LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, January 25, 2022

வேண்டுகோள் புதுப்புனல் பதிப்பகத்திடமிருந்து

 வேண்டுகோள்

புதுப்புனல் பதிப்பகத்திடமிருந்து

வணக்கம். கொரோனா காலகட்டம் அச்சுத்துறை யிலும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப் பதை அனைவரும் அறிவோம்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியும் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. அதில் புதுப் புனல் அரங்கமைப்பதற்காக செலுத்திய கட்டண மும் சரி, அந்த அரங்கில் காட்சிப்படுத்துவதற் கான அவசர அவசரமாக அச்சிட்ட சில நூல்களும் சரிகடன் வாங்கிச் செய்தது.

எனவே, நன்கொடையாகவோ நூல்களை வாங் கியோ எங்களுக்கு உதவவேண்டுமென்று உங் களை கேட்டுக் கொள்கிறோம்.

இப்போது வெளியிடவுள்ள சில நூல்களுக்கு முன்பணம் செலுத்த முடிந்தவர்கள் எங்களுக்கு உதவ முன்வர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம்.

அவற்றில் விலைகள் கீழே தரப்பட்டுள்ளன, நூல்கள் அடுத்த மாத முதல் வார முடிவிலிருந்து கொரியரில் அனுப்பிவைக்கப்படும்.

எங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து ரூ2000 அனுப் பித்தந்திருக்கும் கவிஞர் கலாப்ரியா அவர்களுக்கும் ரூ. 3000 அனுப்பித் தந்திருக்கும் கவிஞர் ஜீனத் அவர்களுக்கும் ரூ.1000 அனுப்பித் தந்திருக்கும் கவிஞர் இனியவன் விக்ரம் அவர்க ளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள _ திரு. ரவி 9884427997 / திருமதி சாந்தி 99623 76282

வாட்ஸப் எண் : 99623 76282

பணம் கட்ட GOOGLEPAY number 99623 76282

கூகுள் பேயில் பணம் செலுத்தினால் செலுத்திய விவரத் தையும், செலுத்தப்பட்ட பணம் நன்கொ டையா நூல்க ளுக்கான விலையா என்பதையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளியாகியுள்ள, வெளியிடப்படவுள்ள நூல்கள்

______________________________________________

1. நான் கே.எஸ்.பேசறேன் விலை: ரூ 350

2. ஒருமையைத் தேடி விலை ரூ350

3. நினைக்கப்படும்(தெலுங்குக் கதைகள் தமிழில்)

ரூ.350

4. மனக்குருவி- வைதீஸ்வரனின் முழுக்கவிதைத்

தொகுப்புரூ.500

5. தொடுவானமல்லவே ஆங்கிலம் ரூ. 50

6. குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு _

7. ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

கவிதைத் தொகுப்பு ரூ.200

8. WORLD WITHIN OUR REACH(WRITTEN

BY RAVICHANDRAN –

PUDHUPUNAL EDITOR) RS. 200

9. BREAD AND A DREAM (KOSINRA’S SELECTED

POEMS IN ENGLISH) RS.200

10. LIFE IN A NUTSHELL(A COLLECTION OF

TAMIL POEMS TRANSLATED INTO ENGLISH_

RS. 500

11. உள்ளங்கையுலகு(சமகாலத்

தமிழ்க்கவிதைகள் சில) ரூ. 500

______________________________________________

இந்த 10 நூல்களின் மொத்த விலை ரூ.3200

(*இங்கே தரப்பட்டுள்ள நூல் அட்டைகளில் தரப்பட்டுள்ள விலைகள் சிலமாறக்கூடியவை)

மொத்தமாக வாங்க முன்பதிவு செய்தால் ரூ 3000க்குக் கிடைக்கும்.

(தபால் செலவு தனி)

உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்

ரவிச்சந்திரன்சாந்தி

புதுப்புனல் பதிப்பகம்


INSIGHT - JANUARY 2022

 INSIGHT 

 JANUARY 2022

(A BILINGUAL BLOGSPOT FOR TAMIL POETRY)


புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள் - 5 & 6

   புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள் 

- 5 & 6

வேண்டுகோள் / புதுப்புனல் பதிப்பகத்திடமிருந்து
117, TRIPLICANE HIGH RAOD
(OPP TO RATHNA CAFÉ)
CHENNAI – 600 005
Mobile Nos: 9884427997, 9962376282
Email id : pudhupunal@gmail.com
வணக்கம். கொரோனா காலகட்டம் அச்சுத்துறை யிலும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதை அனைவ ரும் அறிவோம்.
சென்னைப் புத்தகக் கண்காட்சியும் எப்போது நடக் கும் என்று தெரியவில்லை. அதில் புதுப்புனல் அரங்க மைப்பதற்காக செலுத்திய கட்டணமும் சரி, அந்த அரங்கில் காட்சிப்படுத்துவதற் கான அவசர அவசர மாக அச்சிட்ட சில நூல்களும் சரி – கடன் வாங்கிச் செய்தது.
எங்களுக்கு ஏதாவது வழியில் உதவும் நோக்கத்து டன் தோழர் லதா ராமகிருஷ்ணன் அவர் ஆங்கிலத் தில் மொழிபெயர்த்த ஃபேஸ்புக் நண்பர்களின் சம காலத் தமிழ்க்கவிதைகள் 200 + அடங்கிய தொகுப்பை மூல கவிதைகள் ஒரு தொகுப்பாகவும், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஒரு தொகுப் பாகவும் இரண்டு தொகுப்புகளை வெளியிடும் பொறுப்பை புதுப்புனல் பதிப்பகத்திடம் ஒப்படைத் துள்ளார்.
FLEETING INFINITYஐத் தொடர்ந்து வெளிவரப்போகும் தொகுப்பு(கள்).
இவையிடண்டிலும் இடம்பெறும் 200+ கவிஞர்களுக்கு ஒரு பிரதியாவது அன்பளிப் பாகத் தரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தபால் அனுப்பி னால் நிறைய செலவாகும்.
ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு இலங்கையில் 21/2 ரூபாய் என்று நினைக்கிறேன். எனவே இந்தத் தொகுப்புகளை அங்கே என்ன விலைக்கு விற்றால் கவிதை ஆர்வலர்க ளால் வாங்க முடிந்த விலையாக இருக்கும் என்று யோசிக்கவேண்டும்.
மொத்தம் 400, 500 பிரதிகளாவது அச்சிட்டால்தான் பங்குபெறும் கவிஞர்களுக்கான அன்பளிப்பு பிரதிகள் போக 100 பிரதிகளாவது விற்பனைக்கு மிஞ்சும்.
எப்படிப் பார்த்தாலும் குறைந்தபட்சம் 80,000 முதல் 1,20,000 (அச்சிடும் தாள், முகப்பு அட்டையின் தரம் என பல்வேறு அம்சங்களையும் பொறுத்து) வரை செலவாகும்.
எனவே, உதவ முடிந்தவர்கள் நன்கொடையளித்தால் இந்த முயற்சியை செவ்வனே மேற்கொண்டு வெற்றி கரமாக நிறைவேற்ற முடியும்.
உதவுபவர்கள் தொகுப்புகளில் நன்றியோடு குறிப்பி டப்படுவார்கள்.
உங்கள் உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
எங்கள் கூகுள் பே எண்: 9962376282
மின்னஞ்சல் முகவரி: pudhupunal@gmail.com
அலைபேசி எண்கள்: 9884427997, 9962376282
நன்கொடையளிப்பவர்கள் அது குறித்து எங்களுக்கும் விவரம் தெரிவித்தால் உதவியாயிருக்கும். எங்கள் ஃபேஸ் புக் பக்கத்தில் உடனே நன்றி நவில முடியும்.
உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்
ரவிச்சந்திரன் – சாந்தி

புதுப்புனல் பதிப்பகம்

மோதிரக் கைகளும், மகத்துவக் குட்டுகளும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மோதிரக் கைகளும்,

மகத்துவக் குட்டுகளும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



நான்கே சொற்களில் ஒரு கவிதைத்தொகுப்பைப்
பற்றிய முழுநிறைவான விமர்சனம் சாத்தியமா?
மந்திரமாவது சொல்
தந்திரமன்றி விமர்சனமில்லை என்றுகொள்
முன்முடிவுக்கேற்ப
தன்னிச்சையாகவோ
ஒருமித்த கருத்தாகவோ
’அவசியம் படிக்கவேண்டும் அனைவரும்’
என்றோ
’அனாவசியம். யாருக்குமே படிக்கப் பிடிக்காது’
என்றோ
எழுதிவிட்டாலாயிற்று.

அடிக்குறிப்பு:
இரண்டாயிரமோ இருபதாயிரமோ சர்க்குலேஷன் உள்ள பத்திரிகைக்கு இருப்பதெல்லாம் மோதிரக்கைகள்தானே!

நீளாதிநீளங்களும் நீக்குபோக்குகளும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நீளாதிநீளங்களும் நீக்குபோக்குகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இதுவரை எழுதப்பட்ட சிறுகதைகளிலேயே
மிகவும் நீளமானது எழுதப்பட்டிருப்பதாக
புதிய மோஸ்தரில் விளம்பரம் தரப்பட்டிருந்தது.
சிலர் மர ஸ்கேலை எடுத்துக்கொண்டனர்
சிலர் இரும்பு ஸ்கேலை எடுத்துக்கொண்டனர்.
சிலர் ‘இஞ்ச் டேப் எடுத்துக்கொண்டார்கள்
சிலர் கையால் முழம்போட முடிவுசெய்தார்கள்.
ஆளாளுக்கு ஒரு அளவுகோலை எடுத்துக் கொண்ட பின்
அதி கவனமாக அளந்தார்கள் அந்த ஒரேயொரு கதையைத்
திரும்பத்திரும்ப.
அவர்களுடைய அளவுகோல்கள் காட்டும்
வேறுபட்ட அளவுகளை
அவற்றின் வித்தியாசங்களை
அளவுகோல்களின் அளக்குங் கைகளின்
வேறுபட்ட நீளங்களை
ஆக்ரோஷமாய் அதி துல்லியமாய்
ஆங்காங்கே அடைமொழிகளோடும்
மேற்கோள்களோடும்
அழுத்தமாய்ச் சுட்டிக்காட்டியவாறிருந்தார்கள்.
ஸ்கேலும் இஞ்சுடேப்பும் ஸ்டேஷனரி கடைகளில்
அமோக விற்பனையாக
அலங்காரப் பொருளாகவோ ஆய்வுக்கான கருப் பொருளாகவோ
அந்தஸ்துக்கான ஆஸ்தியாகவோ பந்தோபஸ்துக் கான முன்னேற்பாடாகவோ
முகக் கவசமாகவோ மார்பில் பூணும் கேடயமாகவோ
மண்டைக்குப் பின்னாலான ஒளிவட்டமாகவோ
அந்தக் கதை குறித்த கட்டுரை யெழுத
அதியதிவேகமாக விலைகொடுத்து
வாங்கிக்கொண்டிருப்பவர்களின்
வாதப்பிரதிவாதங்களில் _
காலம் எழுதிய கதைகளையெல்லாம்
ஒன்றுவிடாமல் படித்தவர் யாரென்ற விவரமும்
காலத்தினாற் செய்யப்பட்ட அதி நீளக் கதை
யெதுவென்ற விவரமும்
கதை யென்ற ஒன்றுண்டு என்ற விவரமும்
வெகு நேரத்திற்கு முன்பே
காணாமல் போயிருந்தன.

புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள் - 4 மனக்குருவி

  புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள் - 4

மனக்குருவி

(கவிஞர் வைதீஸ்வரனின் முழுக்கவிதைத் தொகுப்பு)

விலை : ரூ.500

அழகென்ப….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அழகென்ப…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பார்க்கும் கண்களில் பாய்ந்திறங்கிப்
பதுங்கிக்கொள்ளும் அழகு
போகப்போக அசிங்கமாக
அதிசயமாக
ஆனந்தமாக
ஆக்கங்கெட்டதாக
ஆயிரமாயிரம் PERMUTATIONS AND COMBINATIONS இல்
அன்றாடம்
கலங்கித் தெளிந்துகொண்டிருக்கும்
காணும் கண்கள்
காலத்தின் கைகளாக......

மலைமுழுங்கிகள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மலைமுழுங்கிகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


மலையை மறுபடியும் மறுபடியும்
மறுபடியும் மறுபடியும்
மழுங்கிய சிறு கற்துண்டமென்றே
கூறிக்கொண்டிருந்தார்கள்
மாமா அப்பா மாடி வீட்டு அங்க்கிள்
மோகனா அத்தை
மார்க்கெட்டை ஒட்டியுள்ள தெருவில்
குடியிருக்கும் மாத்ஸ் டீச்சர்
இன்னும் சில பேர்
அவனுக்குத் தெரிந்தவர்கள் இவ்வளவுதான்
தெரியாதவர்களில் எத்தனை பேரோ
திரும்பத்திரும்பச்சொல்லிச்
சொல்லிச்சொல்லி
மெல்லமெல்ல அம்மியையே நகர்த்த
முடியாதபோதும்
சொல்லித்தீராத கதையாய் அதையே
சொல்லிக்கொண்டிருக்கும்
பெரியவர்களைப் பார்த்து
என்றேனும் அந்தக் கற்துண்டத்தைக்
கையி லெடுத்துக்
கிட்டத்தில் பார்த்திருக்கிறீர்களா
என்று பட்டென்று கேட்டுவிட்டதில்
கிடைத்த பதில் குட்டு மட்டுமே
மொட்டைத்தலைக்குட்டிப்பையனுக்கும்
தட்டை முறுக்கு தின்ன மிகவும் பிடித்த
சுட்டிப் பெண்ணுக்கும்.

புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள் - 3 நினைக்கப்படும் தெலுங்குக்கதைகள் – ஆங்கிலம் வழியாக தமிழில்!

 புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள் - 3 

நினைக்கப்படும் 

தெலுங்குக்கதைகள் –

ஆங்கிலம் வழியாக தமிழில்!

V.V.B.RAMARAO தெலுங்குமண்ணைச் சேர்ந்த, தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் சிறந்த எழுத் தாக்கங்களைத் தந்திருக்கும் மூத்தஎழுத்தாளர்.
1938இல் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிர்லா பேட்டா ராஜம் (தற்போது பைதிபீமாவரம் என்று அழைக்கப்படுவது) என்ற கிராமத்தில் பிறந்த வர். ஆந்திர மாநிலப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதோடு, கற்பித்தலுக்கான பட்டயமும் பெற்றார். பிரெஞ்சுமொழியிலும் பட்டயம் பெற்றவர்.

1957இல் எம்.ஆர்.கல்லூரியில் கற்பிக்கும் பணி யைத் தொடங்கினார். ஆந்தி ராவைச் சேர்ந்த 1961 முதல் 1995 வரை பல்வேறு கல்லூரிக ளில் பல்வேறு உயர்பதவிகளைத் திறம்பட வகித்தவர் திரு.ராமாராவ்.
தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமாக 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் புதினங்கள், வாழ்க்கை சரிதைகள், சிறுகதைத் தொகுப்புகள், திறனாய்வுக் கட்டுரைகளடங்கிய நூல்கள், ஆங்கிலத்திலிருந்து தெலுங்கு மொழியிலும், தெலுங்கிலிருந்து ஆங்கிலத் திலும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு களும் அடங்கும். மேலும், நூற்றுக்கணக்கான கட்டு ரைகள், சிறுகதைகள் ஆகியவை செய்தித்தாள் களிலும், இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
இவருடைய சிறுகதைத்தொகுப்பு ஒன்றின் தமி ழாக்கம் புதுப்புனல் வெளியீடாக சென்னைப் புத்தகக் கண்காட்சி யில் இடம்பெறுகிறது.
தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் எஸ்.ஆர். தேவிகா. பக்கங்கள் 308. விலை: ரூ. 300





கோயிலும் தெய்வமும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கோயிலும் தெய்வமும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
சிலருக்கு சரணாலயம்
சிலருக்கு சுற்றுலாத்தலம்
சிலருக்கு சிற்றுண்டியகம்
சிலருக்கு நடைப்பயிற்சி வெளி
சிலருக்கு ‘செலக்டிவ் அம்னீஷியா’
செயல்படும் இடம்
சிலருக்கு வம்புமடம்
சிலருக்குக் கருணைக்கடல்
சிலருக்கு தம் செல்வச்செழிப்பின்
கண்காட்சித் திடல்
சிலருக்கு சப்தநாடி
சிலருக்கு சின்ன மூளையைப் பெரிதாக்கிக்
காட்ட உதவும் பூதக்கண்ணாடி,
சிலருக்கு திருவருள்
சிலருக்கு
சீன ருஷ்ய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில்
உதவிப்பணத்தோடு ஆய்வுப்பட்டம் பெறுவதற்கான
அதிமுக்கியக் கருப்பொருள்.

புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள்! -2

  புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள்! -2


ஒருமையைத் தேடி
சூஃபி பார்வையின் வழியே
பகவத் கீதையும்-குரானும்
மூஸா ராஜா
IN SEARCH OF ONENESS
by
MOOSA RAZA
தமிழாக்கம்
S.R. தேவிகா
மேற்பார்வை
கே. எஸ். சுப்பிரமணியன்
முதல் பதிப்பு: 2021 அக்டோபர்
வெளியீடு:
புதுப்புனல்
பாத்திமா டவர் (முதல் மாடி)
117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
(ரத்னா கபே எதிரில்)
சென்னை - 600005
அலைபேசி எண்கள்: 9884427997, 9962376282
மின்னஞ்சல்: pudhupunal@gmail.com
பக்கங்கள்: 320
விலை: ரூ 350
வணக்கம்.
மத நல்லிணக்கம், மனிதநேயம் மானுட மேம்பாட்டிற்கு மிக முக்கியம். இதை திரு. மூஸா ராஜாவின் இந்த நூல் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அனுபவ ரீதியாக அவர் கண்டவற்றின் அடிப்படையில், அவருடைய ஆழ்ந்த வாசிப்பை ஆதாரமாகக் கொண்டு சக மனிதர்கள் பால் மிகுந்த அன்பும் அக்கறையுமாக எழுதப்பட்ட நூல் இது.
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பல நூல்களை, நவீன தமிழ்க்கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் நெருங்கிய நண்ப ரான திரு. மூஸா ராஜா மிர்ஸா காலிபின் கவிதைகளை பாரசீக மொழியிலிருந்தும் உருதுமொழியிலிருந்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக் கிறார். அந்த ஆங்கில நூலை தன் நண்பர் மொழிபெயர்க்க வேண்டுமென்றுவிரும்பினார் திரு. மூஸா .

டாக்டர்.கே.எஸ்.சுப்பிரமணி யனின் வேலைப்பளு காரணமாக அந்த மொழிபெயர்ப்புப் பணியை என்னிடம் தந்தார் அவர். என் மொழிபெயர்ப்பு களை மேற்பார்வையிட்டார். சில திருத்தங்களைப் பரிந்துரை செய்தார். (பொதுவாக என் மொழிபெயர்ப்பில் யாரும் தலையிடுவதை நான் ஒப்பமாட்டேன் என்றாலும் டாக்டர் கே.எஸ்ஸிடம் அப்படி கறாராகச் சொல்லமுடிய வில்லை!) இந்த மிர்ஸா காலிபின் கவிதை மொழியாக்க நூல் கவிதா பதிப்பகத் தால் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், IN SEARCH OF ONENESS என்ற தலைப்பில் குரானை யும் பகவத் கீதையையும் அவற்றிலுள்ள ஒற்றுமைகளையும் அகல்விரிவாக அலசியாராய்ந்து அவற்றைத் தனது வாழ்வனு பவங்களின் பின்னணியில் எடுத்துரைத்துள்ள இந்த நூலையும் தனது நண்பர் டாக்டர் கே.எஸ். மொழிபெயர்க்கவேண்டுமென்று விரும்பிக் கேட்டுக்கொண்ட போது டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணிய னின் கண்பார்வை சற்று பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்த தால் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் மொழிபெயர்ப்புப்பணியில் இறங்கியிருந்த என் தோழி தேவிகாவிடம் இந்த நூலை மொழி பெயர்க்கும் பணி யைத் தந்தார்.
தேவிகா, பெயர்பெற்ற தெலுங்கு எழுத்தாளரான டாக்டர் வி.வி.பி. ராமராவின் சிறுகதைத் தொகுப்பையும் வேறு சில சிறுவர் நூல் களையும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கி றார்.
தேவிகாவின் மொழிபெயர்ப்பை அத்தியாயம் அத்தியா யமாக நான் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு வாசித்துக் காட்டுவேன். தேவையெனத் தோன்றும் சில திருத்தங்களைச் செய்வார் டாக்டர் கே.எஸ். பகவத் கீதைக்கு பாரதியார் எழுதிய தமிழ் விளக்கவுரை களே இடம்பெறச் செய்தார் டாக் டர் கே.எஸ்.
ஒரு நூலாசிரியரின் எழுத்துநடை, வார்த்தைப்பிரயோ கங் கள் முதலியன அவருடைய படைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்தி விடும்.
உதாரணமாக, மத நல்லிணக்கம் பேசுவதாகப் பறையறிவிக்கப் படும் ஒரு நூலில் ஒரு மதத்தைப் பற்றி தடித்த வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தால் அல்லது சில வரலாற்றுண்மைகள் போகிற போக்கில் திரித்துக் கூறப்பட்டிருந்தால் - அந்த நூலின் நோக்கம் அம்பலமாகி விடும்.
டாக்டர் மூஸா ராஜாவின் இந்த நூலைப் படிப்போருக்கு மானுடத் தின் பால் ஆசிரியருக்கு உள்ள உண்மையான அன்பும் அக்கறை யும் கட்டாயம் புரியும்.
இந்த நூலைப் படிப்பது நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்றால் மிகையாகாது.
லதா ராமகிருஷ்ணன்