LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 4, 2024

கசக்கும் உண்மை - லதா ராமகிருஷ்ணன்

 கசக்கும் உண்மை

- லதா ராமகிருஷ்ணன்
(*2023 பிப்ரவரியில் எழுதப்பட்டது)
..........................................................................



தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியறிவிலும் தேர்ச்சியிலும் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்று சமீபத்தில் INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25, 2023 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் கல்வி தொடர்பாக INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றின் முடிவுகள் தரப்பட்டுள்ளன. இந்தி யாவில் 10000 பள்ளிக ளில் 20 தாய்மொழிகளில் பயிலும் 86000 மூன்றாம் வகுப்பு மாணாக்கர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்மொழித்திறன் தமிழ் மாணாக்கர்களிடம் மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் பட்டம் என்ற சொல்லை படம் என்று படித்தது நினைவுக்கு வருகிறது.

ஈரோடு இடைத்தேர்தலைப் பற்றிப் பரபரப்பாகப் பேசுவ தில் 100இல் ஒரு பங்காவது இந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேச அரசியல்கட்சிகளும் ஊடகங்களும் முன் வருமா என்பது மிக மிக சந்தேகமே.

அரசுப் பள்ளிகளில் மொழியறிவு, கணித அறிவு போது மான அளவு மாணாக்கர்களுக்கு சொல்லித்தரப்படுவ தில்லை என்று ஓர் ஆய்வு வெளிப்படுத்தினால் உடனே தனியார் பள்ளிகள் மட்டும் என்ன தரமானவையா என்று எதிர்க்கேள்வி எழுப்ப நிறைய ஆட்கள் உண்டு.

ஆனால், அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்கானவை அரசுப் பள்ளிகள். அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபடுவதாய் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், மனித உரிமைப் போராளிகளும் எழுத்தாளர்களும்அரசுப்பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு இணக்கமான கற்கும் சூழல் நிலவுகிறதா, நல்லவிதமாக கல்வி சொல்லித்தரப்படுகிறதா, மாணவர்களின் தன்மதிப்பை மேம்படுத்தும் விதமாக அந்த சூழல் இருக்கிறதா, அல்லது மாணாக்கர்களை மதிப்பழிக்கும்போக்கு நிலவு கிறதா என்றெல்லாம் கண்டும் கேட்டும் அறிய , ஏன் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை?

ஆசிரியர்களுக்கு தொழிற்சங்கம் இருக்கிறது. ஆசிரியர் களால் தங்கள் குறைகளை எடுத்துரைக்க முடியும். ஆனால், சிறு குழந்தைகள் முதல் வளரிளம்பருவத்தினர் வரை உள்ள மாணாக்கர்களுக்கு?

ஆசிரியர் – பெற்றோர் சங்கங்கள் பெயரளவுக்குத்தான் பல பள்ளிகளில் இயங்குகின்றன என்கிறார்கள்.

தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளி ஆசிரியப் பெரு மக்களுக்கு ஊதியம் அதிகம். ஆனால், படிப்பறிவற்ற பெற்றோர்கள் அவர்க ளிடம் எதையும் இயல்பாகப் பேச முடிவதில்லை. ’இலவசமாகக் கல்வி தருகிறோம் – இதில் கேள்வி கேட்கிறீர்களே’ என்று இடித்துக் காட்டும் இழிவுபடுத்தும் ஆசிரியப் பெருமக்கள் என்று சொல்லிக் காட்டும் ஆசிரியப் பெருமக்கள் உண்டு என்று பல பெற் றோர்கள் வருத்தத்தோடு சொல்லக் கேட்டிருக்கிறேன்.

கல்வி தரவேண்டியது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று; கல்வி பெறவேண்டியது குழந்தைகளின் அடிப் படை உரிமைகளில் ஒன்று’ என்பதை அறியாத அப்பாவி பெற்றோர்கள் தங்கள் பள்ளிக்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியப் பெருமக்கள் கற்றுத் தருவதே தங்களுக்குத் தரப்படும் ஆகப்பெரும் சலுகையாகக் கொள்கிறார்கள். அவ்விதமாய் அவர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.

அந்தந்த அரசியல் கட்சி அவரவர் தொண்டர்களுடைய குழந்தை களின் கல்வி குறித்து அக்கறை காட்டினாலே போதும். ஆனால், செய்கிறார்களா என்பது சந்தேகமே.

பாடத்தின் ஒரு பத்தியை ஆசிரியர் உரக்க வாசிக்கிறார். குழந்தை கள் அதை திருப்பிச் சொல்லுகின்றன. முடிந்து விட்டது மொழி யறிவுக் கல்வி. ஒரு பத்தியை பத்து முறை எழுதச் சொல்கிறார் கள். மனப்பாடமாகக் கூட அந்தப் பத்தியை அந்தக் குழந்தையால் சொல்லமுடிய லாம். ஆனால், அந்தப் பத்தியில் உள்ள தனித்தனி சொற்கள், எழுத்துகள் ஆகியவற்றை அந்தக் குழந்தை யால் அடை யாளம் காண முடிவதில்லை. இது என்னவிதமான மொழியறிவு? மொழியறிவுக்கல்வி? என்று வருத்தம் மிகக் கேட்கிறார்கள் சமூகப்பிரக்ஞைவாய்ந்த கல்வியாளர்கள்.

’ஒரு வகுப்பில் எட்டு பத்துக் குழந்தைகள் இப்படியிருப் பார்கள் தான். அதற்காக கல்வித்திட்டத்தை, ஆசிரியப் பெருமக்களை ஒட்டுமொத்தமாகக் குறைகூறுவதா?’ என்று கேட்பவர்கள் உண்டு. ஆனால், ஒரு வகுப்பில் பத்து குழந்தைகள் கற்றலில் பின்தங்கி யிருந்தால் அவர்களை அப்படியே விட்டுவிடலாமா? அவர்களைக் கற்றலில் முன்னேற்றுவது தேவையில்லையா? கடமையில் லையா?

வகுப்புகளில் மாறி மாறி பாடப்புத்தகங்களைத் தன் முன் விரித்து வைத்து, அல்லது கையில் ஏந்தியபடி அதிலிருக் கும் எழுத்துகள் என்னவென்றே தெரியாமல் ஆசிரியரின் வாயையே பார்த்துக் கொண்டிருக்கும், நாள் முழுக்க வகுப்பில் அமர்ந்துகொண்டிருக் கும், அவ்வப்போது ஆசிரி ய ரால் கண்டிக்கப்படும், மட்டந்தட்டப் படும் குழந்தைக்கு ஏற்படக்கூடிய நீடித்த உளவியல் பாதிப்புகள் ஏராளம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

தரமான கல்வியை அடித்தட்டு வர்க்கத்தினரின் குழந்தைகளுக் கும் கிடைக்கச் செய்ய வேண்டும். கிடைக்கச் செய்ய முடியும். அதற்கு முனைப்பான அக்கறையும் செயல்திட்டங்களும், அரசு களிடம் இருக்கவேண்டியது அவசியம்.

அரசியல் கட்சிகளும், சமூகமும் குழந்தைகளை இரண்டாந்தரக் குடிமக்களாய் பாவிக்கும் பார்க்கும் மனப் போக்கு மாற வேண்டும்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் லஞ்சலாவண் யங்கள் மிக அதிகமாகப் பரவியிருப்பதாகக் கூறப்படுகி றது. இதனால் உச்சபட்சமாக பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களின் பிள்ளைக ளான ஏழை மாணாக்கர்கள் தான். இந்தவிதமான சீர்கேடுகளும் தொடர்ந்தரீதியில் அடிக் கோடிட்டுக் காட்டப்படவேண்டிய தேவை யிருக்கிறது.

எத்தனையோ சேவை நிறுவனங்கள் கல்விப் பணியில் அர்ப்ப ணிப்பு மனோபாவத்தோடு இயங்கிவருகின்றன. அவர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் அரசு கோரிப் பெற வேண்டும். PPP எனப்படும் PUBLIC-PRIVATE PARTNERSHIP இல் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு முன் முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

ஊடகவெளி இதில் பெரும்பங்காற்ற முடியும். (ஆனால், தமிழை சிதைப்பதில்தான் அவை முக்கிய கவனம் செலுத்திவருகின்றன என்பது வருந்தத்தக்க விஷயம்).

மனமிருந்தால் ஆக்கபூர்வமாய் எத்தனையோ செய்யலாம்.

தரமான கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமைகளில் தலையா யது. அதைத் தரவேண்டியது, குறிப்பாக அடித்தட்டு வர்க்கத்தின ருக்குக் கிடைக்கச்செய்யவேண்டியது அரசுகளின் தலையாயக் கடமைகளில் மிகவும் முக்கியமானது.

தாய்மொழி மீது பற்றும் மரியாதையும் வருங்கால சந்ததியின ரிடம் ஏற்பட வெறுப்புப் பேச்சுகளோ, வெற்று முழக்கங்களோ உதவாது. தாய்மொழியில் பயிற்சியும் தேர்ச்சியுமே இன்றியமை யாதவை.

.....................................................................................................................................
பி.கு: மேற்குறிப்பிட்ட சுற்றாய்வில் தரப்பட்டுள்ள வேறு சில புள்ளி விவரங்கள் பின்வருமாறு:

2/25/23, 11:51 PM ‘42% of students meet global minimum proficiency level’ - Times of India
NEW DELHI: Around 42% of students surveyed across India met global minimum proficiency while 37% partially met it in mathematics, reveals a study by Stanford University’s Institute for Competitiveness.
The survey, conducted on 86,000 Class III students in 20 different languages across 10,000 schools in India, specifically highlighted language as being vital in acquiring early literacy.
The report, “Second State of Foundational Literacy and Numeracy 2022”, was released on Friday by Bibek Debroy, chairman, to the Prime Minister. It said 250 million Indian students were affected adversely due to the pandemic and that recovering from the children’s learning loss during the pandemic required more effort than simply reopening classrooms.
The Global Proficiency Frameworks (GPF) developed by United States
Agency for International Development ( ) defines the minimum proficiency levels for both reading and mathematics. The global proficiency levels include “does not meet minimum proficiency”, where learners lack the most basic knowledge and skills; “partially meets minimum proficiency”, where learners have limited knowled ge and skills; “meets minimum proficiency”, where learners have developed sufficient knowledge and skills, and “exceeds minimum proficiency” means that learners have developed superior knowledge and skills and can successfully complete complex tasks.
According to UNICEF, nearly two-thirds of 10-yearolds globally are unable to read and understand a simple text. With the Covid pandemic situation, the learning loss worsened, and every child across the world has fallen behind in learning.
Commenting on the current state of foundational learning and literacy, the report stated that in the contemporary world, in many countries, most children cannot interpret basic words and perform simple operations with numbers. According to a World Bank assessment, in India, around 50% of children lack foundational learning.
The report, however, says by adopting suitable innovation and agency demonstrated by teachers, collaborating with parents and using experiments with technology, the learning loss can be mitigated. In the last 50 years, India has lost over 220 languages, which means not enough attention is paid to preserving and taking care of languages.

நிலாமயம்! - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நிலாமயம்!

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
சிலருடைய கவிதைகளில் நிலவு கறைபடிந்ததாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு களங்கமற்றதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு சந்திரனாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அம்புலிமாமாவாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு கொஞ்சிக்குலவும் காதலியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அஞ்சிப் பதுங்கும் குழந்தையாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு உலவிக்கொண்டி ருப்பதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மிதந்துகொண்டி ருப்பதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மேகத்தைத்
தழுவு வதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மேகத்தைக் கண்டு நழுவியோடுவதாய்.
சிலருடைய கவிதைகளில் நிலவு உருண்டோடும் பந்தாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு உடையும் நீர்க்குமிழியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு
இரவின் குறியீடாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு
கனவின் அறிகுறியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு நாடோடியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு காத்தாடியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு காலமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அகாலமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மரணமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மறுபிறப்பாய்
நிஜத்தில் நீ யார் எனக் கேட்டால்
புவியின் ஒரே துணைக்கோள் அறிவியலின்படி
என்று குறுநகையோடொரு விடைகிடைக்கக்கூடும்....
எனில் நிலா முயல் வேண்டுமா வேண்டாமா என்று
நாம்தானே முடிவுசெய்யவேண்டும்!

கட்டிடக்கலை வரலாறு ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கட்டிடக்கலை வரலாறு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


கைவசமிருக்கும் கற்களையும் மணலையும் சிமெண்ட்டையும் ஜல்லியையும் தண்ணீரையும் கலந்து கட்டிக்கொண்டிருக்கிறாய்…

இந்தக் கற்களும் மணலும் சிமெண்ட்டும் ஜல்லியும் தண்ணீரும் தரமானவையா போதுமானவையா
என்று சரிபார்க்க உனக்கு நேரமில்லை மனமுமில்லை.

தினசரிச் சந்தையில் சுலபமாய் மலிவு விலைக்கு வாங்கவும்
விற்கவும் முடிகிறது.

அப்படிக் கட்டப்படுவதைக் கண்காட்சியாகப் பார்த்து மகிழ
அன்றாடம் சாரிசாரியாக ஆட்கள் வருகிறார்கள் எனும்போது
அதற்கான அல்லது அதைக்கொண்டு அருங்காட்சியகமும் பல்பொருள் அங்காடியும் அமைக்கப்படுவதுதானே புத்திசாலித்தனம்.

தரமற்ற அளவில் நிர்மாணிக்கப்படுமொரு கட்டிடம் இடிந்துவிழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதனால் நேரும் இழப்புகளும் அதிகம்.

ஒப்புநோக்க வார்த்தைகளால் கட்டப்படுவனவற்றுக்கு
அத்தகைய அபாயங்கள் குறைவு.

எத்தனை பலவீனமாகக் கட்டப்பட்டிருந்தாலும்
உறுதியானது என்று மற்றவர்களை நம்பவைக்கும் உத்திகளை
நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தால் போதும்.
காலத்துக்கும் அது உறுதியாக நிற்கும்.

அவ்விதமாய் கட்டப்படுவதன் அடி முடி காணா தலைமுறையினர்
அவற்றில் வாசம் செய்தபடி
அவற்றுக்கு வாடகை செலுத்தியபடி
அவற்றினூடாய் வாழ்ந்தேகியபடி
அவர் மீது இவரும் இவர் மீது அவரும் வெறுப்புமிழ்ந்தபடி….

அவர்களைக் காட்சிப்பொருளாக்கியபடி கட்டிடவியாபாரத்தில்
கொள்ளை லாபம் ஈட்டிக்கொண்டிருப்பவர்களை
கனவான்களாக காருண்யவாதிகளாக காண்பதும்
காட்டுவதுமாய்
ஊட்டிவளர்க்கபட்டுக்கொண்டிருக்கும்
கட்டிடக்கலை வரலாறு.

அலிஃப் லைலா வ லைலா எனும் 1001அரேபிய இரவுகள் - தமிழில் : முகமது சஃபி

...............................................................................................................................
அலிஃப் லைலா வ லைலா எனும்
1001அரேபிய இரவுகள்

தமிழில் : முகமது சஃபி
_

நண்பர் சஃபி clinical psychologist ஆகப் பணியாற்றிவருகிறார். அவரும் எழுத்தாளரும் நண்பருமான கோபி கிருஷ்ணனும்தான் எனக்கு Psychiatry, anti-Psychiatry சார்ந்த பல விஷயங்களை, நுணுக்கங்களை அறிமுகப்படுத்தி அந்தத் துறை சார்ந்த குறிப்பிடத் தக்க கட்டுரைகளையும் ஒன்றி ரண்டு நூல்களையும் தமிழில் மொழிபெயர்க்கச் செய்த வர்கள். சஃபியும் நிறைய எழுதியிருக் கிறார்; மொழி பெயர்த்திருக்கிறார். இப்போது சஃபியின் முனைப் பான உழைப்பில் 1001 அராபிய இரவுகள் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டு உயிர்மை பதிப்பகத்தால் நான்கு தொகுதிகளாக வெளியிடப் ட்டிருக்கிறது.
_ லதா ராமகிருஷ்ணன்
...............................................................................................................................
நேற்றையக் கனவை நினைத்துக் கொண்டே புத்தகக் கண்காட்சிக்கு தனது கழுதையுடன் நடந்து கொண்டிருந்தார் முல்லா நஸ்ரூத்தீன்.
சர்வ லட்சணங்களும் பொருந்திய பஞ்ச கல்யாணி குதிரையில் தான் அமர்ந்திருக்க தனது மனைவியின் சாயலிலுள்ள 1002 இளம் யுவதிகள் வெண்சாமரம் வீச ஊர்கோலம் போவதாய் உல்லாசக் கனவு.

காலையில் கண்முழித்ததும் கனவை நினைத்துப் பதறிவிட்டார் முல்லா. கனவில் செளகரியங்களோடு இருந்தால் அதற்கு எதிர் மறையாக அல்லவா எதார்த்தம் மோசமாகப் பல்லிளிக்கும் என்று கனவு சாஸ்திரம் சொல்லுவதால் தனது நீளமான காதை இழப் போமா ?தனது கழுதை தன்னை விட்டு ஓடிவிடுமா ?அல்லது தன்னையே தொலைத்து விடுவோமோ என பலவாறு யோசித்து முல்லா பயந்தே விட்டார்.

கழுதையை இழப்பதும் தன்னை இழப்பதும் வேறு வேறல்ல என உணர்ந்து முல்லா திரும்பிப் பார்க்க கழுதை அப்புராணியாக வந்து கொண்டிருந்தது.. தனக்கு மட்டும் இரண்டடுக்கு பவுடர் போட்டு பிரியமான வாய் பேசாத ஜீவனான கழுதைக்கு லேசாகப் பவுடரை இழுவிவிட்டது முல்லாவைச் சங்கடப்படுத்த அவசர அவசரமாக பவுடர் டப்பாவை எடுத்து தனது நேசத்துக்குரிய கழுதையின் உடல் முழுக்கப் பவுடரை அப்பிவிட்டார் முல்லா.

போகும் வழியில் நடைபாதைக்கடையில் ஃப்ராய்டின் நகைச்சுவை யும் நனவிலியும் புத்தகத்தைப் பார்த்து அதைத் தின்னக்கொடுத் தால் தனது கழுதை அறிவாளியாகும் என அதை எடுத்து கழுதை யின் வாயில் வைக்கக் கவிதைப் புத்தகங்களையே தின்றுப் பழக்கப்பட்ட அவரது கழுதை முல்லாவைப் பார்த்து நகைத்தபடி அவரை எட்டி உதைத்து விட்டு ஓடியது.

_ சஃபி
...................................................................................................................

பிரதியை வாசித்தல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பிரதியை வாசித்தல்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
எல்லோருடைய கைகளிலும் புத்தகம் இருந்தது.
அவை சில சமயம்
ஒரே புத்தகத்தின் பல பிரதிகளாக இருந்தன
வேறு சில சமயங்களில்
வெவ்வேறு புத்தகங்களின் பிரதிகளாக இருந்தன.
புகைப்படத்தில் புத்தகத்தை
யொரு குழந்தையாக ஏந்திக்கொண்டிருந்தனர் சிலர்
அருங்காதலராக அரவணைத்துக்
கொண்டிருந்தனர் சிலர்
அணுகுண்டைக் கையில் பிடித்துக்கொண்டிருப்பதுபோல்
கலவரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தனர் சிலர்;
அந்தரத்தில் மிதக்கக் கிடைத்த மாயக்கம்பளமாய்
பெருமைபொங்கப் பிடித்துக்கொண்டிருந்தார்கள் சிலர்.
இன்னும் சிலருக்கு புத்தகங்களும் புகைப்படங்களும்
சுயவிளம்பரப் பதாகைகள்
எப்பொழுதும்போல்
எல்லாவற்றையும்போல்
இருபத்தியெட்டு புத்தகங்கள் வாங்கினேன் என்றவர் முகம் இருள
இருநூற்றியெட்டு வாங்கினேன் என்றார் ஒருவர்.
இல்லாத காசு கிடைக்கும் நாளில் இந்தப் புத்தகங்களைக் கட்டாயம் வாங்குவேன் என்று எண்ணிக்கொண்டான் வாசிப்பில் மிகுந்த ஆசையுள்ள ஏழைப் பள்ளிமாணவரொருவன்.
புத்தகம் ஆண்களுக்காக உருவாக்கப்படுபவை
என்று எங்கோ ஓர் அரங்கில்
யாரோ முழங்கிக்கொண்டிருந்தார்கள்.
மங்கிய தெருவிளக்கின் ஒளியில் இரவு உணவுக்கென எதிரேயிருந்த டீக்கடையில் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்ட பின் அதைக் கட்டித்தந்த செய்தித்தாள் கிழிசலை அத்தனை ஆர்வமாக எழுத்துக்கூட்டிப் படித்துக்கொண்டிருந்தார்
நாளெல்லாம் அந்த அழுக்கு பிளாஸ்டிக் நாற்காலியில் ஒடுங்கி உட்கார்ந்துகொண்டிருக்கும்
அடுக்குமாடிக் குடியிருப்பின் செக்யூரிட்டி.
அப்பாவைக் கிள்ளிக்கிள்ளிவிட்டவாறே அழுதுகொண்டிருந்த அந்த சன்னதேகச் சின்னப்பையனுக்கு
அங்கிருந்த அத்தனை புத்தகங்களும் கிடார் பொம்மையாகவே தெரிந்தன.
முகங்கள் மறைய அடையாளங்காணலாகாக் கைகள் உயர்த்திப் பிடிக்கும் புத்தகங்களிலிருந்து
சொற்கள் சிறகடித்துப் பறக்கின்றன
அர்த்தம் துறந்து.

அன்பு செய்தலின் அனேக பாவனைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அன்பு செய்தலின் அனேக பாவனைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


இந்தா வாங்கிக்கொள் சுளீரென்றொரு கத்திக்குத்து
அதே கத்தியால் உனக்கொரு நல்ல ஆப்பிள் நறுக்கித் தருவேன்
அத்தனை அன்போடு
மாட்டேனென்று சொல்லாமல் முழுங்கிவிடு.
நறுக்கலுக்கும் வெட்டலுக்கும் வேறுபாடு
உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை
மனசாட்சி மட்டுமா தொல்லை.....
நான் உளறுவதாய்ச் சொன்னாயே _
உள்ளுக்குள் உன்னுடைய முப்பத்தியிரண்டு பற்களைப்
பத்துமடங்காக்கி
ஓங்கிக்குத்துவிட்டு அத்தனையையும் பேத்துப்போட்டபின்
எதிர்பாராத விதமாய் நீ எதிர்ப்பட்டபோது
எத்தனை அருளோடு சிரித்தேன் பார்த்தாயல்லவா?
பேதை நான் உனக்கு
பெத்தப் பேதை நீ யெனக்கு.
காற்றடைத்த பையானாலும்
மெய்யாகவே வலிக்கும் காயங்களை
விழுப்புண்களாகக் கொள்ளும்
மீமெய்யியல் மனிதராய்வாழ்ந்துகாட்டுவதாக
மார்தட்டிக்கொள்.
மிதப்போடு கடந்துசெல்.
வழியில் தென்படும் அயோக்கியசிகாமணிகளுக்கும்
ஆன்ற பெருமக்களுக்கும் அதேயளவான சிரிப்பையும் வரவேற்பையும் நல்கி
அதனாலேயே உன்னை அற்புதமனிதராகக் காண்பிக்கும் முனைப்பில்
உன்னை அழகாகக் காட்டிக்கொள்ளும் அதியார்வத்தின்
அவலட்சணத்தைக் காட்ட உனக்கொரு
ஏற்ற ஆடியை எங்கிருந்து கொண்டுவர இயலுமென்னால், சொல்?
நாதியில்லாத கவிக்கு வீடளிப்பதைக் காட்டிலும்
நாலு ஊரில் நாலு வீடு ஏற்கெனவே இருப்பவர்க்கு
இன்னுமொன்றை அளித்தலே கனிவின் உன்னதநிலை
என்று ஓதிக்கொண்டிருப்பதே அரசநீதியென்றாக _
Selectiveவ்வாக சீறு;
Selectiveவ்வாக மீறு;
Selectiveவ்வாகவே அன்புசெய்தலே சகலரிடமும் அன்புசெய்தல் என்று
கூற முடியுமானால் கூறு.
பாரு பாரு நல்லாப் பாரு
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு

CULTURE LITERATURE PERSONALITIES _ A COLLAGE by Dr.K.S. SUBRAMANIAN

 CULTURE LITERATURE PERSONALITIES

_ A COLLAGE

by Dr.K.S. SUBRAMANIAN



மதிப்பிற்குரிய மூத்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாள ருமான அமரர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் இடம்பெறும் இந்த நூலை நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.

இலக்கியம் – சமூக வெளிகளில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங் களைக் கட்டுரைகளாக டாக்டர் கே.எஸ். எழுதி பல் வேறு தொகுப்புகளில் அவை வெளி யாகியிருக்கின்றன. அவற்றி லிருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளும், புதிதாக எழுதிய கட்டுரை களும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

டாக்டர் கே.எஸ். மீது மிகுந்த மரியாதையும் அபிமானமும் கொண்ட, திரு.இறையன்பு டாக்டர் கே.எஸ்.ஸின் அரும் பணிகள் குறித்து அகல்விரிவான முன்னுரை எழுதியுள்ளார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 20க்கும் மேற்பட்ட அடர்செறிவான கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூலின் முகப்பு அட்டையைப் பார்த்ததும் மிகவும் வருத்தமா யிருந்தது.

‘ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் ஒரு நூலின் முகப்பு அட்டை அந்த நூலின் சாரத்தை, முக்கியத்துவத்தைக் குறிப்புணர்த்துவ தாய், அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் அமையவேண்டும். இந்த நூலின் முகப்பு அட்டையில் Dr. கே.எஸ். ஸின் புகைப்படத்தையே பெரிதாக வெளியிட்டிருக்கலாம்.


இலவு காப்பது கிளி மட்டுமல்ல- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இலவு காப்பது கிளி மட்டுமல்ல

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


அட்சர லட்சம் பெறும் கவிதைகள் என்
று
ஒரு வாசகராய்த் தன் கவிதைகளை
நிதானமாய் அளவுமதிப்பீடு செய்துகொண்ட
கவிஞர்
கடனோ உடனோ வாங்கி
PRINT ON DEMAND புண்ணியத்தில்
அச்சிட்ட 50 பிரதிகளுக்கான
பிழைத்திருத்தம்
லே-அவுட் முகப்பு அட்டை
பின் அட்டை blurb ஒரு
சின்னக் கவிதையாக
பார்த்துப்பார்த்துச் செய்து
பொன் வைக்கும் இடத்தில் வைத்த
பூவனைத்தாய்
நூல் வெளியீட்டுவிழாவையும்
நடத்தி முடித்த பின்
திறனாய்வென்பது எழுத்தில்தான்
அமையும்
என்று சொல்வதற்கில்லை,
சாணிக்கவளங்களாகவும்
கவண்கற்களாகவும்கூடக்
கிடைக்க வழியுண்டு
என்ற முழு உண்மையின்
முள்மகுடத்தைத்
தலையில் சுமக்கச் சித்தமாய்
100 கவிதைகளடங்கிய தனது
தொகுப்பிற்கான
ஒற்றை விமர்சனத்திற்காக
நித்தமும் காத்துக்கொண்டிருக்கத்
தொடங்கினார்.

பிரதியும் வாசகரும் வழிகாட்டியும் வாசிப்பும் .......

 ........................................................................................................................................

பிரதியும் வாசகரும் வழிகாட்டியும் வாசிப்பும் .......
…………………………………………………………………………………………………………
ஒரு கதையை எப்படி உள்வாங்குவது, ஒரு கதை தரமான கதையா, மேம்போக்காக எழுதப்பட்ட கதையா என்று எப்படித் தெரிந்து கொள்வது என்பதை அறிந்துகொள்ள வாசகர்களுக்கு வழிகாட் டும் எழுத்துகள் ஒருவகையில் தேவையாக இருந்தாலும் இன்னொரு வகையில் அவை ஏதோவொரு வகையில் வாசகப் பிரதிகளை முடக்கிவிடுவதாகவே தோன்றுகிறது. இப்படித்தான் ஒரு பிரதியை அணுகவேண்டும் என்று ஏதோவொரு வகையில் வாசகரை மூளைச்சலவை செய்வதாகவே தோன்றுகிறது.
ஒரு கதையை அணுகும் விதங்கள் அல்லது வழிகள் என்று சொல்லாமல் அணுகும் விதம் அல்லது வழி என்று சொல்வதி லேயே ஒரு ஒற்றை வாசகப் பிரதியை வலியுறுத் தும் போக்கு புலப்படுகிறது. ஒரு பிரதி ஏதோ வொரு விதத்தில் வாசகரிடம் தாக்கம் ஏற்படுத்தும்போது அவர் அதை உள்வாங்க ஆர்வங் காட்டுகிறார். அதன் உள்ளும் வெளியும் திரிந்து அது குறித்த கூடுதல் தகவல்களை, நுட்பங்களை சேகரிக்க முற்படுகிறார்.

இன்றைய காலகட்டத்தில் இதற்கு எந்தவொரு வழிகாட்டி யின் துணையுமின்றி ஒரு வாசகராலேயே தேவையான கூடுதல் விவரங்களை – பிரதி எழுதப்பட்ட பின்புலம், அதில் இடம் பெற்றுள்ள குறியீடுகள், பிரதியை எழுதியவர் குறித்த விவரங்கள் அன்னபிற – பெற முடி யும்.

ஒரு சாதாரண புனைவு – அ-புனைவுப் பிரதியை விமர் சனம் / திறனாய்வு மூலம் ஆஹா ஓஹோ என்று வாசக மனங்களில் – புதிய வாசகர்கள் மனங்களில் மட்டுமல்ல – பதியவைக்க முடியும். அதேபோல், மொழிபெயர்ப்புப் பிரதிகளைப் பொறுத்த அளவிலும் கூட செய்ய முடியும்.

பிரதிகளை நல்ல எண்ணத்தோடு ஒருவர் அறிமுகப் படுத்த, அதை எப்படி அணுகுவது என்று வழிகாட்ட ஒரு வர் முற்பட்டாலும், அவரையுமறியாமல் தன்னுடைய வாசகப்பிரதியே சரியானதாக, மேலானதாக முன்வைக்கும், வலியுறுத்தும் தன்மை வெளிப்பட்டுவிடுகிறது.

இது குறித்து இன்னும் நிறைய எழுத இருக்கிறது….

கேட்கத்தோன்றும் சில கேள்விகள்……

 கேட்கத்தோன்றும் சில கேள்விகள்……



1. சமகால இலக்கியப் பிரதிகளில், குறிப்பாக அயல்நாட்டு இலக்கியங்களின் மொழிபெயர்ப்புப் பிரதிகளில் குறியீடு களை அடையாளங்காண முடிந்தவர்கள் தொன்ம இலக்கி யங்களை, குறிப்பாக இதிகாச புராணங்களை ‘கட்டுக்கதைகள்’ என்று பீச்சாங்கைவீச்சாகப் பகுத்துவிடு வது சரியா? இது என்னவித மான அறிவுசாலித்தனம்?
2. ஒருவர் தனது சுயசரிதையில் உண்மை பேசவேண்டி யது மிகவும் முக்கியம்; அவசியம். ஆனால், அவ்வாறே இன்னொரு வரின் வாழ்க்கையைப் பற்றிய உண்மை விவரங்களை, இன்னொருவர் தன்னிடம் நேர்பேச்சாக, நட்புரீதியாக பல வருடங்களுக்கு முன்பு சொன்னதை உண்மையான உண்மை யாக வெளியிடு வது, சரியா? தேவையா?
3. தனது புத்தகங்களைத் தானே வெளியிடுவதையும், தன் புத்தகங்களைப் பிறருக்கு அறிமுகம் செய்யும் பதிவுகளை வெளியிடுவதையும் இலக்கியப்பணியாகக் கொள்பவர் அதைச் செய்யும் சக-படைப்பாளியை விளம்பர-மோகியாக பாவிப்பதும் பகுப்பதும் ஏன்?