கவித்திறன்
அதிகவனமாக
சுற்றிலுமிருந்தவர்களை ‘க்ராப்’ செய்துவிட்டு
வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் பதிவேற்றிக்கொண்டேயிருக்கிறா
ரொரு கவி.
அந்த ஆடம்பரவிழாவில் தான் விலையுயர்ந்த
ஆடையணிமணிகளுடன் கலந்துகொண்டதை அவசியமில்லாதபோதும்
அடிக்கடி பதிவேற்றிக்கொண்டேயிருக்கிறா
ரொரு கவி.
அந்தத் திரைப்படத் துவக்கநாள் பூஜைவிழாவில்
இன்றைய முன்னணி நட்சத்திரங்கள்,
கோடி ரூபாயில் எளிய வாழ்வு வாழ்ந்துவரும்
அரிதார சீர்த்திருத்தவாதிக் கலைஞர்கள்
அன்னபிறரோடு
தோளோடு தோளொட்டி வாயெல்லாம் பல்லாக நின்றுகொண்டிருக்கும் தனது புகைப்படத்தை
தினந்தினம் பதிவேற்றி தன்னையும்
ஒளிவட்டத்தில் நுழைத்துக்கொள்ளப்
பகீரதப் பிரயத்தனம் செய்கிறா
ரொரு கவி….
No comments:
Post a Comment