குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! -
- லதா ராமகிருஷ்ணன் -
(*பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)
முழுக்கட்டுரையையும் வாசிக்க
//ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை என்று உளவிய லாளர்கள், உளவியல் மருத்து வர்கள், கல்வியாளர்கள் கூறு கிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்த பட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர் களால் நடத்தப் படுவது அவர்களிடம் என்னென்ன அக – புற பாதிப்பு களை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக்கின்றன.
ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர் கள், எழுத்தாளர்கள் என பலர் 'முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களு டைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக் கிறார்கள்; எழுதிக் கொண்டிருக் கிறார்கள்.
//ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை என்று உளவிய லாளர்கள், உளவியல் மருத்து வர்கள், கல்வியாளர்கள் கூறு கிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்த பட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர்களால் நடத்தப் படுவது அவர்களிடம் என்னென்ன அக – புற பாதிப்பு களை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக் கின்றன.
ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர் கள், எழுத்தாளர்கள் என பலர் 'முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களு டைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக் கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று சமூக ஊடகங்கள் நிறைய இருப்பதால் குழந்தைகள் மீதான சுரண் டல்கள், பெரியவர்கள் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் சிறார்களை அச்சுறுத்தியோ, ஆசை காட்டியோ பயன்படுத்திக்கொள்வது எல்லாம் உடனுக்குடன் வெளியே தெரிந்துவிடுகின்றன. அதனால், நாற்பது-ஐம்பது வருடங்களுக்கு முன் குழந்தைகள் மீதான இத்தகைய சுரண்டல்கள் அறவே யில்லையென்றோ, அதிகம் இல்லையென்றோ சொல்லிவிட இயலாது.
ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர் கள், எழுத்தாளர்கள் என சிலபலர் முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை களை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக் கிறார்கள்.
ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, எழுத்தாளர் வண்ணநிலவன் என சில பெயர்களைக் குறிப்பிடலாம். துக்ளக் இதழ் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ‘பள்ளிக ளில் மாணாக்கர்கள் அடித்துக் கண்டிக்கப்படவேண்டி யவர்கள் என்று வலியுறுத்துவதைத் தனது சமூகக் கடமைகளில் ஒன்றாகச் செய்துவருகிறது
சமீபத்திய துக்ளக் இதழில் எஸ்.ஜே.இதயா என்பவர் ‘குற்றங் களைக் குறைக்குமா சிங்கப்படை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையிலும் இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். மேலே அந்தப் பத்தி தரப்பட்டுள்ளது:
‘பெற்றோரும் கண்ணை மட்டும் விட்டுட்டு எப்படி வேண்டு மானாலும் அடிங்க’ என்று ஆசிரியர்களிடம் தங்கள் பிள்ளைகளை ஒப்படைப்பார்கள்’
இது என்ன விதமான சமூகவுணர்வு? ‘இதை அப்படியே அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்பவர்களைப் பார்த்து நான் கேட்கும் கேள்வி இதுதான்: ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? ஆசிரியர்களும் பெற்றோர்கள் என்ற அளவில் பெரியவர்கள் ‘தோலுரிக்க’ப் பிறந்தவர்கள் தான் குழந்தைகள்? இது என்ன காட்டுமிராண்டித்தன மான கண்ணோட் டம்; அணுகுமுறை?
அடித்துதுவைப்பதால் குழந்தைகள் நல்லொழுக்கங்க ளைக் கற்றுக் கொண்டுவிட மாட்டார்கள். ஏற்கெனவே குழந்தைகளுக்கு வாக்குரிமை இல்லை என்பதால் அவர்களுடைய நலன்கள் சமுக்க-அரசியல் ரீதியாய் புறக்கணிக்கப்படும் நிலையே பெருமளவு நிலவுகிறது. இதில் சமூகப் பிரக்ஞை- மனிதநேயம் தூக்கலாக இருப்பவர்களாகத் தங்களைக் காண்பித்துக் கொள்ளும் பத்திரிகைகளும், ஊடகவியலாளர்களும் இப்படிப் பேசிக் கொண்டிருந்தால் எப்படி? இதுதான் உண்மையில் அதி ஆபாச மான பேச்சு; ஆதிக்க மனப்பான்மை.






No comments:
Post a Comment