மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்
பாகம் – 1
அத்தியாயம் – 9
மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம்
//*கட்டுரையிலிருந்து சில பத்திகள்கீழே தரப்பட்டுள்ளன.
திண்ணை இணைய இதழில் முழுக் கட்டுரையையும் வாசிக்க -
//எனவே, எங்கெல்லாம் சாத்தியமாகுமோ அங்கெல்லாம் தங்களு டைய சமூகக் குழுவோடு இணக்கமற்றி ருக்கும் இளைஞர்கள் தாம் எந்தத் தொழிலைச் செய்வது, எந்தப் பணியில் அமர்வது என்பது குறித்து கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் வருவாய் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை – பணியிடங் களில், பார்க்கும் தொழிலில் இணக்கமான நட்புறவு கிடைக்க வழியிருக்கும் துறைகளையே அவர்கள் தமது வாழ்க்கைத்தொழி லாக, வாழ்வாதார வழியாக தேர்ந் தெடுத்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியம் என்ப தையே அவர்கள் பல நேரங்களில் உணர்வ தில்லை. உலகம் பற்றிய அவர்களுடைய அறிவு மிகவும் தங்க ளுக்கு உலகம் பற்றி அவர்களுடைய அறிவு மிகவும் குறுகியதா கவே இருக்கிறது என்பதால் தங்களுடைய நிலத்தில், சூழலில் தங்களுக்கு பழக்கமாகிவிட்ட பாரபட்சப் பார்வைகள் உலக மெங்கும் இருக்கின்றன என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் வயதில் பெரியவர்கள் இளையவர்களுக்கு எத்த னையோ உதவி செய்ய முடியும். ஏனென்றால், இதற்கு மனித இனம் சார் கணிசமான அனுபவம் கட்டாயத் தேவையாகிறது.//



No comments:
Post a Comment