LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 9, 2025

மனமே தெய்வம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மனமே தெய்வம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கடவுள், இறைவன்
அல்லா, ஏசு புத்தர்
ஆன்ற பெரியோர் பெயர்
வெறும்
சொல்லல்ல –
சிலையல்ல;
வழிபாடல்ல;
படமல்ல
மதமல்ல.
மந்திரமல்ல
கைகூப்ப மட்டுமல்ல
கத்தியால் குத்திக்கொல்ல
அல்லவேயல்ல…….
அது
வெறுப்பின் விலக்கம்.
வன்முறையின் இன்மை.
அன்பு அறிவு பண்பு பரிவு
பாடம்
அக்கறை காருண்யம் மனிதம்
மார்க்கம்......
என்பதில்
எச்சமயமும்
நம்பிக்கை வைத்து வழிநடக்க
நல்லிணக்கம் வாழ்வாகும்
நிச்சயம்.

அலைபேசி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அலைபேசி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த அலைபேசிக்குள் சிக்கிக்கொண்டுவிட்ட
சில ‘மிஸ்டு கால்கள்’ முணுமுணுக்கத் தொடங்கின.

“என் விளம்பர வாசகங்களுக்கு வழிவிடலாகாதென்றே அலைபேசியை இந்த நேரமாய்ப் பார்த்து அணைத்துவைத்திருப்பாள்” என்று
001 2 000 என்று நீளும் எண்ணிட்ட அழைப்பு குறைப்பட்டுக்கொள்ள _

“சமத்துவம் பற்றிய எனது கொள்கை முழக்கத்தைக் கேட்கப்பிடிக்காமல்தான்
சட்டென்று அணைத்திருப்பாள்” என்று
ஆயிரம் ஏக்கராக்களுக்குக் குறையாமல் அந்த குடிசைவாழ்ப்பகுதிக்கு அருகில் மாளிகைகளும் பிரம்மாண்ட மளிகைக்கடைகளுமாக கொழித்திருக்கும் கட்சியின் தலைவருடைய பதிவுசெய்யப்பட்ட குரலில் புகார் கூறியது _
0003 என்று முடியும் எண்.

“சாப்பிட்டுமுடித்த பின் இன்னும் மெல்ல ஏதேனும் கிடைக்குமா என்று நான் நம்பிக்கையோடு சுழற்றும் சில பல அலைபேசி எண்களில் இவளுடையதும் ஒன்று.என்பதைக் கண்டுகொண்டவளல்லவா?” என்று
கோபத்தோடு கூறியது இன்னொரு எண்.

மஸாஜ் செய்யவேண்டுமா என்று கேட்கும் எண் 9453--------------32;
ஆண் நண்பர்களைப் பெற ஆசையாயிருக்கிறதா என்று
ஆசையாசையாகக் கேட்கும் 78456------0 எண் ;
ஆண்டுகள் இருபதுக்குப் பின் திடீரென்று
மீண்டும் தொடர்புகொண்டு
என் அரிய நேரத்தை வீணடிக்க
நெருங்கிய நட்பினர் பாவனையை தாங்கிவரும்
999555----எண்ணின் அழைப்புகள் குறைந்தபட்சம் இரண்டு….

'ஆன்' செய்யும்வரை அலைபேசிக்குள்ளேயே குந்திக்கொண்டிருப்பவர்கள்
ஆன் செய்தவுடன் தொப் தொப்பென்று வேகமாய் குதிப்பார்கள்.

அவர்களிடமிருந்து தப்பிக்கும் வழியறியாமல்
ஆஃப் பொத்தானை அழுத்தியும் அழுத்தாமலும் அலைக்கழிந்துகொண்டிருக்கும் மனம்…..

சொல்லத் தோன்றும் சில…… - லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத் தோன்றும் சில……

- லதா ராமகிருஷ்ணன்

(2023, மார்ச் 9 அன்று என் ஃபேஸ்புக் டைம்லைனில் பதிவேற்றியது இது


எப்போதுமே breaking news போல் ஏதாவ தொரு விஷயம் வெளிவரும் போது அதன் மூலம் சில mythகள் அடிபடும்.

முன்பு ஓரினச்சேர்க்கை குறித்து ஒரேயடியாக romanticize செய்யப் பட்டுக் கொண்டிருந்த போது கிண்டி கத்திப் பாரா ஜங்ஷன் பகுதியில் ஓரினச்சேர்க்கையாளர் கள் சிலர் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் மற்ற ஆண்களை மோசமாக நடத்த முயற்சிப்பது குறித்த ஆதாரபூர்வமான செய்தி வந்தது.
ஓரினச்சேர்க்கையாளர்களிலும் ஒருவர் ஆதிக்கவாதியாக நடந்துகொள்வார் என்று உளவியலாளர்கள் குறிப்பிட்டார்கள். சிறுவர்கள் வலுக்கட்டாயமாகப் ஓரினப் புணர்ச்சியாளர்களால் பள்ளிகள், விடுதிகள் போன்ற இடங்களில் பாலியல் சீண்டல் களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வெளிவரலா யின.
சமீபத்தில் ஆண்கள் பள்ளி யொன்றில் புதிதாகச் சேர்ந்த மாண வரை சீனியர் மாணவர்கள் மிக மோசமான பாலியல் சீண்டல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் ஆளாக்கி யிருப்பது குறித்த செய்தியைப் படிக்க நேர்ந்தது.
ஆண்களென்றால் பாலியல் சீண்டல்கள் செய்வார்கள், மற்றவர்கள் தங்களுக்குச் செய்வதைப் பெரிதுபடுத்த மாட்டார்கள், பாலியல் சீண்டல்களுக்கு ஆண்கள் victimகளாக இருக்க மாட்டார் கள் என்பதாய் பரவலாக பொதுப்புத்தியில் உள்ள எண்ணம் தவறு என்ற உண்மை பலருக்குத் தாமதமாகவே உறைக்கிறது.
மார்க்வெஸ்ஸின் ONE HUNDRED YEARS OF SOLITUDEஇல் இளைஞர் களுக்கு பாலுறவில் பயிற்சி தர ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி யிடம் சில பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைப் பதாகப் படித்த ஞாபகம். இப்படி சிலர் தம்மை இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு போதகர் ஸ்தானத்தில் நிறுத்திக்கொள்வதும் (அப்படி உண்மையாகவே தம்மை பாவித்துக்கொண்டோ அல்லது காரியார்த்தமாகவோ) நடக்கிறது.
பாலியல்ரீதியான உருவேற்றல்கள், அத்துமீறல்கள் கவனம் பெறும் அளவுக்கு இளம் உள்ளங்களிடம் அவர்களை சுயமாய் சிந்திக்கவிடாமல் கருத்துரீதியாக மேற்கொள்ளப்படும் உருவேற் றல்கள், மூளைச்சலவை களும் அத்துமீறல்களே. இளம் உள்ளங்க ளுக்கு வழிகாட்டுதல், அவர் களை வழிநடத்துதல் என்பது அவர் களை சுயமாய் சிந்திக்க இயலாதவர்களாய் ‘சாவி கொடுத்த பொம்மைகளாய்’ செயல்பட வைப்பது அல்ல.
மீறல் மனோபாவமே இளைஞர்களின் தனித்துவ அடையாள மாகக் காட்டப்படுகிறது; கொள்ளப்படுகிறது. எனில், எதை மீறுகி றோம் எதற்காக மீறுகிறோம், இந்த மீறலின் விளைவுகள் என்ன வாக இருக்கும் என்பது குறித்த தெளிவில்லாமல் மேற்கொள்ளப் படும் மீறலும் ஒருவகையில் நம் மீது நாமே இழைக்கும் அத்து மீறலே. ஒழுக்கம், தனி மனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம், செயலில் ஒழுக்கம், சிந்தனையில் ஒழுக்கம் - இத்தகைய ஒழுக்கங்கள் அல்லது ஒழுக்கத்தின் பல்பரிமாணங்கள் ஒருவகையில் சக மனிதர்களின் தனிமனித உரிமைகளை, சமூக உரிமைகளை அங்கீகரித்து மதித்து நடப்பதே.
இன்று ‘போர்னோ’ காணொளிகள் மிக மிகப் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. அவற்றில் காணப்படுபவர்கள் எல்லோருமே பாலுறவுக்காக ஏங்குபவர்களாகவும், யார் புணர்ந்தாலும் அதை ரசிப்பவர்களாகவும் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டு அதன் மூலம் தன்னை ஒருவர் தொடுவது, தன் மீது பாலியல் அத்துமீறல் நிகழ்த்துவது தனக் குப் பிடிக்கவில்லை என்று சொல்பவர், எதிர்ப்ப வர் போலி என்று பார்க்கப்படுமளவு அப்படியொரு பிம்பம் தொடர் ந்து கட்டமைக்கப்பட்டுவருகிறது.
சினிமாக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். Stalking தான் இங்கே காதலின் முதல் படி. நரைத்த முடியோடு நடிக்கும் நடிகரைப் பாராட்டுவதற்கு முன் படத்தில் அவரை 60 வயதை நெருங்குபவராக அல்லது கடந்தவராகக் காட்டியபடியே இளம்பெண்ணிடம் அவர் காதல் வயப்படுவதாகவும். அந்தக் கதாநாயகியும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதாகவும் காண்பிப்பதன் மூலம் ரசிகர்களிடம் எத்தகைய impact ஏற்படும் என்பதை யும் கணக்கில் கொள்ளவேண்டிய அவசியமிருக்கிறது.
உடல் பற்றி, உடலுறவு பற்றி, பாலியல் அத்துமீறல் தொடர் பாய் இருக்கும் சட்டங்கள் குறித்தெல்லாம் தொடர்ந்தரீதியில் வளரிளம் பருவத்தினருக்கும் வளர்ந்தவர்களுக்கும்கூட நிறைய தகவல்கள் கிடைக்கச்செய்ய வேண்டியது அவசியம்.

A POEM BY NESAMITHRAN - Translated into English by Latha Ramakrishnan

 A POEM BY

NESAMITHRAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



I am entering into the Time-phase
where just as prayers turning invalid
grievances too turn null and void
No curse upon thee
Nor any misgiving against me
As the old man who has stopped
bolting the door
while sleeping
I have become one
with secrets none.
Just one thing is there to convey:
The fortune of flying backward is
bestowed on hummingbirds alone.

நேச மித்ரன்
பிரார்த்தனைகள் காலாவதி
ஆவது போலவே புகார்களும்
காலாவதி ஆகிவிடும் காலத்திற்குள்
நுழைந்து கொண்டிருக்கிறேன்
உன் மீது எந்த சாபமும் இல்லை
என் மீதும் எந்த வருத்தமும் இல்லை
உறங்கும் போது
கதவை தாழிட்டுக் கொள்வதை
நிறுத்திக் கொண்டுவிட்ட
முதியவனைப் போல
இரகசியங்களற்றவனாகி விட்டேன்
சொல்வதற்கு ஒன்றுண்டு
பின்னோக்கிப் பறத்தலானது
தேன்சிட்டுகளுக்கு மட்டும்தான்
வாய்த்திருக்கிறது.


Friday, March 7, 2025

சர்வதேச மகளிர் தினமும் ஹெலன் கெல்லரும்

 சர்வதேச மகளிர் தினமும்

ஹெலன் கெல்லரும்


// இன்று சர்வதேச மகளிர் தினம். பொதுவாக இந்த நாளில் ஹெலன் கெல்லர் அதிகம் நினைவுகூரப்படுவ தில்லை. ஆனால், நினைவுகூரப்படவேண்டிய தீரப்பெண் மணி அவர்.
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தால் மதிக்கப்படவேண்டிய வர்கள்; அவர்களாலும் சமூகத்திற்கான ஆக்கபூர்வமான பங்காற்ற முடியும் என்று தன் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியவர். பார்க்குந்திறன், கேட்குந்திறன், பேசும் திறன் மூன்றும் இல்லாதபோதும் முழுமனிதராக வாழமுடியும் என்று நிரூபித்துக்காட்டியவர்.
அவரைப் பற்றி விக்கிபீடியாவிலிருந்து இங்கே சில விவரக்குறிப்புகள் தரப்பட்டுள்ளது
.........................................................................................................................
சர்வதேச மகளிர் தினமான இன்று ஹெலென் கெல்லரை நினைவுகூர்வோம்
..................................................................................................................................
ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாள ராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். இள வயதிலேயே இவர் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவராவார்.
இவரின் தந்தை அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது ராணுவத்தில் வேலை பார்த்தவர். பருத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடுத்தர குடும்பம் இவர்களுடையது.
ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்து விட்ட ஹெலன் கெல்லருக்கு பதினெட்டு மாதச் சிறுமியாக இருந்த பொழுது மூளைக் காய்ச்சல் வந்தது.[1]
ஹெலன் கெல்லர், அமெரிக்காவின் அலபாமா மாநகரத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் பிறந்தார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன் கெல்லர், முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.
1887ஆம் ஆண்டு, ஹெலன் கெல்லரின் பெற்றோர், அலெக் சாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தனர்.
அலெக்சாண்டர், அவர்களைப் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். கிரகாம்பெல் ஆன் சல்லிவன் என்ற ஆசிரியை ஹெலன் கெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
அடுத்த 49 ஆண்டுகளைக் கெல்லரும் சல்லிவனும் ஒன்றாகவே கழித்தனர்.

பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதைப் புரிந்துகொள்ளும் கலையைக் கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். இப்படி ஒவ்வொரு பொருளையும் தொட்டுத் தொட்டு உணர்ந்து கற்றார் ஹெலன் கெல்லர். பிறகு சிறிது சிறிதாக எழுதக் கற்றுக்கொண்ட கெல்லர் கண் பார்வையற்றோருக்கான பிரெயில் எழுத்து முறையைக் கற்றுக் கொண்டார்.
எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமை கெல்லருக்கு இயல்பாகவே இருந்தது. பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார்.
1888 இல் ஹெலன் கெல்லர் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார். 1904 ஆம் வருடம், கெல்லர், சல்லிவனுடன் நியூயார்க் சென்று அங்கே யிருந்த காது கேளாதோருக்கான ரைட்-ஹுமாஸன் பள்ளியில் சேர்ந்தார். அங்கு கெல்லருக்கு பேசக் கற்றுத்தர சாராஃபுல்லர் என்ற ஆசிரியை உதவினார்.
தனது ஆசிரியை சாராஃபுல்லர் பேசும்போது அவரது வாய் உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகளைத் தொட்டு தொட்டு உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பேசக் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். தட்டுத் தடுமாறி பேசத் தொடங்கிய அவர் பல ஆண்டுகள் பயிற்சி செய்தார். கடைசி வரை அவரால் தெளிவாகப் பேச முடியவில்லை.
ஆனால் ஹெலன் கெல்லர் ஒருமுறைகூட மனம் தளரவில்லை. மகளிருக்கான கேம்பிரிட்சு பள்ளியில் இணைந்தார்.
தனியாகப் பாடங்களைக் கற்றுக்கொண்ட கெல்லர் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல விரும்பினார். 1900 இல் ராட்கிளிஃப் பல்கலைக்கழகம் மிகுந்த தயக்கத் துடன் கெல்லரை சேர்த்துக்கொண்டது. ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார்.
கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத் தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற் பெண் மணி என்ற சிறப்பும் பெற்றார்.
ஆஸ்திரிய தத்துவவியலாளரான வில்லம் ஜெருசலம் என்பவர் ஹெலன் கெல்லருடைய எழுத்தார்வத்தை வெளிக்கொணர உதவினார்.[2] தனது கல்லூரி நாட்களிலேயே 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். கல்லூரி நாட்களில் வெளிப்பட்ட ஹெலனின் எழுத்தார்வம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அவரைத் தொடர்ந்திருந்தது.
'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற அவருடைய படைப்பு பெண்கள் இதழொன்றில் தொடராக வெளிவந்து பின் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. மராத்தி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, ஹெலனின் படைப்புகளில் இன்றும் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது.
தன்னம்பிக்கை - ஒரு கட்டுரை, நான் வாழும் உலகம், கற்சுவரின் கீதம், இருளிலிருந்து, என் மதம், மாலைக் காலத்து அமைதி, ஸ்காட்லாந்தில் ஹெலன் கெல்லர், ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, நம்பிக்கை கொள்வோம், ஆன் சல்லிவன் மேஸி - என் ஆசிரியை, திறந்த கதவு போன்றவை அவருடைய பிரசுரமான படைப்புகள் சில.
இவைதவிர காது கேளாமை, பார்வையின்மை, சமூக வியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணுரிமை போன்றவை தொடர்பாகப் பல கட்டுரைகளையும், ஆக்கங்களையும் நாளிதழ்களுக்கும், வாராந்திர, மாதாந் திரப் பத்திரிகைகளுக்கும் பங்களித்தவண்ணமிருந்தார்.
அறிவாற்றலிலும் நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர் களுக்குச் சற்றும் சளைக்காதவரான கெல்லர், சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் உருவெடுத்தார்.
இவர் உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச தத்துவத் தையும் ஆதரித்துப் பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார்.
தன் பெயரிலேயே பார்வையற்றோர் நலனுக்காக லாப நோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஹெலன் தன் வாழ்நாளைக் கண்ணிழந்தோர் மற்றும் காதுகேளா தோர்க்காகச் செலவிட்டார். அதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்தார். அவர்களுக்கென பள்ளிகள் திறக்கச் செய்யும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
ஹெலன் கெல்லர், ஆன் சல்லிவனுடன் 39 நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
ஹெலன் கெல்லர் நிதி என்ற பெயரில் நிதி ஒன்றினைத் தொடங்கி, அதில் சேர்ந்த தொகையான ரூபாய் ஒன்றரை கோடியைப் பள்ளிகளுக்கு வழங்கினார்.
பார்வையற்றோர்க்கென தேசிய நூலகம் ஒன்றனை உருவாக்கி, உலகம் முழுவதிலும் இருந்து நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். தன்னைப்போல அவர்களும் மீட்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் எண்பத்தெட்டு வயது வரை அயராது உழைத்தார்.
ஆன் சல்லிவன் ஹெலன் கெல்லருக்கு ஆசிரியராகச் சேர்ந்தது முதல் நீண்ட நாள் அவருடனே தங்கினார். 1905 இல் அவர் ஜான் மேக்கி என்பவரை மணந்தார். ஆனால் 1914 இல் இருந்து சல்லிவனின் உடல்நிலை மோசமடை யத் தொடங்கியது. எனவே பாலி தாம்சன் என்ற ஸ்காட்லாந்துநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஹெலன் கெல்லருக்கு உதவியாளராகவும் மொழிபெயர்பாளராக வும் வந்து சேர்ந்தார். இவருக்குக் காது கேளாதோர் மற்றும் கண்பார்வையற்றோரை பராமரிப்பதற்கான முன்னனுபவம் ஏதும் இல்லாதவராவார். ஆனால் நாளடைவில் இவர் ஹெலன் கெல்லருடைய காரியதரிசியாகவும் ஒரு நல்ல கூட்டாளியாகவும் இறுதிவரை உடனிருந்து பணிபுரிந்தார்.[]
கெல்லர் குவீன்சிலுள்ள ஃபாரஸ்ட் ஹில் என்ற இடத்திற்கு ஜான், சல்லிவன் மற்றும் பாலி தாம்சனுடன் குடிபெயர்ந்தார். அங்கு தனது இல்லத்தைக் கண்பார்வையற் றோருக்கான அமெரிக்க நிறுவனமாக மாற்றினார்.[
ஹெலன் கெல்லர் வாஷிங்டன் நகரின் புகழ்பெற்ற பெண்மணியாகத் திகழ்ந்தார். 1936 ஆம் ஆண்டு நினைவு மீளா நிலையில் ஹெலன் கெல்லரின் கையைப் பிடித்த படி ஆன் சல்லிவன் உயிர் துறந்தார்.
கெல்லர் தனது மொழிபெயர்ப்பாளர் பாலி தாம்சன் என்பவரின் உதவியுடன் வாழ்ந்துவரலானார்; இவர்கள் பின்னர் கன்னக்டிகட் நகருக்குக் குடிபெயர்ந்தனர். இருவ ரும் இணைந்து உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுலா மேற்கொண்டு பார்வையற்றோருக்கான நிதி திரட்டினர்.
1957 இல் பாலி தாம்சன் பக்கவாத நோயால் தாக்கப் பட்டார். ஆனால் இறுதிவரை அவர் மீள இயலவில்லை. 1960 இல் தாம்சனும் இறந்தார்.[6] அதன் பிறகு 1957 இல் பாலி தாம்சனுக்கு உதவிகள் புரிய வந்த வின்னி கார்பல்லி என்ற செவிலியர் ஹெலன் கெல்லரின் இறுதி வரை உடனிருந்தார்.
அரசியல்
"The few own the many because they possess the means of livelihood of all … The country is governed for the richest, for the corporations, the bankers, the land speculators, and for the exploiters of labor. The majority of mankind are working people. So long as their fair demands—the ownership and control of their livelihoods—are set at naught, we can have neither men's rights nor women's rights. The majority of mankind is ground down by industrial oppression in order that the small remnant may live in ease."
—Helen Keller, 1911[7]
கெல்லர் ஒரு உலகப் புகழ் பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திடழ்ந்தார். மாற்றுத் திறனாளிகளுக் கான ஒரு வழக்குரைஞராகவும் திகழ்ந்தார். அவர்களுக் கான உரிமைகளைப் பெற்றுத் தந்ததில் ஹெலன் கெல்லரின் பங்களிப்புகள் அதிகமானது.
உட்ரோ வில்சனின் எதிர்பாளராகவும் ஒரு சோசலிச வாதியாகவும் விளங்கினார். அமெரிக்க பிறப்புக் கட்டுப் பாடு சங்கத்தின் ஆதரவாளராகத் தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
1915 ஆம் ஆண்டு அவர் ஜார்ஜ் கெஸ்லர் இன்பவருடன் இணைந்து 'ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு'(HKI) ஒன்றைத் தொடங்கினார். இந்நிறுவனம் பார்வை, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த ஆய்வுகளுக்காக நிறுவப்பட்டது
1920 ஆம் ஆண்டு அவர் அமெரிக்க உள்நாட்டு உரிமை களுக்கான ஒன்றியம் (ACLU) ஒன்றைத் தொடங்கினார். 40 நாடுகளுக்கு ஆன் சல்லிவனுடன் சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.
கெல்லர் அடிக்கடி ஜப்பான் சென்று வந்ததால் ஜப்பான் மக்களின் மனங்கவர்ந்த பெண்மனியாக ஆனார். கெல்லர் குரோவர் கிளீவ்லேண்ட், லிண்டன் பி ஜான்சன் உள்ளிட்ட பல அமெரிக்க அதிபர்களைச் சந்தித்தார்.
புகழ்பெற்ற நபர்களான அலெக்சாண்டர் கிரகாம் பெல், சார்லி சாப்ளின், மார்க் டுவெயின் போன்றோருடன் தொடர்பில் இருந்தார். கெல்லர் மற்றும் ட்வைன் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கெல்லர் மற்றும் மார்க் டுவெயின் ஆகியோருடைய கருத்துகளால் இருவரும் தீவிரவாதிகளாகக் கருதப்பட்டனர்.
ஆனால் இருவருடைய மக்களுக்கான பொதுநலப் பணிகளே மேலோங்கியதால் இவர்களுடைய அரசியல் கருத்துகள் மறக்கப்பட்டன.[8] கெல்லர் அமெரிக்க சோசலிசக் கட்சியின் உறுப்பினராகவும் ஆதரவாள ராகவும் இருந்தார்.
இறுதிக் காலம்
ஹெலன் கெல்லர் 1961 இல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தனது இறுதி நாட்களில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று.
1964, செப்டம்பர் 14 இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் லின்டண் பி. தாம்சன் அதிபருக்கான சுதந்திரப் பதக்கத்தை ஹெலன் கெல்லருக்கு வழங்கினார். இது அமெரிக்கக் குடியரசின் மிக உயர்ந்த இரு பதக்கங்களுள் ஒன்றாகும்.
1965 இல் கெல்லர் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாட்டின் மிகச்சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்னும் ஒரு வாரத்தில் தனது 88 ஆவது பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் 1968, ஜூன் 1 ஆம் நாள் தூக்கத்திலேயே உயிர் துறந்தார். இவரது சேவையைக் கருதி இவரது உடல் வாஷிங்டன் டி. சியில் ஆன் சல்லிவன், பாலி தாம்சன் ஆகியோர்ரது உடலருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஹெலன் கெல்லருடைய வாழ்க்கை பலமுறை திரைப் படமாக எடுக்கப்பட்டுள்ளது. 1919 இல் டெலிவரன்சு என்ற வசனமில்லாப்படமாக எடுக்கப்பட்டது. காத்ரின் கோர் னெல் என்பரால் ஹெலன் கெல்லரின் கதை என்ற பெயரில் குறும்படமாக எடுக்கப்பட்டது.
மேலும் ஹார்ஸ்ட் கார்பொரேசன் என்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் ஹெலனின் வாழ்க்கையை தொடராகவும் வெளியிட்டது. ஹெலன் கெல்லர் எழுதிய சுய வரலாற்று நூலான எனது கதை நாடகமாகவும் எடுக்கப்பட்டது. இது பின்னர் 1962 இல் திரைப்படமாக்கப் பட்டு ஆஸ்கார் விருது பெற்றது.
1979 மற்ரும் 2000 த்தில் மீண்டும் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது. 1984 இல் கெல்லருடைய வாழ்க்கை தொலைக்காட்சித் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது இப்படம் ஹெலன் கெல்லருடைய கல்லூரி மற்றும் அரசியல் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவதாக இருந்தது.
2005 இல் கெல்லரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'பிளாக்' என்ற பாலிவுட் திரைப்படம் எடுக்கப் பட்டது. இதே ஆண்டுல் சுவேடன்பர்க் நிறுவனத்தால் கெல்லரைப் பற்றிய குறும்படம் ஒன்று தயாரிக்கப் பட்டது. இதில் கெல்லர் பார்வை, காது, வாய் என்ற முப்புலனும் பாதிக்கப்பட்ட கெல்லரின் நம்பிக்கை மற்ரும் மனவுறுதியின் காரணமாகப் பெற்ற வெற்றிகள் எடுத்துச் சொல்லப்பட்டன.
மார்ச் 6, 2008 இல் நியூ இங்கிலாந்து வரலாற்றுக் கழகம் ஹெலன் கெல்லர் தனது ஆசியரான ஆன்சல்லிவனுடன் இருக்கும் படங்களையும் கெல்லர் தனது பொம்மை யுடன் இருக்கும் படங்களையும் மறுபடியும் வெளியிட்டு உலகெங்கும் கவனத்தை ஈர்த்தது.இந்நிறுவனம் மேலும் ஹெலன் கெல்லர் குரலசைவு மூலம் கற்றுக் கொண்ட ஒளிப்படங்களையும் வெளியிட்டது.
சிறப்புகள்
1999களில் கெல்லர் இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறப்புமிக்கப் பெண்மணியாக அறியப்பட்டார். 2003 இல் அலபாமா மாநிலம் அம்மாநிலத்தின் சிறப்புமிக்கக் குடிமகளாக அறிவித்தது.
மேலும் அலபாமாவில் உள்ள செப்பீல்டு மருத்துவமனை ஹெலன் கெல்லர் மருத்துவமனையாக அர்ப்பணிக்கப் பட்டது.
ஸ்பெயின், கடாபி, லாடு, இஸ்ரேல், போர்சுகல், லிபெயின், பிரான்சு ஆகிய நாடுகளில் தெருக்களுக்கு ஹெலன் கெல்லருடைய பெயர் சூட்டப்பட்டது.
இந்தியாவின் மைசூர் மாகாணத்தில் கே.கே. சீனிவாசன் என்பவரால் நிறுவப்பட்ட வாய்பேசாதோர் மற்றும் காதுகேளாதோருக்கான முன்பருவப் பள்ளிக்கு ஹெலன் கெல்லருடைய பெயரால் மாற்றப்பட்டது.
2009, அக்டோபர் 7 இல் அலபாமா மாநிலத்தில் ஹெலன் கெல்லருடைய வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.
மேலும் ஹெலன்கெல்லர் முதன் முதலாக ஏழு வயதான போது ஆன் சல்லிவனுடன் தண்ணீரைத் தொட்டுணர்ந்து தண்ணீர் என்பதற்கான பொருளை ஊணர்ந்த அக்காட்சி சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.
அங்கு பிரெய்லி எழுத்துகளில் "உலகிலேயே எங்கும் காணமுடியாத தொட முடியாத இதயத்தால் உணரப் பட்ட அழகிய பொருள்." என்று பொறிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் மாற்றுத் திறனாளிக்கு அதுவும் குழந்தைப் பருவத்தில் தலைநகரில் சிலை வைக்கப் பட்டது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.[20][21][22]