LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, August 8, 2016

இறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் வந்தாலென்ன? லதா ராமகிருஷ்ணன்

இறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் 

வந்தாலென்ன?

லதா ராமகிருஷ்ணன்


நேற்று திரு. ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் குறைந்தது நூறு பேர் வந்திருந்தார்கள். ஊர்த் தோழர்கள், பள்ளித் தோழர்கள், கசடதபற மற்றும் நண்பர்கள், பிற நண்பர்கள், வாசகர்கள், அசோகமித்திரன், வைதீஸ்வரன், க்ரியா ராமகிருஷ்ணன், . முத்துசாமி, சா. கந்தசாமி, பிரபஞ்சன், ஷங்கரநாராயணன், மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன் உள்ளிட்ட மூத்த எழுத்தாளர்கள், பிற சிற்றிதழ் நண்பர்கள், பிற எழுத்தாளர்கள், கவிதையுடன் தொடர்பே இல்லாமல் வேடிக்கை பார்க்க மட்டும் ஓரிருவர் ஆகியோர் இதில் அடங்குவர். வெளியூர்களிலிருந்து வந்திருந் தார்கள்.”

_ இது கவிஞர் ஞானக்கூத்தனின் மறைவுக்கு அடுத்தநாள் அவருடைய மகன் தன்னுடைய முகநூல் பக்கத்தில்             பதிவிட்டிருந்த நெகிழ்ச்சியான ்நன்றியின் ஆரம்பப் பகுதி.

ஆனால், 7.8.16 தேதியிட்ட ஜூனியர் விகடனில்கடவுள் முதல் கவிஞன் வரைஎன்ற தலைப்பிட்ட கட்டுரையின் ஆரம்ப வரிகள் பின்வருமாறு::

அதே திருவல்லிக்கேணி. அதேபோல 20 பேர் என எழுதி யிருந்தார் கவிஞர் மனுஷ்யபுத்திரன். பாரதியின் இறுதி ஊர்வலத்தில் நடந்த அதே அவலம். ஞானக்கூத்தன் இறுதி ஊர்வலமும் அப்படித்தான் நடந்தது. எழுத்தாளர்களை யானை மீது ஊர்வலம் அழைத்துச்சென்று கொண்டாட வேண்டும் எனப் பிரியப்பட்டவரின் இறுதி ஊர்வலம் அது.'

_இறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் வந்தார்கள் என்பதிலா மாற்றுப்பாதையை ஏற்றுக்கொண்டவர்களின் மனநிறைவு அடங்கியிருக்கிறது? பாரதி நினைத்திருந்தால் எட்டயபுரம் மகாராஜாவையோ ஆங்கிலேயர்களையோ போற்றி எழுதி பெயரும் புகழும் பெற்றிருக்க முடியாதா? ஏன் செய்ய வில்லை? வாழ்ந்த காலத்தில் இந்திய விடுதலை இயக்கத் தலைவர் களோடு சரிசமமாகப் பழகியவர் பாரதி.

அதேபோல், ஞானக்கூத்தன் நினைத்திருந்தால் வேறுவித மாகக் கவிதை எழுதியிருக்க முடியாதா என்ன? அப்படிச் செய்யா திருந்ததுதான் அவருக்கும் நிறைவளித்தது; அவரையும் நிறைவான கவிஞனாக அடையாளப்படுத்தியது.

அது சரி, ஞானக்கூத்தன் போன்ற சிறந்த கவியை மக்கள் அறிய வில்லையே, அங்கீகரிக்கவில்லையே, அரசு அங்கீகரிக்கவில் லையே, மரியாதை செய்யவில்லையே என்று  அங்கலாய்க்கும் ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள் அதற்கான என்ன முயற்சி எடுத்தன? நினைத்திருந்தால் ஞானக்கூத்தன் உயிரோடு இருந்தபோதே அவருக்கு பிரம்மாண்ட விழா எடுத்திருக்க முடியாதா என்ன?

மக்களைச் சொல்லித் தப்பிக்க முடியாது. தங்களிடமிருக்கும் பண பலத்தைக் கொண்டு ஒருவித மொண்ணைத்தனமான ரசனையையே வாசகர்களிடம் உருவேற்றுவதில்    முனைப்பாக இருந்தபடியே நல்ல எழுத்தாளர்களை நாடு மதிக்க வில்லையே என்று அங்கலாய்ப்பது வெறும் பரபரப்புச் செய்தி தரும் ஆர்வமே தவிர நல்ல எழுத்தின் மீதான உண்மையான அக்கறையல்ல.

 





Friday, July 22, 2016

ஆரூடக்காரர்களும் ராசிபலன்களும்!

ஆரூடக்காரர்களும் ராசிபலன்களும்!

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)





1
யதேச்சையாய் உதிரும், அல்லது, வேண்டுமென்றே உதிர்க்கப்படும்
ஒரு பெயரைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பதும்
அதை வெறுமே உச்சரித்துக்கொண்டிருப்பதும்
உங்களுக்குப் போதுமானதாயிருக்கலாம்.
ஆனால் அதுதான் இறந்துகொண்டிருக்கும் இலக்கியத்தைப்
பிழைக்கவைப்பதற்கான ஒரே வழி
என்று வகுப்பெடுக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.
கல்லாதது கடலளவுதான். என்றாலும்
நான் மாணவப்பருவத்தைக் கடந்துவெகுதூரம் வந்தாயிற்று.
இன்னும் ஆரம்பப்பள்ளியில் இருக்கும் நீங்கள்
அனுதாபத்திற்குரியவர்.

2
நுனிப்புல்லா கடலாழமா உங்கள் அறிவின் தீட்சண்யம்?
உங்கள் மனதுக்கு நன்றாகவே தெரியும்.
மனப்பாடமாக நான்கு பெயர்களை
வரிசையாக உச்சரிப்பதல்லவே அறிவு?
ஆகாசத்தைத் தொடுவதற்கான சூத்திரமாக நீங்கள் அதை
நம்பிக்கொண்டிருந்தாலும் பரவாயில்லை.
ஆனால் மற்றவர்களை மதிப்பழிப்பதாய்ப் பார்த்து
எள்ளிநகையாடும் முன்
உங்களை நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள்.
நோஞ்சான் கொம்புகளோடு சிலுப்பித் திரியும் உங்களை
ஆசானாக எப்படி வரிக்க இயலும்?

 3
யாரும் கொம்புசீவி விடலாம்,
ஆனால், முறிந்தால் வலி உங்களுக்கு மட்டுமே.
குழந்தைகூட தகப்பன்சாமியாகும்தான்.
ஆனால், ‘ப்ரோக்ராம்ட்’ குழந்தை யல்ல;
மனிதனின் ஆறாம் அறிவு
கிளியிடம் தர்க்கம் செய்யவியலுமா என்ன?

 4
திறனாய்வுக்கோலைக் குறுக்கே நீட்டிப்
பிறரைத் தடுக்கிவிழச் செய்து
கைகொட்டிச்சிரிக்கும் முன்
சூரியனின் தகுதியைக்
கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

5
அன்றாடம் ஆயிரம் நாளிதழ்கள்;
ஒவ்வொன்றிலும் ராசிபலன்கள் வெவ்வேறாய்.
அவ்வாறாய் கவிதை ஆரூடக்காரர்களும்…..
கவிதை செத்துவிட்டது என்பார் சிலர்;
செத்துக்கொண்டிருக்கிறது என்பார் சிலர்;
சாகப்போகிறது என்று சிலர் சொல்ல,
சாகக்கூடியது என்று சிலர் சொல்ல
சத்தியமாயின்னும் பிறக்கவேயில்லை என
சாதிக்கும் சிலர்.

 6
இன்னும் பிறக்காத கவிதையைப் பிழைக்கவைக்க
திறனாய்வுச் சத்துணவாய் எதையெதையோ கலந்து பிசைந்து
உண்ணத் தருவார்.
குமட்டிக்கொண்டுவரும் குழந்தைக்கு
தன்னிச்சையாய் முகத்தை மறுபுறம் திருப்பிக்கொள்ளும்
பிள்ளையின்   முதுகில்
பேயறை பதம் பார்க்கும்.
வலியில் சில துள்ளித் துடிக்க

சில வலிக்க வலிக்கக் கடித்துவிடும்!.



Wednesday, July 20, 2016

TRANSCIENCE (Soliloquy – 2) ‘rishi’ (Latha Ramakrishnan)

TRANSCIENCE

 (Soliloquy – 2)



‘rishi’

(Latha Ramakrishnan)


Yester night
some  words as stray fireflies and butterflies
were hovering over me, oozing glow  so rare
proving life more than a mere vanity fair
hoping that they would be seamlessly woven
into a poem.

But, half-afraid of the alien cabin
half of me already asleep, the rest drooping
I waved them away with a heavy heart.

Today I am wide awake,
waiting for those fireflies and butterflies
to bless me with their wings and shine
the boon of a poem sublime….

Much as I try, they refuse to oblige.
I remain a vauum to be filled by the
 ‘never to return’ Moment.


நிலையாமை

நேற்றிரவு
சுற்றித் திரியும் சில மின்மினிப்பூச்சிகள்
சில வண்ணத்திப்புச்சிகள்
என் தலைக்கு மேலாய் 
வட்டமிட்டுக்கொண்டிருந்தன
அரிய வெளிச்சத்தை வழியவிட்டபடி;
வாழ்க்கை வெறும் ‘VANITY FAIR’ ’ அல்ல 
என்று நிரூபித்தபடி;
அத்தனை நேர்த்தியாய் அவை யோர் கவிதையில் 
ஊடுபாவாய் நெய்யப்படும் என்ற நம்பிக்கையோடு.... 
எனில், பாதி உறங்கிப்போய்விட்ட தேகமும்
மீதிக் கண்கள் செருகிக்கொண்டிருக்கும் கோலமுமாய்
கனக்கும் மனதுடன் அவற்றை விரட்டிவிட்டேன்.

இன்றுநான் முழுவிழிப்பில்
காத்துக்கொண்டிருக்கிறேன்
அந்த மின்மினிப்பூச்சிகளின் வண்ணத்துப்பூச்சிகளின் வருகைக்காய்.
தங்கள் சிறகுகளும் ஒளிர்வுமாய் அவை எனக்கோர் கவிதைவரம் அருளும் என்ற நம்பிக்கையோடு.
ஆனால், எத்தனை முயன்றாலும் அவை என் கோரிக்கையை  ஏற்க மறுக்கின்றன.
வெற்றிடமாகினேன் இனி ஒருபோதும் திரும்பிவராத  தருணம் இட்டுநிரப்ப