LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, October 24, 2018

பாரதியாரை முன்னிறுத்தி சில வரிகள்‘ - ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பாரதியாரை முன்னிறுத்தி சில வரிகள்


ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)


எப்படி ஒற்றை தேகத்தில்
எண்ணற்ற மனங்களைச் சுமந்துகொண்டிருந்தாய் பாரதி!
அப்படி யிங்கே எத்தனை பேர்
என்னைச் சுற்றி இருக்கிறார்கள் தெரியுமா?!
அட்சர லட்சம் பெறும் வரிகளை ஆனந்தமாய் எழுதியபடி;
அண்டசராசர ஒளிவெள்ளத்தை தம் கவிதைகளில் வாரியிறைத்தபடி;
அழும் குரல் ஒவ்வொன்றிலும் இரண்டறக் கலந்தபடி;
அலைந்தழியும் பசிக்குரல்களுக்கு உணவாகலாகா ஆற்றாமையில் நிலைகுலைந்தழிந்தபடி;
அங்கீகாரமா, அவார்டாஅப்படியென்றால்?’ என்று
ஏதும் புரியாமல் கேட்டபடியே அவர் பாட்டில் கவிதையெழுதியபடி;
அன்பைக் கவிதையில் அட்சயப்பாத்திரமாக்கியபடி;
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
அவர்களையெல்லாம்
அங்கிருந்தபடியே வாழ்த்துவாய் பாரதி!
அப்படியே என்னையும்.....


No comments:

Post a Comment