LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, September 12, 2020

ஓட்டைப்பானை (பண்டைய சீனத் தத்துவஞானியும் எழுத்தாளருமான Lao Tzu வின் குட்டிக்கதைகளில் ஒன்று).

 ஓட்டைப்பானை

(பண்டைய சீனத் தத்துவஞானியும் எழுத்தாளருமான 

Lao Tzu வின் குட்டிக்கதைகளில் ஒன்று).



தமிழில் லதா ராமகிருஷ்ணன்

(*முதல் வரைவு)


மூதாட்டி ஒருவரிடம் இரண்டு பெரிய பானைகள் இருந்தன. ஒரு கழியின் இரு முனைகளில் இரண்டும் கட்டப்பட்டு அந்த மூதாட்டி கழியைத் தன் தோள்களில் சுமந்துகொண்டிருப்பார். இவ்வாறு தினமும் தன் வீட்டுக்குத் தண்ணீர் கொண்டுவருவார்.

அந்தப் பானைகளில் ஒன்று அப்பழுக்கற்றதாக, தன்னுள்ளிருக்கும் தண்ணீரை முழுமையாகக் கொண்டுவந்து சேர்க்கும்.

இன்னொரு பானையில் ஒரு ஆழமான விரிசல் இருந்ததால் அதிலிருந்து தண்ணீர் கசியும். நீரோடை யில் தண்ணீர் மொண்டு பானைகளில் ஊற்றி நீண்ட தூரம் நடந்து அந்த மூதாட்டி வீட்டை அடையும் போது இந்தப் பானையில் பாதியளவு தண்ணீர் மட்டுமே மிஞ்சியிருக்கும்.

அப்பழுக்கற்ற அந்த முதல் பானைக்குத் தன்னைப் பற்றி மிகவும் பெருமை. ஆனால், பாவம் அந்த ஓட்டைப்பானைக்குத் தன்னைப் நினைத்து மிகுந்த வருத்தமும், அவமானமும் ஏற்பட்டது. முழுமை யாகத் தண்ணீரைக் கொண்டுவந்துசேர்க்க முடியாத தற்காக அது தன்னையே நொந்துகொண்டது.

இரண்டு வருடங்கள் இப்படியே கழிந்தபின், தன்னால் முழுமையாகத் தண்ணீரைக் கொண்டு சேர்ப்பதில் வெற்றிபெறவே முடியாத தோல்வியில் துவண்டு அந்த ஓட்டைப்பானை தன்னை சுமந்து கொண்டிருக் கும் மூதாட்டியிடம் ஒருநாள், “என்னுடைய ஒரு பக்கத்தில் இருக்கும் ஓட்டை காரணமாக தண்ணீர் நீங்கள் வீட்டை அடையும் வரை ஒழுகிக்கொண்டேயிருக்கிறது. எனக்கு என்னை நினைத்து அவமானமாக இருக்கிறது” என்று வருந்திக் கூறியது.

அந்த மூதாட்டி கனிவோடு புன்னகைத்து. “நான் செல்லும் வழியில் உன் பக்கமிருக்கும் பகுதியில் மட்டும் பூக்கள் இருப்பதையும் இன்னொரு பானை யின் பக்கமுள்ள சாலைப்பகுதியில் இல்லை என்பதையும் நீ கவனித்திருக்கிறாயா? எனக்கு உன்னிடமுள்ள குறை தெரியும். எனவே, நீயுள்ள பக்கமாக உள்ள சாலையோரத்தில் நான் பூக்களின் விதைகளை நட்டேன். தினமும் நாம் வீடு திரும்பும் போது நீதான் அந்தச் செடிகளுக்கு நீரூற்றி அவற்றை வளரச் செய்தாய். இரண்டு வருடங்களாக நான் இந்த அழகிய மலர்களால் என் மேஜையை அலங்கரிக்க முடிந்தது. என்னுடைய நண்பர்கள், அண்டைவீட்டா ருக்கு மலர்களைக் கொடுத்து மகிழ முடிந்தது. நீ இப்போது இருப்பதுபோல் இல்லாமல் வேறுவித மாக இருந்திருப்பின் எங்கள் இல்லங்களிலும் வாழ்விலும் கனிவார்ந்த ஒளிர்வை சாத்தியமாக்க முடிந்திருக்காது. இந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த அழகிய மலர்கள் எங்களுக்குக் கிடைத்திருக்காது” என்றார்.




ஓட்டைப்பானை கதையை முன்வைத்து 

மொழிபெயர்ப்பு குறித்து சொல்லத்தோன்றும் சில.


நாம் பேசும்போதெல்லாம் மொழிபெயர்ப்பு நடக் கிறது என்று படித்திருக்கிறேன். ஒரே மொழியைப் பேசுபவர்களுக்கிடையிலே யும்கூட மொழி ஒரேவித மாகப் பேசப்படுவதில்லை.

பெரியவர்களிடம் பேசப் பயன்படுத்தும் சொற்களை அதே அர்த்தங்களை, பொருட்களைச் சுட்டும்போதும் அதேயளவாய்ப் பேசுவதில்லை நாம்.

எழுதும்போதும். Formal, Informal மொழிவழக்குக ளுக்கு அப்பால் வேறு பல வித்தியாசங்களும் உள்ளன.

இலக்கு வாசகர்கள், ஒரு பிரதி மொழி பெயர்க்கப்படு வதிலுள்ள நோக்கம், உள்நோக்கம் என பலவற்றைப் பொறுத்து மொழிபெயர்ப்பின் நடை மாறுபடுகிறது என்றும் படித்திருக்கிறேன்.

இதை இலக்கியப் பிரதிகளுக்குப் பொருத்தமுடியுமா தெரியவில்லை.

பள்ளி, கல்லூரிகளில் non-detail பாடங்களில் காப்பி யக் கதைகள் சுருக்கப்பட்டுத் தருவதை உதாரண மாகக் காட்ட முடியுமா தெரியவில்லை.

எழுத்தறிவு இயக்கத்தில் படிப்பவர்களுக்குத் தரப் படும் பெரிய எழுத்துக் கதைகளைக் குறிப்பிடலாம்.

காப்பியங்களைக் குழந்தைக் கதைகளாகத் தருவ தைக் குறிப்பிட முடியும்.

ஆனால், அது குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பு.

முந்தைய பதிவில் நான் தந்துள்ள என் மொழி பெயர்ப்புக் கதையைக் குழந்தைகளுக்கு எழுதினால் எப்படியிருக்கும்?



...................................................................................................
ஓட்டைப் பானை

ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தார்.

அவர் தினமும் தூரத்திலிருந்த ஓடைக்குச் சென்று தண்ணீர் கொண்டுவருவார்.

அவரிடம் இரண்டு பானைகள் இருந்தன.

ஒன்றில் சிறிய ஓட்டையிருந்தது. அதில் கொண்டு வரும் தண்ணீர் வழியெல்லாம் ஒழுகும். வீட்டிற்குப் போய்ப் பார்த்தால் அதிலிருந்த தண்ணீர் பாதி காலியாகியிருக்கும்.

இன்னொரு பானையிலி ருந்த தண்ணீர் அப்படியே இருக்கும். அந்தப் பானைக்கு ஒரே பெருமை.

ஓட்டைப் பானைக்கோ அவமானமாயிருக்கும். அழுகை அழுகையாய் வரும்.

ஒருநாள் வரும் வழியில் ஓட்டைப்பானை பாட்டி யிடம், “என்னால் ஒருநாளும் தண்ணீரை முழுவது மாகக் கொண்டுவந்துசேர்க்க முடியவில்லை. நான் நல்ல பானை இல்லை”, என்று வருத்தத்தோடு சொன்னது.

அதைக் கேட்ட பாட்டி அன்போடு சிரித்துக்கொண்டே, ”வரும் வழியில் நீ தொங்கும் பக்கத்தில் மட்டும் சாலையோரத்தில் பூக்கள் பூத்திருக்கின்றன பார்த்தாயா? நான் தான் அங்கே பூச்செடிகளை நட்டேன். உன் ஓட்டை வழியாக வழிந்த தண்ணீர் தான் அந்தப் பூச்செடிகளை வளர்த்தது. அந்தப் பூக்களால் என் வீட்டை அலங்கரித்தேன். என் நண்பர்கள், உறவுகள், பக்கத்துவீட்டுக்காரர் களுக் கெல்லாம் அந்தப் பூக்களைக் கொடுத்து மகிழ்ந்தேன். அவர்களும் மகிழ்ந்தார்கள். எத்தனை பேருக்கு உன்னால் மகிழ்ச்சி கிடைத்தது பார்த்தாயா? நீ இப்படியிருப் பதால்தான் இதெல்லாம் நடந்தது. எனவே, இனிமேல் நீ வருத்தப்படவே கூடாது, சரியா?” என்று கூறினார்.

பாட்டி கூறியதைக் கேட்டு ஓட்டைப்பானைக்கு ஒரே சந்தோஷம்!

.................................................................................................
பி.கு: (1) பொதுவாக குழந்தைகளுக்கான கதைகளில் பாட்டி அவள் என்று குறிப்பிடப்படுவதுதான் வழக்கம் என்றாலும் அவர் என்ற வார்த்தையை பழக்கப்படுத் துவது நல்லது என்று தோன்றுகிறது.

(2) குழந்தைகளுக்கான கதை என்றால் இதைவிட எளிய நடையில் எழுதும்படி சொல்லக் கேட்டதே அதிகம். உரைநடை பேச்சுவழக்கில் இருந்தால் நல்லது எனக் கூறப்படும்.


The Cracked Pot


An elderly Chinese woman had two large pots. Each pot hung on the ends of a pole, which she carried across her shoulders. Every day, she used this device to carry water to her home.


One of the pots was perfect and always delivered a full portion of water. The other had a deep crack in it and leaked. At the end of the long walk from the stream to the house, the cracked pot arrived only half full.

For a full two years this situation occurred daily, with the woman bringing home only one and a half pots of water. Of course, the perfect pot was proud of its accomplishments. But the poor cracked pot was ashamed of its own imperfection and miserable that it could only do half of what it had been made to do.

After two years of what it perceived to be bitter failure, the cracked pot spoke to the woman one day by the stream, saying, “I am ashamed of myself because this crack in my side causes water to leak out all the way back to your house.”

The old woman smiled and replied, “Did you notice that there are flowers on your side of the path, but not on the other pot’s side? I have always known about your flaw, so I planted flower seeds on your side of the path, and every day while we walked back home you watered them and made them grow. For two years, I have been able to pick these beautiful flowers to decorate the table and give to my friends and neighbors. Without you being just the way you are, there would not have been this special beauty to grace our homes and lives.”

புல்லாங்குழற்கலைஞரின் உள்ளங்கையுலகு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புல்லாங்குழற்கலைஞரின் உள்ளங்கையுலகு

 https://www.facebook.com/100001078942965/videos/3073592312686703/?extid=Hst7n4VMXh8YvcVU

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


பாடலைப் பார்க்க முடியும் தருணங்களின்
பரவசத்தைப் பாடமுடியாது
மூச்சுத்திணறும் மனதின் எளிய நன்றி நவிலலாய் கண்ணோரம் தளும்பும் ஒரு துளி.

முகமறியாத எளிய வள்ளல்களின் கனிவுக்கு
பதில் மரியாதை செய்ய வேறென்ன வழி....

ஆண்டான் - அடிமை யென்ற பழிகளுக்கு வழிகொடாத
காற்றின் ராஜாங்கத்தில்
அன்பே மொழியாக......

மௌனமாய் கேட்டுக்கொண்டிருக்கும் மரத்தின்
வேர்க்கால்கள் தாளமிடுவதை
உண்மையாகவே என் மனதால் காணமுடிகிறது!

அங்கே அமர்ந்திருப்பது கண்ணனும் யசோதையுமா?
மூதாட்டியின் கடந்தகாலமா? புல்லாங்குழற் கலைஞரின்
உள்ளங்கை யுலகமா

அவரவர் மனமெல்லாம்
அன்றாடம் என்னவெல்லாம்!


ஓருடல் ஈருயிர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஓருடல் ஈருயிர்

‘ரிஷி’


(லதா ராமகிருஷ்ணன்)

அத்தனை அன்பாகக் 

கரைந்துருகுகிறார்கள்

அத்தனை வலிக்க 

வலிக்க 

அழுதரற்றுகிறார்கள்

அத்தனை 

இன்முகத்தோடு

தத்துவம் 

பேசுகிறார்கள், தர்க்கம் 

செய்கிறார்கள்

மனிதநேயம் 

பேசுகிறார்கள்

வாழ்வின் மகத்துவம் 

பேசுகிறார்கள்

இனிய உளவாக என்ற வள்ளுவரை

முடிந்தபோதெல்லாம் மேற்கோள் காட்டுகிறார்கள்....


அத்தனைக்கத்தனை வெறுப்புமிழ்கிறார்கள்

அவதூறு செய்கிறார்கள்

அச்சமில்லாமல் உச்சஸ்தாயியில்

கத்தித்தீர்க்கிறார்கள்

கலப்பற்ற அப்பட்டப் பொய்களை

பொறுப்புத்துறந்தபடி கண்ணில்படுபவரை

யெல்லாம் கொள்ளைக்காரர்களாக்கிக்

கழுமேடைக்கு இழுத்துச்செல்கிறார்கள்.

வேண்டியவரின் பெருந்தவறைக் கண்டுங் 

காணாமலும்

அல்லது மென்சிரிப்போடு செல்லமாய்க்

கண்டித்தும்

பிடிக்காதவரென்றால் அவரைக்

கொச்சையாய் மதிப்பழித்தும்

அடுக்கடுக்காய் அவர் மீது பழிபோடும்

வழி தேடியும்

சாமான்ய மக்களிடமிருக்கும் சொல் நேர்மை

செயல் நேர்மை

சிறிதுமின்றி சாய்கிறார்கள் சிலர் பக்கம்

சுய ஆதாயத்திற்காய்

சாய்க்கிறார்கள் நியாயத்தராசை.

சத்தியமாய்ச் சொல்கிறேன் - அத்தனை 

அருமையான

வாழ்க்கைத் தத்துவங்களை உதிர்க்கிறார்கள்

வாழ்வின் தரிசனங்களைப் பதிவுசெய்கிறார்கள் _


அதே கையால் அத்தனை தடித்தனமாய்

பயன்படுத்துகிறார்கள் எழுதுகோலை

அடியாளாய்.

Dr Jekyll and Mr Hyde என்றுமாய்

புத்தக விளிம்புகளைக் கடந்தவாறு

பாலினங் கடந்தவாறு………..


Dr Jekyll and Mr Hyde : 1886இல் பிரசுரமான, ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன் எழுதிய குறுநாவல். கதைநாயகன் Dr. ஜெக்கிள் இயல்பாக இருக்கும் போது நல்லவராகவும், பரிசோதனைக்காக ஒரு மருந்தை உட்கொள்ளும் போது குரூரமானவராகவும் நடந்துகொள்வார்.

தொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தொடர் ஓட்டமும் 

சுழல் கோப்பையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



(1)


மூக்குக்கண்ணாடி அணிந்தவர்களை 'நாலு கண்ணா' என்றும் 'புட்டிக்கண்ணாடி' என்றும்
உரக்க அழைப்பவர்கள் எப்படி
உற்ற நண்பர்களாக முடியும்?

உடல் ஊனமுற்றவர்களை ஊனத்தை அடைமொழியாக்கிச் சுட்டுபவர்களை
மனிதர்களாகக் கொள்ளத் தகுமா?

அடுத்தவர்களுக்கு அடைமொழியிட்டு அழைப்பத னாலேயே
தன்னை அப்பழுக்கற்ற வராக்கிக்கொள்ள முடியு மென்ற அரிச்சுவடியை
அவர்கள் எங்கிருந்து கற்றார்கள் தெரியவில்லை.

அப்பட்டப் பொய்யை அடுத்தடுத்துச் சொல்வ தாலேயே
அதை மெய்யாக்கிவிட முடியுமென்றும் படித்திருக் கிறார்கள். எந்தப் புத்தகத்தில் தெரியவில்லை.

நம்மிடமுள்ள நூல்கள்தான் எவ்வளவு! எவ்வளவு!
எவ்வளவுக்கெவ்வளவு படிக்கிறோமோ
அறிவு விரிவடையும் அவ்வளவுக்கவ்வளவு.

பல்கிப் பெருகி பெருத்து வீங்கிப்புடைத்துவிட்டால் பின் வெடித்து உடைந்து சிதற வாய்ப்பிருக்கிறது எதற்கும்.

ஏட்டுச் சுரைக்காய் கவைக்குதவாது….

ஒருவேளை வாழ்க்கைப்பாடமாகக் கற்றிருக்கலாம்.

கற்றது கையளவு; கல்லாதது கடலளவு…..

’உனக்கு மூடிக்கொண்ட பூனைக்கண்கள்’ என்பாரிடம்
உண்மையிலேயே மூடியிருக்கும் பூனையின் கண்களுக்குள் கூடுவிட்டுக்கூடுபாயக் கிடைத்தலொரு கொடுப்பினையென்றால்
'நட்டுக்கழண்ட பெண்(மணி)' என்ற இன்னொரு அடைமொழியை அவர்கள் தரவேண்டியிருக்கும் –

அதாவது, கொஞ்சம் கண்ணியமானவராயிருப்பின்.
(இல்லாவிட்டால் இருக்கவேயிருக்கிறது
அருவருக்கத்தக்க அடைமொழிகள் ஆயிரம்.
சொல்லியா தரவேண்டும்!)

போகிற போக்கில் அள்ளி வீசிக்கொண்டேயிருந்தால் பின் கையிருப்பிலுள்ள அடைமொழிகளை யெல் லாம் இழந்து
அவர்களுடைய அடையாளம் என்று எதுவுமில்லா மலாகிவிடுமே என்பதை நினைத்துப் பாவமாயிருக் கிறது

போரும் சமாதானமும் அவர்கள் வரையில்
வீரமும் கோழைத்தனமும்…..


(2)


என்னை பசுமை ஃபாஸிஸ்ட் (அப்படியென்றால் என்ன?!) என்று அழைத்தவரை
பேசாமல் ’ப்ளாக்’ செய்து கடந்துசெல்கிறேன்.

அவரை 'வறண்ட ஃபாஸிஸ்ட்' என்று யாரேனும் அழைக்கக்கூடும்…

வானவில் ஃபாஸிஸ்ட் என்ற அடைமொழி
யாருக்கேனும் வழங்கப்பட்டிருக்கிறதா, தெரிய வில்லை.

வழங்க எண்ணிக்கொண்டிருப்பவர்கள் புதைசேறு ஃபாஸிஸ்ட் என்ற பதக்கப்பெயர் பெற்றிருக்கக் கூடும்.

ஆய்த எழுத்து தமிழுக்கே உரித்தானதுதானே
அதை ஏன் நாம் அரிதாகவே பயன்படுத்துகிறோம்?
அவசியம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

பார்க்கிறவர்களையெல்லாம் ஃபாஸிஸ்டுகளாக பாவிக்கும் இயல்புடையார்தான் இருக்கும் ஃபாஸிஸ்டுகளிலேயே உச்சபட்ச ஃபாஸிஸ்ட் என்று எதிர்வினையாற்றாதலால் நான் அச்சங் கொண்டுவிட்டேன் என்று அர்த்தமா என்ன?

ஒருவேளை அந்த வார்த்தையின் வீரியத்தை அழித்துவிட்டதாகவும் அதை என் மீது பிரயோகித்தது சரியில்லை என்றும்
அவர்களுக்குத் தோன்றக்கூடும் நாளில்
அவர்களும் நானும் உயிரோடிருப்பின் _
அவர்கள் அதை என்னிடம் தெரிவிக்கவேண்டி யதில்லை;
தெரிவிப்பார்கள் என்ற எந்த எதிர்பார்ப்பும்
என்னிடமில்லை எள்ளளவும்..

அதனியல்பில் எச்சமிட்ட காகமிருந்த மரத்தின் நேர்கீழே
அக்கணம் என் தலையிருந்தது. அவ்வளவே.

அனுபவம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அனுபவம்


‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


முப்பது வருட மொழிபெயர்ப்பு அனுபவம்
 
எனக்கிருப் பதாகவும்

அது என் மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது என்றும்

குறுந்திறனாய்வொன்றில் குறிப்பிடப்பட்டிருக்

 கிறது….


முப்பது தானா? நாற்பதுகூட இருக்கலாம்.

ஆனால், அதுவொரு அளவுகோலா,

தெரியவில்லை.


சித்திரம் கைப்பழக்கமாக இருக்கலாம்;

இல்லாதுபோகலாம்.


படைப்பாளியாகா படைப்பாளியைப் போலவே

மொழிபெயர்ப்பாளராக மாட்டா மொழிபெயர்ப்

 பாளர்களும் உண்டு.


இகழ்வதைைப் போலவே புகழ்வதிலும்

அரசியல் இருப்பதை அறிந்திருக்கிறேன்.


இகழ்ச்சியும் புகழ்ச்சியும் சிலர் இயல்பாகக் கைக்

 கொள்ளும் உத்தியாவதுண்டு
 _
தம்மை விமர்சனாதிபதிகளாக சத்தமில்லாமல்

 பீடமேற்றிக்கொண்டுவிட.


முப்பது வருட மொழிபெயர்ப்பு 

அனுபவமுடையவர்

என்று மூன்று முறை அடித்துச்சொல்லியே

நேற்றிலிருந்து மொழிபெயர்க்கத்

 தொடங்கியவரை

முதுபெரும் மொழிபெயர்ப்பாளராக்கிவிடுவதும்

இங்கே நடக்கவில்லையா என்ன?


இத்தனை வருட இலக்கியவெளிப் பயணத்தில்

இன்னும் நிறையப் பார்த்தாயிற்று.


புகழுரைகளையும் இகழுரைகளையும்

பொருட்படுத்தாத அகம் ஆத்ம சுகம்.


குறும்பாக என்னைப் பார்த்துச் சிரித்தவாறு

கேட்கிறது நான்:


‘மொழிக்கடலின் ஒரு துளியாக இருக்கும்

 என்னால்

மொழியை எப்படி பெயர்க்க இயலும்?’.


கேள்வியை வழிமொழிகிறேன்.


இரண்டும் இரண்டு பாறைகளென்றாலாவது

பெயர்க்க முடியலாம் -காற்றாக காலமாக

 கண்ணாமூச்சிவிளையாடும்போது…?


சிறுமியின் நோட்டுப்புத்தகத்திற்குள்

 பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மயிலிறகாய்

இரு மொழிகளும் மாயம் செய்தபடி

நீவிவிட்டுக்கொண்டிருக்கின்றன என்னை.


அவை படிக்கத் தரும் வரிகள் 

அருள்பாலிக்கின்றன.

இருப்பைத் தாண்டி வாழ்கிறேன்.

இவ்வளவே.

கீழ்க்கண்ணால் பார்ப்பது புகைப்படங்களா? புகைப்படத்தில் உள்ளவர்களா? -’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கீழ்க்கண்ணால் பார்ப்பது புகைப்படங்களா? புகைப்படத்தில் உள்ளவர்களா?

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை
எதனால் சிலர் எல்லாப் புகைப்படங்களிலும்
கீழ்க்கண்ணால் பார்க்கிறார்கள்
கிறக்கத்திலாழ்ந்திருப்பதாய்
பிறரைக் கிறக்கத்திலாழ்த்த விரும்புவதாய்
புகைப்படக்கருவிக்குள் அதற்கென்று ஏதேனும்
தனிச்சிறப்பான தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கிறதா?
அறிவுசாலிகள் கைக்கொள்ளவேண்டிய பாவம் அதுதானோ?
சத்தியமாய் இயல்பானதா? அல்லது, ஒத்திகை பார்க்கப்பட்டதா?
பாவமும் பாவனையும் ஏன் சமயங்களில் ஒரே பொருளிலும்
சமயங்களில் வெவ்வேறு பொருளிலும் வருகின்றன?.
(B)பாவம் (P)பாவமாக பாவனை என்னவாகும்?
ஏனோ எதனாலுக்கு பதிலியாகுமா ஆகாதா?
போகாத ஊருக்கு வழிதேடக்கூடாதா?
ஒருமுறை தாண்டிக்கடந்தபின் மீண்டும்
முதல் சதுரத்திற்குக் கால்கள் வந்துசேர்வது
எப்படி?
இப்படி _
யடுக்கடுக்காய் எத்தனையோ புரியாமலிருக்கும்போது
கணக்காய் ஒன்று மட்டும் புரியவில்லையென்று
எதனால் சொன்னேன்
என்பதும் புரியவில்லை!