LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, January 16, 2017

சரியும் தராசுகள் ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

சரியும் தராசுகள்

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)



















1.தொழில்நுட்பம்
 காசுள்ளவர்க்கும்
 காவல்படை வைத்திருப்ப
வர்க்கும்
 காலால் எட்டியுதைத்துக் களித்து மகிழ
எப்போதும் தேவை
எளிய கவிஞர்களின் தலைகள்.
தன் கால்களால் எட்டியுதைத்தால் வலிக்கும் என்று
விலைக்கு வாங்கிக்கொள்வார் சில மண்டைகளை.

2. ரசனை
பாந்தமாயுள்ள வாய்கள் சிலவற்றை ஏந்திவந்தார்
நீந்தத் தெரிந்தவனை மூழ்கடிப்பதே குறியாய்
வண்டை வண்டையாய்
தொண்டைத்தண்ணீர் வற்ற
ஏசிமுடிக்க.
கூசாத மனசாட்சி வாய்த்த நீசர்கள்
கூலிக்குப் போட்டுத்தள்ளுகிறவர்களைக் காட்டிலும்
மோசமானவர்கள்.

3. வாசிப்பு
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்
என்ற நம்பிக்கையில்
படித்துப் படித்துச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்
அது படிக்கவேண்டிய புத்தகம் என்று.
பக்கம்பக்கமாய் பெருகியோடும் அபத்தத்தின் அழுகலில்
அக்கம்பக்கமெங்கும் புழுத்தவாறு.

4. புவியியல்
இருந்தாற்போலிருந்து திடீரென்று முளைத்த காளான்
தானொரு கோள்தான் என்று காட்டிக்கொள்ளும் முனைப்பில்
நீட்டிமுழக்கிக்கொண்டிருப்பதைக் கேட்டு
நகைத்துமாளவில்லை
நட்சத்திரங்களுக்கு.

5. தமிழ்க்கவியின் தலைவிதி
எண்பது பக்கக் கவிதைத்தொகுப்பிற்கு
எண்ணூறு பக்க விமர்சனம் எழுதுவதென்பது
எத்தனை பெரிய காருண்யம் என்பார்
கல்லறையிலிருந்து எழுந்துவந்து
கவிஞர் நன்றிதெரிவிக்கவேண்டும் என்றும் சொல்லக்கூடும்.

6. இடிபாடு
நட்பை விடுங்கள்
கெட்டுப்போய்விட்டதே நன்னெறி…
பட்டுப்போய்விட்டதோ மனசாட்சி?
அந்த எட்டு பேர் காலாட்டியமர்ந்தபடி
கெக்கலிக்கும் குட்டிச்சுவரின்
அடித்தளம் உட்குழிந்தவண்ணம்.

7. விற்பனைக்கு
பெறவுள்ள பட்டமே குறியாய்,
நிறுத்தற்குறிகளுக்கப்பாலான
கவிமனதை
வதைத்துச் சிதைத்து
வாழ்த்துப்பா பாடுபவர்
விழுமியம் கிலோ என்ன விலை?

8.ஈரும் பேனும்
எட்டுப்பக்கங்களில்
கட்டவிழ்க்கப்பட்டிருந்த
சட்டாம்பிள்ளைத்தனத்தின்
முட்டாள்தனம்
ஒரு பானை சோறும்
ஒரு சோறும்….

9. உரமும் திறமும்
அந்த விரிவுரையாளருக்காகப் பரிந்துபேசுபவர்
வரிந்துகட்டிக்கொண்டு வழக்காடுபவர்
இந்த விரிவுரையாளரைப் புறக்கணிப்பதும்
புறம்பேசுவதும் சரியோ சரியா?
சிரியோ சிரியென்று சிரிக்கிறாரே
சான்றோனைக் கண்டு.
அறிந்தே இவர் செய்யும் சிறுமையைப்
பொறுத்தருளப்
பைத்தியமல்லவே பராசக்தி.



சீதைக்கும் பேசத் தெரியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

சீதைக்கும் பேசத் தெரியும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



ராமன் என் அன்பன்.
அவனோடு நான் அற்புதமான பொழுதுகளைக் கழித்திருக்கிறேன்.
நாங்கள் என்னவெல்லாம் பேசியிருக்கிறோம் தெரியுமா?
ஒவ்வொன்றும் அட்சரலட்சம் பெறும்!
எப்படியெல்லாம் கூடிக்களித்திருக்கிறோம் தெரியுமா?
ஆரண்ய மரங்கள் கதைப்பாட்டுப் படிக்கும்!
அவன் என்னை சந்தேகப்பட்டது ஒரு சறுக்கல்;
அதற்காய், என்னைக் கடத்திச்சென்றவனை நான்
காதலிப்பேன் என்று கிறுக்குவதா?
பெண்ணை வலுக்கட்டாயப்படுத்துபவன் கயவனல்லவா?
கதாநாயகன் என்கிறீர்களே?
எனதுரிமையைப் பேசுவதாய் என்னை ஏன் இன்னுமின்னும் சிறுமைப்படுத்துகிறீர்கள்?
கடத்திச் சென்றவனுக்குக் கெடுக்கத் தெரியாதா என்ன?
கிட்டே நெருங்கினால் தலை வெடித்துச் சிதறும் என்பதால்
எட்ட நின்றே ஏங்கிப் பார்த்தான்.
கையெட்டும் தூரத்தில் மண்டோதரி இருக்க
என்னென்ன கெட்ட வார்த்தைகளைப் பேசினான் தெரியுமா?
என்னைப் பொறுத்தவரை துட்டனே யவன்.
அவனுக்கும் வழக்குரைஞர் வைத்துக்கொள்ளும் உரிமையுண்டு.
ஆனால், நான் அவனை உள்ளூர நேசித்தேன் என்று பொய்பேசி
பாதிக்கப்பட்ட என்னைக்கொண்டே பாதகன் அவன் விடுதலையை வாங்கித்தரப் பார்க்கவேண்டாம்.
உங்கள் மனைவி, மகள் கடத்தப்பட்டால்
இப்படித்தான் மனிதநேயம் பேசுவீர்களா?
என் அன்பன் ராமபிரான் என்னை சந்தேகப்பட்டான்.
யாரால்? யார் செய்த காரியத்தால்?
சந்தேகப்பட்டதற்காய் எத்தனை அலைபாய்ந்திருக்கும் என் அன்பன் மனம் என்று எனக்குத் தெரியும்.
ஆறாக்காயம்தான், 
அதற்காய் ராவணன் கையாலா மருந்திட்டுக்கொள்வேன்?
ஏன் எல்லோருமே என் விஷயத்தில் வெவ்வேறுவிதமாய்
ராவணனாகவே நடந்துகொள்கிறீர்கள்?


கச்சேரி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

கச்சேரி
ரிஷி 
(லதா ராமகிருஷ்ணன்)


(*சமர்ப்பணம்: தோழர் கே.என்.சிவராமனுக்கு)


சிலருக்குக் குரலெழும்பவில்லை; 
கிச் கிச்மாத்திரை கைவசம் இருந்ததோ இல்லையோ..
கோடையென்றாலுங்கூட சிலர் 
அவசரமாய் அப்பால் சென்றார்கள் சிறுநீர் கழிக்க
இயற்கையின் அழைப்பை ஏற்கவில்லையானால்ஈகாலஜியைப் பழிப்பதாகிவிடாதா
காதுகளில் செருகியிருந்த கருவியைக் காரணங்காட்டி, 
எதுவும் கேட்கவில்லை என்பதான பாவனையைத் 
தருவித்துக்கொண்டவர் சிலர்; 
தக்கவைத்துக்கொண்டவர் சிலர்.
மறு கன்னத்தைக் காட்டுபவனே மகத்தான மனிதன் என்று மேற்கோள் காட்டியவர்கள் உண்டு.
காட்டானை மாற்றான் தோட்ட மல்லிகை மணமாக
பாட்டுப்படித்தவர்கள் உண்டு.
பல்லவி அனுபல்லவி கீர்த்தனை ஆலாபனை 
யென நீண்டு
சாட்சாத் கவிதைக் களவாடிகளே சரணம் என்று 
மங்களம் பாடினர் சிலர் மாறா சுருதிபேதங்களில் நின்று.
முன்னும் பின்னுமாய் நிலவிய மயான அமைதியே
இன்னருங் கானம் என சிலர் பொருள்பெயர்க்க
உன்னை மிதிப்பதில்தான் என் வழி திறக்கிறதென
பொன்மொழி சிலர் இறைக்க,
அரங்கதிரக் கைத்தட்டல் அவ்வப்போது 
கேட்டுக்கொண்டிருந்தது கிசுகிசுப்பாய்.
அபஸ்வரத்தைச் சுட்டுவது யார் , குட்டுவது யார் என்று 
அந்தரத்தில் காயம்பட்டுக்கிடந்த சிட்டுக்குருவி 
 
விட்டுவிடுதலையாகவோர் 
சூட்சுமமாய்
கிளம்பியது அரங்கில் அந்த ஒற்றைக்குரல்
ஓலமாய் 
ஓங்காரமாய் 
ஒப்பிலா சங்கீதமாய்.
ஒருவகை சாபவிமோசனமாய்.


from ANAAMIKAA ALPHABETS

from 
ANAAMIKAA ALPHABETS 


PROFILING A POEM by ‘rishi’ (latha ramakrishnan)

   
PROFILING A POEM
‘rishi’ (latha ramakrishnan)




Abortion _
deformed child_
stillborn _
premature _
or a healthy baby?
What is a boy?
What is a girl?
Scanning is illegal.
Pre-natal, post-natal
Care is a must.
Depression, delusion
might, midway, happen….
Delivering a baby is surely
a rebirth
Indeed hard to bear 
the labour pain.
and, in the end
loss or gain?
The question remains….
A Word formless,
an indefinable mass,
floats within
as sperm
or
an embryo .