LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, October 24, 2018

CITY WALLS - POEMS BY VAIDHEESWARAN Rendered in English


CITY WALLS POEMS BY VAIDHEESWARAN

Rendered in English





கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில 2000த்தில் THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் வெளியாகியது

அதில் இடம்பெற்றிருந்த ஏழெட்டு மொழிபெயர்ப்பாளர்களில் _ எழுத்தாளர்கள் அசோகமித்திரன், எம்.எஸ்.ராமஸ்வாமி என அவர்கள் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள்; அறிஞர்கள். கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள், எழுத்தாக்கங்கள் மீது மரியாதையும் அபிமானமும் கொண்டவர்கள் _ நானும் ஒருத்தி

இப்போது, கவிஞர் வைதீஸ்வரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு (1935 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் நாள் பிறந்தவர் கவிஞர் வைதீஸ்வரன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய வெளியில் குறிப்பிடத்தக்க பங்காற்றிவருபவர்) அந்தக் கவிதைகளையும் கூடவே இன்னும் ஓரிரு மொழிபெயர்ப்பாளர்களுடைய மொழிபெயர்ப்புகள், நான் புதிதாக மொழிபெயர்த்த திரு.வைதீஸ்வரனின் கவிதைகள் சில, தேவமகள் அறக்கட்டளை விருது அவருக்குக் கிடைத்த போது அவர் ஆற்றிய, தனது வாழ்க்கை, கவிதை குறித்த சீரிய உரையின் ஆங்கில ஆக்கம் ஆகியவற்றையும் சேர்த்து ஒரு நூல் வெளியிடலாமே என்று புதுப்புனல் பதிப்பகத்தை நாடியபோது அதன் நிறுவனர்களான திரு. ரவிச்சந்திரனும் சாந்தி ரவிச்சந்திரனும் ஆர்வமாக அந்த நூலை வெளியிட முன்வந்தனர்

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நூலின் முன் அட்டை ஓவியம் கவிஞர் வைதீஸ்வரன் வரைந்தது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்தத் தொகுப்பில் அவருடைய 60 கவிதைகளும், ஒரு கட்டுரையும் ஆங்கில மொழிபெயர்ப்பில்.


பக்கங்கள்: 120
விலை: ரூ.250.


MOUNTS VALLEYS AND MYSELF - POEMS BY S.VAIDHEESWARAN (கவிஞர் வைதீஸ்வரன்)


MOUNTS VALLEYS AND MYSELF

POEMS BY S.VAIDHEESWARAN
(
கவிஞர் வைதீஸ்வரன்)


ஒரு படைப்பாளிக்கு உரிய மரியாதையை அவர் வாழுங் காலத்திலேயே வழங்குவதே முறை. அதுவே அவருடைய எழுத்துகளில் நமக்குக் கிடைத்த நிறைவான வாசிப்பனு பவத்திற்கு நாம்செய்யும் பதில் மரியாதை. இந்த எண்ணமே என்னை கவிஞர் வைதீஸ்வரனின் 70, 80 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்தது. இதே எண்ணம் கொண்ட, – தன்னளவில் நல்ல மொழி பெயர்ப்பாளராக விளங்குபவரும் www.modernliterature.org,www.tamilliterature. in ஆகிய இரு தரமான இணைய இதழ்களின் நிறுவனர்ஆசிரியருமான நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியனின் முயற்சியால் இந்த மொழிபெயர்ப்புகளில் 50க்கும் மேல் இடம்பெறும் இந்தத் தொகுப்பு வெளியாகியுள்ளது.

கவிஞர் வைதீஸ்வரன், நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியன், நூலை வெளியிட்டுள்ள HAWAKAL PUBLISHERS ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.

நூலின் முகப்பு அட்டையும் சில விவரங்களும் இங்கே தரப்பட்டுள்ளது

விலை: ரூ 350
96 பக்கங்கள்
சுமார் 60 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்


கண்ணோட்டம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கண்ணோட்டம்
 ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)



தன்னைச் சுற்றி முட்களைப் டரவிட்டபடியேயிருக்கும்
அந்த ஒற்றைச் சொல்
என்னை அந்தக் கவிதைக்குள் சரண்புகவிடாமல்
தடுக்கிறது.
குறியீடாகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
அறிவேன். என்றாலும்
குரூரமாகவே ஒலிக்கிறது.
A rose by any other name would smell as sweet’
போலவே
A thorn by any other name
would prick and pierce’.
அக்கக்கோ பறவையாய்க் கூவிக்கூவி
களைத்துப்போயிருக்கும் மனது
அந்தக் கவிதைக்குள் நுழைந்து
இளைப்பாறவேண்டும் என்று
எத்தனை கெஞ்சினாலும்
இயன்றபாடில்லை.
அப்படியெனில் கவிதை என்பது
அதிலுள்ள ஒற்றைச் சொல் மட்டுமா?
ஆமென்றால் ஆம் இல்லையென்றால்
இல்லையாமா?
எட்டுமா எனக்கொரு வழி
இந்தக் கவிதைக்குள் நுழைய?
பழையன கழிதலும் புதியன புகுதலுமான வாழ்வில்
ஏன் நான் மட்டும் எப்பொழுதும்
எதிர்மறைப் பொருளிலேயே வருகிறேன்
என்று திரும்பத் திரும்பக் கேட்டபடியே
என் கால்களை இறுகப்பற்றிப்
பின்னுக்கிழுத்துக்கொண்டிருக்கிறது
அந்த ஒற்றைச் சொல்.
இல்லாத பதில் அதன் தொலைந்த சாவியாக,
இறுக மூடிக்கொண்டுவிட்ட கவிதையின் முன்
நான் நிராதரவாய் நின்றவாறு


ஏக்கம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


ஏக்கம்
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)















சிறுமியின் கொட்டாவி
தூவும் கனவுகளைக்
கவிதையாக்கத்
தாவும் மனதைத்
தடுத்தாட்கொள்ளும் தூக்கம்!

பாரதியாரை முன்னிறுத்தி சில வரிகள்‘ - ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பாரதியாரை முன்னிறுத்தி சில வரிகள்


ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)


எப்படி ஒற்றை தேகத்தில்
எண்ணற்ற மனங்களைச் சுமந்துகொண்டிருந்தாய் பாரதி!
அப்படி யிங்கே எத்தனை பேர்
என்னைச் சுற்றி இருக்கிறார்கள் தெரியுமா?!
அட்சர லட்சம் பெறும் வரிகளை ஆனந்தமாய் எழுதியபடி;
அண்டசராசர ஒளிவெள்ளத்தை தம் கவிதைகளில் வாரியிறைத்தபடி;
அழும் குரல் ஒவ்வொன்றிலும் இரண்டறக் கலந்தபடி;
அலைந்தழியும் பசிக்குரல்களுக்கு உணவாகலாகா ஆற்றாமையில் நிலைகுலைந்தழிந்தபடி;
அங்கீகாரமா, அவார்டாஅப்படியென்றால்?’ என்று
ஏதும் புரியாமல் கேட்டபடியே அவர் பாட்டில் கவிதையெழுதியபடி;
அன்பைக் கவிதையில் அட்சயப்பாத்திரமாக்கியபடி;
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
அவர்களையெல்லாம்
அங்கிருந்தபடியே வாழ்த்துவாய் பாரதி!
அப்படியே என்னையும்.....