாய்ப் பெறும் இன்னுறவை அருகழைத்து
உள்வாங்கிக் குழைந்துருகும் யோனிகளுமுண்டிங்கு.
முள்மலராகு மந்த மூன்றாம்பிறைப் பொழுதும்
முதுகழுந்தும் சிலுவைகள்...
எங்கும்
தாக்க வாளும் துலாக் கோலுமாய்
பூக்கப் பூக்கப் பூ பொசுங்கும் நாற்றம்
தேக்கித் தேக்கி உயிர்ச்சூழல் பட்டுப் போக _
பண்டு தொட்டு கண்டதுண்டமாகி விட்ட
யோனி மனம் ஊமை ரணம்;
யோனி நலம் உலக பலம்.

Tamil Sangam Women Poets In Translation Translated by Dr.K.S.Subramanian

 Tamil Sangam Women Poets

In Translation
Translated by
Dr.K.S.Subramanian
Published by NCBH

தற்காலத் தமிழ்க் கவிதைகள் - சங்ககாலம் தொட்டு இன்றுவரை, பாரதியார் கவிதைகள், ஜெயகாந்தனின் படைப்புகள், கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதைகள் என பல தமிழாக்கங்களைத் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் 42 சங்கப் பெண்கவிகளின் 180க்கும் மேற்பட்ட கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக் கிறார். சங்க இலக்கியங்களை முழுமையான தொகுப்புகளாக வெளியிட்டிருக்கும் என்.சி.பி.எச் நிறுவனம் இந்த நூலைப் பிரசுரித்துள்ளது. தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலம் வழியாக உலகெங்கிலும் பரவச் செய்யும் இத்தகைய பணிகள் போற்றத்தக்கவை; பேசப்படவேண்டியவை.

BACK WRAPPER BLURB
About 2000 years old, this must be one of the most ancient corpuses of Women Poetry in world literature, giving it an intrinsic importance.
A unique feature of Sangam Poetry is its organic linkage to Nature . The situations, similes, metaphors and leitmotifs are all intertwined with Nature, and are marked by sheer lyrical finesse and poetic allure.
Female sexuality, the passionate bond between the girl and her lover, the agony of separation, outpouring of suppressed ardour and a celebration of the female body have a strong presence in these poems. This has potential value in sociological and cultural-anthropological studies of ancient societies from a feminist perspective.
Dr.K.S.Subramanian