சொல்லத்தோன்றும் சில….
_ லதா ராமகிருஷ்ணன்
நான்காவது தூண்(FOURTH PILLAR) என்று ஊடகங்களைச் சொல்வார்கள்.
நிறைய அச்சு ஊடகங்கள்அப்படியிருந்த காலம் உண்டு.
ஆனால், இன்று ஒளி ஒலி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் ஒரு பக்க சார்பாய் தகவல்களைத் தருவதும், நேர்காணல்கள் நடத்துவதும், பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக (பார்ப்பவர்களுக்கு மாரடைப்பு வந்தால் வரட்டும் என்று)கோர விபத்துகள், படுகொலைகள், எந்த நடிகர் எந்த நடிகையோடு வெளிநாடு போயிருக்கிறார் என்று மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது.
கள்ளக்குறிச்சியில் பட்டப்பகலில் நடந்த கலவரம், கொள்ளை குறித்தோ, வேங்கைவயல் விவகாரம் குறித்தோ எதையுமே பேச மாட்டார்கள். அந்த வழக்குகள் இப்போது என்ன நிலையில் இருக்கின்றன என்று தகவல் தர மாட்டார்கள்.
இதில் இபோது தேர்தல் காலம் என்பதால் தமிழ்ச் செய்தி சேனல்களில் அரசியல்வாதிகள், அவர்களுடைய தேர்தல் கால வாக்குறுதிகள் ஆகியவற்றை நகைச் சுவைப் பொருளாக்கி நிகழ்ச்சிகள் நாளுமோ வாரா வாரமோ ஒளிபரப்பப்படுகின்றன.
அரசியல்வாதிகளாவது ஐந்து வருடங்க ளுக்கு ஒருமுறை மக்கள் முன் நிற்கவேண்டியிருக்கிறது.
ஊடகங்களுக்கு அந்தப் பொறுப்பேற்பு பெரிதாக இல்லை. எனவே, அவர்களால் தங்களை தீர்ப்பளிக்கும் பீடாதிபதிக ளாக்கிக்கொண்டுவிட முடிகிறது.
சீரியஸாக பேச வேண்டிய அரசியல் விஷயங்களை, பிரச்சனைகளை அதற்கான இடத்தில் அகல்விரிவாகப் பேசுவதைத் தவிர்த்து அரசியல்வாதிகளை ‘நகைச் சுவைத் துணுக்குகளாக்கி’ தங்களைப் பெரியவர்க ளாக்கிக்கொண்டுவிட முடிகிறது.
அதேபோல் தான் சினிமாக்காரர்களும் படங்களிலெல் லாம் இளைஞர்கள் காதலிக்காத பெண்ணையே பின் தொடர்ந்தவாறிருந்து தமது காதலின் மேன்மையை வெளிப்படுத்துவதாகவும், கல்லூரிகளில் ஆசிரியர் களைக் கிண்டலிப்பதே மாணவர்களுக்கு அழகு என்பதாக நடந்துகொள்வதாகவும், பேருந்தின் மீது ஏறிநின்று பாடியாடுவதாகவும், ஆங்கிலம் பேசுபவர் களைப் பரிகசிப்பதாகவும்(நகைச்சுவை என்ற பெயரில் இவர்கள் செய்யும் BODY SHAMING அனைவரும் அறிந்ததே) திரும்பத்திரும்பக் காட்டி இளைஞர்கள், வளரிளம்பருவத்தினர் மனங்களில் நம் வயதுக்கு இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணச்செய்ய, அப்படி அவர்கள் நடந்துகொண்டு காவல்நிலையத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். கொலை, குத்து நடக்கிறது.
மேற்படி படங்களை எடுப்பவர்களும் அதில் நடிப்பவர் களும் நிறைய காசு கொடுத்து ஆங்கிலம் கற்றுக் கொண்டு அயல்நாடுகளுக்குச் சென்று ஆங்கிலப் படங்களில் நடிக்கவும் செய்கிறார்கள்.
குடி குடியைக் கெடுக்கும் என்பதுபோல இந்த மாதிரி Stalking, Once side love, Ragging போன்ற விஷயங்களைத் திரையில் காட்டும்போதும் ஏதாவது எச்சரிக்கை வாசகத்தை ஓடவிடுவதில்லையே, ஏன்?
சமூகத்தின் நான்காம் தூண் ஊடகங்கள். அவை தங்களு டைய பணியை சரியாகச் செய்துகொண்டிருக்கிறதா என்று முதலில் சுயபரிசீலனை செய்து கொள்ளட்டும். அது குறித்து அகல்விரிவான கலந்துரையாடல்கள், விவாதங் களை நடத்தட்டும்.
அப்படியே தான் திரையுலகினரும்.
அரசியல்வாதிகளை மட்டுமே பகடி செய்து மதிப்பழிப்பது மட்டுமே விமர்சனமாகிவிடாது; சமூகப் பொறுப்புணர்வு, பொறுப்பேற்பு ஆகிவிடாது.
No comments:
Post a Comment