LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, October 18, 2016

கோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸின் ஃபிடில் இசையும்

கோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸின் ஃபிடில் இசையும்
 ரிஷி

ரோமில் இருக்கும்போது ரோமானியர்களாக நடப்பதுதான் நல்லது”. 
(
ரோம் என்றால் மன்னனா மக்களா என்று யாரும் கேள்வி கேட்கலாகாது).

ரோம் தீப்பற்றி எரிகிறது.
கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸ் ஃபிடில் வாசித்துக்கொண்டிருக்கிறான்
இன்னமும்கூட.

காலப்போக்கில் நீரோ கிளை பிரிந்து பல்கிப் பெருகி
இன்று அடிக்கு அடி தட்டுப்பட்ட வண்ணம்…..

ரோம் தீப்பற்றி யெரியட்டுமே
அதற்காக இசையை வாசிப்பதும் ரசிப்பதும் எப்படி
இங்கிதமற்றுப்போகும்
என்று தர்க்கம் செய்யத் தெரிந்தவர்கள்
தேவையான பாதுகாப்புக்கவசங்களோடு
தலைமறைவாயிருந்தபடியே
தத்தமதான பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சிலர் கொழுந்துவிட்டு எரியும் தீயில் எண்ணெய் வார்க்கிறார்கள்
சிலர் தீயின் வெப்பத்தை அளக்க புதுக்கருவி தயாரித்துக்
கொண்டிருக்கிறார்கள்;
சிலர் தீ கருக்கிய இடங்களில் தண்ணீர் தெளித்து 
கோலமிடப் பார்த்துக்கொண் டிருக்கிறார்கள்;
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும், 
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்என்று 
கண்ணதாசனின் வரிகளை இரவல் வாங்கியாவது
தவறாமல் தத்துவம் பேசுகிறார்கள் சிலர்;
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்என்று பாரதியை 
மனப்பாடமாய்ச் சொல்கிறார்கள் சிலர் 
(
மறந்தும் பின்பற்றமாட்டார்)

துக்கிரித்தன்மாய் தீயையையும் மூட்டி ஃபிடிலையும் வாசிக்கிறானே 
இக்கரை இக்கால நீரோ மன்னன், இவன் கொடுங்கோலனல்லவா 
என்று கேட்டுவிட்டால் போதும்
கண், காது, வாயைப் பொத்திக்கொண்டுவிடுகிறார்கள்.
காந்தியைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்களாம்.

இன்னும் சிலர் 
சில நேரங்களில் சில மனிதர்கள்என்று புன்சிரித்துக் கூறி
ஃபிடிலையும் அதைப் பிடித்திருக்கும் நீரோவின் கையையும்
வருடித்தருகிறார்கள்.

ஐயோ ரோம் எரிகிறதே என்றால்
புனரபி ஜனனம், புனரபி மரணம்
காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்று 
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில்
ஆறுதலளித்து அவரவர் வழி சென்றவண்ணம்
சுற்றிலும் கேட்கும் வலியோலங்களை 
அலைபேசியில் படம்பிடித்தபடியே
அகன்றேகுகிறார்கள்.

நீரோ வாசிக்கும் இசைக்குத் தவறாமல் தலையாட்டியப்டி
தீயில் கருகும் சக ரோமானியர்களிடமிருந்து பார்வையை
அகற்றியபடி
சுற்றுலா செல்கிறார்கள்.

அனுமனுக்குஆச்சரியம் தாளவில்லை
அதெப்படி இந்திரஜித்தைப் போல இவர்களால்
நினைத்த நேரத்தின் அருவமாகிவிட முடிகிறது!

அதேசமயம், போர்க்களத்தின் ஒவ்வொரு அசைவும் 
அவர்களுக்குத் தெரிந்தேயிருக்கிறது என்பது
அவர்கள் பாடும் இரங்கற்பாக்களிலிருந்து புலப்படுகிறது….

நவீன தமிழ்க்கவிதையின் பொருள் போலவே
நீரோவின் தீயும்என்று 
கவிதை யாப்பதென்ன அவர்களுக்குக் குதிரைக்கொம்பா?

வால்நுனித் தீயைக் கடலில் முக்கி அணைத்தது தவறோ
என்று தனக்குத்தான் கேட்டபடியே அண்ணாந்த  அனுமன் கண்களில்  
புஷ்பக விமானம் தெரிகிறது வீங்கிப் புடைத்து.

எரியும் மக்களோடு ஸெல்ஃபி பிடித்துக்கொள்ளவும், 
கூடவே நீரோ க்ளாடியஸிடம் நலம் விசாரிக்கவுமாய்
ரோமுக்குப் புறப்பட்டுச் செல்வோர் எண்ணிக்கை 
அதிகமாகிக்கொண்டே.

சகமனிதநேயத்தோடு தரப்படும் சிறுகுறிப்புகள் சில ரிஷி

சகமனிதநேயத்தோடு தரப்படும் 
சிறுகுறிப்புகள் சில
ரிஷி




சிறுபத்திரிகை யெழுத்தாளராக இருக்கவேண்டுமா?

சிறிதும் சுரணையில்லாம லிருக்கவேண்டும்.
சுண்டைக்காய்களை பொங்குமாக் கடல்கள் என்று 
ஃபிலிம் காட்டினால்

ஆமாஞ்சாமியாய் தலையை வேகவேகமாக ஆட்டி
கட்டாந்தரையில் நீச்சலடித்து

தர்மதாதாக்களை மகிழ்விக்கவேண்டும்.
ஆடுரா ராமா ஆடுராஎன்று மனிதர்கள் 
அதிகாரக் குரலில் ஆட்டுவித்தால்

அசல் மந்தி கூட அசையாது குந்தியிருக்கும்.

ஆனால், படைப்பாளி குபீரென்று எழுந்து
கடகவென்று குட்டிக்கரணமடித்துக்காட்ட வேண்டும்.
வாலைச் சுண்டியிழுத்தால்

புலியாய் சீறும் பூனைகூட.

ஆனால் எழுத்தாளர் பணிவாய் எழுந்து 
பலிமேடையில்
தன்னைத்தான் வாகாய்க் கிடத்திக்கொண்டு

கழுத்தை நீட்டிக் காத்திருக்கவேண்டும்

கில்லட்டீனுக்காய்.
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி

கழுதையில் ஏற்றி
வழியெங்கும் சாட்டையால் அடித்தபடி

பதிலைச் சொல் பதிலைச் சொல்
என்று குதிக்கும் கருணாமூர்த்திகள், கர்மப் பிரபுக்கள் முன்
கைகூப்பி நிற்கவேண்டும்….
தனமதிகாரசெல்வாக்குத்திமிர்பிடித்த

பணமுதலைகளுக்கு முன், 
அவர்தம் 
பரிவாரங்களின் முன்
மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஊர்ந்து செல்லவேண்டும்.
உன்னைப்போல் உண்டோஎன்று போற்றிப் பரவியவாறே

ஒண்ணொண்ணாய் நம் முதுகுத்தண்டின் வட்டுகளை

பெருமுதலாளி வெட்டிப்போட வாகாய்
மடங்கி ஒடுங்கி நிற்க வேண்டும்.
, மறந்துவிடலாகாது _
மருந்துக்கும் மனசாட்சி யிருக்கக்கூடாது.
நம் மதிப்பார்ந்த சக படைப்பாளி
மெகா விற்பனைக்கான 
product, brand name
ஆக
மாற்றப்படுவதைப் பார்த்தும் வாளாவிருக்கவேண்டும்.
தப்பித்தவறி எதிர்ப்புத் தெரிவித்தாலோ
தாக்கப்படுவது திண்ணம்.
இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்

கவனமாயிருக்கவேண்டும்.
இல்லையென்றால்

கட்டம்கட்டப்படுவீர்கள்.
முற்றிய மனநோயாளியாய்.
வெட்டாட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
நாம் தாயமாகப் போகிறோமா?
மாயமாகப் போகிறோமா?


ஒரு நாளின் முடிவில் ரிஷி

ஒரு நாளின் முடிவில்

உறக்கத்தின் நுழைவாயிலில் நான்;
அல்லது அடிப்படியில் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
சறுக்குமரத்தில் மேலிருந்து கீழே
வழுக்குவதை விரும்புவது போலவே
கீழிருந்து மேலாக மலையேற்றம் மேற்கொள்வதையும்
விரும்புகிறார்கள் பிள்ளைகள்.
விண்மீன்களெல்லாம் கண்ணுக்குள்ளாக
வசப்பட்டுக்கொண்டேயிருக்கிறது
அவரவர் வானம் அவரவருக்கு

Ø

ஒரே வானில் ஓராயிரம் நிலாக்கள்
ஓராயிரம் நிலாக்களா ஒரு கோடி நட்சத்திரங்களா??
கைவசமிருக்கும் தூரிகையால் உருவாக்கப்படமாட்டா ஓவியமாய்
சுற்றுமுற்றும் திரிந்துகொண்டிருக்கும் சொற்களை
பொதிந்துவைத்துக்கொள்கிறேன்.
தலை முதல் கால வரை பரவும் உறக்கத்தின் அரவணைப்புக்கு
எப்போதும்போல் என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.

Ø

ஸெல்ஃபிக்கு பிடிபடாத உன் ஸெலக்டிவ் அம்னீசியாவைப் பேச
சில வாரங்களேனும் தேவை.
கையிருப்போ வெறும் பதினைந்து நிமிடங்கள்
என்று கணக்குச் சொல்கிறது _
இந்த நாளை என்றைக்குமாய் இழுத்துப் பூட்டச் சொல்லி
என்னை விரட்டிக்கொண்டேயிருக்கும் தூக்கம்.
கடந்துசெல்ல முடியாதது.
ஒருவகையில் காக்கும்தெய்வமும்.
விறுவிறுவென உன்னைக் கடந்துசென்று
இதோ இறங்கிக்கொண்டிருக்கிறேன் உறக்கத்துள்.

Ø

சொல்லி மாளாது என் சொப்பனங்களை…….
என்று சொன்னால் அது பொய்……..
என்றால் அதுவும் உண்மையில்லை…….
இருப்பன போலும் சொப்பனங்கள்
இங்கே கற்பனைக்கும் விற்பனைக்கும்.
கட்டுப்படியாகாத விலையும்
காலாவதியாகும் காலமும்
இருகைகளையும் இருபுறமுமாய் பிடித்திழுக்கையிலும்
எப்படியோ என் உள்ளங்கைகளில்
ஒட்டிக்கொண்டுவிடும் சொப்பனங்களை
என்ன செய்ய.?
உதிர்க்கவா உரிக்கவா
உண்ணவா எண்ணவா.
எதுவும் செய்யவேண்டாம், நாளை பார்த்துக்கொள்ளலாம்
என்று சொல்லியபடி என்னைப் போர்த்துகிறது உறக்கம்.

Ø

நீட்டிப்படுத்து உறங்க முற்படுகையில்
அந்தத் தெருவெங்கும் குறுகலான ப்ளாஸ்டிக் நாற்காலிகளில்
காலை முதல் மாலை வரை, நீளும் இரவு முடிய,
களைப்பும் உறக்கமும் படர்ந்த கண்களோடு
அமர்ந்திருக்கும் வாயிற்காவலர்கள்
சிறிதுநேரம் கண்ணிமைகளை மூடவொட்டாமல்
இழுத்துப்பிடிக்கிறார்கள்.
வலிக்கிறது.
பின், அயர்வு மிகுதியில் அவர்கள் கைப்பிடி நழுவ
பத்திரமாய் என்னை மீட்டெடுக்கிறது உறக்கம்.

Ø

இது கூடத் தெரியாதா என்று காலையில் இரைந்த மேலதிகாரியை
என் உறக்கத்தின் அபாயகரமான சரிவில் நிறுத்தி
எனக்குத் தெரிந்த எழுநூறு உலகங்களிலும் ஒரே சமயத்தில் நான் உலாவந்துகொண்டிருக்கிறேன் தெரியுமா
என்று திருப்பிக்கேட்டு
அதிர்ந்துநிற்கும் அவரை ஒரு தள்ளு தள்ளி
பள்ளத்தாக்கில் உருட்டிவிடுகிறேன்.
மரணபயம் என்னவென்று மனிதர்களுக்குத் தெரியவேண்டும்..
மற்றபடி
அவர் உடல் தரையைத்தொடுமிடம்
பூப்படுக்கையாகி மேலெழும்பி வரச் சிறகுகளும்
அவர் முதுகில் முளைக்க
வரம் தந்து அருள்பாலிக்கிறேன்.