LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, February 21, 2020

முட்டாள்பெட்டியின் மூளை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


முட்டாள்பெட்டியின் மூளை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



TELE FACTORYயில் டஜன்கணக்காகத் தயாரிக்கப்படும் மாமியார்களின்
முறைத்த கண்கள்; முறம்போன்ற தடிமனான நகைகள்
எங்குபார்த்தாலும் ஒட்டுத்துணிகளும் பட்டுக்குஞ்சலங்களும்
கட்டுக்கடங்காத நிறச்சேர்க்கைகளுமாய் அவர்கள் படுக்கையிலும் அணிந்திருக்கும் கெட்டிச் சரிகைப் பட்டுப்புடவைகள்
மூச்சுவிடாமல் அவர்கள் வெளித்தள்ளும் சாபங்கள்
காச்சுமூச்சென்ற அவர்களின் பேச்சுக்கள் பழமொழிகள்
ஃபிலாஸஃபிகள் பிக்கல்பிடுங்கல்கள்பப்ளிமாஸ்முகங்கள்
புஸுபுஸு சிகையலங்காரங்கள்;
மேலும் மேலும் மேலும் மேலும் என நீளும்
அவர்களின் ஆர்வக் கிசுகிசுக்கள்; அவதூறுகள்
அழுகைகள்; அசிங்கம்பிடித்த சதித்திட்டங்களை
சகிக்கவும் ரசிக்கவும் எதிர்பார்க்கவும் போடவும்
நாமின் நானும் நானின் நாமுமாய் ப்ரோக்ராம்செய்யப்பட்டுவிட்டதில்
லாபம் முன்னூறு மடங்காகிவிட்ட முட்டாள்பெட்டித் தொழிற்சாலையின் கிளைகள்
மூலைமுடுக்கெங்கும் முளைக்க
24 X7
முடுக்கிவிடப்படும் இயந்திரங்கள் வெளித்தள்ளத் தொடங்குகின்றன
மூன்று வயது மாமியார்களையும்
முன்னூறு வயது மருமகள்களையும்
அவர்களின் மூவாயிரம் வழித்தோன்றல்களையும்.


குடித்தனம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

குடித்தனம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


புதுவீடு செல்கிறேன்.
வாடகைக்குத்தான் என்றாலும்
விரியுலகே நம்முடையதாக இருக்கும்போது
வசிப்பிடம் மட்டும் எப்படி வேறாகிவிடும்!
வாடகையை மட்டும் மாதாமாதம்
ஐந்தாம் தேதிக்குள் கட்டிவிட முடியவேண்டும்!

ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும்
வீடு மாறிச்செல்பவர்களும் ஏதோவொரு விதத்தில் மாறுகிறார்கள் போலும்.
அட்டைப்பெட்டிகளுக்குள் பொதியப்பட்ட இகவாழ்வை
ஒரு வீட்டிலிருந்து வழியனுப்பி
இன்னொரு வீட்டிற்குள் அதை மீண்டும்
வெளியே எடுத்து விரிக்கும்போது
காணாமல் போய்விடும் சில
சீப்புகளும் புத்தகங்களும்தான் என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியவில்லை.

இடம்பெயரும் முன் சில நாட்களும்
இடம்பெயர்ந்த பின் சில நாட்களும்
ஒருவித அந்தரத்தில் அலைக்கழியும்
வாழ்க்கை.
பிறகும் பூமியில் கால்பதிக்கும் என்ற உறுதியில்லை
யென்பதும் உண்மைதான்.

நானின் தூல மூட்டுகளிலும்
சூக்கும மூட்டுகளிலும்
தீரா வலியெடுக்கும்.
தூங்கினால் சரியாகக்கூடும்….

புதுவீட்டின் அக்கம்பக்கத்து மனிதர்களிடம்
நம்மை நிரூபித்துக்கொள்ளவேண்டும்…
என்னவென்று என்பதுதான்
தொடரும் புதிராய்.

ஞானம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஞானம்

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

அவர்களிருவரும் அத்தனை அந்நியோன்யமாக கைலுக்கித்
தோளில் கையிட்டு அரவணைத்து புகைப்படத்திற்காக என்பதைத் தாண்டிய அளவில்
மனம்விட்டுச் சிரித்தபடி ‘போஸ்’ கொடுத்திருப்பதைப் பார்த்து
அவனுக்குள்ளிருந்த தொண்டர் விசுவாசி ஆதரவாளர் பக்தர்
அலமலங்க விழிக்கிறான்.
அவர்கள் தான் இவனையும் இவனொத்தவர்களையும்
இப்பிறவியில் இனியிருக்குமோ இருக்காதோவென இழுபறியிலிருக்கும்
ஏழேழ் பிறவிக்கும் ஜென்மப்பகை கொண்ட
இருதரப்பினர்களாக்கி
சொற்கூர்வாட்களை அவர்கள் மனங்களில் சேகரிக்கச் செய்து
அகிம்சை பேசியவாறே அந்த ஆயுதங்களைக் கண்டமேனிக்கு
எதிரித்தரப்பு மீது எறிந்துகொண்டேயிருக்கச் செய்தவர்கள்.
அவர்களிருவரும் இன்று அப்படிச் சிரித்தபடி யொருவருக்கொருவர்
நெருங்கிநின்றிருப்பதை
அன்பின் அடையாளமாய்
சகோதரத்துவத்தின் சிறப்புணர்த்துவதாய்
மனித மாண்பைப் பற்றி மடக் மடக்கென்று நீரருந்தும்
வேகத்தின் பன்மடங்கில்
நிகழ்ச்சித்தயாரிப்பாளர் போற்றிப்புகழ
நீளும் வழிகளெல்லாம் அடைபட்டுப் போய்
நிராயுதபாணியாக நிற்கும்
நிஜத் தொண்டர் விசுவாசி ஆதரவாளர் பக்தர்
நாளையேனும் பெறுவாரோ ஞானம்….

இயல்பு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

இயல்பு
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


முகபாவங்களை முகமூடிகளாக அணிந்திருப்பவர்கள்
மொழியும் வார்த்தைகளுக்குள்ளிருந்து முழுப்பூசணிக்காய்கள்
மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கின்றன
மிகப் பெரிதான ஒரு சிரிப்பால்
அவற்றின் மீது ஒரு திரையைப் போர்த்த
அவர்கள் மும்முரமாக முனைந்துகொண்டிருக்கையிலேயே
அவர்தம் பொய்மையிலிருந்து புதிதாய் முளைக்கும்
சில பூசணிகள் போகப்போக
அவர்களாகவே உருமாறிவிடுகின்றன.


TO WHOMSOEVER IT MAY CONCERN....


TO WHOMSOEVER IT MAY CONCERN....

FREEDOM OF SPEECH IS NOT THE 
PREROGATIVE OF ‘SELECT’ SOME.
FEELING SO IS 
THE WORST FORM OF FASCISM

Thursday, December 19, 2019

நில் கவனி செல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


நில் கவனி செல்
 ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
 
இந்த நாட்டிலேயே பிறந்துவளர்ந்து
முடிந்தும் போகிறவர்கள்
வீதியோரங்களில் பிறந்து
வீதிவீதியாய் அலைந்து
அன்றாடம் பிச்சையெடுத்துப் பிழைக்கும்
என்னைப் போன்றவர்கள்
ஆயிரமாயிரம் இங்கே.
இன்றளவும் எங்களுக்கு வாக்குரிமையில்லை;
இந்தியர்களல்லவா நாங்கள்?
இன்தமிழர்களல்லவா?
இல்லையெனில் நாங்கள் யார்?
இது பற்றி யோசிக்க
அரசியல்வாதிகளுக்கோ
மனிதநேயவாதிகளுக்கோ
சமூகப்புரட்சியாளர்களுக்கோ
இனவாதப் போராளிகளுக்கோ
இந்திய வெறுப்பாளர்களுக்கோ
இவரொத்த இன்னுமின்னும் பேருக்கோ
ஏன் இன்றுவரை மனமில்லை?
ஒருவேளை எல்லா அரசிலும் நாங்கள்
இருந்தவாறிருப்பதாலா?
சாதி சமய இன நிறங்களைக் கடந்து
நாங்கள் வருந்திக்கொண்டிருப்பதாலா?

தேவையும் அளிப்பும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


தேவையும் அளிப்பும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


நாற்பது அறைகளைக்கொண்ட அரண்மனை போன்ற
மாளிகைவாசி
அவற்றில் ஆறு அறைகளை வீடற்ற வறியவர்களுக்குத்
தந்தால் என்ன?”
என்றார்.
நான்கு அறைகளைக் கொண்ட உங்கள் வீட்டில்
ஒன்றை நீங்களும்
ஒற்றை அறை கொண்ட எனது வீட்டில்
ஒரு சிறு மூலையை நானும்
கொடுக்கலாமே
என்றேன்.

THE MILLION DOLLAR QUESTION Latha Ramakrishnan

THE MILLION DOLLAR QUESTION

Latha Ramakrishnan


THE DIVIDE & RULE POLICY

FOLLOWED BY

RULERS
OR
RIOTERS ?
OR
ABETTORS?
OR
ALL OF US?




BEWARE OF THE MASTERS! Latha Ramakrishnan


BEWARE OF

 THE

 MASTERS!

Latha 
Ramakrishnan



Being safe inside their palatial mansions
Sitting in their grand sofas
Sipping coffee tea or wine
Or when they dine
Having myriad dishes
and myriad ways to entertain
They speak, discuss, debate
The sad fate of
the underprivileged millions…
Again and again
Fraternal feelings they feign;
Using the same refrain
All to their gain….
With the same intention
of causing tension
amidst people of
various sections
They spoon-feed questions
To you me and to our Mother Land's
daughters and sons…
Never considering their slaves as equals
these Masters go on giving sermons on
the Milk of Human Kindness
so as to keep the gullible people away
from thinking on their own
and make them feel disowned.
In hundred and odd ways
They make you echo all that they say
Treating you as non-entities always
and thereby hangs a tale.
Claiming to be the voice of the voiceless
They succeed in hoodwinking the people
into believing as success their downfall_
And the tragedy of it all.


ஆரூடக்காரர்களும் அருள்வாக்குச்சித்தர்களும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


ஆரூடக்காரர்களும் அருள்வாக்குச்சித்தர்களும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


கைபோன போக்கில் சோழிகளை உருட்டி
விழிகளை அகல விரித்து அச்சுறுத்தி
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று
தான் சொல்லும் ஆரூடம் பலித்து
தனக்கு அருள்வாக்குச் சித்தர் என்ற பட்டமும் பிராபல்யமும் கிட்டவேண்டுமென்ற
பெருவிருப்பில் பரிதவித்து
பயணவழியில் வண்டியின்ப்ரேக்
வேலைசெய்யாமலோ
க்ளட்ச் பழுதடைந்தோ
சக்கரங்களில்
ஒன்றிரண்டு
கழண்டு தனியே உருண்டோடியோ
கோரவிபத்து நிகழவேண்டுமென்ற
பிரார்த்தனையில்
கண்மூடிக் கரங்கூப்பி லயித்திருப்பவர்களுக்குக்
கேட்பதில்லை
குருதி பெருகத் துடித்துக்கொண்டிருப்பவர்களின்
மரணஓலம்.