LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, December 10, 2022

இன்று புதிதாய்ப் பிறந்தோம்! _ லதா ராமகிருஷ்ணன்

 இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

_ லதா ராமகிருஷ்ணன்
வயதானவர்களையெல்லாம் ஒரு மொந்தையாக பாவிக் கும் வழக்கம் நம்மி டையே பரவலாக இருந்துவருகிறது.
மருத்துவ வசதிகள், வயதானவர்களுக்கு நிதியாதாரம், ஓய்வூதியம், தங்குமிடவசதி, தலைச்சாயம் முதலிய வசதிகள் அதிகரித்துள்ள இந்நாளில் (இந்த வசதிகள் வயதா னவர்கள் அனைவருக்கும் ஒரேபோல் கிடைக்கிற தென்று சொல்லமுடியாது என்பதும் உண்மையே) முன்பு அறுபது வயதே முதுமையாகக் கருதப்பட்ட நிலை மாறி இன்றைய 60 வயது 40 வயதின் அளவே யாகியிருப்பதாகச் சொல்ல வழியுண்டு. ஆனாலும் 60 - 90 வரையான அனைத்து வயதினரையும் முதியவர்கள் (மூத்த குடிமக் கள் அழகான விவரிப்பு!) என்ற ஒரே அடைமொழியில் அடை யாளப்படுத்தும் போக்கே இன்றளவும் பரவலாக இருக்கிறது
வயதானவர்கள் என்றால் ஏக்கத்தோடு தன் இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்த்துக்கொண்டேயிருப்பார்கள். தன்னால் இப்போது இதைச் செய்ய முடிய வில்லையே, அதைச் செய்ய முடியவில் லையே, தன்னை யாரும் கவனிக்கவில்லையே, தன்னோடு யாரும் பேசுவதில் லையே, தன்னை யாரும் பொருட்படுத்தவில்லையே, தன்னிடம் யாரும் அறிவுரை கேட்கவில்லையே – இப்படி ஏங்கு பவர்களாகவே, அங்கலாய்ப்பவர்களாகவே வயதா னவர்களைச் சித்தரிப்பதில் நிறைய பேருக்கு ஒரு சந்தோஷம்.
இப்படியிருக்கும் வயதானவர்களும் உண்டு என்பது உண்மைதான்.
ஆனால் இந்த அங்கலாய்ப்புகளும், ஆற்றாமைகளும் இளைய வயதினருக்கு இல்லையா என்ன?
சில நாட்களுக்கு முன்பு ஒருவர் முதுமை என்றால் பொய்ப்பல், ஹியரிங் எய்ட், மருந்து மாத்திரை, கைத்தடி என்று நிறைய வெளியாதரவுகளின் துணையோடு வாழும்படியாகிறது என்று வருத்தப்பட்டிருந்தார். ஒருவகையில் அது உண்மைதான் என்றா லும் அப்படிப் பார்த்தால் இளம் வயதில் பவுடர், குறிப்பிட்ட உடை கள், சிகையலங்காரம், பர்ஃப்யூம், என்று பல தேவைப் படுகின்ற னவே? பிடிக்காத படிப்பு, அந்நியவுணர்வூட்டும் இடத்தில் வாழ்வா தாரத்திற்காக வாசம், என்று நிறைய சொல்லலாம்.
இந்த கையறு நிலையுணர்வுகளையெல்லாம் கடந்து தானே மாற்றுத்திறனாளிகள் தினசரி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்?
பத்மினி மேடமுக்கு இப்போது 90 வயதுக்கு மேலேயிருக்கும். (எனக்கே 65 வயதாகிவிட்டது). ஆனால் வாழ்வை ஏக்கத்தோடு பின்னோக்கிப் பார்ப்பதோ, அங்கலாய்ப் பதோ அவரிடம் கிடை யவே கிடையாது. அவருக்குக் காலாறக் கடற்கரையில் நடப்பதும், கடலைப் பார்த்துக் கொண்டிருப்பதும் மிகவும் பிடிக்கும். பத்து வருடங்கள் முன்புவரை கூட தினசரி தன் நட்பினர் சிலரோடு போய்க் கொண்டிருந்தார். இப்போது முடியவில்லை. அது குறித்து மனதில் அவ்வப்போது தோன்றக்கூடிய ஒரு சிறு இழப்புணர்வு அங்கலாய்ப்பாக உருவெடுக்க அவர் அனுமதித் ததேயில்லை!
ஒவ்வொரு வயதுக்கும், பருவத்துக்கும் அதற்கான அனுகூலங்கள் உண்டு என்று பத்மினி கோபாலன் கூறியது எவ்வளவு உண்மை என்பதை 40 வயதுகளில் தனியாக இயல்பாக ஹோட்டலுக்குச் சென்று, யாரும் பார்ப்பார் களோ என்று self-conscious ஆக படபடப் பாக உணராமல் ஆற அமர ருசித்துச் சாப்பிடும் போது உணர்ந்தி ருக்கிறேன்!
70 வயதுகளில் இளையதலைமுறையினர் பயிலும் கணினிப் பயிற்சி மையத்திற்குச் சென்று கணிப்பொறியைக் கையாளும் பயிற்சி பெற்றார்.
சில வருடங்களுக்கு முன்பு வீதியோரம் வசிக்கும் ஏழைப் பெண் மணி யொருவரின் மகள் விபத்தாக கருவுற்றபோது அவளுக்கு உதவ எங்கோ தொலைதூரத்திலிருந்த அமைப்பு ஒன்றுக்கு தோழர் மோகன் தாஸின் உதவி யோடு அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு போய் அங்கே மணிக்கணக்காகக் காத்தி ருந்து அந்தப் பெண் ணுக்கு உதவமுடிந்த வழிவகைகளை அணுகி வேண்டி னார் பத்மினி மேடம்.
இப்போது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தும் தமிழ் படிக் கவே வராமலிருக்கும் (தமிழ் வழியில் கல்வி பயின்ற) ஒரு இளம் பெண்ணுக்கு தமிழ் கற்றுத்தரும் வேலையில் இறங்கியிருக்கிறார்! எளிய தமிழிலான கதைப்புத்தகங்கள் இருக்கின்றனவா என்று என்னிடம் கேட்டிருக்கிறார்!
சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்காக இயங்கும் அரசுப் பள்ளிகளின் தர மேம்பாடு பற்றிப் பேசினால் ’உடனே தனி யார் பள்ளிகள் மட்டும் ஒழுங்கா என்று கேட்க நிறைய பேர் கிளம்பு கிறார்கள். இது ஏன் என்றே தெரியவில்லை’ என்று ஆதங்கப் படுவார்.
(அவருடைய ஆதங்கமெல்லாம் சமூகம் சார்ந்ததாகத் தான் இருக் குமே தவிர அவருடைய வயது காரணமாக எழுவதாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது).
இன்றைய இளந்தலைமுறையினர் பலருக்கு (தனியார் பள்ளி களில் பயிலும் பிள்ளைகளுக்குக்கூட) தாய்மொழியில் தங்கு தடையின்றி வாசிக்கவும் எழுத வும் தெரியாத நிலை பரவலாக இருக்கிறது. இந்நிலை மாறவேண்டியது மிக அவசியம்.
மாண்டிசோரி கல்விமுறையில் ஒன்றரை அல்லது இரண்டு மாதங் களில் தமிழ் எழுதவும் வாசிக்கவும் பள்ளிமாணாக்கர்களுக்குக் கற்றுத்தர முடியும் என்று பத்மினி கோபாலனின் முன்முயற்சியில் உருவான அமைப்பின் வழி மாண்டிசோரி ஆசிரியைகளாக உரு வாகியுள்ளவர்கள் சமூகத்தின் அடித்தட்டிலிருந்து வரும் பள்ளிப் பிள்ளைகளிடையே நிரூபித்திருக்கிறார்கள். இந்த வழி முறையி லான மொழிப்பயிற்சி பரவலாக்கப்பட்டால் நிறைய மாணாக்கர் கள் பயனடைவார்கள்.
பத்மினி மேடமைப் பார்க்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிவது –
• நம்மைப் பற்றி மட்டுமே எண்ணாமல் நமக்கு வெளியே பார்க்கும் போது நம்மை அங்கலாய்ப்புகளும் தன்னிரக்கமும் அதிகம் பாதிக்காது.
• எந்த வயதிலும் மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முடியும்.
• இன்னொருவரோடு போட்டிபோடுவதாய், மூன்றாமவரை பிர மிக்கவைப்ப தற்காக வாழ்வது என்ற மன நிலையை வளர்த்துக் கொள்ளக்கூடாது.
• நம் வீட்டுக் குழந்தைகளையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளி லான குழந்தைகளுக்கும் ஒரு நல்ல வீட்டுச் சூழல், பள்ளிச் சூழலை உருவாக்கித்தர நம்மால் இயன்ற முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.
• எதற்காகவும் மனதில் வெறுப்பும், ஆணவமும், கழி விரக்கமும் மண்ட அனுமதிக்கலாகாது.
• தன்மதிப்பை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
இன்னும் நிறைய எழுதலாம்……..

கிணற்றில் விழுந்த நிலவு - கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய காணொளி

 கிணற்றில் விழுந்த நிலவு 

- கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய காணொளி

https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs

கவிஞர் வைதீஸ்வரனின் கலை இலக்கியப் பங்களிப்பு குறித்த காணொளி - குவிகம் இலக்கிய அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs

இன்று நம்மிடையே உள்ள, இன்றளவும் எழுதிக்கொண்டி ருக்கும் கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றி குவிகம் இலக்கிய அமைப்பு உருவாக்கியிருக்கும் காணொளி இது.

தோழர் நிழல் திருநாவுக்கரசு அருமையாக உருவாக்கியிருக் கிறார்.

சமீபத்தில் இந்தக் காணொளியின் வெளியீட்டுவிழா சென்னை யில் செப்டெம்பர் 22 கவிஞரின் பிறந்த நாள் அன்று இனிதே நடந்தேறியது.

87 வயதாகும் கவிஞர் வைதீஸ்வரன் நவம்பர் மாத இறுதியில் தனது மகன்கள் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார். இந்தத் தருணத்தில் குவிகம் அமைப்பு கவிஞர் வைதீஸ்வரனுக்கு செய்திருக்கும் இந்த அன்புநிறைந்த மரியாதை குறிப்பிடத்தக்கது; பாராட்டுக்குரியது.


மந்திரமாவது சொல் - லதா ராமகிருஷ்ணன்

மந்திரமாவது சொல்

- லதா ராமகிருஷ்ணன்



சொற்களுக்கு சக்தி உண்டு.

படைப்பாளிகள் கையாளும் சொற்களுக்கு சக்தி அதிகம். அல்லது, அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்பு கிறேன் என்று சொல்லலாம்.

சொற்களும் வாக்கியங்களுமாக அவை ஒலி வடிவிலும் வரி வடிவிலுமாக வெளிப்பட்டு நிகழ்ந்த புரட்சிகள் எத்தனையோ.

இன்றும் குழந்தைகளுக்கான எத்தனையோ கதைகளில் முதியவரான வேலையாள் அவன் இவன் என்றே குறிப் பிடப் படுவதும், முதலாளி வீட்டு சின்னப்பையனும் அவரைப் பெயரிட்டு அழைப்பதும் இயல்பாக எழுதப்படுகின்றன.

அறிந்தும் அறியாமலுமாய் இவை முன்வைக்கும் உட்குறிப்பு கள் எத்தகையவை.

மனித நுண்ணுணர்வுகளை எழுதுவதாகப் போற்றப்படும் படைப்பாளியின் கதையொன்றில் விந்தி விந்தி நடக்கும் கதாபாத்திரம் ஒன்றை மற்ற கதாபாத்திரங்களெல்லாம் ‘நொண்டி’ என்று கூப்பிடுவார்கள். அவர்களுக்கு அந்த மாற்றுத்திறனாளி மேல் மிகுந்த அன்பு இருப்பதாகக் கதை அமைந்திருக்கும். ஆனாலும், அந்த அன்பு அவர்கள் அந்த மாற்றுத்திறனாளியை விளிக்கும் விதத்தில் மட்டுப்பட்டு விட்டதாகவே எனக்குத் தோன்றும்.

ஒருவரிடம் அன்பிருந்தால் அவரைக் காயப்படுத்தும் ஒரு வார்த்தையால் அவரை விளிக்க, குறிக்க மனம் வருமா?

தொலைக்காட்சி மெகாத்தொடர்களில் ’அநாதை, வாழா வெட்டி, நாசமாப் போயிடுவே, கைகால் வெளங்காதவனே’, போன்ற வார்த்தைகளெல்லாம் மிக அதிக அளவில் புழங்குகின்றன.

இப்படி அடைமொழிகளால் மதிப்பழிக்கப்படும் இன் னொரு பிரிவினர் முதியவர்கள்; மூத்த குடிமக்கள்.

‘பெரிசு’ என்று பரிகாசமாய் அழைக்கப்படுகிறார்கள்; குறிப்பிடப்படுகிறார்கள். மூத்த குடிமக்கள் என்றாலே சிலருக்கு நகைச்சுவை பொங்கும். LAUGHING AT THE EXPENSE OF OTHERS சிலருக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு.

ஆனால், படைப்பாளிகளும் இதையே செய்தால்….?

'வட்டார வழக்கைப் பயன்படுத்தினோம்', 'என் படைப்பில் வரும் கதாபாத்திரம் அந்த வார்த்தையைப் பேசியிருக்கிறது – அது நான் பேசுவதல்ல', என்றவிதமாய் எத்த னையோ வழிகளில் பொறுப்புத்துறப்பு செய்தாலும் ஒரு படைப்பாளி தன் படைப்பு களில் சக மனிதர்களை மதிப்பழிக்கும்படியான சொற்களை, சொற்பிரயோகங் களை வெகு இயல்பாகக் கையாள்வதில் ஒரு ABJECT INSENSITIVITY இருப்பதாக உணர்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

சற்றுமுன் ஒரு கவிதையில் ’செவிட்டுக் கிழத்துக்கு’ என்ற சொல்லாடலைப் படித்து மிகவும் வருத்தமாக இருந்தது.

தினசரி வாழ்க்கையிலும் சரி, படைப்பாக்கங்களிலும் சரி நாம் பயன்படுத்தும் சொற்கள் நம்மை அடையாளங் காட் டும் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

Tuesday, November 22, 2022

சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 1 - 5 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

   சொல்லடி சிவசக்தி 

குக்குறுங்கவிதைக்கதைகள் 1 - 5

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

.....................................................................................

1. பாரதி அறங்காவலர்கள்

...............................................................................
’பாரதியார் பாவி, அவர் இதைத்தான் நினைத்து
இப்படி எழுதினார்’, என்றவரும்
’பாரதியார் பாவம், அவர் இதைத்தான் நினைத்து
இப்படி எழுதினார்’ என்பவரும்
பாரதியின் வாரிசுகள் அல்லவே யல்ல
என்று சொல்லாமல் சொல்கிறது
இல்லாத அவரின் உயில்.


2. அறிவுடைமை
....................................................................................
உளறுவாய்களால் ஆனது உலகம்
உனக்கு நான் உளறுவாய்
எனக்கு நீ உளறுவாய்
உனதுளறல்களெல்லாம் உனக்குத்
திருவாய் மலர்ந்தருளலாய்.
எனதோ
பொருளற்ற வெறும்பேச்சாய்.
உனது பெருமூச்சும் வீரமுழக்கமாய்.
எனதோ
நோய்மையின் பலவீன முனகலாய்.
ஆயகலைகள் அறுபத்திநான்குக்கும்
நீயே அதிபதியாக இரு.
அதனாலென்ன?
அதற்கு மேலும் எண்களுண்டுதானே!




3. மென்வன்முறை
....................................................................................
மேடையில் முழங்கிக்கொண்டிருந்தவர்
மீண்டும் மீண்டும் மனதாரச் சொல்லிக்கொண்டிருந்தார்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் ஆணவம் பிடித்தவர்கள்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் அசிங்கம்பிடித்தவர்கள்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் அயோக்கியசிகாமணிகள்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் அப்பட்டமான கயவாளிகள்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் அவசியம் கொல்லப்படவேண்டியவர்கள்
அட அட என்னவொரு அரிய நடுநிலைப்பார்வை
என்று எண்ணியவாறே
தன்னிடமிருந்த அரிவாளை அல்லது அருவாமனையை
கூர்தீட்டத் தொடங்கினார்
உன்னிப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்தவர்.


4. விருந்துபசரிப்பு
.....................................................
உள்ளே மண்டிக்கிடக்கும் பகையுணர்வை
வெள்ளைவெளேரென ’விம்’ போட்டு விளக்கிய
பாத்திரத்திலிட்டு
உப்பு புளி மிளகாய் பெப்பர் கொஞ்சம் சர்க்கரை
வெல்லம் தேன் சேர்த்து
உகந்த வெப்பத்தில் கொதிக்கவைத்து
சிறிதே நெய்யூற்றி லவங்கப்பட்டையிட்டு
நறுமணமேற்றி
அலங்காரத்தட்டுகளில் பரப்பி
அழகிய கரண்டியோடு
ஆளுக்கொன்று தந்தால்
அதையும் சப்புக்கொட்டிச் சாப்பிட
ஆளிருக்க மாட்டார்களா என்ன?

5. செய்தித்தாள்
..........................................
இருவருமே செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தார்கள்.
”நான் செய்தித்தாளைப் படிப்பவள்” என்றாள் ஒருத்தி.
”நானும்தான்” என்றாள் மற்றவள்.
”இல்லை, நீ செய்தித்தாளில் படம் பார்ப்பவள்;
செய்தித்தாளைப் பொட்டலம் கட்டப் பயன்படுத்துபவள்;
செய்தித்தாளைத் தரையில் பரப்பி அதன்மீது
படுத்து உறங்குபவள்;
செய்தித்தாளை உருண்டையாகச் சுருட்டிப் பந்து செய்து
பக்கத்துவீட்டுக் குழந்தையோடு விளையாடுபவள்;
செய்தித்தாளை சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து
அடுப்பங்கரையில் கையைத் துடைத்துக்கொள்பவள்….
என்று முதலாமவள் அடுக்கிக்கொண்டே போக
”இவற்றை விட்டுவிட்டாயே -
”விளம்பரங்களை மட்டுமே எழுத்துக்கூட்டிப் படிப்பவள்;
பழைய பேப்பர் கடையில் போடுவதற்கென்றே செய்தித்தாளை வாங்குபவள்;
மின்வெட்டு ஏற்படும் நேரங்களில் செய்தித்தாளால் விசிறிக்கொள்பவள்;
என்று புன்னகையோடு இன்னும் சில
தன்முனைப்பான எள்ளல்களை எடுத்துக்கொடுத்த மற்றவள்
செய்தித்தாள் வாசிப்பைத் தொடர்ந்தாள்.


சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 6 - 10 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

  சொல்லடி சிவசக்தி 

*************************

குக்குறுங்கவிதைக்கதைகள் 6 - 10

ரிஷி

*

6.தன்மானம்

………………………….........................

திடமாய் நடைபழகிக்கொண்டிருந்தவரை
தளர்நடை யிட்டுக்கொண்டிருக்கும்
குழந்தையாய் பாவித்து
தடுக்கிவிழுந்துவிடலாகாது என்று
தாங்கிப்பிடிக்க வந்தவளை
தள்ளிப்போகச் சொன்னவர்
'இதைவிட
திமிராய் நடக்கிறேன் என்று
வசைபாடுபவர்களே
இசைவானவரெனக்கு’ என்றார்.


7. அடிப்படைவாதம்
…………………………………….....................

அறியாமையிருள் நீக்கும் தன்னார்வலரொருவர்
வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார்.
பாரதியெனும் கவிப்பெருவெளியை
அடிப்படைவாதமாகக் குறுக்கிவிடலாகாது என்று சொல்லப்புகாமல்
உயிருக்கு பயந்தும்
படைப்பியக்கம் அழியாமல் பாதுகாத்துக்கொள்ளவும்
கவிஞர் அடிப்படைவாதத்தை முன்வைத்தாரென
காரணகாரியங்களை
மனோதத்துவத் துறைக் குறிச்சொற்களைக் கொண்டு
விளக்க முற்பட்டதைக் கேட்டு
அறிவுத்துறையிலும், இலக்கியத்துறையிலும்கூட
அடிப்படைவாதிகள் இருப்பதை யறிந்து
மௌனமாய் அங்கிருந்து வெளியேறினார்கள் மாணாக்கர்கள்.


8. சூது
………………………………
அதுவொரு புதுமாதிரி சீட்டுக்கட்டு
அதிக அதிகமாய் இன்று விற்பனையாகிக்கொண்டிருப்பது
அதில் ராஜா ராணி மந்திரி இளவரசன் என எல்லோரும்
அன்றைய அரசியல் தலைவர்கள்.
அடங்கா ஆர்வத்தோடு
காசுவைத்தும் வைக்காமலும்
டயமண்ட் ஆர்ட்டின் இஸ்பேடு, க்ளாவர்
எல்லாவற்றிலும்
ACEம்
வேண்டாதவர்களை வெட்டிவீழ்த்தவும்
வேண்டியவர்களைக்கொண்டு வெற்றிபெற்றும்
வேண்டியவர் வேண்டாதவர் வேண்டும்போது வேண்டியவண்ணம் மாறி மாறி வந்துவிழும்படி
சீட்டுக்குலுக்குவதெப்படி என்று
கவனமாய் அவதானித்தபடி
விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்
அறிவுசாலிகளாய் நடுநிலையாளர்களாய் அறியப்படுபவர்களும்
தம்மைத்தாம் ’ஜோக்கரா’க பாவித்து.


9. மதம் பிடித்தவர்களும்
பிடிக்காதவர்களும்
……………………………………………………………
மதத்தைப் பற்றியே மேடைமேடையாய்
முழங்கிக்கொண்டிருப்பவர்
’மதப்பற்றுக்கும் மதவெறிக்கும்’ வித்தியாசமுண்டு
என்றார்.
'மதம் பிடித்தவருக்கும் மதம் பிடித்தவருக்கும் கூடத்தான்'
என்று முணுமுணுத்துக்கொண்டார் வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர்.
செவிமடுத்துவிட்ட பேச்சாளர் சீற்றத்தோடு
முறைத்துப் பார்த்து
’அரைகுறை அறிவில் கருத்துரைக்கிறாய்
அற்பப்பதரே
துணிவிருந்தால் உரக்கச் சொல்’ என்றார்.
தவறாய் ஏதும் சொல்லவில்லையே என்று
தான் சொன்னதை
திரும்பவும் உரக்கச் சொன்ன பார்வையாளர்
அவையோரால் முற்றுகையிடப்பட்டு
அங்கிருந்து குண்டுகட்டாய் அகற்றப்பட்டார்.


10. புத்துயிர்ப்பு
...............................................

‘பழிபாவத்திற்காளாக்குகிறார்கள் ஒருவரை,
படுகொலை செய்துகொண்டிருக்கிறார்கள்
என்று பரிந்து பேசினால்
புரிந்துகொள்ளாமல் அறிவுகெட்டதனமாக
எதிர்வினையாற்றுகிறீர்களே’ என்கிறவர்
என்றேனும் கேட்கக்கூடும்
எங்குமாய் ரீங்கரித்துக்கொண்டிருக்கும் அந்த அசரீரியை:
”இறப்பவருக்கேயாகுமாம் RESURRECTION