வேடதாரிகளும் விஷமுறிப்பான்களும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
(*சொல்லடி சிவசக்தி கவிதைத்தொகுப்பிலிருந்து - கவிதை 28)
அத்தனை கவனமாகப் பார்த்துப்பார்த்துத் தேர்ந்தெடுத்து
ஊரிலேயே மிகச் சிறந்த தையற்காரரிடம் கொடுத்துத்
தைக்கச்சொல்லி
மீண்டுமொருமுறை திருத்தமாய் நீவி மடித்து
பதவிசாக அதையணிந்துகொண்டு
ஆடியின் முன் நின்றவண்ணம்
அரங்கில் நளினமாக நடந்துவருவதை
ஆயிரம் முறை ஒத்திகை பார்த்து முடித்து
அப்படியே நீ வந்தாலும்
அடி! உன் விழியோரம் படமெடுக்கும் நாகம்
வழியெங்கும் நஞ்சு கக்கும் என
அறிந்திருக்குமெனக்குண்டாம்
குறைந்தபட்சம்
இருபது திருநீலகண்டங்கள்!


No comments:
Post a Comment