ஊர்வலம்
‘ரிஷி’
இவர் ஆக்ராவில் இன்னும் பிரம்மாண்டமான தொரு தாஜ்மகாலைத் தன் படைப்புகளின் மூலம்
கட்டியெழுப்பும் திட்டத்தை அடுத்தடுத்த பதிவுகளில் தவணைகளில் வெளியிட்டுக்கொண்டிருந்தார்.
அவர் அண்டார்ட்டிகாவில் தன் எழுத்துக்கள் மூலம் வெய்யில் வரவழைக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக
அத்தனை தீவிர முகபாவத்துடன் புகைப்படமொன்றைப் பதிவேற்றியிருந்தார்.
இருவரைச் சுற்றிலும் நிறைய நிறைய பேர்
தட்டத் தயாராய் கைகளை ஆயத்தநிலையில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
தட்டாத கைகள் இருந்தென்ன புண்ணியம் என்று சன்னமாய்ப்
பின்னணியிசை ஒலித்துக்கொண்டிருந்தது.
யாருமற்ற சிற்றூரின் சிறுவீட்டின் அத்துவானக்காட்டில்
இருந்த இடம் இருந்தபடி இடதுகையால்
அருகே சிறுகோப்பையிலிருந்த வேர்க்கடலையை அவ்வப்போது வாயில் போட்டுக் கொறித்தபடி எழுதிக்கொண்டிருப்பவரின்
எழுத்துக்கள் இனிவரும் நாளொன்றில்
ஆக்ராவையும் அண்டார்ட்டிகாவையும் இவரிருக்கு மிங்கே கொண்டுவந்து சேர்க்கும் என்பதொரு
சிதம்பர ரகசியமாக….
No comments:
Post a Comment