LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 9, 2022

சொல்லத் தோன்றும் சில…… லதா ராமகிருஷ்ணன்

 

சொல்லத் தோன்றும் சில……

 

லதா ராமகிருஷ்ணன்

ஆங்கில நாளிதழிலும் தமிழ் நாளிதழிலுமாய் தினமும் ஒன்றிரண்டு செய்திகள் மனதின் அமை தியை முறித்துப் போடத் தவறுவதில்லை.

சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி. 14 வயது டைய பள்ளிச் சிறுவர்கள் மூவரோ நால்வரோ அவர்களுடைய வகுப்புத் தோழி ஒருத்தியோடு அவளுடைய வீட்டில் ஒன்றாகப் படிப்பது வழக்க மாம். அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் வேலை நிமித்தம் வெளியே போயிருக்க அந்தப் பெண் ணின் தங்கையை வெளியே போய் விளையாடச் சொல்லியிருக்கிறார்கள் சிறுவர்கள். சிறிது நேரங் கழித்து வீடு வந்தவள் மூடியிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து பார்த்தால் வகுப்புத் தோழியை நிர்வாணமாக்கி கைகளை யும் கண்களையும் கட்டி நீலப்படம்போல் வீட்டில் நடத்திப் பார்க்க முயற்சி நடந்துகொண்டிருந்த தாம்.

அழுதுகொண்டே தங்கையிடம் வீட்டாரிடம் தெரி விக்க வேண்டாமென அக்கா சொல்லியிருக்கி றாள். சில நாட்களில் அக்காவுக்கும் தங்கைக் கும் ஏதோ சண்டை வர தங்கை அம்மாவிடம் நடந்த தைச் சொல்லிவிட்டாள்.

அவளுடைய பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தர அந்தப் பையன்கள் கூர்நோக்குப் பள்ளிக் கும் அந்தப் பெண் சீர்திருத்த இல்லத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் ஒரு செய்தி. CBSC PLUS 2 மாணவர்கள் இருவர். பெரிய விரோதமெல்லாம் கிடையாது. ஒருவனின் உடற் பருமனையும் அவனுடைய மார்புப் பகுதியையும் மற்றவன் கிண்டல் செய்துகொண்டேயிருப்பா னாம். பருமனாயிருக்கும் பையனை தேவையில் லாமல் அங்கே யிங்கே தொட்டு கேலி செய்வா னாம். அது BODY SHAMING ஆகவும் இருந் திருக்கலாம். ஓரினப்புணர்ச்சிக்கான அழைப்பாக வும் இருக்கலாம். பருமனாயுள்ள பையன் அது குறித்து பள்ளியிலும் புகார் செய்து பள்ளியிலும் அந்த இன்னொரு மாணவனைக் கண்டித்திருக்கி றார்கள். சமீபத்தில் அந்த பருமனான பையன் மற்றவனை நட்பாக ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று தயாராகக் கொண்டுசென்றிருந்த கத்தி யால் குத்தியிருக்கிறான். அந்தப் பையன் இறந்து விட்டான்.

விவரமறிந்து, கொன்றவனின் பெற்றோர் அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு எதனால் அப்படிச் செய்தேன் என்றும் தெரிவித்திருக்கிறான் அந்த மாணவன். அவனும் இப்போது கூர்நோக்கு இல்லத்தில்.

 சின்னக்குழந்தைகள் மீதான கவனமும், அக்கறை யும் வளரிளம்பருவத்தினர் மீதான அக்கறையும் இப்போதிருப்பதைக் காட்டிலும் இன்னும் பன் மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்ப தையே இத்தகைய செய்திகள் புலப்படுத்துகின் றன.

குழந்தைகளும் வளரிளம்பருவத்தினரும் பெற் றோர், ஆசிரியர்களின் பொறுப்பு என்ற பார்வை சரியல்ல. ஒட்டுமொத்த சமூகமும் இதற்கான பொறுப்பேற்க வேண்டும். இப்படி யொரு செய்தி யைப் படித்ததுமே சிலர் அதற்கு சாதிச்சாயம் பூசிப் பார்க்க முற்படுவதும் இந்தக் காலத்துப் பிள்ளை களே இப்படித்தான் என்று எல்லோரை யும் ஒரு மொந்தையாக்கி அங்கலாய்ப்பதும், பிரச்சனைக் குத் தீர்வாகாது.

 

மெகாத்தொடரெனும் மகாத்துயர். - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மெகாத்தொடரெனும் மகாத்துயர்.

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அந்த மெகாத்தொடரின் வறிய குடும்பத்தார் நேற்று 50 லட்சம் டௌரி கொடுக்கச் சம்மதித்து இருபதுகோடிகளுக்கு
நகைவாங்கி முடித்திருந்தார்கள்.
இன்று இன்னொரு தொலைக்காட்சி மெகாத்தொடரில்
அந்த இருபதுகோடி பெறுமானமுள்ள நகைகள் களவாடப்பட்டு விட்டன.
முதல் தொலைக்காட்சிச் சேனலிலிருந்து ஆறுபேர் ஆளுக் கொரு தீப்பந்தமேந்திக்கொண்டு
தெருத்தெருவாக திருடர்களைத் தேடிக்கொண்டு மாட்டுவண்டியில் சுற்றினார்கள்.
பெயரறியாத் திருடர்களின் பெயர்களை உரக்கப் பாடிக்கொண்டே சென்ற அவர்களை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தது நிலவு.
ஒரு திருப்பத்தில் திடீரென எதிர்ப்பட்ட திருடர்களில் ஒருவனை அவனுடைய கூட்டாளிகளுக்கே அடையாளம் தெரியவில்லை.
அரைநிமிடத்திற்கு முன்பு ‘இனி இவருக்கு பதில் இவர்
இந்தத் திருடர் பாத்திரத்தில் வருவார்’ என்று சின்னத்திரை யில் சிந்நேரம் ஓடிக்கொண்டிருந்த அறிவிப்பை
அவர் கவனிக்கத்தவறிவிட்டார்.
நடுத்தெருவிலமர்ந்தபடி அவர்கள் கோடிகளைப் பரப்பி பங்குபோட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
மாட்டுவண்டியில் அவர்களைத் தேடியபடியே வந்தவர்கள்
நடுவீதியில் இறைந்துகிடந்த பணத்தைப் பார்க்காமல் அந்தப்புறமாய் ஒதுங்கிச்சென்றார்கள்.
பார்த்துவிட்டால் பின் மெகாத்தொடரை முடித்துவிடநேருமே....
முடிந்தால் இன்னும் நாலு வருடங்களுக்கோ நாற்பது வருடங்களுக்கோ (நான் இருக்கமாட்டேன் என்பதால் நானூறு வருடங்களுக்கோ என்று சொல்வது நியாயமாகாது!)
நீளவேண்டியவையல்லவா மெகாத்தொடர்கள்?
ஆற அமர கோடிகளை எண்ணிமுடித்து நிமிர்ந்தவர்களுக்கு அத்தையம்மா
(அத்தை என்பதுதான் முக்கியமே தவிர யாருடைய என்பதல்ல. அத்தை ஒரு குறியீடு, அடைமொழி, மெகாத்தொடர்களுக்கான தனி அகராதி; வாதி; பிரதிவாதி இன்னுமுள மீதி….)
அன்போடு தங்க லோட்டாக்களில்
தேனீர் கொண்டுவருகிறாள்.
ஆசைதீரக் குடிக்கும் திருடர்கள் அரையுயிராய்
மயங்கிச் சாய்கிறார்கள்.
சாவதற்கு முன் கோடிகளைத் தொலைத்த அந்தக் குடும்பத் தைத் தேடி தங்கள் சேனலிலிருந்து அந்த இன்னொரு சேனலுக்குள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
பணத்தை ஒப்படைத்து
‘நல்லபடியாகத் திருமணத்தை முடியுங்கள். நாங்கள் நல்லவர்களாகிவிட்டோம் – இதோ வெறும் கைகளோடு விடைபெற்றுக்கொள்கிறோம் என்று ஒரே குரலில் நாத்தழுதழுக்கக் கண்கலங்கக் கூறுகிறார்கள்.
அதிலொருவன் மட்டும் அடக்கமாட்டாமல் கேட்டுவிடு கிறான். ”அதுசரி, அடித்தட்டு வர்க்கக் குடும்பமென்று அடிக்கடி அழுதவாறே அடிக்கோடிட்டுக் கூறிக்கொள்ளும் உங்களுக்கு இத்தனை கோடிகள் எப்படிக் கிடைத்தன?”
அதைக் கேட்ட அந்தக் குடும்பம்
அத்தை கொடுத்த விஷம் சரியாக வேலை செய்யவில்லை யென
மருந்துக் கம்பெனி மீது நஷ்ட ஈடு வழக்குபோட்டதில் இன்னும் சில கோடிகள் அவர்களுக்குக் கிடைத்ததாகவும் அதைக்கொண்டு அவர்கள் தங்கள் மெகாத்தொடரின் இரண்டாம் பகுதியை ஒளிபரப்பப்போவதாகவும் கூறப்படுகிறது.

கவிதானுபவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதானுபவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

உபதேசிக்கும் கவிதைகளை எழுதிக்கொண்டே போனவருடைய வரிகளெல்லாம்
ஒவ்வொன்றாய் மலையுச்சியிலிருந்து உருண்டோடி
அதலபாதாளத்தில் விழுவதையறியாமல்
இன்னுமின்னுமாய் பிரசங்கம் செய்துகொண்டிருந்தவரை
ஆதுரத்தோடு பார்த்துக்கொண்டிருந்த அவருடைய
எழுதப்படாக் கவிதை
தனக்குள் முணுமுணுத்துக்கொண்டது:
பீடமல்ல கவிதை
பாழ்மனதின் எதிரொலி
உயிர்வலி
உன்மத்தக்களி
சரீரம் கடந்த நிலை
சரணாகதி
ஒருவேளை நோயுற்றிருக்கும் மருத்துவராயிருக்கலாம்
ஆனால் மருத்துவரில்லை கவிதை
பார்க்கும் ஆடி எனில் அதற்குள் தெரியும் முகம்
இன்மைக்கும் பன்மைக்கும் இடையே
உண்மைக்கும் பிரமைக்கும் இடையே
வலியுணர்ந்து வாழ்வுணர்ந்து
வாக்கின் வலுவுணர்ந்து
உணர்ந்ததை உட்குறிப்பாய் உணர்த்துவதே கவிதையென்றுணர்.
அடிக்குறிப்பாய்_
இதுவும்கூடக் கவிதையில்லையென்றுணர
முடிந்தால்
இனி நீயெழுதுவது கவிதையாகும்,
அறிவாய்."


காற்று நிரம்பியிருக்கும் காலிக் கைகள் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

காற்று நிரம்பியிருக்கும்
காலிக் கைகள்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

காற்று நிரம்பியிருக்கும்

காலிக்கைகளை

அதிகமாய் விரிக்கலாம்

அதிகமாய் பிரிக்கலாம்

அதிகமாய் அள்ளலாம்

அதிகமாய் திறக்கலாம்

அதிகமாய் மூடலாம்

அதிகமாய் நீட்டலாம்

அதிகமாய் காற்றைத் துழாவலாம்

ஏற்கெனவே கைகளில் நிறைந்துள்ள காற்றை மாற்றி

புதிய காற்றை உள்ளங்கைகளில் நிரப்பிக்கொள்ளலாம்

தள்ளவேண்டியவற்றை இன்னும் வலுவோடு தள்ளலாம்

கும்பிட்டுக்கொள்ளலாம் அன்பின் சன்னிதானத்தில்

அதே நீள அகலங்களே யென்றாலும்

விரல்களுக்குக் கூடுதல் சுருள்விசை கிடைக்கும்

அதிகமாய் நீட்டலாம் மடக்கலாம்

காற்று நிரம்பிய காலிக்கைகளால்

முழங்கைகள் தோள்பட்டைகள் முதுகு இடுப்பு பிடரி என்று எல்லாவிடங்களும் இலேசாகி ஆசுவாசமுணர

எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற ஏகத்துவ நிலை

சித்தித்தல் சொல்பதருணமேயானாலும்

சொர்க்கம் என்று சொல்லும்

காலிக்கைகள்

காலியின் சூட்சுமமுணர்தலே சாலச்சிறந்த வாழ்க்கை

என்று சொல்லாமல் சொல்லும்.

காலம் மறைந்த கணத்தில் நல்ல பணம் கள்ள பணம்

செல்லுபடியாகும் பணம் காலாவதியான பணம்

எல்லாமும் இல்லாதொழிய

வழியொழிய பழியொழிய

இழிவொழிய கழிவொழிய

அலைபுரளா கடல்நடுவில்

நிலைகொள் மனம் அத்தொடலில்

தோள்கண்டு தோளே கண்டு…….

தோளின் வழி முழு உருவமும் அதன் உள்வெளியும்

குறிப்புணர்த்தப்பட

நேசிப்பவர்கள் தொடும் நேசிப்புக்குரியவர்கள் அவர்களை நேசிக்கிறார்கள்தானே? இல்லையா?

காலி தமிழ்ச்சொல்லா, இல்லையா?

காலியென்பதெல்லாம் காலியல்ல என்பதில்

இருவேறு கருத்துக்கு இடமில்லையா?


·         தொடுவுணர்வை முழுமொத்தமாய் கையகப்படுத்திக்கொள்ள? empty suggests a complete absence of contents. Here and Now மட்டுமே? எண்ணங்கள் மறைந்த நிலை? மனம் இலேசான நிலை?

(சமர்ப்பணம்: கவிஞர் ரியாஸ் குரானாவுக்கு)



ளை



வாய்ச்சொல் வீரர்கள் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாய்ச்சொல் வீரர்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பல்வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட
பிரம்மாண்ட மேடையில்
வெள்ளிக்கேடயம்
தங்கவாள்
வைரக்கல் பதித்த பிளாட்டினக் கிரீடம்
விமரிசையாய் ஒரு மேசையில் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன.
Bouncerகளும் முன்னணித் தொண்டர்களும்
ஒருமணி நேரம் முன்பாக தனி விமானத்தில் வந்திறங்கியவர்களும்
புடைசூழ வந்த பிரமுகர்
மேடையேறி நேராக மைக்கின் முன் சென்று
முழங்கத் தொடங்கினார்.
”பல்லக்குத்தூக்கிகளும்
பல்லக்கிலேறிப் பயணம் செய்பவர்களும்
என்ற பாகுபாடு ஒழிக்கப்படுவதே நம் குறிக்கோள்”.
படபடவென்று கைத்தட்டல் விண்ணைப் பிளக்க
நலத்திட்டங்களைப் பெற வெய்யிலில் வரிசையில் காத்திருந்தவர்களைப் பார்த்துக் கையாட்டியவாறே
கப்பலென நீண்டிருந்த காரிலேறிச்
சாலையின் இருமருங்கும் வெயிலில் சுருண்டுகிடந்த பிச்சைக்காரர்களைப் பார்த்தும் பாராமலே
விரைந்தார்
தனது பல்லக்குத் தயாரிப்புத் தொழிற்சாலையின்
உற்பத்திப் பெருக்க வழிமுறைகள் மாநாட்டிற்குத்
தலைமை தாங்கவும்
பன்னாட்டு நிறுவனமொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புது மாடல் பல்லக்குகளைப்
பார்வையிடவும்.......

INSIGHT - A BILINGUAL BLOGSPOT - MAY 2022

 

INSIGHT - MAY 2022 
A BILINGUAL INITIATIVE FOR 

CONTEMPORARY TAMIL POEMS

www.2019 insight.blogspot.com

A BILINGUAL BLOGSPOT




மெய்நிகர் உண்மை _ ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மெய்நிகர் உண்மை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எல்லோரும் எல்லோருடனும்
நட்பாயிருக்கிறார்கள்.
யார் என்ன சொன்னாலும்
‘லைக்’ இடுகிறார்கள்.
எதிரெதிர் கருத்துடையவர்களோடு
தோளணைத்துப் புன்சிரித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
நேரெதிர் கருத்துடையவர்களை
ஒரே தராசுத்தட்டில் வைத்து
சரிசமாகப் பாராட்டுகிறார்கள்.
சில கொச்சை வார்த்தைகளை
தன்னிசையாயும் திட்டமிட்டரீதியிலும்
தெறிக்கவிட்டு
எதிர்க்கருத்தின் குரல்வளையை
நெறித்துவிடுவாரையும்
அந்த நெறிக்கப்படும் குரல்வளைகளின்
சொந்தக்காரர்களையும்
ஒரேயளவாய்ச் செல்லங்கொண்டாடி
‘லைக்’ குறியிடுகிறார்கள்;
’லவ்’ குறியிடுகிறார்கள்.
தன்வய முன்னிலைப்படுத்தல்களுக்கும்
வன்மம்நிறை அவதூறுகளுக்கும்
குந்துமணியளவு வித்தியாசமும் பாராமல்
புன்னகைக்கும், பொக்கைவாயை விரியத்
திறந்து சிரிக்கும் ‘இமோஜி’க்களைப்
பரிசளிக்கிறார்கள்.
தார்மீகக்கோபமென்பாரையும்
தட்டிக்கொடுக்கிறார்கள்
தரங்கெட்ட சொல்லுதிர்ப்பாரையும்
தோளணைக்கிறார்கள்
பொல்லாங்கு சொல்வார்,
போக்கிரிகள்,
பச்சைப் பொய்யர்கள்
பல்வண்ணக் கதைஞர்கள்
பதாகைகளை ஏந்தியேந்தியே சமூகப்போராளிகளாகிவிடுவோர்
செத்த பாம்பை சுழற்றியடித்து
சுத்த வீரர்களாகிவிடுவோர்
சங்கநாதம் தம் கண்டத்திலிருந்தே
எழும்புவதென்று சாதிப்போர்
தடுக்கிவிழுந்து பட்ட காயத்தின்
தழும்பை
விழுப்புண்ணென இட்டுக்கட்டும்
வழியறிந்தோர்
அழும்போதும் செல்ஃபியெடுக்கத்
தவறாதவர்கள்
அப்பிராணிகளாகக் குறிபார்த்து
அம்பெய்துவோர்
அந்திவேளையழகை யனுபவித்து
சிந்துபாடியபடியே
அவனை யிவளை உந்தித்தள்ள வாகான
மலையுச்சியைத் தேடி
யலைந்துகொண்டிருப்பவர்கள்
எல்லோரும்
எல்லோருடைய நட்புவட்டத்திலும்
நல்லவிதமாய்ப் பொருந்தி
நல்லவிதமாய் ‘லைக்’கிட்டவாறு
அன்பின் வழியது உயிர்நிலை யெனும்
உன்னத இலக்கையெட்டிவிட்டோமா?
அஞ்ஞானம் நீங்கியெல்லோரும் ஆன்ற ஞானநிலையெய்திவிட்டோமா…
சின்னதாய் உதிக்கிறது சொல்ப ஆனந்தம்…
இன்னொரு நாட்டில் போர் ஆரம்பம்.
இரண்டு சின்னஞ்சிறு செய்திகளில்
சிறுநீர் கழிக்கவேண்டுமென்ற இரு
சின்னஞ்சிறுகுழந்தைகள்
நாயடி பேயடி அடிக்கப்பட்டிருப்பது
தெரியவருகிறது.
சின்னஞ்சிறு சிறுமியும் வளரிளம்பெண்ணும்
அறிந்தவர் தெரிந்தவர் உற்றார் உறவினரால்
அடைக்கலம் புகுந்த ஆதரவில்லத்துப்
பாதுகாவலரால்
இரண்டுவருடங்களுக்கு பாலியல் வல்லுறவு
செய்யப்பட்டிருப்பதை இன்றும் நேற்றும்
இரண்டு நாளிதழ்களில் வாசிக்க நேர்கிறது….
இன்னுமின்னுமின்னுமாய்…..
எல்லோரும் எல்லோருடனும் ஒரேயளவாய் நட்பு பாராட்டியவாறே லைக்கிட்டுக்கொண்டிருக்கும்
டைம்லைன்கள்
இன்னுமின்னுமின்னுமாய்…..